அரச சேவைகள் ஆணைக்குழு நியமிக்கப்படும் வரை கல்வி அமைச்சின் செயலாளருக்கு பாடசாலை அதிபர்களுக்கான தரம் உயர்வு வழங்குவதற்கான அதிகாரம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார். நிலவும் வெற்றிடங்கள் அனைத்துக்கும் ஏற்ற வகையில் தரம் உயர்வு வழங்கப்படவுள்ளது.