கொழும்பு அதிமேற்றாணியார் பேரருட்திரு ஒஸ்வல்ட் கோமிஸின் பெயரைப் பயன்படுத்தி, தேர்தல் பிரசாரத்துக்காக போலியான துண்டுப் பிரசுரமொன்று விநியோகிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.
30 வருடங்களுக்கு பின்னர் சமாதானம் மலர்ந்து வரும் இந்தக் காலத்தில் மதங்களுக்கிடையே குரோதங்களை வளர்க்கும் வகையில் பாரதூரமான சட்டமூலமொன்றைக் கொண்டு வருவதற்குச் சில குழுக்கள் முயற்சிப்பதாகவும், இதற்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக கத்தோலிக்கர்கள் ஒன்றுதிரள வேண்டுமென்று குறித்த போலி துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான துண்டுப் பிரசுரமொன்றைத் தாம் வெளியிடவில்லையென்றும் இவற்றை விநியோகிக்குமாறு சில தேவாலயங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க இடமளிக்க வேண்டாமென்றும் பேராயர் ஒஸ்வல்ட் கோமிஸ் விடுத்துள்ள அறிக்கையொன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.