Multiple Page/Post

ஆறு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈரான்

170909iran-flag.jpgஈரானின் அணுசக்தித் திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டுக்கும்,  6 நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை அடுத்த மாதம் 1 ஆம் தேதி முதல் துருக்கியில் நடைபெறவுள்ளதாக  ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை வகுக்கும் பிரிவின் தலைவர் ஜாவியர் சொலோனர் தெரிவித்தார்.  இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

ஈரானுடனான பேச்சுவார்த்தையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா,  ரஷ்யா, பிரிட்டன்,  பிரான்ஸ்,  சீனா மற்றும் ஜேர்மனியின் பிரதிநிதிகள் பங்கேற்பர். ஈரான் சார்பில் அதன் அணுசக்தித் திட்ட முக்கிய அதிகாரியான சய்யீத் ஜலிலி பங்கேற்பார்.

ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் தொடர்பான இந்தப் பேச்சுவார்த்தையின் போது உலக நாடுகளுடனான வர்த்தகம்,  பொருளாதாரத் தடை குறித்த விஷயங்களும் விவாதிக்கப்படும் என்றார் அவர். அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவியேற்ற பிறகு, ஈரானுடன் நடைபெறவிருக்கும் முதலாவது உயர் நிலையிலான பேச்சுவார்த்தை இது என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஈரான் விஷயத்தில் வெளிப்படையான கொள்கையைப் பின்பற்றுவதற்கான முயற்சிகளை ஒபாமா மேற்கொண்டுள்ளதாக ஐரோப்பிய ராஜீயத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடைசியாக கடந்த ஆண்டு,  ஜூலை மாதம் ஜெனீவாவில் ஈரானுக்கும்,  அமெரிக்கா உள்ளிட்ட உலகின் வல்லரசு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பாரிய சதித்திட்டம் அரங்கேற்றம் – அரசாங்கம்

dallus_allahapperuma.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாட்டின் தலைமைப் பதவியில் இருந்து நீக்கி ஆட்சிமாற்றத்தைக் கொண்டுவருவதற்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டத்தில் திட்டமிடப்பட்ட பாரிய சதித்திட்டம் ஒன்று அரங்கேற்றப்பட்டுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் புதன்கிழமை காலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை முன்வைத்தார்.

உள்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் இருவர் மற்றும் இலங்கையில் உள்ள சில வெளிநாட்டு தூதுவர்கள் மேலும் தூதுவராக பதவி வகித்துவிட்டு சென்றவர்கள் என பலர் இந்த சதித்திட்டத்தில் நேரடியாக தொடர்புபட்டுள்ளனர்.

எதிர்காலத்தில் மேலும் பல தகவல்களை வெளியிடுவோம் என்று ஸ்ரீலங்கா சதந்திர கட்சியின் பொருளாளரும் போக்குவரத்து அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் போன்ற விவகாரங்களை முன்வைத்து சர்வதேச மட்டத்தில் அழுத்தங்களை பிரயோகித்து ஜனாதிபதியை அந்த பதவியிலிருந்து நீக்கி ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகின்றது. எனவே நாட்டைக் காட்டிக்கொடுத்து அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கவேண்டாம் என்று எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கின்றோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்

ரூபா 500 சம்பள உயர்வுகோரி நேற்றும் தோட்டங்களில் ஆர்ப்பாட்டம்

sri-lanka-upcountry.jpgகைச் சாத்திடப்படவிருக்கின்ற கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 500 ரூபா சம்பள உயர்வு கோரியும் மலை யகத்தின் பல்வேறு தோட்டப் பிரதேசங்களிலும் நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

அட்டன் – யுனிபீல்ட் வெலிங்டன், கிரிஸ்லஸ் பாம் தோட் டங்களிலும் கொட்டகலை டிரைட்டன், எதென்சைட், லொக் கில் தோட்டங்களிலும், தலவாக்கலை சென் என்றூஸ் தோட்டங்களிலும், பொகவந்தலாவை கொட்டியாகலை, பொகவானை, குயினா, கில்லானி, செல்வகந்தை, டின்சின் ஆகிய தோட்டங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன.

பொகவந்தலாவை பகுதியிலுள்ள கொட்டியாகலை, பொக வானை, செல்வகந்த, குயினா ஆகிய தோட்டங்களில் தொழிலாளர்கள் முற்றாக பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள், “எங்களை இரண்டு வருடத்திற்கு விற்காதே, அடிப்படை சம்பளம் 500 ரூபா கொடு, துரோ கத்திற்கு துணை போகாதே” போன்ற பதாதைகளை ஏந் திய வண்ணம் கோசங்களை எழுப்பினர். சிலர் கறுப்புப் பட்டிகளை அணிந்தும் கறுப்பு கொடிகளை காட்டியும் தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர்.

ஒரு சில இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதனால் பதற்ற நிலை நிலவியது. பொலிஸார் தலையிட்டு சுமுக நிலைக்குக் கொண்டுவந்தனர்.

பிரேமதாச மைதானத்தில் 1000 ஓட்டங்களைக் கடந்த முதல் வெளிநாட்டு வீரர் டெண்டுல்கர்

sachin-tendulkar.jpgகொழும்பு பிரேமதாச ஸ்டேடியத்தில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் டெண்டுல்கர் 138 ஓட்டங்கள் சேர்த்தார். அவர் 42 ஓட்டம் எட்டிய போது இந்த மைதானத்தில் 1000 ஓட்டங்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றார்.

டெண்டுல்கர் இங்கு 27 ஒரு நாள் போடியில் ஆடி 4 சதம் உட்பட 1096 ஓட்டங்கள் குவித்துள்ளார். இந்த மைதானத்தில் இலங்கையைச் சேர்ந்த ஜயசூரிய, அத்தபத்து, அரவிந்த டி சில்வா, ஜயவர்தன, சங்கக்கார ஆகியோர் ஏற்கனவே 1000 ஓட்டங்களுக்கு மேல் குவித்துள்ளனர். அந்த வரிசையில் டெண்டுல்கர் 6 வது இடம் பெற்றுள்ளார்.

* டெண்டுல்கர் நேற்று முன்தினம் அடித்தது அவரது 44 வது ஒரு நாள் போட்டி சதமாகும். இலங்கைக்கு எதிரான 8வது சதமாகும்.

* இலங்கை அணி கப்டன் சங்கக்கார வித்தியாசமான முறையில் (ஹிட் விக்கெட்) ஆட்டம் இழந்தார். அவர் ஆர். பி. சிங் வீசிய பந்தை முன்னால் இறங்கி அடிக்க முற்பட்டார். அப்போது பேட் கையில் இருந்து நழுவி தலைக்கு மேல் பின்னோக்கி சென்று ஸ்டம்பில் விழுந்தது.

* இலங்கை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி 11 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி கண்டுள்ளது. கடைசியாக 1998 ம் ஆண்டு கொழும்பில் நடந்த சிங்கர் – அகாய் நிடாஹாஸ் கோப்பைக்கான 3 நாடுகள் இறுதிப் போட்டியில் இந்திய அணி, இலங்கையை தோற்கடித்து சம்பியன் பட்டம் வென்று இருந்தது.

அதன் பிறகு இந்திய அணி, இலங்கையுடன் 7 இறுதிப் போட்டிகளில் மோதியதில் 5ல் தோல்வி கண்டுள்ளது. 2002ம் ஆண்டு நடந்த சம்பியன்ஸ் கோப்பையின் இரண்டு இறுதிப் போட்டியும் மழையால் ரத்துச் செய்யப்பட்டது. இதனால் இரு அணிகள் இணைந்து சம்பியன் பட்டம் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

* முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற பிறகு இந்திய அணி கப்டன் டோனி கூறுகையில், ‘இந்த வெற்றியை சமீபத்தில் மறைந்த இந்திய கிரிக்கெட் சபை முன்னாள் தலைவர் துங்கர்பூருக்கு சமர்ப்பிக்கிறோம்’ என்றார்.

அவுஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது மீண்டும் தாக்குதல்: மூவர் காயம்

அவுஸ்திரேலியாவில் கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 30 க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டனர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

கடந்த மாதம் அவுஸ்திரேலியா சென்ற அமைச்சர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவிடம், இனிமேல் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடைபெறாமல் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அவுஸ்திரேலியா உறுதி அளித்தது.

இந்த வாக்குறுதி அளிக்கப்பட்ட ஒரு மாதம் முடிவதற்குள் அங்கு மீண்டும் 3 இந்தியர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. அவர்களில் சுக்தீப் சிங் (வயது 26), அவரது சகோதரர் குர்தீப் சிங் ஆகியவர்கள் மாணவர்கள். இன்னொருவர் இவர்களின் உறவுமுறையைச் சேர்ந்தவர்.

மெல்போர்ன் நகரின் கிழக்கு புறநகர் பகுதியில் இவர்கள் தங்களது குடும்பத்தினருடன் ஒரு மதுபான விடுதியில் நடந்த விளையாட்டில் கலந்துகொண்டனர். அப்போது அங்கு விருந்தில் கலந்துகொண்டிருந்த 70 இளைஞர்கள் அவர்களிடம் வந்து வம்பு இழுத்து, ஒழுங்காக உங்கள் நாட்டுக்கு போய்விடுங்கள் என்று எச்சரித்ததுடன், கேலியும் கிண்டலும் செய்தனர்.

இந்தியர்கள் உடனே எதற்கு வம்பு என்று நினைத்து தங்கள் கார்களில் ஏறிச்செல்ல முயன்றனர். அப்போது 70 பேரும் மாணவர்கள் இருவர் மற்றும் அவர்களது உறவினர் ஆகியோரை மூர்க்கத்தனமாக தாக்கிவிட்டு ஓடிவிட்டனர்.

இதில் காயமடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இது பற்றிய தகவல் அறிந்த போலிஸார் 70 பேரில் 6 பேரை கைது செய்தனர்.

இலங்கை கடற்படையுடன் தமிழக மீனவர்களை தாக்கியது சீனர்கள்- இல.கணேசன்

கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையுடன் சேர்ந்து சீனர்களும் தாக்கியதாக தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் இலங்கை கடற்படையினரி்ன் தாக்குதல் காரணமாக கடலுக்கு செல்ல மறுத்து ராமேஸ்வரம் உள்ளிட்ட 5 மாவட்ட மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து தமிழக அரசு கொடுத்த உறுதிமொழியின் பேரில் 300 விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்குத் திரும்பினர். ஆனால், அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது மூன்று பெரிய கப்பல்கள் உட்பட 9 கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.

அவர்களிடமிருந்து உயிர் பிழைக்கும் நோக்கத்தில் மீனவர்கள் கரையை நோக்கி வேகமாக திரும்பினர். அப்போது அவர்களை துரத்தி வந்த இலங்கை கடற்படை 5 படகுகளில் வந்த 21 மீனவர்களை சுற்றி வளைத்து தாக்கினர். வெற்றிவேல், சுடலைமணி, பாண்டி, முனியசாமி ஆகிய நான்கு பேரையும் சிறைபிடித்து சென்று தலைமன்னார் நீதிமன்றத்தில் நிறுத்தியது. வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள் நான்கு பேரையும் 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

சீனர்களும் இருந்தனர்..

இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் இல.கணேசன், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது இலங்கை கடற்படையினர் மட்டுமல்ல. அவர்களில் சீனர்களும் இருந்ததாக மீனவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் இது நாட்டின் பாதுகாப்புக்கு மிக பெரிய அச்சுறுத்தலாகும் என்றார்.

சீனாவின் நான்காவது ரொக்கட் ஏவுகணைத்தளம் 2013ல் இயங்குமென அறிவிப்பு

china.jpgசீனா ஹைனான் தீவில் வென்சாங்க் நகரில் ராக்கெட் ஏவுதளம் ஒன்றை அமைத்து வருகிறது. இது சீனாவின் 4வது ராக்கெட் ஏவுதளம் ஆகும். இந்த ஏவுதளம் எதிர்வரும் 2013ம் ஆண்டு முதல் இயங்கத் தொடங்கும்.

இந்த ஏவுதளத்தில் இருந்து செயற்கைக் கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்படும் என்று அதன் இயக்குநர் வாங்க் வெய்ச்சாங்க் தெரிவித்தார். சீனாவின் விண்வெளித் திட்டத்தை இராணுவம் தான் செயல்படுத்தி வருகிறது. அடுத்தபடியாக அது விண்வெளி வீரர்களை விண்ணுக்கு செலுத்த இருக்கிறது.

சீனா கடந்த 2003ம் ஆண்டு விண்வெளி வீரரை விண்ணுக்கு செலுத்தியது. விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பிய 3வது நாடு சீனா தான். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சீன விண்வெளி வீரர்கள் 68 மணி நேரம் விண்வெளியில் நடந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர்களின் வருடாந்த மாநாடு ஹபரனையில் – 18ஆம் திகதி ஆரம்பம்

cheif_ministers_meeting.pngமாகாண முதலமைச்சர்களின் 26ஆவது வருடாந்த மாநாடு வியாழக்கிழமை ஹபரனயில் உள்ள ஹபரன சாயா கிராமத்தில் ஆரம்பமாகவுள்ளது. இவ்வருட முதலமைச்சர்கள் மாநாட்டுக்கான ஏற்பாடுகளை வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்ட்டி பிரேம்லால் திசாநாயக்க மேற்கொண்டுள்ளார்.

இவ்வருட மாநாட்டின்போது மாகாண சபைகளின் சுமுகமான செயற்பாட்டுக்குத் தடையாகவுள்ள சட்டமூலங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டிலிருந்து பயங்கரவாதத்தைத் தோற்கடித்து நாட்டுக்கு விடுதலை பெற்றுக்கொடுத்தமைக்காக ஜனாதிபதி, முப்படையினர் மற்றும் பொலிஸார் ஆகியோருக்கும் அரசாங்கத்துக்கும் நன்றி தெரிவிக்கும் பிரேரணை ஒன்றும் இந்ந மாநாட்டில் நிறைவேற்றப்படவுள்ளது.

தேர்தல் நடைபெறுவதற்காக தென் மாகாண சபை கலைக்கப்பட்டுள்ளதால் அம்மாகாண முதலமைச்சர் தவிர்ந்த நாட்டின் ஏனைய மாகாணங்களின் முதலமைச்சர்கள் அனைவரும் இம்மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருட முதலமைச்சர்கள் மாநாடு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

ஐக்கிய தேசிய கட்சி கூட்டணியிலிருந்து தொழிலாளர் தேசிய சங்கம் வெளியேறியது.

080909teawomen.jpgதோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் ஐக்கிய தேசிய கட்சி உரிய அழுத்தத்தினை வழங்காத காரணத்தினால் ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணியிலிருந்து விலகி தொழிலாளர் தேசிய சங்கம் தனித்து செயற்படுவதற்கு முடிவெடுத்துள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.

தோட்டத்தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 500 ரூபா எதிர்பார்க்கப்பட்ட போதும் 405 ரூபா சம்பளத்தினை வழங்கக்கூடிய கூட்டொப்பந்தத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்கமான இலங்கைத்தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம் கைச்சாத்திட்டுள்ளது.

சவுதி அரேபிய வாகன விபத்தில் மடவளை வாசி மரணம்

மடவளையைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் சவூதி அரேபியாவில் வைத்து விப த்தொன்றில் பலியானார். முஹமட் ராயிஸ் என்பவரே இவ்விபத்தில் பலியானவராவார்.

புனித உம்ரா கடமைக்கு மக்கா நோக்கிப் பயணமான தனது மனைவி, பிள்ளை ஆகியோரை சந்திக்க வந்த சமயமே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இதே விபத்தில் இலங்கையைச் சேர்ந்த பரகஹதெனியவை வசிப்பிட மாகக் கொண்ட ஒருவரும் மரணமடைந்துள்ளார்.