சீனா ஹைனான் தீவில் வென்சாங்க் நகரில் ராக்கெட் ஏவுதளம் ஒன்றை அமைத்து வருகிறது. இது சீனாவின் 4வது ராக்கெட் ஏவுதளம் ஆகும். இந்த ஏவுதளம் எதிர்வரும் 2013ம் ஆண்டு முதல் இயங்கத் தொடங்கும்.
இந்த ஏவுதளத்தில் இருந்து செயற்கைக் கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்படும் என்று அதன் இயக்குநர் வாங்க் வெய்ச்சாங்க் தெரிவித்தார். சீனாவின் விண்வெளித் திட்டத்தை இராணுவம் தான் செயல்படுத்தி வருகிறது. அடுத்தபடியாக அது விண்வெளி வீரர்களை விண்ணுக்கு செலுத்த இருக்கிறது.
சீனா கடந்த 2003ம் ஆண்டு விண்வெளி வீரரை விண்ணுக்கு செலுத்தியது. விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பிய 3வது நாடு சீனா தான். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சீன விண்வெளி வீரர்கள் 68 மணி நேரம் விண்வெளியில் நடந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.