- “பிரபாகரன் ஒரு முட்டாள். சாடிக்கு ஏற்ற மூடி போல, பொட்டு அம்மானும் ஒரு மொக்கன்” எனக்கு துரோகிப்பட்டம் தருபவர்களுக்கு என் பதில்: இரட்டைமுகவராக மாறிய முன்னாள் கடற்புலி புலனாய்வுச் செயற்பாட்டாளர் காகுஸ்தன் அரியரத்தினம் (கனடா)
- புலிகளின் வி. பிரபாகரனும், வெனிசுவேலாவின் அதிபர் நிக்கோலாஸ் மடூரோவும் ஒரே விதமான முடிவை எதிர்கொண்டனர்:
- கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!
- புதிய வடிவில் வரும் வர்த்தக-தொழில் நுட்பப் போர்
- அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறுமா..?
- லார்க்கூர்னே சிவன் கோயில் அர்ச்சகர்கள் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் இந்தியாவில் கைது !
Multiple Page/Post
திரு கோணமலை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போதுவரை டெங்கு நோயினால் 197 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இரு சிறுவர்கள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த இரண்டு சிறாரும் சுமார் மூன்று வயதுக்குட்பட்டவர்கள். உயிரிழந்த சிறார் கிண்ணியா பிரதேசசெயலகப் பிரிவில் ஆலங்கேணிக் கிராமத்தையும் மூதூர் பிரதேசசெயலர் பிரிவில் அக்கரைச்சேனைக் கிராமத்தையும் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் மே மாதம் வரை மாவட்டத்தில் 197 பேர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டனர். இவர்களில் 164 பேர் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேசசெயலர் பிரிவைச் சேர்ந்தவர்கள். குச்சவெளி பிரதேசசெயலர் பிரிவைச் சேர்ந்த 14 பேர் டெங்கு காய்ச்சலிற்கு ஆளாகினர் என்று சுகாதாரசேவைகள் பிராந்தியப் பணிப்பாளர் டாக்டர் திருமதி கே.ஞானகுணாளன் தெரிவித்தார்.
திருகோணமலைக் கடற்படைத்தளத்தில் பணிபுரியும் கடற்படை வீரர்கள் சிலரும் டெங்கினால் பீடிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, டெங்குக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தில் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையில், நுளம்பு உற்பத்தியைப் பெருக்கும் விதத்தில் தாம் வசிக்கும் வீடுகள், வளவுகளைத் துப்பரவு செய்யாமல் வைத்திருப்போருக்கு எதிராக ஜூன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் சட்டநடவடிக்கை எடுக்கவும் மாகாண சுகாதாரத்திணைக்களம் ஈடுபட்டுவருகின்றது.
வடக்கிலிருந்து இளைஞர் யுவதிகளை பொலிஸ் சேவையில் சேர்த்துக் கொள்ளும் வகையில் முல்லைத்தீவில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் பொலிஸ் பயிற்சிக் கல்லூரி நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ன தெரிவிக்கின்றார்.
இந்த காணி ஒதுக்கீடு தொடர்பாக அரசாங்கத்திடம் கோரிக்கை முன் வைக்கபடப்டுள்ளதாகவும் தெரிவிக்கும் அவர் முதற் கட்டமாக 1000 தமிழ் இளைஞர் யுவதிகள் சேர்த்துக் கொள்ளப்பட விருப்பதாகவும் தெரிவிக்கின்றார்.
இடம் பெயர்ந்துள்ள மக்களின் மீள் குடியேற்த்தின் பின்னரே இந்த ஆட்சேர்ப்பிற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள போதிலும் தேவை ஏற்பட்டால் அதற்கு முன்னதாகவே பின்னனி ஆராயப்பட்டு ஆட்சேர்ப்புகள் இடம் பெறலாம் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
பாகிஸ் தானின் ஸ்வாத் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பெரிய நகரம் ஒன்றின் பெரும்பகுதியை தாலிபான் வசமிருந்து தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக அந்நாட்டின் இராணுவம் கூறுகிறது.
மிங்கோரா நகரம் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என்றாலும் சில பகுதிகளில் சிப்பாய்கள் கிளர்ச்சிக்காரர்களின் தாக்குதல்களை எதிர்கொள்வதாக இராணுவம் சார்பாகப் பேசவல்ல மேஜர் ஜெனரல் அதர் அப்பாஸ் கூறினார்.
ஆரம்பத்தில் தாலிபான் தரப்பிலிருந்து வலிமையான எதிர்த்தாக்குதல் வந்திருந்தது. ஆனால் அவர்கள் தப்பித்துச் செல்வதற்கான பாதைகள் துண்டிக்கப்பட ஆரம்பித்துள்ளன என்று உணர்ந்ததை அடுத்து அவர்கள் சண்டையிடாமல் பின்வாங்கிக் செல்வதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.
தாலிபான் ஆயுததாரிகள் தற்போது கிராமப் பகுதிகளுக்குள் சென்றுவிட்டார்கள் என்றும், அங்கு அவர்களுக்கு சித்தாந்த அடிப்படையில் மக்கள் ஆதரவு இல்லை என்றும். அவர்கள் பதுங்கியுள்ள இடங்களைக் கண்டுபிடிக்க மக்கள் உதவி வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் மீரா குமாரை மக்களவை சபாநாயகராக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், பெருமைமிகுந்த மக்களவையின் முதல் பெண் சபாநாயகர் என்ற சிறப்பை பெறுவார்.
மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 3ந் தேதி நடைபெறுகிறது. இது குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களின் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் மீராகுமாரை மக்களவை சபாநாயகராக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. ஐந்து முறை எம்.பி.யாகி இருக்கும் மீராகுமார் அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பீகார் மாநிலத்தின் சசாராம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய நீர்வளத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரான பாபு ஜெகஜீவன்ராமின் மகளும், முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியுமான மீராகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டால் பெருமைமிகுந்த அரசியல் சாசன பதவியான மக்களவையின் முதல் பெண் சபாநாயகர் என்ற சிறப்பை பெறுவார். அதன் பிறகு அவர் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
நீதி, சட்டமறுசீரமைப்பு அமைச்சர் அமரசிறி தொடங்கொட நேற்று இரவு காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 66. இவர் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார்.
1983 ஆம் ஆண்டு காலி மாவட்டத்திலிருந்து அரசியலில் பிரவேசித்த அவர் 1994ம் ஆண்டு அமைச்சராகப் பதவி யேற்றார். தென் மாகாண சபையின் முதலமைச்சராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து மாகாண ஆஸ்பத்திரிகளில் நிலவும் ஆளணி மற்றும் பெளதீக வளங்களை பூர்த்தி செய்து தரமுயர்த்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி.யின் தலைமையில் நேற்று விசேட கூட்டமொன்று அம்பாறை போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது.
சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, அமைச்சர்களான சுசந்த புஞ்சி நிலமே, பி. தயாரட்ன உட்பட பலரும் கலந்து கொண்டனர். கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை, கல்முனை வடக்கு வைத்தியசாலை, மட்டக்களப்பு வைத்தியசாலை அக்கரைப்பற்று வைத்தியசாலை, அம்பாறை போதனா வைத்தியசாலை என்பன தர முயர்ததப்பட்டு முழுமையான ஆஸ்பத்திரிகளாக மாற்றப்பட்டுள்ள நிலையில் மாகாண ஆஸ்பத்திரிகளையும் தரமுயர்த்துவது தொடர்பாகவும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
அம்பக முவ பிரதேச சபைக்கு உட்பட்ட மஸ்கெலியா நகரத்தில், மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியின் அருகில் அமைந்திருந்த குடியிருப்புகள் சில நில வெடிப்பு காரணமாக பாதிப்படைந்துள்ளன.
மவுசாக்கலை நீர்தேக்கத்தின் கரையில் அமைந்திருந்த இந்த வீடுகளில் குடியிருந்த 5 குடும்பங்களை உடனடியாக வீடுகளில் இருந்து வெளியேறுமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் பணித்துள்ளார். தற்போது மலையகத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக இக்குடியிருப்புப் பகுதி மண்சரிவு அபாயத்தையும் எதிர்நோக்கியுள்ளது.
இந்த வீடுகளின் சுவர்கள் 4-5 அங்குலம் வரை வெடித்து இடைவெளிகளுடன் காணப்படுகின்றன. சில வீடுகளின் சுவர்கள் நிலவெடிப்புகள் காரணமாக நிலத்தினுள் புதைந்துள்ளன. தொடர்ந்தும் மழைபெய்தால் நிலவெடிப்புகளின் அளவு அதிகரிப்பதோடு, பாரியளவு மண்சரிவு அபாயத்தையும் எதிர் நோக்கும் என புவி சரிதவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 குடும்பங்களும் அவர்களின் உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாக தங்கியுள்ளனர். இவர்களுக்கான நிவாரணங்களை விரைவில் பெற்றுக்கொடுப்பதற்கு தான் நடவடிக்கை எடுத்துள்ள தாகவும் மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.
ஆஸ்கர் விருதை வென்ற‘ஸ்லம்டாக் மில்லியனர்’திரைப்படத்தில் நடித்த இரு இந்திய குழந்தை நட்சத்திரங்களுக்கு புதிய வீடுகளை கொடுக்க அரசாங்கம் முன் வந்துள்ளது. மும்பையில் இந்த மாதத்தின் முற்பகுதியில் குடிசை மாற்று வாரிய அதிகாரிகளால் இவர்கள் இருவருடைய வீடும் இடிக்கப்பட்டது.
அசாரூதின் இஸ்மாயில் மற்றும் ரூபினா அலி என்ற இந்த இருவருக்கும் காங்கிரஸ் கட்சி வீடு கொடுக்க முன்வந்துள்ளது. இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நடித்தமைக்காக இவர்களுக்கு வீட்டை விருதாக கொடுப்பதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இந்த வீட்டுக்கு ஆகும் செலவை காங்கிரஸ் கட்சி ஏற்று கொண்டுள்ளது.
இலங் கையில் நடந்து முடிந்துள்ள உள்நாட்டு யுத்தத்தின் இறுதி நாட்களில் போர்க் குற்றமாக அமையகக்கூடிய மிக மோசமான மனித உரிமை மீறல்கள் நடந்தன என்று தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில விசாரணைகள் வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக ஐ.நா.மனித உரிமைகள் விவகார ஒருங்கிணைப்பாளர் ஜான் ஹோம்ஸ் அவர்களும் குரல் கொடுத்துள்ளார்.
போர்க்குற்றமாக அமைகின்ற மனித உரிமை மீறல்கள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் வரும்போதலெல்லாம் அவை முழுமையாக விசாரிக்கப்படுதல் அவசியம் என்றும், இந்த வாரத்தில் முன்னர் கூடிய ஐ.நா.மனித உரிமை மன்றம் அப்படியான ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டிருந்திருக்கலாம். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது. அப்படியிருக்கும்போது அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் இனி நாம் தான் யோசிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும், இலங்கையில் யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இருதரப்புமே பொது மக்கள் கொல்லப்படுவதற்கு வழிவகுத்த காரியங்களை தெரிந்தே செய்துள்ளன என்று நம்புவதற்கு இடமளிக்கக்கூடிய வலுவான காரணங்கள் இருக்கவே செய்வதாகவுன் ஜான் ஹோம்ஸ் குறிப்பிட்டார்.
