இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணைக்கு ஜான் ஹோம்ஸ் ஆதரவு

holmes_.jpgஇலங் கையில் நடந்து முடிந்துள்ள உள்நாட்டு யுத்தத்தின் இறுதி நாட்களில் போர்க் குற்றமாக அமையகக்கூடிய மிக மோசமான மனித உரிமை மீறல்கள் நடந்தன என்று தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில விசாரணைகள் வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக ஐ.நா.மனித உரிமைகள் விவகார ஒருங்கிணைப்பாளர் ஜான் ஹோம்ஸ் அவர்களும் குரல் கொடுத்துள்ளார்.

போர்க்குற்றமாக அமைகின்ற மனித உரிமை மீறல்கள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் வரும்போதலெல்லாம் அவை முழுமையாக விசாரிக்கப்படுதல் அவசியம் என்றும், இந்த வாரத்தில் முன்னர் கூடிய ஐ.நா.மனித உரிமை மன்றம் அப்படியான ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டிருந்திருக்கலாம். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது. அப்படியிருக்கும்போது அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் இனி நாம் தான் யோசிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும், இலங்கையில் யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இருதரப்புமே பொது மக்கள் கொல்லப்படுவதற்கு வழிவகுத்த காரியங்களை தெரிந்தே செய்துள்ளன என்று நம்புவதற்கு இடமளிக்கக்கூடிய வலுவான காரணங்கள் இருக்கவே செய்வதாகவுன் ஜான் ஹோம்ஸ் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *