இலங் கையில் பொதுமக்களுக்கு சிகிச்சையளித்து வந்த லண்டன் கிழக்கு சிங்போர்ட் பிரதேசத்தை சேர்ந்த மருத்துவ பணியாளரான தமிழ்வாணி ஞானகுமார் என்பவர் வவுனியாவில் உள்ள முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்த பிரித்தானிய மருத்துவ பணியாளரின் பாதுகாப்பு குறித்து பிரித்தானிய அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய பிரஜை வவுனியாவில் உள்ள மெனிக் பார்ம் முகாமில் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக பிரித்தானிய வெளிவிவகாரம் மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். .