February

February

தொடரும் என்.பி.பி அலை – தேர்தலை பின்னுக்கு தள்ளி கால அவகாசம் கோருகிறார் பா.உ சிறிதரன் !

தொடரும் என்.பி.பி அலை – தேர்தலை பின்னுக்கு தள்ளி கால அவகாசம் கோருகிறார் பா.உ சிறிதரன் !

 

எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அநுர அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஏப்ரல் மாதத்தில் தேர்தலை நடத்துவது என்பது என்னை பொறுத்தவரை நெருக்கடியாக இருக்கும். இதற்கான காரணம் என்னவெனில், ”சாதாரண தரப் பரீட்சை, வரவு செலவுத் திட்ட விவாதங்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறு போன்ற சமய நிகழ்வுகள் குறித்த காலப்பகுதியில் வருவதால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும் அத்துடன் தேர்தல் திருத்தங்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வழக்கப்பட்டுள்ள சந்தர்ப்பம் குறித்து மகிழ்ச்சி அடைவதாகவும், பெண்களுக்கு 25 வீதம் வழங்கப்பட்டுள்ளமை பாராட்டத்தக்கது என்றும் குறிப்பிட்டார்.

தேர்தலை பின்தள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, எந்த தேர்தலுக்கும் முகம்கொடுப்பதற்கு நாங்கள் பின்வாங்கியதில்லை. தேர்தல் பிரசார காலப்பகுதி யாருக்கும் அநீதி ஏற்படக்கூடாது என்பதனாலே உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் வேட்புமனு கோருமாறு கேட்கிறோம் என தெரிவித்தார்.

இதேவேளை எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடங்கி மாகாண சபை தேர்தல்கள் வரை அனைத்திலும் என்.பி.பி அலையே தொடரும் என அரசியல் அவதானிகள் கூறி வருகின்றனர். ஆனால் இன்னமும் தமிழரசுக் கட்சியின் உட்கட்சி பூசல் கூட முடிந்தபாடில்லை. பாராளுமன்றத்தேர்தல்களை போலவே உள்ளூராட்சி தேர்தல்களிலும் தமிழரசுக்கட்சியை விட என்.பி.பி ஆதிக்கம் செலுத்த வாய்புள்ளதையும் அவதானிக்க முடிகிறது.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தான் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ்தேசிய கட்சிகளை விட தேசியக்கட்சி ஒன்று தன் ஆதிக்கத்தை பெரும்பான்மை ஆசனங்கள் மூலம் உறுதி செய்திருந்தது. இதனை தொடர்ந்தும் தக்க வைக்கும் நோக்கில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, அமைச்சர் பிமல் ரத்நாயக்க, விளையாட்டுத்துறை அமைச்சர் என அடுத்தடுத்து ஒவ்வொரு வார இடைவெளியிலும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் பகுதிகளுக்கு திடீர் விஜயம் செய்து என்.பி.பி தன்னுடைய வாக்கு வங்கியை பலப்படுத்திவருகிறது. இதனால் உள்ளூராட்சி தேர்தல் தமிழ்தேசிய கட்சிகளுக்கு சவாலாக மாறியுள்ளது.

பழைய நினைப்பில் வீட்டிற்கு சென்று என்.பி.பியினர் மிரட்டுகிறார்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் !

பழைய நினைப்பில் வீட்டிற்கு சென்று என்.பி.பியினர் மிரட்டுகிறார்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் !

 

இலங்கை அரசியலமைப்பு பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தையும், தாம் விரும்பும் அரசியல் கருத்தைக் கொண்டிருப்பதற்கான சுதந்திரத்தையும் வழங்குகிறது. இது இந்த நாட்டில் காணப்படும் மனித உரிமையாகும். இந்த அரசாங்கம் இதையும் மீறி நடந்து வருகின்றது என களனி பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மாத்தளை மாவட்டத்தின் யடவத்தை பிரதேசத்தை சேர்ந்த பிரஜை ஒருவர் தனது கருத்துக்களை முகநூல் ஊடாக வெளிப்படுத்திய போது அரசாங்கத்தையும், மக்கள் விடுதலை முன்னணியையும் சேர்ந்த ஒருவர், வீடு சென்று அரசாங்கத்தை விமர்சிப்பதை நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்கிறார். அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத வேளையில், பேச்சு சுதந்திரத்தை மறுக்கும் வகையில் வீடு வீடாகச் செல்லும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த நாட்டில் உள்ள 220 இலட்சம் மக்களும் எவருக்கும் அஞ்சாமல் சுதந்திரமாக தமது கருத்துக்களை வெளியிடும் உரிமை அவர்களுக்கு காணப்படுகின்றன. குடி மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் முன்நிற்கும். பேச்சு சுதந்திரமும் கருத்து சுதந்திரமும் என்பது தனிமனித உரிமைகளாகும். அதில் யாரும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்

வட்டுவாகல் பாலத்தை புனரமைக்க ஆயிரம்மில்லினன் நிதி ஒதுக்கீடு ! பாலத்தை அமைக்காமல் நிதியை திருப்பி அனுப்பும் விளையாட்டு இருக்கக் கூடாது அரசு எச்சரிக்கை !

வட்டுவாகல் பாலத்தை புனரமைக்க ஆயிரம்மில்லினன் நிதி ஒதுக்கீடு ! பாலத்தை அமைக்காமல் நிதியை திருப்பி அனுப்பும் விளையாட்டு இருக்கக் கூடாது அரசு எச்சரிக்கை !

முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணியினை ஆரம்பிப்பதற்கு 2025ஆம் ஆண்டுக்குரிய வரவு – செலவுத் திட்டத்தில் ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஆரம்ப கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பாலத்தை அமைக்காமல் கடந்த காலங்கள் போல் நிதியை திருப்பி அனுப்பும் விளையாட்டுக்கள் இருக்கக்கூடாது என அரசு எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. இந் நிலையில் தமது அயராத தொடர் முயற்சியால் முல்லைத்தீவு மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை தமது தொடர்ச்சியான கோரிக்கையை ஏற்று வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணத்துக்கான நிதியை இவ்வருட வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கியதற்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் விமல் ரத்நாயக்க, கூட்டுறவுப் பிரதி அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான உபாலி சமரசிங்க ஆகியோருக்கு முல்லைத்தீவு மக்களின் சார்பாக தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வட்டுவாகல் புனரமைக்கப்படுவது எத்தனை முக்கியமோ அதனை விட முக்கியமானது அந்த பாலம் கூறும் வரலாற்றை பாதுகாப்பது எனவும் குறைந்த பட்சம் புதிய பாலத்தை அமைக்கும் போது பழைய பாலத்தின் ஒரு பகுதியை நினைவுச் சின்னமாக பெயர்தெடுத்து பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முல்லைத்தீவு ஊடகவியலாளர் குமணன் முன்வைத்துள்ளார்.

இது குறித்து தனது பேஸ்புக் தளத்தில் பதிவிட்டுள்ள ஊடகவியலாளர் குமணன், சேதமடைந்த வட்டுவாகல் பாலத்தை புதிதாக அமைக்க அரசாங்கம் இந்த வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கியுள்ளது, வட்டுவாகல் பாலத்தை மீள அமைக்க வேண்டியது என்பது மிகவும் தேவையான ஒன்று, ஆனால் அவ்வாறு செய்வதன் மூலம், எமது வரலாற்றின் ஒரு முக்கிய பகுதியை அழிக்கும் அபாயமும் உள்ளது என்ற கவலை தோன்றியுள்ளது . பழைய வட்டுவாகல் பாலம் தமிழ் மக்களின் மீள்தன்மை மற்றும் துயரத்தின் கதையைச் சொல்கிறது ( resilience and misery ) – இது தமிழர் போராட்டத்தின் சின்னம் மற்றும் நாம் தாங்கிய துயரத்தின் சாட்சி .

ஜெர்மனியின் பெர்லின் சுவரின் எச்சங்கள் ஜெர்மனியின் கடந்த காலத்தையும் வரலாற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் சக்திவாய்ந்த நினைவூட்டலாகச் செயல்படுவது போல, வட்டுவாகல் பாலம் தமிழர்களின் கூட்டுப் பயணத்திற்கு ஒரு சான்றாக நிற்கிறது.

குறைந்தபட்சம் புதிய பாலத்தை அமைக்கும் போது பழைய பாலத்தின் ஒரு பகுதியை நினைவுச் சின்னமாக பெயர்தெடுத்து பாதுகாக்கலாம். இது தொடர்பில் எமது மக்கள் பிரதிநிதிகள் கவனம் எடுத்து அரசோடு பேச வேண்டும்.முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் .

போரின் நினைவு எச்சமாகவும் மிச்சமாகவும் ( War memorial ) போர் சார்ந்த சுற்றுலாவில் எமது முக்கிய அடையாளமாகிய (War tourism ) இந்த வரலாற்று அடையாளத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.facebook.com/share/p/1HG2BPgCWR/

 

மக்களின் கவனத்தை ஈர்த்த உண்ணா விரதப் போராட்டம் – பா உ சிறிதரன் அணி அச்சத்தில் !

மக்களின் கவனத்தை ஈர்த்த உண்ணா விரதப் போராட்டம் – பா உ சிறிதரன் அணி அச்சத்தில் !

முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற வளாகத்தில் முன்னாள் போராளியான அழகரத்தினம் வர்ணகுலராசா பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீதி கிடைக்கும் வரை சாகும் வரையான உண்ணாவிரத போராட்டம் ஒன்றை பெப்ரவரி 14 ஆம் திகதி தொடக்கம் நடத்தி வந்தார். நீர் மற்றும் உணவு தவிர்த்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

அவர் முன்வைத்த 10 அம்ச கோரிக்கைகளில் அரைவாசி தானும் நிறைவேறினால் போதும் என்ற நிலைப்பாட்டுடன் வர்ணகுலராசாவின் சாகும்வரை போராட்டம் முன்னாள் போராளிகளின் தலமையிலான மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பக அமைப்பால் நீர்ராகரம் கொடுத்து நேற்றைய தினம் முடித்து வைக்கப்பட்டுள்ளது. சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் தன்முனைப்போடு ஈடுபட்ட முன்னாள் போராளிக்கு பல தரப்பிலிருந்தும் தமிழ் மக்கள் இடத்திலிருந்தும் ஆதரவு பெருகி வந்திருந்தது. உண்ணாவிரதம் இருந்த அழகரத்தினத்தின் உடல்நிலையை கருதி அவர் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட இருப்பதாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்து வைத்த தீபன் கருத்து தெரிவித்தார்.

இந்த விடயத்தில் கிளிநொச்சி எம்பி சிவஞானம் சிறிதரனின் சார்பு ஊடகவியலாளர் ஒருவர் மூக்கை நுழைத்து கேள்வி கேட்பதாக கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டு சர்சையை உருவாக்கினார்.

பெரும் காசு கொலிக்கும் மாவீரர் துயிலுமில்ல வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் எம்பி சிவஞானம் சிறிதரனிடமிருந்து மாவீரர் துயிலும் இல்லங்களை மீட்க மல்லுக்கட்டும் மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பக அமைப்பினர் அழகரத்தினம் வர்ணகுலராசாவின் உயிரில் காட்டிய அக்கறையை கேலிக்குள்ளாக்கினார்.

அவருடைய கேள்விகளை இடைமறித்த மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பக உறுப்பினர் ”நான் மூன்று நாளாக இங்கே நிற்கிறேன், நீர் இந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி, றோவினால் நடத்தப்படும் போராட்டம் என பதிவு போட்டு வருகிறீர்’’ என காட்டமாக பதிலளித்தார். சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக முடிவுக் கொண்டுவரப்ட்டுள்ளது. வர்ணகுலராசா முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பிலான போராட்டங்கள் மாற்றுவழியில் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைச் செயற்பாட்டாளர் பொஸ்கோ கைவிடப்பட்டார் ! தமிழினத்தின் துரோகத்தனம் !

மனித உரிமைச் செயற்பாட்டாளர் பொஸ்கோ கைவிடப்பட்டார் ! தமிழினத்தின் துரோகத்தனம் !

அண்மையில் சுவிஸ் நாட்டில் வைத்து ஈழத்தமிழரின் மனித உரிமை செயற்பாட்டாளரான பொஸ்கோ கைதாகியுள்ள நிலையில் தமிழர் தரப்பு அதனை கண்டுங்காணாமலும் செயற்பட்டு வருவதுடன் எதுவித அழுத்தங்களையும் இது தொடர்பில் பிரயோகிக்காமல் கள்ள மௌனம் காத்து வருதிறது.

இந்நிலையில் இது தொடர்பில் புலம்பெயர் அரசியல் சமூக செயற்பாட்டாளரும் முன்னாள் போராளி புலனாய்வாளர் முல்லைமதி அவர்களுடனான தேசம்திரை நேர்காணல்

அர்ச்சுனா காமெடி பீஸா – என்பிபி யாழ் எம்பிக்கள் கத்தரித் தோட்ட வெருளிகளா ? தொடரும் பனிப்போர் !

அர்ச்சுனா காமெடி பீஸா – என்பிபி யாழ் எம்பிக்கள் கத்தரித் தோட்ட வெருளிகளா ? தொடரும் பனிப்போர் !

 

பா. உ அர்ச்சுனா இராமநாதன் ஒரு காமெடி பீஸ் பாராளுமன்றத்திற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டு அனுப்பப்பட்ட ஒரு காமெடியன் குறிப்பாக சொல்லப்போனால் கவுண்டமணி செந்தில் போன்ற ஒரு காமெடியன் என யாழ்.மாவட்ட என்.பி.பி பா.உறுப்பினரான ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய அர்ச்சுனா, யாழ்ப்பாண மக்கள் மூன்று கத்தரி தோட்டத்து வெருளிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர் என்.பி.பி பா.உக்களான இளங்குமரன், ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, சிறீபவானந்தராஜா ஆகியோரை குறிப்பிட்டிருந்தார். இதனை தொடர்ந்து என்.பி.பி யாழ்ப்பாண பா.உக்களும் வகைதொகையின்றி பா.உ அர்ச்சுனாவை ஊடகங்கள் முன்பாக விமர்சித்து வருகின்றனர். அண்மையில் பா. உ இளங்குமரன் இராமநாதன் அர்ச்சுனா இது தொடர்பாக தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார். இந்தநிலையில் ரஜீவன் அர்ச்சுனாவை விமர்சித்துள்ளார்.

இது தொடர்பில் பா.உ ரஜீவன் மேலும் தெரிவிக்கையில், மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதி ஒரு பாராளுமன்ற உயரிய சபையில் எவ்வாறு பேச வேண்டும் என்ற ஒரு ஒழுக்கத்தை பின்பற்ற தெரியாத ஒரு நபராகவே பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் காணப்படுகின்றார்.. யாருக்கும் யாரையும் விமர்சிக்கின்ற உரிமை இருக்கின்றது ஆனால் அதனை நாகரீகமான முறையில் கையாள வேண்டும் ஆனால் அவர் அவ்வாறு கையாளாது தரக்குறைவாக கருத்துகளை தெரிவிப்பது ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்குறிய அடிப்படை தகுதி கூட இல்லாத ஒரு நபராகவே காணப்படுகின்றார் .

அவர் கடந்த காலங்களில் மத குருமார்களை, அமைச்சர்களை, ஜனாதிபதியை மற்றும் அரசு உயர் அதிகாரிகளை கேலி செய்வது அவருடைய தொழிலாக இருந்தது வருகின்றது , மக்களால் தெரிவு செய்யப்பட்ட அவர் மக்களுக்கு சேவை எதுவும் செய்யாது இவ்வாறான விமர்சனங்களை செய்து கொண்டு தன்னை ஒரு காமெடியனாக காட்டிக் கொண்டு திரிகின்றார். எனவே அவரைப் பற்றி நாங்கள் பெரிதாக அலட்டிக் கொள்ள தேவையில்லை என அவர் தெரிவித்திருந்தார்.

உச்ச நீதிமன்ற வழக்குத் தொடங்க முன்பே கலைப்பீடாதிபதிக்கு உச்சா போய்விட்டது ! யாழ் பல்கலை மாணவனுக்கு வகுப்புத் தடை நீக்கப்பட்டது ! பதவி விலகுவாரா கலைப்பீடாதிபதி ரகுராம் !

உச்ச நீதிமன்ற வழக்குத் தொடங்க முன்பே கலைப்பீடாதிபதிக்கு உச்சா போய்விட்டது ! யாழ் பல்கலை மாணவனுக்கு வகுப்புத் தடை நீக்கப்பட்டது ! பதவி விலகுவாரா கலைப்பீடாதிபதி ரகுராம் !

 

யாழ். பல்கலையின் 4ஆம் வருட சட்டத்துறை மாணவனுக்கு விதிக்கப்பட்ட வகுப்புத்தடை மீள பெறப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் மாணவனுக்கு அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு வகுப்புத் தடை நீக்கப்பட்டதற்காக பதவியை ராஜினாமா செய்வதாக நாடகம் போட்ட கலைப்பீடாதிபதி ரகுராம், இப்போது பதவியை ராஜினாமா செய்வாரா என அன்று போராட்டத்தில் குதித்த மாணவர்களுக்காக குரல்கொடுத்தவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் நடைபெற்ற மூன்று வெவ்வேறு விடயங்களில் 09 மாணவர்களுக்கு வகுப்புத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. வகுப்புத்தடையை, மாணவர் ஒன்றியத்தின் செயலாளராக அண்மைக்காலம் வரை செயலாற்றிய சட்ட பீட மாணவனான சி சிவகஜன் தலைமையில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கேள்விக்குட்படுத்தினர்.

இதையடுத்து பேரவை மாணவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி வகுப்புத் தடையிலிருந்து விடுவித்ததால் பேராசிரியர் எஸ்.ரகுராம் கலைப்பீடாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் தன்மீது பாரதூரமான அவதூறை ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களுக்கு சிவகஜன் செவ்வி வழங்கினார் என பேராசிரியர் ரகுராம் துணைவேந்தரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

அதன் அடிப்படையில், கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி பல்கலைக்கழகத் துணைவேந்தரால் சட்டத்துறை மாணவன் சிவகஜனுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டது.

இந்த வகுப்புத் தடையைச் சவாலுக்குட்படுத்தி யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் சிறிசற்குணராஜா, கலை பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ரகுராம், மாணவர் ஒழுக்காற்று அதிகாரி ஆகியோருக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு சட்டத்துறை மாணவன் சிவகஜனால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையிலையே மாணவன் மீதான வகுப்புத்தடை நீக்கப்பட்டுள்ளதாக மாணவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வகுப்புத்தடை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டாலும், சட்ட விதிமுறைகளை மீறி மாணவனுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டமைக்கு எதிராகவும் , இழப்பீடு கோரியும் வழக்கினை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக மாணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்களுக்கான பாடங்களை தெரிவு செய்வதற்கான அடிப்படை உரிமையை கலைப்பீடாதிபதி ரகுராம் அனுமதிக்காததைத் தொடர்ந்தே பாலியல் லஞ்சம் கோரும் பேராசிரியர் ரகுராமுக்கும் மாணவர்களுக்குமான முரண்பாடு வலுத்தது. பேராசிரியர் ரகுராமின் இந்த அடாவடித் தனத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். தனக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மாணவர்களை பழிவாங்கும் நோக்கில் ரகுராம் அந்த மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டதுடன் இவர்களின் நடத்தைiயை போதைவஸ்துவுக்கு அடிமையானவர்கள் என்று காண்பிக்க தனக்குச் சார்பான சில கலைப்பீட மாணவர்களைத் தூண்டிவிட்ட ரகுராம் அதனைக் கனகச்சிதமாக அரங்கேற்றினார்.

சில மாணவர்கள் குடித்துவிட்ட வந்ததை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் போதைப்பொருள் பாவனையாளர்கள் என்றும் அவர்களுக்கு எதிராக தான் விதித்தத வகுப்புத்தiடையை பல்கலைக்கழக நிர்வாகம் நீக்கிவிட்டதால் தான் பதவியை ராஜினாமாச் செய்வதாக ஒரு பெரும் நாடகத்தை அரங்கேற்றி ஒட்டுமொத்த பல்கலைக்கழக மாணவர்களையும் போதைக்கு அடிமையானவர்கள் என முத்திரைகுத்தினார் ரகுராம்.

தமிமீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மாவீரர் தின உரையின் பாணியில் போதைபொள் பாவனைக்கு எதிராக தான் போராடுவதாக ஒரு விம்பத்தை கட்ட முயற்சித்தார் ரகுராம். பேராசிரியர் ரகுராமுக்கு பின்னாலிருந்த சில கலைப்பீட காமுகப் பேராசிரியர்கள் தங்களைப் பாதுகாக்க ரகுராம் தொடர்ந்தும் அதிகாரத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக ரகுராமின் ராஜினாமா நாடகத்தை அரங்கேற்றத் துணை போயினர்.

650 விரிவுரையாளர்கள் பேராசிரியர்கள் உள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத்தில் 250 பேராசிரியர்கள் விரிவுரையாளர்களே உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் 17 பேர் மட்டுமே ரகுராமின் ராஜனாமா நாடகத்தில் பங்கேற்றனர். இவர்கள் அவசரக் குடுக்கையாக மேற்கொண்ட வேலைநிறுத்தப் போராட்டம் முன்னறிவித்தலின்றி மேற்கொள்ளப்பட்ட போராட்டம் சட்டவிரோதமானது. அதனை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ சுட்டிக்காட்டி பணிக்குத் திரும்பும்படி உத்தரிவிட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

மேலும் பேராசிரியர் ரகுராமினால் போதைவஸ்த்துக்கு அடிமையானவர்களின் தலைவனாக சித்தரிக்கப்பட்ட குற்றம்சாட்டப்பட்ட மாணவன் சிவகஜன் வாழ்நாளில் மதுவையோ போதையையோ தொடாதவர் என கலைப்பீடத்தின் ரகுராமுக்கு நெருக்கமான மாணவர்களே தேசம்நெற்க்குத் தெரிவிக்கின்றனர். அப்படியிருந்தும் அம்மாணவனின் பல்கலைக்கழகத்தின் மாணவர்களை தன்னுடைய சுயநலனுக்காக ரகுராம் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் எனச் சித்திரப்பது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருவதுடன் தற்போது சிவகஜன் மீதான வகுப்புத்தடை நீக்கப்பட்டது நிர்வாகத்தையும் ரகுராமையும் அம்பலப்படுத்தியுள்ளது.

மாணவன் சிவகஜன் அடிப்படை உரிமை மீறல் வழக்ககை தொடுத்ததும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஆரம்பிக்கு முன்னரே, கலைப்பீடாதிபதிக்கு உச்சா போய்விட்டது. அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என இவரால் பாதிக்கப்பட்ட மாணவிகள் பழிவாங்கப்பட்ட மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்

யாழில் பெரியாருக்கு பிரமாண்டமான சிலை – முடிந்தால் கை வைத்துப் பாருங்கள் ! சீமான் அடிவருடிகளுக்கு சவால் விடுகின்றார் அருண் சித்தார்த் !

யாழில் பெரியாருக்கு பிரமாண்டமான சிலை – முடிந்தால் கை வைத்துப் பாருங்கள் ! சீமான் அடிவருடிகளுக்கு சவால் விடுகின்றார் அருண் சித்தார்த் !

 

யாழில் பெரியாருக்கு பிரமாண்டமான சிலை எழுப்புவேன் என அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளரும், யாழ்ப்பாணம் சிவில் அமைப்பின் தலைவரும், மவ்பிம ஜனதா கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாள அருண் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தேசம்நெற்க்குத் கருத்துத் தெரிவித்த அருண் சித்தார்த், ஈழத்தில் இலங்கையில் சாதிய ஒடுக்குமுறையின் கோட்டையான யாழ்ப்பாணத்தில் தாவடியில், கே.கே.எஸ்.வீதியில் எனது அலுவலகத்திற்கு முன்னால் 10 அடி உயரத்தில் தந்தை பெரியார் சிலையும், அண்ணல் அம்பேத்கர் சிலையும் சமூக நீதி, சமதர்மம், பகுத்தறிவு, சுயமரியாதை , பெண்விடுதலை, சாதி ஒழிப்பு, சீதனமுறை ஒழிப்பு, போன்ற உயரிய மேன்மையான சிந்தனை முறையை பறைசாற்றும் நோக்கில் நிறுவப்படும் எனத் தெரிவித்தார்.

சிலைகள் நிறுவப்படும் திகதிகள் விரைவில் பொதுவெளியில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்த அருண் சித்தார்த் இந்தச் சிலைகள் இரண்டும் ஈழத்தில் தந்தை பெரியாருக்கும்இ அண்ணல் அம்பேத்கருக்கும் நிறுவப்படும் முதலாவது சிலைகளாக வரலாற்றில் பதியப்படும் எனப் பெருமையுடன் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஈழத்து, இந்திய, புலம்பெயர் தேசத்து சாதிய சண்டியர் அனைவரும் வரவேற்கப்படுகின்றீர்கள். ஒடுக்கப்பட்ட மக்களைக் காலங்காலமாக சுரண்டி வாழ்ந்த, இன்றும் வாழ்ந்து வரும் சனாதன சாதிய சங்கிகளுக்கும், சைமனின் வியாபார, புரட்டுத் தேசிய ஆமைக் குஞ்சுகளுக்கும் அருண் சித்தார்த் என்கின்ற ஈழத்துப் பெரியாரிஸ்ட்டின் அறைகூவல் இது. முடிந்தால் இந்த சிலைகளில் கை வைத்துப் பாருங்கள், எனச் சவால் விடுத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனுக்குப் பதிலாக சீமானை தங்களின் தேசியத் தலைவராக வரித்துக்கொண்;டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒருசாரார் சீமானின் அடிவருடிகளாகவும் கூலிப்படைகளாகவும் மாறி புலம்பெயர்நாடுகளில் அடாவடித் தனங்களில் ஈடுபட்டடு வருகின்றனர். அவ்வாறான அடாவடி நடவடிக்கைகளில் ஒன்றாக லண்டனில் பெரியார் பற்றிய கலந்துரையாடலுக்குள் புகந்த ரவுடிக்கும்பல் வே பிரபாகரனின் பெயரில் ரவுடித் தனத்தில் ஈடுபட்டு லண்டன் மெற்றோ பொலிட்டன் பொலிஸாரினால் விரட்டியடிக்கப்பட்டனர்.

அருண் சித்தார்த்தின் திராவிடத் தலைவர்களின் சிலை எழுப்பும் முயற்சிக்கு தமிழகத்திலிருந்து விஜயம் செய்த இயக்குநர் ராஜ்குமார் தன்னுடைய முழமையான ஆதரவை வழங்கியுள்ளார்.

யாழ் பல்கலைக்கழகம் புதிய சிந்தனைக்கு திறக்கப்பட வேண்டும் ! புதிய தலைமை வேண்டும் !

யாழ் பல்கலைக்கழகம் புதிய சிந்தனைக்கு திறக்கப்பட வேண்டும் ! புதிய தலைமை வேண்டும் !

 

பாலியல் சுரண்டல் , பாலியல் இலஞ்சம் கோரும் யாழ் பல்கலை நிர்வாகம் கிளீன் செய்யப்பட வேண்டும்

யாழ் பல்கலைக்கழக முதலாவது மாணவர் ஒன்றியத்தை ஆரம்பித்தன் பின்நின்ற சமூக அரசியல் செயற்பாட்டாளர் நல்லதம்பி ஜெயபாலன்

 

வடக்கில் இளைஞர்களிடையே வேகமெடுக்கும் வெளிநாட்டு மோகம் – கோடிகளை குவிக்கும் மோசடியாளர்கள் !

வடக்கில் இளைஞர்களிடையே வேகமெடுக்கும் வெளிநாட்டு மோகம் – கோடிகளை குவிக்கும் மோசடியாளர்கள் !

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி இளையோரை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் வடக்கில் அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமான முறைகளில் ஆட்கடத்தல்களில் ஈடுபடும் முகவர்கள் இளையோரை இலக்கு வைத்து , அவர்களை சமூக ஊடகங்கள் ஊடாக அணுகி, ஆசை வார்த்தைகளை கூறி பெருந்தொகையான பணத்தினை பெற்று மோசடி செய்து வருகின்றனர்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் , மானிப்பாய், கிளிநொச்சி உள்ளிட்ட பொலிஸ்நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. வெளிநாடு செல்வதற்கு வங்கி கணக்கில் பெருந்தொகை பணம் வங்கி கணக்கில் இருப்பில் இருக்க வேண்டும் என கூறி, வங்கி கணக்கு இலக்கங்களை பெற்று , அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பெற்று , வங்கியில் உள்ள பணத்தை மோசடியாக கும்பல் பெற்றுக்கொண்டு தலைமறைவாகி வருகிறது.

வெளிநாடு செல்ல காத்திருக்கும் இளையோர், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மற்றும் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு முகவர்கள் ஊடாக பயண ஏற்பாடுகளை செய்து சட்ட ரீதியான முறையில் செல்ல வேண்டும்.

இது தொடர்பில் இளையோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டாலே இவ்வாறான மோசடி சம்பவங்களில் இருந்து அவர்கள் தப்பிக்கொள்ள முடியும். இல்லையெனில் பெருந்தொகை பணத்தினை இழக்க நேரிடும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை இலங்கையின் பல பகுதிகளிலும் பரவலாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக பலர் கைது செய்யப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகிறது.