யாழில் பெரியாருக்கு பிரமாண்டமான சிலை – முடிந்தால் கை வைத்துப் பாருங்கள் ! சீமான் அடிவருடிகளுக்கு சவால் விடுகின்றார் அருண் சித்தார்த் !

யாழில் பெரியாருக்கு பிரமாண்டமான சிலை – முடிந்தால் கை வைத்துப் பாருங்கள் ! சீமான் அடிவருடிகளுக்கு சவால் விடுகின்றார் அருண் சித்தார்த் !

 

யாழில் பெரியாருக்கு பிரமாண்டமான சிலை எழுப்புவேன் என அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளரும், யாழ்ப்பாணம் சிவில் அமைப்பின் தலைவரும், மவ்பிம ஜனதா கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாள அருண் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தேசம்நெற்க்குத் கருத்துத் தெரிவித்த அருண் சித்தார்த், ஈழத்தில் இலங்கையில் சாதிய ஒடுக்குமுறையின் கோட்டையான யாழ்ப்பாணத்தில் தாவடியில், கே.கே.எஸ்.வீதியில் எனது அலுவலகத்திற்கு முன்னால் 10 அடி உயரத்தில் தந்தை பெரியார் சிலையும், அண்ணல் அம்பேத்கர் சிலையும் சமூக நீதி, சமதர்மம், பகுத்தறிவு, சுயமரியாதை , பெண்விடுதலை, சாதி ஒழிப்பு, சீதனமுறை ஒழிப்பு, போன்ற உயரிய மேன்மையான சிந்தனை முறையை பறைசாற்றும் நோக்கில் நிறுவப்படும் எனத் தெரிவித்தார்.

சிலைகள் நிறுவப்படும் திகதிகள் விரைவில் பொதுவெளியில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்த அருண் சித்தார்த் இந்தச் சிலைகள் இரண்டும் ஈழத்தில் தந்தை பெரியாருக்கும்இ அண்ணல் அம்பேத்கருக்கும் நிறுவப்படும் முதலாவது சிலைகளாக வரலாற்றில் பதியப்படும் எனப் பெருமையுடன் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஈழத்து, இந்திய, புலம்பெயர் தேசத்து சாதிய சண்டியர் அனைவரும் வரவேற்கப்படுகின்றீர்கள். ஒடுக்கப்பட்ட மக்களைக் காலங்காலமாக சுரண்டி வாழ்ந்த, இன்றும் வாழ்ந்து வரும் சனாதன சாதிய சங்கிகளுக்கும், சைமனின் வியாபார, புரட்டுத் தேசிய ஆமைக் குஞ்சுகளுக்கும் அருண் சித்தார்த் என்கின்ற ஈழத்துப் பெரியாரிஸ்ட்டின் அறைகூவல் இது. முடிந்தால் இந்த சிலைகளில் கை வைத்துப் பாருங்கள், எனச் சவால் விடுத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனுக்குப் பதிலாக சீமானை தங்களின் தேசியத் தலைவராக வரித்துக்கொண்;டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒருசாரார் சீமானின் அடிவருடிகளாகவும் கூலிப்படைகளாகவும் மாறி புலம்பெயர்நாடுகளில் அடாவடித் தனங்களில் ஈடுபட்டடு வருகின்றனர். அவ்வாறான அடாவடி நடவடிக்கைகளில் ஒன்றாக லண்டனில் பெரியார் பற்றிய கலந்துரையாடலுக்குள் புகந்த ரவுடிக்கும்பல் வே பிரபாகரனின் பெயரில் ரவுடித் தனத்தில் ஈடுபட்டு லண்டன் மெற்றோ பொலிட்டன் பொலிஸாரினால் விரட்டியடிக்கப்பட்டனர்.

அருண் சித்தார்த்தின் திராவிடத் தலைவர்களின் சிலை எழுப்பும் முயற்சிக்கு தமிழகத்திலிருந்து விஜயம் செய்த இயக்குநர் ராஜ்குமார் தன்னுடைய முழமையான ஆதரவை வழங்கியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *