14

14

தேசியப்பட்டியல் மூலம் இலங்கை பாராளுமன்றம் செல்ல 500க்கும் அதிகமானோர் காத்திருப்பு !

தேசியப் பட்டியல் மூலமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவதற்கான போட்டியில் 527 பேர் காத்திருப்பில் உள்ளனர்.

2024ம் ஆண்டு்க்கான நாடாளுமன்றத் தேர்தல் தற்போது முடிவடைந்துள்ளது. தற்போது தபால் மூல வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

இந்நிலையில் பொதுத் தேர்தலில் ஒவ்வொரு கட்சிகளும் பெறும் வாக்குகளின் அடிப்படையில் கிடைக்கவுள்ள 29 தேசியப் பட்டியல் உறுப்புரிமைக்காக 527 பேர் காத்திருப்பில் உள்ளனர்.

27 அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு சுயேட்சைக் குழுக்கள் தங்கள் தேசியப் பட்டியல் உறுப்பினர்களுக்கான விபரங்களை தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளன.

அதன் பிரகாரம் அரசியல் கட்சிகளின் மூலமாக தேசியப்பட்டியல் நியமனத்துக்காக 516 பேரின் பெயர்களும், இரண்டு சுயேட்சைக்குழுக்கள் மூலம் 11 பேரின் பெயர்களும் இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அருணலு ஜனதா பெரமுண, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய தேசிய முன்னணி, ஜனநாயக ஐக்கிய முன்னணி, ஐக்கிய ஜனநாயகக் குரல், ஜனஅரகல கூட்டமைப்பு, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, ஜனசெத பெரமுண, தேசிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் கட்சி, தேசிய ஜனநாயக முன்னணி, இரண்டாம் தலைமுறை, தேசப்பிரேமி ஜனபலவேகய, புதிய ஜனநாயக முன்னணியும் நிதஹஸ் ஜனதா பெரமுண, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி, ஜனநாயக தேசிய முன்னணி, ஜனநாயகக் கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, லிபரல் ஜனநாயக கட்சி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுண, இலங்கை சமாஜவாதி கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, சர்வஜன அதிகாரம் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேசியப் பட்டியல் அபேட்சகர்கள் தொடர்பான விபரங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளன.

அதற்கடுத்ததாக அநுராதபுரம் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் போட்டியிடும் இரண்டு சுயேட்சைக் குழுக்களும் தேசியப் பட்டியல் அபேட்சகர்களுக்கான பட்டியலை சமர்ப்பித்துள்ளன.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சமர்ப்பித்த தேசியப் பட்டியல் தொழில்நுட்ப காரணிகளினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இலங்கை பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் எப்போது வெளியாகும்..? – தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தல் !

2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (14) நிறைவடைந்த நிலையில், வாக்குப்பெட்டிகள் அந்தந்த வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கொண்டு சென்றதைத் தொடர்ந்து, 7.15க்கு பிறகு வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படகவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

 

ஊடகங்களுக்கு விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல். ரத்நாயக்க, தேர்தல் முடிவுகள் தேர்தல் அதிகாரிகளிடமிருந்து கிடைக்கப்பெற்றவுடன் தேர்தல் ஆணைக்குழுவில் அவை மீள்பரிசீலனை செய்யப்பட்டு ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என தெரிவித்தார்.

 

குறிப்பாக மூன்று தடவைகள் இந்த முறைமைகளில் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

முதலில் தொகுதி வாரியான வாக்குப்பதிவு முடிவுகள் வெளியிடப்படும்.

 

அதன்பிறகு, மாவட்ட அளவில் தேர்தல் முடிவுகள் வெளியாகும், அதனுடன், ஒவ்வொரு அரசியல் கட்சி மற்றும் சுயேச்சைக் குழு பெற்றுக்கொண்ட ஆசனங்களின் எண்ணிக்கையை அறிவிக்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

 

முடிவுகள் வெளியானவுடன் ஒவ்வொரு வாக்கு எண்ணும் நிலையங்களிலும் விருப்பு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.

 

எவ்வாறாயினும், ஆசனங்களை வென்ற அல்லது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவதற்கு தகுதியான அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் வாக்குகளே எண்ணப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

எனவே, பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுவதற்கு தகுதியற்ற அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் பிரதிநிதிகள் மண்டப வளாகத்தில் இருந்து வௌியேற்றப்படுவார்கள் எனவும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

வேடுவ சமூகத்தினரை வாக்களிக்க விடாது திருப்பி அனுப்பிய அதிகாரிகள்!

தம்பனை வேடுவ சமூகத்தின் பிரதிதலைவரும் குடும்பத்தினரும் வாக்களிப்பு நிலையத்திற்கு கோடரியுடன் வந்ததால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

தம்பனையில் உள்ள வேடுவசமூகத்தின் பிரதிதலைவர் கன்பன்டிய எத்தோவும் அவரது குடும்பத்தினரும் தேர்தல்வாக்களிப்பு நிலையத்திற்குள் கோடரியுடன் நுழைந்துள்ளனர்.

எனினும் அவரது தோளில் கோடரியை அவதானித்த அதிகாரிகள் அவருக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தம்பனை வேடுவ சமூகத்தின் பிரதிதலைவர் வேடுவ சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் உரிமைகள் பற்றி அறியாத அதிகாரிகளை அரசாங்கம் தம்பனையில் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெளிநாடுகளிற்கும் நீதிமன்றங்களிற்கும் கோடாரியுடன் செல்வதற்கு எங்களிற்கு அனுமதி வழங்கியுள்ளனர் வாக்களிப்பு நிலையங்களிற்குள் செல்வதற்கு எந்த தடையும் இருக்ககூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

வெளியானது மாவட்ட ரீதியான வாக்கு வீதம் – யாழ்ப்பாணத்தில் 69 வீதம் !

இன்று நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மாவட்ட ரீதியாக பதிவாகியுள்ள வாக்கு சதவீதம் வெளியிடப்பட்டுள்ளது.

 

அதற்கமைய;

 

கொழும்பு 65%

நுவரெலியா 68%

குருநாகல் 64%

மட்டக்களப்பு 61%

மாத்தறை 64%

புத்தளம் 56%

அனுராதபுரம் 65%

பதுளை 66%

மன்னார் – 70%

திருகோணமலை – 67%

முல்லைத்தீவு – 63

பொலனறுவை – 65%

இரத்தினபுரி – 65

காலி – 64%

யாழ்ப்பாணம் – 69%

ஹம்பாந்தோட்டை – 60%