09

09

அமெரிக்கா வீசிய உணவு பொதிகள் தாக்கியதில் காசாவில் 5 பேர் பலி !

காசா மக்களுக்கு அமெரிக்கா வீசிய உணவு பொதிகள் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

காசாவில் தொடரும் போர் காரணமாக பட்டினிச் சாவு ஏற்பட்டுள்ளதாக ஐ.நா அபாய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து நல்லெண்ண அடிப்படையில் காசா மக்களுக்கு அண்மையில் அமெரிக்கா உணவு விநியோகம் செய்தது.

விமானம் மூலமாக காசா பகுதியில் உணவுப் பொதிகள் அடங்கிய பெரிய பார்சல்கள் பாராசூட் கட்டி வீசப்பட்டன.

இதில் சில பார்சல்களின் பாராசூட்கள் சரியாக திறக்காததால் முழு வேகத்தில் சென்று நிலத்தில் விழுந்தன. இந்த பார்சல்கள் தாக்கியதில் 5 பேர் நசுங்கி பலியாகியுள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கிக் கொண்டே காசா மக்களுக்கு உணவு வழங்கும் அமெரிக்காவின் நல்லெண்ணத்தை பலரும் விமர்சித்துள்ளனர்.

காஸா கடற்கரையோரத்தில் துறைமுகம் ஒன்றை அமெரிக்கா நிர்மாணிக்கும் – ஜோ பைடன்

மனிதாபிமான உதவிப் பொருட்களை விநியோகிப்பற்காக காஸா கடற்கரையோரத்தில் துறைமுகம் ஒன்றை அமெரிக்கா நிர்மாணிக்கும் என ஜனாதிபதி ஜோ பைடன் தெரவித்துள்ளார்.

 

அமெரிக்க காங்கிரஸில் வியாழக்கிழமை (07) நிகழ்த்திய வருடாந்த உரையின்போது ஜனாதிபதி ஜோ பைடன் இவ்வாறு கூறினார்.

 

இத்தற்காலிக துறைமுகமானது, பலஸ்தீனர்களுக்கான மனிதாபிமான உதவிகளை அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

காஸாவுக்கு மேலும் அதிகளவு விநியோங்களை இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி பைடன் கூறினார்.

 

அமெரிக்க காங்கிரஸில் வியாழக்கிழமை நிகழ்த்திய வருடாந்த உரையின்போது ஜனாதிபதி ஜோ பைடன் இவ்வாறு கூறினார்.

 

கஸாவிலுள்ள மக்களில் கால்வாசிப் பேர் பஞ்சத்தை எதிர்கொள்வதாக ஐநா எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீஷெல்ஸ் துறைமுகத்தில் இலங்கை மீனவர்கள் ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம் 9 ஆவது நாளாகவும் தொடர்கிறது!

ஆயுதக் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்கப்பட்டு சீஷெல்ஸ் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம் 9 ஆவது நாளாகவும் தொடர்கிறது.

 

தங்களை நாட்டுக்கு உடனடியாக அழைத்துச் செல்லுமாறு வலியுறுத்தி, இந்த மாதம் முதலாம் திகதி உண்ணாவிரத போராட்டத்தை மீனவர்கள் ஆரம்பித்திருந்தனர்.

 

லோரன்சோ புதா 4 என்ற மீன்பிடி படகில் கடற்றொழிலுக்கு சென்ற 6 மீனவர்களே இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

குறித்த படகு கடந்த ஜனவரி 12 ஆம் திகதி டிக்கோவிட்ட துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது. சிலாபம் – மாரவில பிரதேசத்தில் வசிக்கும் 6 மீனவர்களே படகில் பயணித்திருந்தனர்.

 

இந்த நிலையில், மீனவர்கள் ஆயுதக் குழுவினரால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த நிலையில், சீஷெல்ஸ் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் மீட்கப்பட்டனர். மீனவர்கள் தற்போது சீஷெல்ஸ் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.