அமெரிக்கா வீசிய உணவு பொதிகள் தாக்கியதில் காசாவில் 5 பேர் பலி !

காசா மக்களுக்கு அமெரிக்கா வீசிய உணவு பொதிகள் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

காசாவில் தொடரும் போர் காரணமாக பட்டினிச் சாவு ஏற்பட்டுள்ளதாக ஐ.நா அபாய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து நல்லெண்ண அடிப்படையில் காசா மக்களுக்கு அண்மையில் அமெரிக்கா உணவு விநியோகம் செய்தது.

விமானம் மூலமாக காசா பகுதியில் உணவுப் பொதிகள் அடங்கிய பெரிய பார்சல்கள் பாராசூட் கட்டி வீசப்பட்டன.

இதில் சில பார்சல்களின் பாராசூட்கள் சரியாக திறக்காததால் முழு வேகத்தில் சென்று நிலத்தில் விழுந்தன. இந்த பார்சல்கள் தாக்கியதில் 5 பேர் நசுங்கி பலியாகியுள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கிக் கொண்டே காசா மக்களுக்கு உணவு வழங்கும் அமெரிக்காவின் நல்லெண்ணத்தை பலரும் விமர்சித்துள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *