06

06

“ஈரான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கத் தயார்.” – இஸ்ரேல் அறிவிப்பு !

லண்டனில் செயற்பட்டு வரும் ஸோடியாக் மாரிடைம் நிறுவனத்தின் எம்வி மெர்சிர் ஸ்ட்ரீட் என்ற எண்ணெய்க் கப்பல் ஓமனுக்கு அருகே அரபிக் கடலில் கடந்த வாரம் சென்றுகொண்டிருந்தபோது தாக்குதலுக்குள்ளானது. இதில் பிரித்தானியா மற்றும் ரோமேனியாவை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.

ஸோடியாக் மாரிடைம் லண்டனில் செயற்பட்டு வந்தாலும், அந்த நிறுவனம் இஸ்ரேலைச் சேர்ந்த ஏயல் ஓஃப் நிறுவனத்துக்குச் சொந்தமானதாகும். லைபிரீயக் கொடியேற்றிச் சென்ற எம்வி மெர்சிர் ஸ்ட்ரீட் கப்பல், ஜப்பானுக்குச் சொந்தமானதாகும்.

இந்தத் தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என்று இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. எனினும், ஈரான் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

இந்நிலையில், தங்கள் நாட்டு எண்ணெய்க் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த இஸ்ரேல் பாதுகாப்புத் துறை பெஞ்சமின் கான்ட்ஸ்,

‘எம்வி மெர்சிர் ஸ்ட்ரீட் எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஈரான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்க இஸ்ரேல் தயாராக உள்ளது.

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை கட்டாயம் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இனி உலகின் மற்ற நாடுகளும் ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என கூறினார்.

பெஞ்சமின் கான்ட்ஸின் இந்த எச்சரிக்கை குறித்து ஈரான் உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இதே நேரம் “இஸ்ரேல் எண்ணெய்க் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம்’ என, நேட்டோ மற்றும் ஐரோப்பிய யூனியன் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

ஊடகவியலாளர்களை தொடர்ந்து இலக்கு வைக்கும் தலிபான்களின் துப்பாக்கிகள் – அரசு ஊடக மையத் தலைவர் சுட்டுக்கொலை !

ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வருகின்றன. வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள்ளாக ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து அமெரிக்கப் படைகளும் வெளியேறும் என்று ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தானுக்கு இடையேயான எல்லைப்புறப் பகுதிகளை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் அரசு சார் கட்டிடங்களையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதன் காரணமாக ஆப்கன் – தலிபான்கள் இடையே கடுமையான சண்டை நடக்கிறது. இதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியமாக தலிபான் தீவிரவாத குழுக்கள் ஊடகவியலாளர்களை தொடர்ச்சியாக இலக்கு வைப்பதை காண முடிகின்றது. அண்மையில் ஆப்கானிஸ்தானில் தலிபான் – பாதுகாப்புப் படைகள் இடையே நடந்த சண்டையில் இந்தியப் புகைப்படப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் (ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர்) உயிரிழந்திருந்தார்.  இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் அரசு ஊடக மையத் தலைவர் தலிபான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

 

ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசு ஊடக மையத்தின் இயக்குநராக இருந்து வந்தவர் தவா கான் மேனாபால். இவர் அரசாங்க செய்திக் குறிப்புகளை உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கி வந்தார். இந்நிலையில் அவரை தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

இது தொடர்பாக தலிபான் தீவிரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாஹித் கூறுகையில், “மேனாபாலை நாங்கள் தான் சுட்டுக் கொன்றோம். அவர் எங்களுக்கு எதிராக அரசு வெளியிடும் செய்திகளை ஊடகங்களுக்குக் கொண்டு சேர்த்தார். அவருடைய செய்கைக்காக அவரை தண்டித்துள்ளோம்” என்று கூறினார். இருப்பினும், இந்தப் படுகொலை குறித்து மேலதிக விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.

 

அமேசான் நிறுவனரை பின்தள்ளி உலகின் மிகப்பெரிய பணக்காரரானார் பெர்னார்ட் அர்னால்ட் !

உலகின் மிகப்பெரிய பணக்காரர் பட்டியலில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளார் லூயி உய்ட்டன் நிறுவன உரிமையாளர் பெர்னார்ட் அர்னால்ட்.  இதுவரை  ஜெஃப்பெசோஸ் இந்த இடத்தில் இருந்தார்.

இவருக்குச் சொந்தமான 70 பிராண்டுகள் உலகம் முழுவதும் பரவியுள்ளது.

லூயி உய்ட்டன் எனும் ஆடம்பர பொருட்களின் நிறுவனத்தின் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட். 198.2 பில்லியன் டொலர் சொத்து மதிப்போடு உலகின் நம்பர் ஒன் பணக்காரர் இடத்தைப் பிடித்துள்ளார்.

ஃபோர்ப்ஸ் பத்திரிகை அவ்வப்போது உலகப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது 72 வயதான பெர்னார்ட் அர்னால்ட் உலகப் பணக்காரர் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இரண்டாம் இடத்தில் உள்ள அமேசான் நிறுவனர் ஜெஃப்பெசோஸ் 194.9 பில்லியன் டாலர்களுக்கு அதிபதியாக உள்ளார். 2020 ஆம் ஆண்டு உலகின் பல்வேறு பகுதிகளும் லாக்டவுனில் இருந்தபோது ஆன்லைன் வர்த்தகம் வாயிலாக 38% வருவாய் ஈட்டியுள்ளது அமேசான்.

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லாவின் எலோன் மஸ்க் 50வது இடத்தில் இருக்கிறார்.