12

12

நிதி மோசடியுடன் தொடர்புபட்ட காரணத்தினால் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது

TNA_Logoநிதி மோசடி காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எந்நேரமும் பொலிஸாரினால் கைது செய்யப்படலாம் என தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த யுத்தத்தின் போது காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருவதாக பொய்யான வாக்குறுதிகளை அளித்து காணாமல் போனவர்களின் உறவினர்களிடம் பெருந்தொகையான பணத்தை குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பெற்றுக் கொண்டதாகவும். மோசடிக் கும்பல் ஒன்றுடன் அவருக்குத் தொடர்புள்ளதெனவும் புலனாய்வு விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தில் மேஜர் ஜெனரல் பதவியிலுள்ள ஒருவரே இம்மோசடியின் பிரதான நபர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது தொலைபேசி இலக்கங்களை காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு குறிப்பிட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கியுள்ளதாகவும், காணாமல் போனவர் ஒருவரின் உறவினர் இத்தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு மூன்று இலட்ச ரூபா வரை கொடுத்துள்ளார் எனவும், இன்னொருவர் 75 ஆயிரம் ரூபா கொடுத்துள்ளார் எனவும், இந்த மேஜர் ஜெனரலின் தொலைபேசி இலக்கம் பின்னர் செயலிழந்துவிட்டதாகவும் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என வவுனியா மற்றும், மன்னாருக்கான பொலிஸ் மாஅதிபர் பிரசன்ன நாணயக்கார தெரிவித்தள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் இன்றைய ‘தினமுரசு’ நாளிதழ் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

கிளிநொச்சி வீடமைப்புத் திட்டங்களில் சிக்கல்களை எதிர்கொள்ளும் மக்கள்.

Rebuilding_Buildingsகிளிநொச்சி மாவட்டத்தில் பல நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டப் பணிகளை உரிய காலத்தில் நிறைவேற்றுவதில் சிக்கல்கள் தேன்றியுள்ளது. இதனால் வீட்டுத்திட்டங்களைப் பெற்ற பயனாளிகள் பெரும்
மனஉளைச்சல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவ்வீடமைப்பிற்காக கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வரும் பணம் சீரான முறையில் வழங்கப்படாமை, மேசன் வேலை, தச்சு வேலைகளுக்கான தொழிலாளர்கள் தட்டுப்பாடு, மணல் உட்பட்ட மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதிலுள்ள சிரமம் போன்றவற்றின் காரணமாக இந்நிலை தேன்றியுள்ளது. தற்போது பருவ மழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில் உரிய காலத்தில் இவ்வீடமைப்பை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் சம்பந்தப்பட்ட மக்கள்
பாதிப்படைந்து ள்ளனர். இதேவேளை, சேதமுற்ற வீடுகளைத் திருத்தியமைக்கும் பணிகளும் அதில் தொடர்புபட்ட நிறுவனங்கள்,  அதிகாரிகளின் அசமந்தப் போக்குகளால் இழுபடும் நிலையும் தோன்றியுள்ளது.

நேற்றைய ‘சூரன்போர்’ நிகழ்வுகளில் நால்வர் காயம். ஓருவர் மரணம்.

Sooran_Boorநேற்று வியாழக்கிழமை யாழ்.செல்வச்சந்நிதி ஆலயத்தில் இடம்பெற்ற ‘சூரன்போர்’ நிகழ்வில் கற்பூரச்சட்டிக்குள் விழுந்து ஐந்து போர் காயமுற்றனர். அதிகளவான சன நெருக்கடி காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு விழுந்தவர்களில் நான்கு பேருக்க சிறு காயங்களும், ஒருவருக்கு படுகாயமும் எற்பட்டுள்ளது. காயமுற்றவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்று நல்லூர் கந்தசுவாமி கோவிலில் நடைபெற்ற ‘சூரன்போர்’ நிகழ்வின் போது பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி மரணமானார். நல்லூர் ஆலயத்தில் நடைபெற்ற ‘சூரன்போர்’ நிகழ்வில் ஏற்பட்ட சனநெரிசல் காரணமாக இம்மாணவன் கேணிக்குள் தவறி விழுந்ததால் இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் கந்தர்மடம் பழம் வீதியைச் சேர்ந்த தர்மகுலசிங்கம் கனுசன் என்ற மாணவனே இவ்வாறு நீரில் முழ்கி மரணமானவராவார். நேற்று யாழ் மாவட்ட ஆலயங்களில் இடம்பெற்ற ‘சூரன்போர்’ நிகழ்வில் அதிகளவிலானவர்கள் கலந்து கொண்டதால் சனநெரிசல்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அளவெட்டியில் இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு!

யாழ். அளவெட்டியில் இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டினால் படுகாயமடைந்துள்ளார். அளவெட்டி பிள்ளையார் கோவில் முன்றலில் வைத்து நேற்று மாலை 5.30 மணியளவில் குறிப்பிட்ட இளைஞர் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். இதனால் படுகாயமடைந்த இளைஞர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அளவெட்டி வடக்கைச் சோந்த கிருஸ்ணமூர்த்தி சஞ்சீவ் என்பவரே தப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி காயமடைந்தவராவார். தனிப்பட்ட காரணங்களுக்காக இச்சம்பவம் இடம்பெற்றிருப்பதாக காயமடைந்த இளைஞரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து இராணுவத்தினரும் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எழுத்து மூல சாட்சியங்களை சமர்ப்பிக்கும் கால எல்லை நீடிப்பு

கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவிற்கு எழுத்துமூல சாட்சியங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலஎல்லை டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால எல்லைக்கு முன்னர் எந்தவொரு தனிநபரோ அல்லது அமைப்புக்களோ தாமாக முன்வந்து சாட்சியமளிக்க வேண்டுமென அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எழுத்துமூல மாக முன்வைக்கப்படும் சாட்சியங்கள் நன்கு ஆராயப்படுமென்றும், அதன் பின்னரே இறுதி அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மோதல்களால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளனர். மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்கள் சாட்சியமளிப்பதற்கு கூடுதல் சந்தர்ப்பம் வழங்க ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆணைக்குழுவின் அமர்வு நேற்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. விரைவில் அம்பாறை, திருகோணமலையில் அமர்வு நடைபெறவுள்ளது.

வடக்கிலுள்ள 9 நீதிமன்றங்களை புனரமைக்க ரூ. 890 மில்லியன்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 890 மில்லியன் ரூபா கடனுதவியுடன் வடக்கிலுள்ள ஒன்பது நீதிமன்றங்களை மீளமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியது. இதன்படி, பருத்தித்துறை, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, வேலணை, மாங்குளம், சாவகச்சேரி, மல்லாகம் மற்றும் ஊர்காவற்துறை நீதிமன்றங்களுக்கு புதிதாக கட்டடங்கள் அமைக்கவும் புனரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ‘கெயா’ திட்டத்தின் கீழ் 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட உள்ளதோடு அதன் ஒரு பகுதியாகவே இந்த கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஊர்காவற்துறையில் 150 மில்லியன் ரூபா செலவில் நீதிபதிகளுக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலமும் நிர்மாணிக்கப்படும்.

சட்டவிரோதமாக இரு திருமணம் செய்தவருக்கு சிறைத் தண்டனை

நீர்கொழும்பு நிருபர்: சட்ட விரோதமாக இரண்டு திருமணங்களைச் செய்தவருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருடமும் 8 மாத சிறையும் 1500 ரூபா அபராதம் செலுத்துமாறும் நீர்கொழும்பு பிரதான நீதிபதி ஜயகி அல்விஸ் விதித்துள்ளார்.

தூனகஹ, கடவலயைச் சேர்ந்த ஜே.எம்.சன்ஜீவ சம்பத் என்பவருக்கே இத் தண்டவை வழங்கப்பட்டது. இவர் 2001 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி மட்டக்குளி தேவஸ்தானத்தில் சட்டப்படி மட்டக்குளியை சேர்ந்த என்.சந்திமா நிலுகஷா என்வரே திருமணம் செய்துள்ளார்.

இவர் மீண்டும் 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மீண்டுமொரு திருமணம் செய்துள்ளதாக முதல் முனைவி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். இவரின் வழக்கு விசாரணையின் போது இவர் குற்றத்தை ஒப்புக் கொள்ளவே நீதிபதி தண்டனை வழங்கியுள்ளார்.

சூதாட்ட சட்டமூலத்துக்கு 81 மேலதிக வாக்குகளால் சபை அங்கீகாரம்

சபை நிருபர்கள்: சூதாட்ட விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.  பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை சூதாட்ட விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை பிரதியமைச்சர் சரத் அமுனுகம சமர்ப்பித்து உரையாற்றி அதனை நிறைவேற்ற சபையின் அங்கீகாரத்தைக் கோரினார். இதன் பின் சூடான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

விவாத முடிவில் எதிர்க்கட்சிப் பிரதம கொறடா ஜோன் அமரதுங்க பெயர்கூறிய வாக்கெடுப்பைக் கோரினார். இதையடுத்து இடம்பெற்ற வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 114 வாக்குகளும் எதிராக 33 வாக்குகளும் கிடைத்தன. இந்த வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பனவற்றுடன் அரசதரப்பின் முன்வரிசை அமைச்சர்களில் 9 பேர் உட்பட இன்னும் சிலர் கலந்துகொள்ளவில்லை.

அத்துரலிய ரத்தின தேரர்,எல்லாவெல மேதானந்த தேரர் ஆகியோர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

யாழ். நூலகத்தில் என்ன நடந்தது என்ற சகலருக்குமான ஓர் உண்மை விளக்கம்!

தமிழ் மக்களை மறுபடியும் பதட்டமானதும், குழப்பமானதுமான சூழலுக்குள்  தள்ளிவிடவும், எமது மக்கள் மீது மறுபடியும் அவலங்களைச் சுமத்தி விடவும் வழி வகுக்கும் தவறான வழிமுறையில் செயற்படுவதை இனியாவது நிறுத்தி, எமது மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கவும், கருத்து வெளியிடவும் முன்வருமாறு சம்பந்தப்பட்ட சகல தரப்பினரை நோக்கியும் நாம் எமது மக்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றோம் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் அ.இராஜமாணிக்கம் தெரிவித்துள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

அரசியல் சுயலாபங்களுக்காக மட்டும்  கருத்து வெளியிட்டு தமிழ் மக்களிடையே தவறான தகவல்களை திணித்து அவர்களை தொடர்ந்தும் பதட்டமும் குழப்பமுமான ஒரு சூழலுக்குள் தள்ளி விடும் சூழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் ஒரு பொறுப்புள்ள அரசியல் தலைமை என்ற வகையில் யாழ். நூலகத்தில் என்ன நடந்தது என்ற உண்மை விளக்கத்தை நாம் சகலருக்கும் தெரியப்படுத்த விரும்புகின்றோம்.

தென்னிலங்கையில் இருந்து சுற்றுலாப்பயணிகளாக யாழ். நோக்கி வருகின்ற மக்கள் தெற்காசியாவின் சிறந்த நூலகமாக கருதப்படும் யாழ். நூலகத்தை தினமும் பார்வையிட்டு வருவது வழமை. நூலகத்தை பார்வையிடுவதற்கான நேரமும் மாலை 5 மணி தொடக்கம் 6 மணி வரை என நூலக நிர்வாகத்தினால் வரையறுக்கப்பட்டிருப்பதையும் சகலரும் அறிவர். அந்த வகையில் கடந்த 21.10.2010 அன்றும் வழமைபோல் நூலகத்தை பார்வையிட தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.

ஆனாலும், குறித்த தினத்தில் யாழ். நூலக மண்டபத்தில் அகில இலங்கை மருத்துவர் மாநாடு நடந்து கொண்டிருப்பதாகவும், 23 ஆம் திகதியே நூலகத்தை பார்வையிடுவது சாத்தியம் என்றும் நூலக நிர்வாகத்தால் கருத்து தெரிவிக்கபட்டதை அடுத்து அவர்கள் திரும்பிச் சென்றிருந்தனர்.

இதேபோல், மறுதினமாகிய 22.10.2010 அன்றும் தென்னிலங்கை மக்களில் இன்னொரு பகுதியினர் நூலகத்தைப் பார்க்க வந்திருந்தனர். அவர்களுக்கும் முதல் நாளன்று சொல்லப்பட்டது போல் 23 ஆம் திகதி மாலையில் வருமாறு திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.

நூலக நிர்வாகத்தினர் சொன்னது போல் ஏற்கனவே இரு தினங்களிலும் வந்திருந்த தென்னிலங்கை சுற்றுலாப்பயணிகள் 23 ஆம் திகதி மாலை யாழ். நூலகத்தை பார்வையிடும் ஆர்வத்தோடு மறுபடியும் நூலகம் நோக்கி வந்திருந்தனர். அவர்களோடு அன்றைய தினம் புதிதாகவும் இன்னொரு பகுதி மக்களும் அங்கு வந்திருந்தனர்.

ஆனாலும், அன்றைய தினம் மாலை 4.30 க்கு முடிவடைவதாக இருந்த அகில இலங்கை மருத்துவர் மாநாடு குறித்த நேரத்தில் முடிவடையாத காரணத்தினால் அந்த மாநாட்டின் நலன் கருதி, அன்றைய தினமும் குறித்த நேரத்தில் நூலகத்தை பார்வையிட அனுமதிக்க முடியாத ஒரு சூழலில் யாழ் நூலக நிர்வாகத்தினர் சுற்றுலாப்பயணிகளோடு பேசி தமது தவிர்க்க முடியாத சூழலை எடுத்து விளக்கியிருந்தனர்.

ஏற்கனவே நூலகத்தைப் பார்வையிட வந்து முடியாமல் போன தென்னிலங்கை மக்கள் மறுபடியும் குறித்த தினத்திலும் தம்மால் நூலகத்தை பார்வையிட முடியாத ஒரு சூழலில் தாம் ஏமாற்றப்படுவதாகவும், திட்டமிட்ட முறையிலேயே தமக்கு நூலகத்தை பார்வையிடுவதற்கான அனுமதி மறுக்கப்படுவதாகவும் தவறாக எண்ணி நூலக நிர்வாகத்தினர் மீது சந்தேகம் கொண்டவர்களாக தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

இது குறித்த வாதப்பிரதிவாதங்கள் தென்னிலங்கை சுற்றுலாப்பயணிகளுக்கும், யாழ். நூலக நிர்வாகத்தினருக்கும் இடையில் நூலக வாசலில் நடந்து கொண்டிருந்தது. உள்ளே நடந்து கொண்டிருந்த அகில இலங்கை மருத்துவர் மாநாடும் முடிவடைந்து விட்டது.

இந்த இடைவெளிக்குள் தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளும் யாழ். நூலக நிர்வாகத்தினரும் வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியிலும் சுமுகமானதொரு தீர்மானத்திற்கும் வந்திருந்தனர். குறித்த நேரம் கடந்த போதிலும் தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் நேரம் தாமதித்தாவது நூலகத்தினுள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். உள்ளே சென்ற சுற்றுலாப் பயணிகள் யாழ் நூலகத்தை பார்வையிட்ட மகிழ்ச்சியோடு வெளியேறிச் சென்றிருந்தனர்.

இதுவே உண்மையில் நடந்த சம்பவமாகும். ஆனாலும் நடந்ததை நடக்கவில்லை என்றும், நடந்திருக்காததை நடந்தது என்றும் வழமை போல் திட்டமிடப்பட்டு கட்டி விடப்பட்ட கட்டுக்கதைகள் காட்டுத்தீ போல் பரப்பட்டிருந்தன.

திட்டமிட்டு பரப்பி விடப்பட்ட செய்திகளால் தமிழ் மக்களை மறு படியும் பதட்டமானதும் குழப்பமானதுமான ஒரு சூழலுக்குள் தள்ளி விடும் முயற்சிகளை முளையிலேயே கிள்ளிவிடும் பொது நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். நூலகத்தில் சகல தரப்பினருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்றை ஒழுங்கு செய்திருந்தார்.

இதில், யாழ். மாநகர முதல்வர் திருமதி பற்குணராஜா யோகேஸ்வரி உட்பட ஆளும், மற்றும் எதிர்க்கட்சி சார்ந்த மாநகர சபை உறுப்பினர்கள், யாழ். நூலக நிர்வாகத்தினர். பாதுகாப்பு தரப்பினர், பொலிஸார், பொது அமைப்பு பிரதிநிதிகள், நலன் விரும்பிகள், மற்றும் சமூக அக்கறையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பதட்டமான சூழலை உருவாக்க முனையும் கபடத்தனங்களுக்கு எந்த தரப்பினரும் பலியாகி விடக்கூடாது என்றும், இதில் எவருடைய மனங்களாவது தவறான சந்தேகங்களால் காயப்பட்டிருப்பின், அது தென்னிலங்கை சுற்றுலாப்பயணிகளின் மனங்களாக இருந்தாலென்ன, அல்லது யாழ். நூலகம் சார்ந்தவர்களின் மனங்களாக இருந்தாலென்ன, இரு தரப்பு மன உணர்வுகளையும் புரிந்து கொண்டு ஒரு சம்பவத்தை ஊதிப்பெருப்பிக்கும் சூழ்ச்சியை உடைத்தெறியும் நல்லெண்ணங்களோடு சகலரிடமும் ஒரு அமைச்சர் என்ற வகையில் தான் மன்னிப்பு கோருவதாகவும் பெருந்தன்மையோடு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பகிரங்கமாக கருத்து தெரிவித்திருந்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்திருந்த அனுபவம் மிக்க அணுகுமுறையை அந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்த சகல தரப்பினரும் ஏற்றுக்கொண்டிருந்ததோடு பாராட்டியும் சென்றிருந்தனர். இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு வடக்காயும், கிழக்கு கிழக்காயும் இருக்க வட – கிழக்கு பிரிந்தே இருக்க வேண்டியது காலத்தின் தேவை! : இரா வி விஷ்ணு (swiss)

North_East_SLஅண்மைய சில நாட்களாக தமிழ் அரசியல் வாதிகளுக்கும் ஆதரவாலர்கக்கும் மட்டும் மெல்லக்கிடைத்திருக்கும் அவல் (பழசுதான் ) வட-கிழக்கு இணைப்பு. வட-கிழக்கு இணைப்பு என்பது இனப்பிரச்சனை ஆரம்பிக்கப்பட்டபோதே தமிழ் தலைமைகளினால் கையில் எடுக்கப்பட்ட தீர்வு கோரிக்கையில் ஒன்று அல்லது தாயக கோரிக்கை என்பது அறிந்ததே.

கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக நீடித்த அரசியல், ஆயுத போராட்டம் பல விடையங்களை செய்து முடித்திருக்கிறது, ஒரு சில விடங்களை புரட்டி போட்டிருக்கிறது அரசியல் ரீதியில் மக்களின் மனங்களை பக்குவமடைய செய்திருக்கிறது (புலம்பெயர் தமிழர்?? ) எல்லாவற்றுக்கும் மேலாக போராட்டம் தொடர்பான படிப்பினையை அனுபவ ரீதியில் கற்றுத்தந்திருக்கிறது. இன்னும் சில அரசியல் வாதிகள் கொள்கைரீதியில் தம்மை மாற்றிக்கொள்ள தயாராக இல்லை என்பது எம் சமூகத்தின் பாரிய குறை என்பதே உண்மை .

வடக்கும் கிழக்கும் இணைத்திருக்க வேண்டுமா, பிரிந்திருக்க வேண்டுமா, சேர்த்து இயங்குவதா அல்லது நிர்வாக ரீதியில் செர்ந்தியகுவதா பிரிந்தியங்குவதா என்பது வடக்கில் வாழும் தமிழ், முஸ்லீம் மக்களும் அரசியல்வாதிகளும், கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லீம் மக்களும், அரசியல்வாதிகளும் சேர்ந்து விவாதித்து முடிவெடுக்க வேண்டிய விடையம் என்பது யதார்த்தம்.

இப்போதிருக்கின்ற பிரச்சனை என்னவென்றால் வட-கிழக்கு இணைப்பு என்பது பரவலாக வடமாகாணத்தை பிரதிநித்துவ படுத்துகின்ற பல தமிழ் தலைமைகளின் பக்கமிருந்து மட்டுமே இக்கோரிக்கை வருகின்றதே தவிர கிழக்கு தலைமைக்களும் சரி, கிழக்கு மக்களும் சரி இந்த விடையத்தை பெரிதாக கருதுவதாக இல்லை .

கிழக்கு மக்களை பொருத்தவரை விசேடமாக தமிழ் மக்களை பொறுத்தவரை தங்களுக்கென்றொரு சரியான தலைமை கிழக்கை பிரதிநித்துவப்படுத்துவதர்க்கு தேவை என கருதுகின்றனர். அதற்கு சான்றாகவே கிழக்கு மாகாண சபை தேர்தலின் பொது கிழக்கை பிரதிநித்துவப்படுத்தும் கட்சியை சார்ந்தவர்களுக்கு தமது பரவலான ஆதரவை தெருவித்திருந்தனர் . வடகிழக்கு இணைப்பை வலியுறுத்திய தமிழ் கட்சிக் கூட்டமைப்புக்கு ஒரே ஒரு ஆசனமே கிடைத்திருந்தது. இன்றைய நிலைமையில் வடகிழக்கு இணைப்பு என்பது வெறுமனே அரசியல் வாதிகள் முடிவு செய்ய வேண்டிய விடயமில்லை கிழக்கு மக்களும் கிழக்கு அரசியல் வாதிகளும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டிய விடயம் என்பதை பெரும்பாலும் வடமாகாணத்தை பிரதிநித்துவப்படுத்தும் தமிழ் தலைமைகளும் அரசியல்வாதிகளும் புரிந்துகொள்ள வேண்டும்.சிங்கள ஆட்சியாளர்களை போல் கடந்த கால கசப்புனர்வுக்களும், நப்பிக்கைஜீனங்க்களும் தமிழ் தலைமகள் மீதும் இருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.
 
வடக்கும், கிழக்கும் பிரிந்திருப்பதென்பது நிர்வாக ரீதியில் இரு மாகாணங்களுக்கு நன்மையே தவிர. அதிகாரங்கள் என்பதே இன்றைய பிரச்சனை இந்த அதிகாரங்களை எவ்வாறு நாம் மத்திய அரசிடம் இருந்து பெற்றுக்கொள்வது என்பதே நாம் இன்றைய சூழ்நிலையில் கவனம் செலுத்த வேண்டிய விடயம். தமிழர்களில் அரசியல், ஆயுதபோராட்டத்தில் நியாயம் இருக்கின்றது. இழப்புக்கள் நிறையவே இருக்கிறது அதனை வெறுமனே ஆயுத போராட்டம் என்றளவில் வெற்றி தோல்வி என்று கணக்கேடுத்துவிட முடியாது. தமிழர்களுக்கான பொதுவாக சொல்வதானால் சிறுபான்மையியருக்கான அரசியல் தீர்வு என்பது உடனடியாக பெற்றே ஆகவேண்டிய விடயம் . வட -கிழக்கு தமிழர்களும் ஏனைய சிறுபான்மையினரான முஸ்லீம், மலையக தமிழர்களுடன் சேர்ந்து குரல் கொடுக்கவேண்டிய விடயம். அவற்றை சரியாக செய்தாலே சிறுபான்மையினருக்கான தீர்வென்பது நிரந்தரமான தீர்வொன்றுக்கு வழிகோலுமே தவிர வட- கிழக்கு இணைப்புதான் நிரந்தர தீர்வில் முக்கியமென சொல்லுவதெல்லாம் வெறுமனே தமிழ் தேசியத்தை மட்டும் கட்டிக்காக்க முயலும் கடும்போக்கு தமிழ் அரசியல் வாதிகள் தொடர்தும் தமது வண்டிகளை உருட்டுவதற்க்கும் தமிழர்களை உசுப்பேத்தி தம் பதவிகளை பாதுகத்துகொள்ளவே இன்றைய சூழ்நிலையில் உதவும் .

இலங்கையின் இன்றைய நிலைமை என்பது தமிழர்களின் பிரச்சனைகளை ஒருமித்து குரல் கொடுக்க வேண்டிய காலகட்டம். அந்தவகையில் தமிழ் கட்சிகள் பல ஒன்றிணைந்து ”கட்சிகள் அரங்கம்” நடத்துவது வரவேற்கத்தக்க விடயம். அதிலும் தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குமிக்க, செல்வாக்கற்ற கட்சிகள் அனைத்துமே ஒன்றிணைந்து பேச எத்தனித்திருப்பது வரவேற்கத்தக்க விடயம். இதுவரை தமிழர்களிடைய ஆயுதங்களே செல்வாக்கு செலுத்தியிருக்கின்றன. இனியாவது கருத்துக்கள் செல்வாக்கு செலுத்தட்டுமே. தமிழ் தேசிய கூட்டமைப்பும் இவ்வரங்கத்தில் சேர்ந்து செயட்படுவதுபோல் சமீட்சை காட்டியிருப்பது வரவேற்கத்தக்க விடயம். ஒற்றுமை என்பதே இலங்கைத் தமிழர்க்கு விதிவிலக்கு போல் இருந்தது, இனியாவது பதவி மோகத்தை விட்டு வெளிவருவார்களா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

North_East_SLதமிழர்களுக்கான தீர்வென்பது வருங்காலத்தில் இப்போதைய பிரச்சனைகளுக்கான தீர்வாகவும் வருங்காலத்தில் புதிய பிரச்சனைகளை உருவாக்காததாகவும் இருக்க வேண்டும். தீர்வென்பது தமிழ் பேசும் மக்களை மட்டுமின்றி சிங்கள மக்களையும் திருப்திபடுத்துவதாய் இருக்க வேண்டுமென்பது சிங்கள தலைமைகளின் கருத்தாக இருந்து வருகின்றது. அதேபோன்றே தமிழ் தலைமைகளும் வடமாகாண, கிழக்குமாகாண தமிழ், முஸ்லீம் மக்கள் திருப்திப்படுத்த கூடியவாறு தமது தீர்வு யோசனைகளை முன்வைக்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில் வட-கிழக்கு இணைப்பு என்பது வெறுமனே தமிழர்களின் கையில் இல்லை என்பதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமல்ல தமிழ் கட்சி அரங்கத்திலுள்ள அனைத்து கட்சிகளுக்கும் தெரிந்த விடயம். இந்நிலையில் வடக்கும் கிழக்கும் சட்டரீதியாய் பிரிக்கப்பட்டிருக்கின்றது. கிழக்கு மாகாணத்தைப் போன்று விரைவில் வட மாகாணசபை தேர்தலும் நடத்தப்படும் நிலையில் இருக்கும் பொது வட- கிழக்கு இணைப்புபற்றி இன்றைய சூழ்நிலையில் பேசுவது சிங்கள மக்களை எமக்கெதிராக திருப்பிவிடக்கூடது.
 
வட – கிழக்கு இணைப்பு பற்றி பேசும் தமிழ் தலைமைகள் ஒன்றில் கவனம் செலுத்தவேண்டும். வட -கிழக்கு இணைப்பென்பது இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்படி தற்காலிகமானதே தவிர கிழக்கு மாகாண மக்கள் விரும்பினாலே தொடர்து இணைந்திருக்க முடியுமென்பது அன்றே மாகாணங்களுக்கிடையில் கசப்புனர்வுவர வாய்புகள் இருக்கலாமென்றே பாதுகாப்புக்காக இந்த விடயம் தெருவிக்க பட்டிருந்தது. தமிழ் தலைமைகளின் மீதுள்ள நம்பிக்கையீனம், பலவீனம், பிரதேசரீதியான கசப்புணர்வுகள் என இன்றைய எமது தமிழ் சமூகத்தின் பலவீனமான நிலையில் இந்தவிடையத்த கையில் எடுத்து வெற்றி காண்பதென்பது கிழக்கு மாகாண தமிழ், முஸ்லீம் மக்கள் கிழக்கு மாகாணம் பிரிந்தே இருக்க வேண்டுமென்பதில் பெரும்பாலானோர் நிலைபாடாக இருக்கும் நிலையில், கிழக்கு மாகாணத்தை பிரதிநித்துவப்படுத்தும் தமிழ், முஸ்லீம் தலைமைகள் இணைப்புக்கு இணங்காதவரை சாத்தியமில்லாத விடயமே.

இந்த நிலையில் கிழக்கு மாகாண அரசியல் தலைமைகள் பலமாக உள்ளனவா என்கிற கேள்வி கிழக்குமாகாண மக்களிடையே பரவலாக காணப்படுகின்றன. இன்றைய நிலையில் சந்திரகாந்தன் , முரளிதரன், அரியநேந்திரன், சிவகீதா, துரைரெத்திணம் போன்ற தலைமைகள்தான் அல்லது அவர்களை சார்ந்தவர்கள்தான் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தை பிரதிநித்துவப்படுத்தப் போகின்றனரா? இன்றைய காலகட்டத்தில் இவர்கள் மீது இவர்கள் செயட்பாடுகள் மீதும் சரி பிழைகள் நிச்சயமாக இருக்கின்றன. இந்நிலையில் கிழக்கை பிரதிநிதுத்துவப்படுத்து இவர்களுக்கும் நிறைய பொறுப்புகள் இருக்கின்றன. கிழக்குக்கான புதிய பல திறமையான அரசியல் வாதிகளை உருவாக்க வேண்டியதும் இனங்காட்ட வேண்டியதுமான பொறுப்பு கிழக்கு மாகாண அரசியல்வாதிகளுக்கும் கிழக்குமாகாண மக்களுக்கும் இருக்கின்றது. இனி இலங்கையின் எதிகாலமேன்பது மாகாண சபைகளை மையப்படுத்தியதாகவே பொருளாதாரமும், நிர்வாகமும் செயட்படவேண்டி இருக்கும். அந்த நோக்கிலான கருத்துக்களே இலங்கை அரசு பக்கம் இருந்து
வந்து கொண்டிருக்கின்றன. கிழக்காக இருந்தாலும் சரி வடக்காக இருந்தாலும் சரி அவை நிர்வாக ரீதில் பிரிந்தே இன்ருப்பதே இன்றைய நிலையில் சாத்தியமானதாக தோன்றுகிறது. அதே நேரம் நிர்வாக ரீதியில் பிரிந்திருந்தாலும் சிறுபான்மையினர் என்ற ரீதியில் வருங்காலத்தில் வடமாகாண சபையும் கிழக்குமாகாண சபையும் பல விடையங்களில் ஒன்றாக குரல்கொடுக்கவும், இணக்கப்படுகளுடன் பல விடயங்களில் செயற்படவும் வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன. அகவே மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரங்களுடனான, இன உறவுகளை மேன்படுத்தகூடியதும், சிறுபான்மையினருக்கு கூடுதல் பாதுகாப்புடன் கூடியதான அதிகாரங்கள், தீர்வுகள் பற்றி பேச ஆரம்பிப்பெதேன்பது இலங்கை அரசிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான தீர்வாக அமையலாம்.
 
அடுத்த வருடம் வடக்கு மாகாணசபை தேர்தல் நடத்தப்படவிருக்கும் நிலையில். புலம்பெயர் தமிழர்களின் நிலைப்பாடென்ன?, யாரெல்லாம் போட்டியிட போகிறார்கலேன்று பார்க்கலாம். இதில் தற்போதைய அமைச்சர் டக்லஸ் தேவானந்தவா இல்ல சுரேஷ் பிரேமச்சந்திரனா, மாவை செனாதிராஜாவா, (சம்பந்தரையாவை விடுவார்களா?) , முன்னாள் வட – கிழக்கு முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாலா, இல்லை இவர்களையும் தாண்டி கே .பி எனும் குமரன் பத்மாநாதனா வட மாகாணசபையின் முதலமைசராகிராறேன்று பொறுத்திருந்து பார்போம்.