மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இக்குடும்பங்களுக்கு 12மில்லியன் ரூபாவை இழப்பீடாக வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இழப்பீடுகள் எதிர்வரும் 12ஆம் திகதி குறித்த மக்களிடம் கையளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சுயதொழில் நடவடிக்கைகளில் ஈடுபட பொருத்தமானவர்களைத் தெரிவு செய்யும் நிகழ்வும் நடைபெறும் எனவும், இவ்வாறு தெரிவு செய்யப்படுபவர்களுக்கு கடன் வசதிகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வடக்கில் புளியங்குளம், முல்லைத்தீவு, நெடுங்கேணி, அகிய பிரதேசங்களில் உள்ள சேதமுற்ற 250 வீடுகளைப் புனரமைப்பதற்கான நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.