தென்மராட்சி அல்லாரையில் முகமூடி அணிந்த துப்பாக்கி நபர்களினால் வீடொன்றில் கொள்ளை!

தென்மராட்சி அல்லாரைப் பகுதி வீடொன்றில் ஆயுதமனையில் 10 இலட்ச ருபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11மணியளவில் இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

துப்பாக்கிகள் சகிதம் முகமூடி அணிந்த எட்டுப்பேர் குறித்த வீட்டிற்குள் புகுந்து அவ்வீட்டிலிருந்த தந்தை, மகன் இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து அவ்வீட்டிலிருந்த பெண்ணை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி அவர் அணிந்திருந்த நகைகளை அபகரித்ததோடு, வீட்டிலிருந்த பெறுமதியான பொருட்களையும் எடுத்துக் கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.

அல்லாரையைச் சேர்ந்த சிவகுரு பாலசிங்கம் என்பவரது வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 15 பவுண் தங்கநகை, 25ஆயிரம் ரூபா பணம், கமரா, தொலைபேசி உட்பட 10 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *