20

20

வட பகுதி அகதிகளுக்கான அமெரிக்க உதவி 2.25 மில்லியன் டொலரால் அதிகரிப்பு

கடந்த கால யுத்தத்தால் இடம்பெயர்ந்த வடமாகாண மக்களின் மீள்குடியேற்றத்துக்கான நிதி உதவியை 2.25 மில்லியன் டொலரால் அதிகரிக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இதன் மூலம் மீள்குடியேற்றப்பட்டிருக்கும் 9000 குடும்பங்கள் பயனடைவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

வீடுகளைக் கட்டுதல், மீள்குடியேற்றம் சம்பந்தப்பட்ட ஏனைய இதர நலன்களை நிறைவேற்றுதல் ஆகியவற்றுக்காக இந்நிதி பகிர்ந்தளிக்கப்படும். இந்நிதிப் பங்கீடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தால் மேற்கொள்ளப்படும். இதற்கு முன்னர் மீள்குடியேற்ற முன்னெடுப்புகளுக்காக அமெரிக்கா 33மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலக உணவுத்திட்ட அலுவலகம் கிளிநொச்சியில் மீண்டும் திறப்பு

கிளிநொச்சியில் உலக உணவுத் திட்டத்தின் அலுவலகம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற கடும் மோதலில் இந்த அலுவலகம் சேதமடைந்த இரு வருடங்களின் பின்னர் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டிருப்பதாக ஐ.நா. செய்திச் சேவை தெரிவித்தது.

குவைத் இளவரசர் சுட்டுக் கொலை

kuwait.jpgகுவைத் இளவரசர் ஷேக் பாசல் (52), அவரது மாமாவால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். கார் வாங்குவது தொடர்பாக இருவருக்கும் ஏற்பட்ட தகராறின் காரணமாக இளவரசரின் மாமா அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இளவரசரின் உடல் நேற்றே அடக்கம் செய்யப் படுமென குவைத் அரசு தெரிவித்திருந்தது. கொலை குறித்து உடனடி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக குவைத் அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே, இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. பலமுறை துப்பாக்கியால் சுட்டும் குவைத் இளவரசர் சையிக் பாசல் தப்பி விட்டார்.

தற்போது துப்பாக்கி குண்டுக்கு பலியாகி விட்டார் என்ற தகவல் விசாரணையில் தெரிய வந்துள்ளது.சுட்டுக் கொல்லப்பட்ட இளவரசர் ஷேக் பாசல் குவைத்தின் 12 வது அரசர். ஷேக் ஷாப் அல்சலீம் அல்சபாவின் பேரன் ஆவார். இளவரசர் ஷேக் பாசலின் கொலைக்கான காரணம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீனக்கைதிகள் இலங்கையில் இருப்பதாக ஜெயலலிதா கூறுவது அதீத கற்பனை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரிப்பு

1jaya.jpgஇலங்கையில் ஆயிரக்கணக்கான சீனக் கைதிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ள தாகவும் அதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஜெயராம் தெவித்துள்ள கூற்றை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

ஜெயலலிதா கூறுவதைப் போன்று இலங்கையில் சீனக் கைதிகளோ அல்லது வேறு நாட்டின் கைதிகளோ இல்லையென்றும் தொழிலாளர்களே கடமையாற்றுகிறார் களென்றும், வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

பல்வேறு செயற்றிட்டங்களுக்காக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் சீனப் பிரஜைகளுக்குக் குறுகியகாலம் மட்டுப்படுத்தப்பட்ட வீசா வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வீசா காலம் முடிவடைந்ததும் நாட்டைவிட்டுச் சென்று விடுவார்களென்றும் அவ்வதிகாரி கூறினார்.

வெவ்வேறு காரணங்களின் பேரில் வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கையில் சட்ட ரீதியாகக் கைதிகளாக உள்ளதைத் தவிர வேறு நாடுகளின் கைதிகள் இலங்கையில் எந்த நிலையிலும் கிடையாதென்று வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி தெரிவித்தார்.

ஆகவே அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறுவதைப் போன்று சீனப் பிரஜைகள் இலங்கையில் பணியாற்றுவதால், இந்தியாவுக்கோ தமிழகத்திற்கோ எந்தவிதமான அச்சுறுத்தலும் கிடையாதென்று தெரிவித்த, அவ்வதிகாரி ஜெயலலிதா தெரிவித்திருக்கும் கூற்றை முற்றாக நிராகரிப்பதாகக் கூறினார்.

இலங்கையில் 25 ஆயிரத்திற்கும் அதிகமான கைதிகள் பல்வேறு பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் உளவு பார்ப்பதற்காகவே ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஜெயலலிதா குற்றஞ்சாட்டியிருக்கிறார். நேற்று முன்தினம் (18) ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையொன்றில் இலங்கையில் சீனக் கைதிகள் பணியாற்றுவது இந்தியாவுக்கு விசேடமாக தென்னிந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலானது என்று குறிப் பிட்டுள்ளார்.

தென்னிந்தியாவில் தற்போது அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நட்புறவு நிலவிய 1960களில் சீனா போர்த் தொடுத்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை. இந்திய அணிகள் இறுதிப்போட்டிக்கு தேர்வு.

india1.jpgஆசிய கிண்ண நேற்றைய போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுக்களால் பாகிஸ்தான் அணியை இறுதிநேரத்தில் வென்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 49.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 267 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 49.5 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 271 ஓட்டங்களை பெற்று இறுதிநேரத்தில் வென்றது.  இலங்கை. இந்திய அணிகள் இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளன்

11,000 அரிசியில் திருக்குறள்; செம்மொழி மாநாட்டுக்கு சாதனை

செம்மொழி மாநாட்டு சின்னமான திருவள்ளுவர் உருவத்துடன் கூடிய 1330 திருக்குறளையும் 11 ஆயிரம் அரிசியில் வரைந்து கோவை ஒவிய ஆசிரியர் சாதனை படைத்துள்ளார்.

கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு எதிர்வரும் 23ம் திகதி தொடங்கி 27ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இந்த செம்மொழி மாநாட்டை சிறப்பிக்கும் வகையில் பலர் பல்வேறு சாதனை முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் கோவை உப்பிலியாளையத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் எம். மனோகரன் என்பவரும் அரிசியில் திருக்குறள் முழுவதையும் எழுதி சாதனை படைத்து உள்ளார். அன்னை தமிழுக்கு அணி செய்யும் வகையில், ஏதாவது ஒரு வகையில் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆவல் எனக்குள்ளே இருந்து கொண்டே இருந்தது. இந்த ஆசையை நிறைவேற்றும் வகையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு வாய்ப்பாக வந்தது.

இதனால், எனக்குள் இருந்த எண்ணம் செயலாக மாறியது. அந்தச் செயல் தற்போது சாதனையாக உருவெடுத்து உள்ளது. உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு சினமான திருவள்ளுவரை மைய மாக வைத்து அவரை சுற்றிலும் அறம், பொருள், இன்பத்தை உணர்த்தும் 1330 திருக்குறளையும் அரிசிகளின் மீது எழுதினேன். ஒவ்வொரு அரிசியிலும் ஒரு வார்த்தை இருக்கும். மிகவும் நுட்பமான எழுத்தை, நுட்பமான பொருளான அரிசியில் எழுதுவதற்கு நான் கடினமாக உழைக்க வேண்டி இருந்தது. சிறு இடுக்கியால் அரிசியை பிடித்துக் கொண்டு, லென்சை பயன்படுத்தி எழுத்துக்களை எழுதினேன்.

இந்த எழுத்துக்களை எழுதுவதற்கு ஜெர்மனியில் இருந்து வரவழைக்கப்பட்ட பிரத்யேகமான இங்க், மற்றும் பேனாவை பயன்படுத்தினேன். கடந்த மாதம் 17ம் திகதி பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் தலைமையிலும், பிள்ளையார் பீடம் மணி வாசகம் அடிகளார் முன்னிலையிலும் எனது சாதனை முயற்சியை தொடங்கினேன்.

செம்மொழி மாநாட்டு இலட்சினையை (சின்னம்) உருவாக்க 9670 அரிசிகளும், எண்களுக்கு 1330 அரிசிகளும், மொத்தம் 11 ஆயிரம் அரிசிகள் தேவைப்பட்டன.

ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகையை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது

இலங்கைக்கு வழங்கும் ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகையை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது. யுத்தத்திற்கு பின்னர் அரசாங்கம் முன்னெடுக்கும் வடக்கு கிழக்கு மக்களின் மேன்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட விடயங்களை கருத்தில் கொண்டு இந்த வரி நிவாரணத்தை நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியம் வழங்கி வந்த ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இடைநிறுத்த ஒன்றியம் இதற்கு முன்னர் தீர்மானித்திருந்தது. இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய முடிவுக்கு அமைய எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை ஆடை உற்பத்திகள் உள்ளிட்ட 3 ஆயிரத்து 200 பொருட்களை வரி விலக்குடன் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துடன் ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகையை இடைநிறுத்த ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்தை அடுத்து ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் நிதியமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர் உள்ளிட்ட குழுவினர் பிரசல்ஸ் சென்று இலங்கை சார்பில் நியாயங்களை முன்வைத்திருந்தனர்.

பால்மா விலைகள் நள்ளிரவு முதல் அதிகரிப்பு

பால்மாவின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இதன்படி, 400 கிராம் பால்மா பக்கற் 19 ரூபாவினாலும், ஒரு கிலோ பால்மா பக்கற் 48 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள் ளதாலேயே இந்த விலை மீளமைப்பு செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ரூமி மர்சூக் தெரிவித்தார்.

புதிய விலைப்பட்டியலின்படி 400 கிராம் பால்மா பக்கற் 225 ரூபாவிலிருந்து 244 ரூபாவாக வும், ஒரு கிலோ பால்மா பக்கற் 550 ரூபாவிலிருந்து 598 ரூபா வாகவும் விற்பனை செய்யப் படும். இதேவேளை, விலைப்பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்காமை, அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தமை, பற்றுச்சீட்டு வழங்காமை, மோசடி போன்றவற்றுக்காக 360 பேர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் ரூமி மர்சூக் தெரிவித்தார். நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் சுற்றிவளைப்பு பிரிவு தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்தார்.

ரிபிசியின் 10 ஆண்டுகள்: வீ இராமராஜ்

Ramraj_V_TBCஅன்பான ரிபிசி நேயர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்.

நமது வானொலி பத்தாண்டுகளைக் கடந்து பதினோராவது ஆண்டில்காலடி எடுத்து வைக்கும் இந்த நாளில் வானலையில் உங்கள் அனைவரோடும்இ ரிபிசியின் நிர்வாகத்தினரின் சார்பில் உரையாடக் கிடைத்ததையிட்டு மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

ஆண்டுகள் பத்து கடந்துவிட்டன என்பதை நம்ப முடியாத அளவுக்கு காலம் விரைவாக ஓடிவிட்டது. அனைத்து கருத்துக்களுக்குமான தளம், நடுநிலை தவறாமை, தமிழ் மக்களின் அபிலாஷை ஆகிய நோக்கங்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு கருக்கொண்ட எமது வானொலி, குழந்தையாகத் தவழ்ந்து இன்று எழுந்து நடைபோடத் தொடங்கிவிட்டது.

தான் தவழ்ந்த காலங்களிலேயே தன் முன்னால் இருந்த தடைகள், பள்ளங்கள் ஆகியவற்றை நேயர்களாகிய உங்களது கரம் பற்றி கடந்து வந்த இந்த  வானொலிக் குழந்தை, பெருந்தடைகள் பல கடந்த நிலையில் இனி கைவீசி வீறு நடை போட்டு முன்னேறும் என்பதில் ஐயம் எதுவும் இல்லை.

தமிழரின் அபிலாஷைகளுக்கான போரட்ட காலங்களில், அவற்றுக்கு சமாந்தரமாக நியாயமான விமர்சனங்களுடன் எமது வானொலி நடை போட்டதை எள்ளி நகையாடியவர்கள் இன்று தலைகுனிந்து நிற்கிறார்கள்.

தவறாக எடை போட்டவர்கள், ரிபிசி சொன்ன கருத்துக்கள் பலித்துப் போனதைப் பார்த்து விக்கித்து நிற்கிறார்கள். காழ்ப்புணர்வு கொண்டு காறி உமிழ்ந்தவர்கள் இன்று ரிபிசி காலங்கடந்து நிற்பதைப் பார்த்து திகைத்து நிற்கிறார்கள்.

தமிழர் போராட்டப் பாதையில் தமிழ் மக்களிடையிலான ஒருமைப்பாடு, பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயகம் ஆகியவை குறித்து ரிபிசி வலியுறுத்தி வந்த கருத்துக்கள் பத்து ஆண்டுகளுக்கு உள்ளாகவே உண்மையாகிப் போயிருக்கின்றன.

ரிபிசி முன்வைத்த அரசியல் விமர்சனங்களைப் புறந்தள்ளி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் முட்டுக்கட்டை நிலையை அடைந்துள்ளமையும், தமிழரின் உரிமைக்கான ஒட்டுமொத்தப் போராட்டம் இக்கட்டு நிலையை அடைந்துள்ளதும் இன்று அனைவரும் அறிந்த ஒரு நிகழ்வு.

தமது முப்பது வருட போரட்டத்தை ஒரு மறு பரிசீலனைக்கு உள்ளாக்க வேண்டிய நிலையில் இன்று உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்கள் நிற்கிறார்கள்.

இதற்காக பல்வேறு தரப்பினராலும் பல்வேறு முயற்சிகள் ஆங்காங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை அனைத்துக்கும் முன்பு போலவே நியாயமான விமர்சனங்களுடன் கூடிய தனது ஆதரவை ரிபிசி தாராளமாக வழங்கும் என்பதையும் இன்றைய தினத்தில் உங்களுக்கு கூறுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

உலகின் எக்கோடியில் வாழ்ந்தாலும் தமிழர்களின் அனைத்து பிரச்சினைகளுக்காகவும் அரசியல், மத வேறுபாடின்றி ரிபிசி தனது குரலை உயர்த்தி ஒலிக்கும். இதுவரை காலமும் பல்வேறு குழுக்களாக பிரிந்து கிடந்த நாம் அடுத்தவரின் கருத்துக்களை மதித்து, வேறுபாடுகளுக்குள் உடன்பாடு கண்டு தொடர்ந்து இணைந்து போராட வேண்டிய அவசியத்தை ரிபிசி அன்று முதல் வலியுறுத்தியே வந்துள்ளது. அதற்கான தேவையும் எமது தமிழ் சமூகத்தில் முன்னேப்போதும் இல்லாத அளவுக்கு இன்று பலமாக எழுந்துள்ளது என்பதை அனைவரும் அறிவார்கள். ரிபிசியின் கலையக மற்றும் நிர்வாக நிகழ்வுகள் கூட இந்த கொள்கைகளுக்கு ஏதுவாக ரிபிசி தொடர்ந்து நடக்கிறது என்பதற்கு ஒரு உதாரணமாக அமைந்துள்ளதையும் நேயர்கள் அவதானிக்க முடியும்.

இன்றைய இந்த 10வது ஆண்டு நிறைவு விழா நிகழ்வு கூட அதற்கு ஒரு உதாரணமாகும். கொள்கைகளால், சூழ்நிலைகளால் பிரிந்த ரிபிசியின் ஸ்தாபகர்கள், கலையக உறவுகள் எல்லாரையும் மீண்டும் அழைத்து, அணைத்துச் செல்லும் போக்கையும் ரிபிசி மிகுந்த பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் கடைப்பிடிக்க முனைகிறது. அதற்கு ஆதரவு தந்த எமது முன்னாள் நிர்வாகிகள், கலையக உறவுகள் மற்றும் வானலை உறவுகள் ஆகியோருக்கு எனது தாழ்மையான நன்றிகள் உரித்தாகுக.

எமது சிரம காலங்களில் எங்களுக்கு உறுதுணையாக நின்று, பல்வேறு காரணங்களுக்காக இன்று எம்மைப் பிரிந்திருக்கும் எமது உண்மையான உறவுகளுக்கும் நாம் எமது அன்பு அழைப்பை விடுக்கின்றோம். உங்களின் வரவை ரிபிசி மிகுந்த வாஞ்சையுடன் எதிர்பார்க்கிறது.
ரிபிசிக்கான உங்கள் பங்களிப்புக்கள், அதுவும் நாம் மிகுந்த சிரமங்களை, சிக்கல்களை எதிர்கொண்டிருந்த வேளையில் நீங்கள் வழங்கிய உதவிகள் என்றும் எம்மால் மறக்க, மறுக்க முடியாதவை.

அதேவேளை அரசியல் காரணங்களுக்காக எங்களில் இருந்து இதுவரை காலமும் விலகி இருந்து வந்த புதியவர்களையும் வானலை உறவுகளாக ஏற்க நாங்கள் மிகுந்த ஆர்வத்துடனேயே இருக்கின்றோம். உங்கள் வரவு நிச்சயமாக ரிபிசியின் முற்றத்தில் புதிய மல்லிகையாக மணக்கும் என்று நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம்.

ஆயிரம் பூக்களின் மணம் வீசும் ஒரு தோட்டமாக, ஆயிரம் கருத்துக்கள் கலக்கும் ஒரு களமாகவே என்றும் ரிபிசி இருக்க விளைகிறது. அதற்காக இதுவரை விலகி இருந்த புதிய நேயர்களுக்கும் அது அன்பு அழைப்பு விடுகிறது.

அரசியல் ரீதியான கைவிலங்குகள் நீங்கியதால் சில அரசியல் கட்சிகள் கடந்த காலங்களைப் போலல்லாது எங்களுடன் வானலையில் இணைந்ததை நேயர்கள் அவதானித்திருப்பிர்கள். அதே போன்று வானலை உறவுகளுக்கும் எமது கதவுகள் என்றும் திறந்திருக்கின்றன.

எமது அரசியல் ஆய்வாளரான விஸ்வலிங்கம் சிவலிங்கம் அவர்களும், ஜேர்மனியில் இருந்து எமக்கு உரிய பங்களிப்புக்களை வழங்கிவரும் செல்வதுரை ஜெகனாதனும் மற்றும் அரசியல் அவதானி தம்பாவும் அன்று முதல் இன்று வரை எம்முடன் இணை பிரியாது செயற்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ரிபிசியின் நிர்வாகம் என்றும் நன்றிக் கடன்பட்டுள்ளது.

எனது மனைவியான சிவாஜினி ராம்ராஜ் அவர்களின் ரிபிசிக்கான சில பங்களிப்புகளையும் நாம் இந்த இடத்தில் மறந்துவிட முடியாது. அனைத்து வேளைகளிலும் ரிபிசியை தனது ஒரு குழந்தை போலவே அவர் பராமரித்து வந்துள்ளார். ஒலிபரப்பாளராக, நிர்வாகியாக அவர் செய்த கடமைகள் மறுக்க முடியாதவை. ஒரு கணவன் என்ற வகையில் அவருக்கு நான் நன்றி கூறமுடியாது. ஆயினும் ரிபிசி நிர்வாகத்தின் சார்பில் எமது நன்றியை அவருக்கும் எனது குழந்தைகளுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

எமது கலையகத்தை மெருகூட்டி புதிய தெழில்நுட்பத்துக்கு கொண்டு வருவதற்கு நம்பிக்கையுடன் நிதியுதவி செய்த கனவான்களுக்கும் அதேவேளை இக்கலையகத்தை வடிவமைப்பதற்காக இரவுபகல் பாராது அயராது உழைத்த எனது நண்பன் கோபிநாத் மற்றும் எனது மைத்துனர் நீல் ராஜரட்ணத்துக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல பலர் நேரடியாகவும் மறைமுகமாகவும் எமக்கு தமது ஒத்தாசைகளையும், உதவிகளையும் வழங்கி வருகிறார்கள். பல நேயர்கள் எமக்காக வெளியில் இருந்தே எமது நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார்கள். அரசியல் ரீதியான நெருக்கடிகள் காரணமாக, போதிய தயாரிப்பாளர்கள் இன்றி நாம் தவித்த போது, இந்த நேயர்களின் இந்த பங்களிப்பு ரிபிசி வானலையில் நீடித்திருக்க எமக்கு பெரும் உதவியாக இருந்தது. அவர்களுக்கு எமது நன்றிகள் உரித்தாகுக.

எமது இணையத்தளத்தை முழுமையாக வடிவமைத்து ஒத்துழைப்பு வழங்குகின்ற செல்வநாயகம் கணேசலிங்கத்திற்கும் நன்றிகள். ரிபிசிக்காக புதிய குறு இசைப் பாடலை எழுதிய லோகநாதன் ஆசிரியருக்கும் நன்றி.

அரசியல் ரீதியாக, கொள்கை ரீதியாக வேறுபட்டாலும், ஒரு ஊடகம் நிலைக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக எனது நண்பர்கள் பலர் ரிபிசிக்கு தொடர்ந்து கைகொடுத்து வந்தனர். அவர்களுக்கும் எனது நன்றிகள் உரித்தாகுக.

பல வகைகளில் விளம்பரங்களைத் தந்து வந்த உறவுகளுக்கும் எமது நன்றிகள். இறுதியாக எமது உயிர் நாடியான நேயர்களுக்கும் எனது நன்றிகள் உரித்தாகுக. கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒரு நடுநிலையான ஊடகம் என்ற வகையில் ரிபிசி தனது பொறுப்புக்களை உணர்ந்தே இதுவரை காலமும் செயற்பட்டு வந்துள்ளது. இனிவரும் காலங்களிலும், தமிழர் அரசியலின் இன்றைய நிலை உணர்ந்து, அனைவரையும் அணைத்துச் செல்லும் போக்கை அது கடைப்பிடிக்கும் என்பதை இங்கு உறுதியாகச் சொல்கிறேன்.

நியாமான விமர்சனங்களுடன், நடுநிலை தவறாது அதன் பணி என்றும் சிறக்கும். அதேவேளை ரிபிசியும் அதனது செயற்பாடு குறித்து உங்கள்  விமர்சனங்களை எதிர்ப்பார்க்கிறது. அத்தகைய விமர்சனங்களே எம்மை வழி நடத்தும் என்பதையும் நாம் நம்புகிறோம். அதுவே என்றும் உங்களுடன் எம்மை பிணைத்தும் வைத்திருக்கும்.
 
பாசமுடன்  வீ இராமராஜ்
நிர்வாக பணிப்பாளர்
ரிபிசி வானொலி

ரிபிசியின் 10 ஆண்டுகள்: ரிபிசி வானொலி அறிக்கை

TBC_Logoசர்வதேச ரீதீயாக ஒலிபரப்பாகிவரும் தமிழ் வானொலிகள் மாற்றுக் கருத்துக்கான முதன்மை வானொலியாக 10 வருடங்களாக பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் துணிச்சலுடன் ரிபிசி தனது சேவையை ஆற்றியுள்ளது.  என 10வது நிறைவு ஆண்டையொட்டி விடுத்திருக்கும் செய்தியில் தெரிவிக்கபட்டுள்ளது.
 
ரிபிசி வானொலி இன்று 11வது ஆண்டில் காலடிவைக்கின்றது இதனை ஒட்டிய விசேட நிகழ்ச்சிகள் எதிர்வரும் சனி ஞாயிறு இரு தினங்களில் ரிபிசியின் கலையகத்தில் நடைபெற உள்ளது. அத்தோடு புதிய கலையகமும் திறந்து வைக்கப்பட உள்ளது.
 
1999ம் ஆண்டு  ஜுன் மாதம் 16ம் திகதி பணிப்பாளர் வீ.இராமராஜ் தலைமையில் எஸ்.பி ஜெயக்குமாருடன் இணைந்து இவ் வானொலி ஆரம்பிக்கபட்டது. இவ் வானொலியின் நிகழ்ச்சியினை இலங்கையின் புகழ் பூத்த வானொலி அறிவிப்பாளர் திருமதி மயில்வாகனம் மும்மத பாடல்களை ஒலிபரப்பி ஆரம்பித்து வைத்தார்.

இவ்வானொலி சிற்றலை அலைவரிசை ஊடாக மூன்று வருடங்களாக தாயகத்திற்கான ஊரோடு உறவாட ஒரு மணிநேர நிகழ்ச்சியை ஒலிபரப்பி நடாத்தியது. பின்னர் அதனை பொருளதார நெருக்கடி மற்றும் பல்வேறு அரசியல் அழுத்தங்கள் காரணமாக இடைநிறுத்தி கொண்டது. அதனைத் தொடர்ந்து இலங்கையில் இருந்து  ஒலிபரப்பாகும் சூரியன் எப் எம் அவுஸ்திரிலியாவில் இருந்து  ஒலிபரப்பாகும் இன்பத்தமிழ் வானொலி கனடாவில் இருந்து  ஒலிபரப்பாகும் சி.டி.ஆர் வானொலி ஆகியவற்றுடன் இணைந்து ரிபிசி வானொலி ஒரே நேரத்தில் அணைத்து நாடுகளிலும் உள்ள நேயர்களை ஒன்றினைத்து வாரந்தம் இரண்டு மணிநேர சேவையினை ஒலிபரப்பிய போதிலும் அரசியல் முரண்பாடுகள் காரணமாக அச்சேவைகளும் இடைநிறுத்தபட்டன.
 
ரிபிசி வானொலி இலங்கை ஒலிபரப்பு கூட்டத்தாபனத்துடன் இணைந்து ஊரோடு உறவாட நிகழ்ச்சினை தினம் தோரும் ஒருமணிநேரம் நடாத்தியது. விடுதலைப் புலிகளுக்கு இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான புரிந்துவுணர்வு ஒப்பந்தத்தை தொடர்ந்து நோர்வேயுடான வன்னியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது மறைந்த புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வனால் ரிபிசி வானொலியின் ஒலிபரப்பினை நிறுத்தும்படி அழுத்தம் கொடுக்கப்பட்ட அதேவேளை இலங்கையில் உள்ள தமிழ் அமைச்சர் ஒருவரினாலும்  ரிபிசி வானொலியின் நிகழ்ச்சியினை நிறுத்த முயற்சிகளும் மேற் கொள்ளப்பட்டது. அச்சேவை தற்காலிகமாக நிறுத்திய அரசு மீண்டும் சேவை தொடர்ந்து ஒலிபரப்புவதற்கு அனுமதி வழங்கியது போதிலும் வடக்கு கிழக்கு பிரிவினைக்கு ஆதரவாக வானொலி செயற்பட வேண்டும் என அரசாங்கம் வைத்த வோண்டுகோளை நிராகரித்த ரிபிசி இலங்கை ஒலிபரப்பு கூட்டத்தாபனத்துடனான சேவையினை இடைநிறுத்தி கொண்டது.

ரிபிசி வானொலியின் வாரந்த வெளியீடாக பூ. சீவகனை ஆசிரியராகக் கொண்டு வான்முரசு பத்திரிகை வெளியிப்பட்டது. புலிகளின் அடாவடி நடவடிக்கை காரணமாக அவ் வெளியீடும் நிறுத்தபட்டது.

இவ் வானொலியில்  புலிகளால் அல்லது அரசினால் கொல்லப்பட்ட அரசியல் தலைவர்கள் புத்திஜீவிகள் பத்திரிகையாளர்கள் கல்விமான்கள் போராளிகள் மனித உரிமைவாதிகள் ஆகியோருக்கு அஞ்சலி நிகழ்ச்சிகள் அல்லது விசேட ஒலிபரப்புகளையும் நடாத்தியுள்ளது. அத்தோடு மறைந்த விடுதலை புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் மாவீரர் தின உரையினை முதன் முதலாக வன்னியில் இருந்து நேரடியாகப் பெற்று ஒலிபரப்பியதுடன் கருணாவின் மாவீரா தின உரையினையும் முதன் முதலாக ஒலிபரப்பியது.

கடந்த 10 ஆண்டுகளாக வாரந்த அரசியல் ஆய்வினை விஸ்வலிங்கம் சிவலிங்கம் தொகுத்து வழங்கி வருவதோடு அதிக நேயர்களை கவர்ந்த நிகழ்ச்சியாக வியாழக்கிழமை அரசியல் கலந்துரையாடல் அமைந்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சமூக சிந்தனையாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் புத்திஜீவிகள் கலந்து கொண்டு கருத்துகளை சுதந்திரமாக பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. இதேவேளை ஜேர்மனியில் இருந்து ஞாயிற்றுக் கிழமைகளில் செல்லதுரை ஜெகநாதன் தொகுத்து வழங்கும் அரசியல் அரங்கம் மக்கள் மனங்களை கவர்ந்த நிகழ்ச்சியாக திகழ்கிறது.

பல ஜனநாயக சக்திகள் கருத்து முரன்பாடுகள் காரணமாக நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளவிட்டாலும் வானொலியை பாதுகாக்க வேண்டும் என்பதில் அதிகம் ஆர்வத்துடன் செயற்படுகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

சர்வதேச ரீதீயாக ஒலிபரப்பாகிவரும் தமிழ் வானொலிகள் மாற்றுக் கருத்துக்கான முதன்மை வானொலியாக 10 வருடங்களாக பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் துணிச்சலுடன் தனது சேவையை ஆற்றியுள்ளது.  அனைவரும் தங்களுக்கான கருத்து சுதந்திரத்தை இவ் வானொலி ஊடாக வெளிப்படுத்த வேண்டும் என்பதே ரிபிசியின் இன்றைய எதிர்பார்ப்பாக உள்ளது. ரிபிசி வானொலி பணிப்பாளர் வீ.இராமராஜின் 11வது ஆண்டின் விசேட உரை சனிக்கிழமை ஒலிபரப்பாக உள்ளதுடன்   புதிய தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள கலையகம் திறந்து வைப்பதுடன் 10 சிறப்பு விருந்தினர்கள் இணைந்து கொண்டு மங்கல விளக்கேற்றி வைக்க உள்ளனர்.