June

June

ஹ்ரிதிக் ரோஷனின் “கைட்ச்” திரைப்படம் சென்னை திரையரங்குகளில் ரத்து

hrithik-roshan.jpgசென்னை யிலுள்ள ஐந்து திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருந்த இந்தி நடிகர் ஹ்ரிதிக் ரோஷனின் புதிய திரைப்படமான “கைட்ச்” ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் நடைபெற்றுவரும் iifa சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த திரைப்படம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

திடீர் பரிசோதனைக் குழு

drage.jpgகிழக்கு மாகாண ஆஸ்பத்திரிகளில் காணப்படும் குறைகளைக் கண்டறிந்து அவற்றைத் தீர்த்துவைக்கும் வகையில் திடீர் பரிசோதனைக் குழுவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எம். சுபைர் இந்தக்குழுவை நியமித்துள்ளார். இதன் தலைவராக மாகாண வைத்திய அத்தியட்சகர் டொக்டர். குணாலன் பணியாற்றுவார். அமைச்சின் மேலதிகச் செயலாளர் உட்பட உயர் அதிகாரிகள் பலர் இதில் பணிபுரிவர். மாகாண ஆஸ்பத்திரிகளுக்கு திடீர் விஜயங்களை மேற்கொள்ளும் இந்தக் குழு அவற்றின் குறைபாடுகளை அமைச்சரின் கவனத்துக்கு அவ்வப்போது கொண்டுவரும்.

CNBC – IIFA விருது: ஜனாதிபதியினால் மூவருக்கு விருது வழங்கி கெளரவம்

iifa-aw.jpgகார்கில்ஸ் சிலோன் லிமிடெட்டின் தலைவர் ரஞ்ஜித் பேஜ், மாஸ் ஹோல்டிங்ஸ் தலைவர் மகேஷ் அமலீன், இந்திய திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான அனுபம் கேர் ஆகியோருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விருது வழங்கி கெளரவித்தார்.

சீ.என்.பீ.ஸி – ஐ.ஐ.எப்.ஏ. குளோபல் லீடர் ஷிப் விருதுகள் இவர்களுக்கு வழங்கப்பட்டன. கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை – இந்திய வர்த்தக சம்மேளனத்தின் விசேட அமர்வுக்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஜனாதிபதி இந்த விருதுகளை வழங்கினார்.

iifa திரைப்பட விழாவுக்கான அனுமதி கட்டணம் ரூ.25,000ஆக அறிமுகம்

iifa-colombo.jpgகொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று நடைபெறவுள்ள iifa சர்வதேச இந்தியத் திரைப்பட விருது வழங்கும் விழாவுக்கான குறைந்தபட்ச அனுமதிக் கட்டணம் ரூ.25,000ஆக அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக இலங்கை சுற்றுலாச்சபை தெரிவித்தது.

இந்த கட்டண முறைமை ரூ.200,000 முதல் 11 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரை நிர்ணயிக்கப்பட்டிருந்ததாகவும் அந்த சபை குறிப்பிட்டது.  இந்த புதிய குறைந்தபட்ச நுழைவுச் சீட்டுக்கான ஆசன வசதிகள் பின்புறப்பகுதியில் பிறிதாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை சுற்றுலாச்சபை தெரிவித்தது.

IIFA: நட்புறவுக் கிரிக்கெட் போட்டி

iifa-cri.gifIIFA சர்வதேச இந்திய திரைப்பட விழாவின் ஓர் அங்கமாக நேற்று இடம்பெற்ற இந்திய திரைப்பட நட்சத்திரங்களுக்கும் – இலங்கை கிரிக்கெட் அணிக்குமிடையில் முதலில் இடம் பெற்ற 10 ஓவர் கொண்ட போட்டி நடைபெற்றது. இதில் சங்கக்கார, தலைமையிலான அணி வெற்றியீட் டியது.

இப்போட்டி பி.ப. 1.30 மணிக்கு கொழும்பு எஸ். எஸ். சி. மைதானத்தில் ஆரம்பமானது.
களத்தடுப்பில் ஈடுபட்ட சுனில் செட்டி, ரித்தேஷ் தேஷ்முக்…

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய சங்கக்கார தனது அணி துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். இலங்கை அணியில் முன்னாள் வீரர்கள் விளையாடினர். இந்திய திரைப்படவீரர்கள் அணிக்கு சுணில் செட்டி தலைமைதாங்கினார். இவ்வணியில் மஹேல ஜயவர்தன, பர்விஷ் மஃறுப் ஆகியோர் விளையாடினர்.

இதேவேளை, இப்போட்டியின் ஆரம்ப நிகழ்விற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, விளையாட்டுத்துறை அமைச்சர் சி.பி. இரத்நாயக்க மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை மற்றொரு போட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ முதன் முதல் கிரிக்கெட் போட்டி ஒன்றில் களமிறங்கியதும் குறிப்பிடத்தக்கது. இதில் அவர் போல்ட் முறையில் ஆட்டமிழந்து சென்றார்.

இதேவேளை இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் ஜயசூரிய ஆகியோர் விளையாடினர். இக் கிரிக்கெட் போட்டி சிறுவர் நல நிதிக்காக இடம்பெற்றது. இதற்கு யுனிசெப் அனுசரணை வழங்கியது.

நாடுகடந்த அரசுத் தேர்தலும் அதன் பிரித்தானியத் தேர்தல் ஆணையமும்! நடந்தது என்ன?

Vijayasingam_TGTEMay_02_Election_TGTE._._._._._.
இவ்வறிக்கை நாடுகடந்த தமிழீழப் பாராளுமன்றத்தின் பிரித்தானிய பிரதிநிதித்துவத்திற்கான தேர்தலில் இடம்பெற்ற மோசடிகள் பற்றிய உள்விடயங்களை ஆராய்கின்றது. தேர்தல் மோசடி இடம்பெற்றதாகக் கூறி லண்டனுக்கு வெளியே நிராகரிக்கப்பட்ட தேர்தல் நிலையங்களின் உத்தியோகத்தர்களும் பொது மக்களும் இவ்வறிக்கையின் கீழ் கையொப்பம் இட்டு தேர்தல் ஆணையகத்திற்கு ஒப்படைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. மே 31ல் வெளியான இவ்வறிக்கையின் இலத்திரனியல் பிரதி தேசம்நெற்க்கு அனுப்பி வைக்கப்ட்டு இருந்து. அதனை தேசம்நெற் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.
._._._._._.

இலண்டனுக்கு வெளியேயுள்ள பகுதிகளிற்கான தேர்தலை முழுமையாக ரத்துசெய்த நிலையானது தொலைநோக்கு பார்வையுடன் செயல்படும் எந்த ஒரு நிர்வாகமும் செய்ய துணியாத செயல், ஏன் எனில் ஒரு தவறு நடக்கும் பட்சத்தில் அதை உறுதி செய்யப்படாமலும் அங்கு கடமையாற்றிய அதிகாரிகளை மற்றும் வாக்களித்த மக்களை பற்றி எள்ளளவும் சிந்திக்காமலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவானது வெளியே வாழும் அனைத்து தமிழ் மனங்களையும் நிறையவே புண்படுத்தியுள்ளது. இதற்கு ஒரு படி மேலாக நமது ஊடகமும் என்னவென்று விசாரிக்காமல் வெளிப்படையாக எம்மை தாக்கியது பெரும் வேதனையளிக்கிறது.

தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு குழப்ப நிலையில் நாம் ஆணையகத்தையும் அதற்கு பொறுப்பானவர்களையும் தேர்தலை ஒழுங்கு செய்தவர்களையும் பல தடவைகள் தொடர்பு கொள்ள முயற்சி செய்தும், நம்நிலையை புரியவைக்க முற்பட்ட பொழுதும் அதற்கு இன்றுவரை அவர்கள் வாய்ப்பளிக்கவில்லை. ஆகையால் இலண்டனுக்கு வெளியேயுள்ள பகுதிகளில் பணிபுரிந்த அனைத்து பொறுப்பானவர்களும் இணைந்து பேசி எடுத்த முடிவாகத்தான் இந்த அறிக்கையை எழுதுகின்றோம். மறுதேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் எமக்குள் உள்ள நியாயங்களையும் கேள்விகளையும் மக்களாகிய உங்கள் முன் வைக்கின்றோம்.

எமது தேசத்தின் விடியலுக்காக இந்தத் தேர்தலில் நம்முடன் பணியாற்றியவர்களையும் வாக்களித்த மக்களையும் தேர்தல் ஆணையகமும் தேர்தலை ஒழங்கு செய்தவர்களும் ஒட்டுமொத்தமாக அவமதித்து புண்படுத்திய நிலையிலும் நாம் எல்லோரும் உண்மையாக உழைத்த உங்கள் அனைவர்க்கும் நன்றி கூறுகின்றோம் தொடர்ந்தும் எம்மக்களுக்காக நாங்கள் அனைவரும் ஒன்றாய் நிற்போம்.

பிரித்தானியாவில் லண்டனைத் தவிர்ந்த வெளி மாவட்டத்தில் உள்ள மில்ரன் கீன்ஸ் (Milton Keynes) வாக்களிப்பு நிலையத்தை நோக்குவோம் – S.ஜெயாவின் வாக்குமுலம்:
மில்ரன் கீன்ஸ் தேர்தல் நிலையத்திற்கான வாக்குச் சீட்டுக்கள் அடங்கலான வாக்குப் பெட்டி மே 1ம் திகதி இரவு 9 மணியளவில் S.ஜெயா ஆகிய எனது வீட்டில் கொண்டுவந்து தந்தார்கள். நான் லண்டனில் உள்ள தேர்தல் ஆணையகத்திற்கு மில்றன் கீன்ஸ் வாக்குச் சாவடி தேர்தல் இணைப்பாளராக பணியாற்றினேன். தேர்தல் ஆணையகத்தின் சட்ட ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக வாக்களிப்பு நிலையத்தில் நாட்டுப்பற்றும், அனுபவமும், தராதரமும் மிக்க பலரின் ஆதரவுடன் பணியாற்றினோம். மீல்ரன்கீன்ஸில் உள்ள மக்கள் தொகைக்குகேற்ப உத்தியோகத்தர்கள் வேலைசெய்தார்கள். தேர்தல் சட்ட நேரப்படி காலை 9 மணிக்குத் திறக்கப்பட்டு ஜனநாயகமுறையில் பிரித்தானிய ஆங்கிலேயர் (observers) முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது. இவ் அனைத்து ஏற்பாடுகளும் தேர்தல் ஆணையகத்தின் நேரடிப் பார்வையிலேயே நடைபெற்றது.

இரவு 9மணிரை வாக்குப் பதிவு நடத்தலாம் என அறிவிக்கப்பட்ட போதிலும் லண்டன் தேர்தல் ஆணையம் மாலை 6 மணிக்கு மூடும்படி திடீரெனக் கட்டளையிட்டார்கள். வாக்காளர்கள் அதிகமாக வந்து கொண்டிருந்ததால் அவர்கள் கட்டளையிட்டபடி 6 மணிக்கு மூட முடியவில்லை என்று என்னால் அறிவிக்கப்பட்டது. மில்ரன் கீன்ஸ் வாக்கு நிலையத்தை உடன் மூடும்படி மாலை 6மணியில் இருந்து தொடர்ச்சியான அழுத்தங்கள் லண்டன் ஆணையகத்தில் இருந்து வந்து கொண்டேயிருந்தது.

இறுதியாக மாலை 7மணியளவில் உங்கள் வாக்கு நிலையம் உடனடியாக மூடாவிட்டால் மில்ரன்கீன்ஸ் வாக்கு நிலையம் நிராகரிக்கப்படும் என அறிவித்தல் வந்ததது. இவ்வளவு நேரமும் வாக்களித்த 1500க்கும் மேற்பட்ட வாக்குரிமைகள் வீணாக்கப்படும் என்ற ஒரே நோக்கம் கொண்டு இரவு 8.05 மணிக்கு வாக்குச் சாவடி முறைப்படி மூடப்பட்டது.

தேர்தல் ஆணையத்தால் அனுப்பப்ட்ட “தேர்தல் சாவடி உத்தியோகத்தருக்கான கைப்புத்தகக் குறிப்பில்” 16ம் பக்கத்தில் மூன்றாம் பக்கத்தில் 2010 மே 2ம் திகதி காலை 8 மணிக்கு முன்பும் இரவு 9 மணிக்குப் பின்பும் எக்காரணம் கொண்டும் வாக்குச் சீட்டு விநியோகிக்கூடாது என்று குறிக்கப்பட்டது என்பதை அவதானிப்பாளராக இருந்த ஆங்கிலேயர் அதைச் சுட்டிக்காட்டி 55 நிமிடம் முன்னராக மூடிவிட்டீர்கள், மக்கள் வந்து திரும்பிப் போகின்றார்கள் என ஆதங்கப்பட்டார்.

இரவு 9 மணி 10 நிமிடமளவில் வாக்குச் சாவடியை விட்டு நாம் வெளியேறும் போது தேர்தல் சட்டமுறைப்படி வாக்கு நிலைய அதிகாரியிடம் வாக்குப்பெட்டியும் அனைத்து ஆவணங்களும் கையளிக்கப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் முறையே அனைத்தும் சரிவர இருப்பதை மீளவும் இந்த ஆங்கிலேயரால் உறுதி செய்யப்பட்டபின்னர் வாக்குப்பெட்டி எடுக்க வருபவரிடம் தனது முகவரியைக் கொடுத்து விட்டு வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டார். வாக்குப் பெட்டி எடுக்க வருபவர்கள் இரவு 9.30 மணிக்கு எடுக்க வருவதாகக் கூறினார்கள், பின்னர் 3ம் திகதி அதிகாலை 1.30 மணிக்கு வருவதாகக் கூறி காலை 6.30 மணிக்குத் தான் வந்து எடுத்துச் சென்றார்கள். இதில் மில்ரன் கீன்ஸ், நோத்கம்ரன், லூட்டன் வெட்போட், ஐஸ்பரி நகரங்களில் உள்ள மக்களும் இங்கு வாக்களித்தனர்.

3ம் திகதி செய்தியை பார்த்தபோது மில்றன் கீன்ஸ், கொவன்றி நிலைய வாக்குப்பெட்டிகளில் முறைகேடுகள் நடந்ததாகவும் அதனால் 17 நிலைய வாக்குப் பெட்டிகளும் நிராகரிக்கப்படுகின்றன என்றும் தொலைக்காட்சியில் மில்ரன் கீன்ஸ் (01) வாக்குப்பெட்டியை தொடர்ந்து காட்டிக் கொண்டே கட்டுக்கட்டாக எடுப்பதையும் அதை ஒரு சிலர் கைதட்டி ஆரவாரம் செய்வதையும் காட்டினார்கள்.

அவதானித்தவைகள்:
1. வாக்குப் பெட்டி கவிட்டுக் கொட்டப்படாமல் பக்கவாட்டில் சரிக்கப்பட்டது. அப்போது முன் கூட்டியே வைக்கப்ப்டது போல் இரு வாக்குச் சீட்டு கட்டுக்களை ஒருவர் எடுத்து பிரித்தானியரிடம் கொடுக்க அவர் பார்வையிடுகிறார்.
2. அவர்கள் எடுத்துக் காண்பித்த வாக்குச் சீட்டுக் கட்டு எக் காராணம் கொண்டும் வாக்குப்பபெட்டியின் துவாரத்துக்கூடாக சுயாதீனமாக திணிக்கக் கூடிய அளவிற்கு அதன் துவாரம் பெரிதல்ல.
3. வாக்குப் பெட்டியை வந்து எடுத்தவர்களிடமே முழு ஆவணங்களும், மிகுதி வாக்குச் சீட்டும், வாக்குப் பெட்டியின் திறப்பும் கையளிக்கப்பட்டது.
4. இதற்கு முன்னர் வேறு இரு வாக்கு சாவடிகளுக்காண வாக்குப் பெட்டிகள் திறக்கப்பட்டது. இவற்றிலும் வாக்குச் சீட்டு கட்டுக்கள் இருந்ததாக அறியப்படுகிறது ஆனால் இது வரை அதுபற்றிய எந்த ஒரு செய்தியையும் வெளிக் கொணராது திட்டமிட்டு எமக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளனர்.
5. வாக்கு நிலையத்ததை பார்வையிட்ட தேர்தல் ஆணையத்தால் அனுப்பிவைக்கப்பட்டவர்களில் ஒருவர் ஆங்கிலேயர், எமது வாக்கு நிலையத்தை அவதானித்து விட்டு முறையாகவும், திருப்தியாகவும் நடைபெறுகின்றது என்று தெரிவித்து கையொப்பம் இட்டுச் சென்றார், பார்வையிட்ட ஆங்கிலேயர் Michel Chadwwick ஆவார்.
6. எந்த முறைகேடுகளும் எமது வாக்குச் சாவடியில் நடைபெறவில்லை என்பதை நிரூபிக்க எம்மிடம் பல ஆதாரங்கள் உண்டு.

கொவன்றி (Coventry)

எமது வாக்குச் சாவடியில் அனைத்தும் தேர்தல் ஆணையகத்தின் நேரடிப் பார்வையிலேயே சிறப்பாக நடைப்பெற்றுது. அனைத்து விடயங்கலிலும் தேர்தல் ஆணையகம் நேரடியாகவே எம்மை வழி நடத்தினர்.

இருப்பினும் எமக்கு கொடுக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் முடிவடையும் தறுவாயில் தேர்தல் ஆணையகத்திற்குத் தொடர்பு கொண்டபோது, தாங்கள் பேர்மிங்காமிற்கு (Birmingham) மேலதிகமான வாக்குச் சீட்டுக்கள் வழங்கப்பட்டதாகவும் அங்கு சென்று பெற்றுக் கொள்ளுமாறும் பணித்தனர்.

நாங்கள் போர்மிங்காம் சென்று கேட்டபோது அங்கு பணியில் இருந்த பொறுப்பாளர் யாருடனோ தொடர்பு கொண்டுவிட்டு தேர்தல் ஆணையகத்திற்கு தொடர்பு கொண்டதாகவும் உங்களுக்கு கொடுக்கவேண்டாம் என்று சொன்னதாகவும் கூறினார். நாங்கள் யார் கூறினார் என்று கேட்டதற்கு திரு குணாளன் என்பவர் உங்களையும் உள்ளே அனுமதிக்கவும் வேண்டாம் ஒரு வாக்குச்சீட்டும் கொடுக்கவும் வேண்டாம் என்றும் கூறியதாக்ககூறி மீண்டும் நிராகரித்தனர். தர மறுத்தவர்களை நாங்கள் அடையாளம் காட்டுவோம், மேலும் போதிய அளவு வாக்குச்சீட்டு எமக்கு தராதது தேர்தல் ஆணையகத்தின் தவறு. மேலும் எந்த குளறுபடியும் எமது வாக்கு சாவடியில் நடைபெறவில்லை என்பதை நாம் உறுதிபடுத்துவோம்.

தேர்தல் ஆணையகம் முறைகேடுகளை கண்டுபிடிக்கும் பட்சத்தில் போட்டிக்கு நின்ற வேட்பாளர்களை அழைத்து அவர்கள் முன்நிலையில் உறுதிசெய்திருக்க வேண்டும் அத்துடன் பெட்டிகள் திறக்கப்படும் பொழுது பாதுகாப்புப் பட்டிகளின் இலக்கங்கள் அனைத்தும் சரிபார்த்திருக்கப்பட வேண்டும். இவை அனைத்தும் நடைபெறவில்லை, வேட்பாளர்களிடம் இது பற்றிய எந்த ஒரு வார்த்தையும் கூறப்படவில்லை.

தேர்தல் ஆணையகம் முறைகேடுகள் நடந்தது எனும் பட்சத்தில் வாக்குநிலையத்தில் பணியாற்றிய தேர்தல் நிலைய அதிகாரிகளினதும், அவதானிப்பாளர்களினதும் கருத்துக்கள் கேட்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் இது வரை எந்த ஒரு கருத்துக்களும் கேட்கபடவில்லை.

கருத்துகணிப்பு வாக்கெடுப்பிற்கு (வட்டுக் கோட்டை தீர்மான) முன் தேர்தல் சம்பந்தமான அனைத்து பயிற்சி முறைககளும் பயிற்சிவிக்கப்பட்டது போல் இங்கு எதுவும் நடக்கவில்லை, மாறாக நாடுகடந்த தமிழீழ தேர்தல் மக்களின் ஆணை பெறவேண்டும் என்ற இலட்சியக் கூறிக்கோளுக்கு மாறாக ஓரிருவரின் அனுசரனைக்காகவும், அவர்களின் சுயநலத்துக்காகவும் நடைபெற்றதாக ஏன் மனசாட்சியுள்ள மனிதர்கள் சந்தேகம் கொள்ள முடியாது.

இந்த தேர்தல் குழறுபடிகளை திட்டமிட்டு நடாத்தியது போலவும், நீண்ட நெடுங்காலமாக மக்களுக்குப் பணிசெய்தவர்களை வீணே அதற்குள் இழுத்து அவமானப்படுத்தி வெளியேற்ற வேண்டும் என்றும் எமது சமூகத்திற்கு முழு மனதுடன் பாடுபடுபவர்களுக்கு இப்படியொரு களங்கத்தை திட்டமிட்டே ஏற்படுத்தியுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. இது சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலின்படி எமது இனத்துக்குள் எந்த ஒரு மக்கள் கட்டமைப்பும் இருக்கக் கூடாது என்ற நோக்கில் எமக்குள் ஊடுருவி எம்மால் எம்மையே அழிக்கும் புதிய வழிக்கு இந்தத் தேர்தல் துணை போகியுள்ளது.

இலண்டனுக்கு வெளியேயுள்ள பகுதிகளிற்கான பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படாது நாடு கடந்த அரசின் முதல் அமர்வு நாடாத்த ஒழுங்கு செய்வது எந்த ஒரு ஜெனநாயக மரபிற்கும் உட்பட்டதா என அனுபவமிக்க தேர்தல் ஆணையர் உறுதிப்படுத்துவாரா?

மக்களே கொஞ்சம் சிந்தியுங்கள்.
எது எப்படியிருந்த போதிலும் தாயகதேச நேசிப்பு மிகுதியால் பாணியாற்றியவர்களுக்கும், வாக்களித்த மக்களுக்கும் தேர்தல் ஆணையகம் தந்த பிரிசு அவமானமே தவிர வேறொன்றும் இல்லை.

அனுபவம் மிக்க தேர்தல் ஆணையாளர் திரு விஜயசிங்கம் தலைமையில் இருந்த இந்த தேர்தல் ஆணையம் வெளிமாவட்டத்தின் 17 வாக்கு நிலையங்களை நிராகரித்த நிலையானது முன்கூட்டிய திட்டமிட்ட சதியாக இருக்கும் என்று நாம் ஏன் கருதக்கூடாது?

மேற்கூறப்பட்டவைகளை அவதானித்து பார்போமானால் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளது என்பது உண்மை, ஆனால் நிச்சயமாக 17 வாக்கு நிலையங்களில் கடமையாற்றிய உத்தியோகஸ்தர்களோ அல்லது வாக்காள பொதுமக்களோ இந்த தேர்தலின் முறைகேடுக்கு காரணம் இல்லை. இதற்கு காரணம்
1) தேர்தலை ஒழுங்கு செய்தவர்களும்.
2) வாக்கு நிலையங்களில் இருந்து வாக்குப் பெட்டிகளை எண்ணும் நிலையத்துக்கு எடுத்து செல்லும் வழியிலோ அல்லது எண்ணும் நிலையத்திலோ மட்டுமே முறைகேடுகள் நடந்துள்ளது என்று நாம் நம்புகின்றோம்.

நமதும் மற்றும் வாக்காள பெருமக்களின் கோரிக்கை:
தேர்தல் ஆணையகத்துக்கு பொறுப்பானவர்களும் தேர்தலை ஒழுங்கு செய்தவர்களும், எமது மக்களிடமும் மற்றும் வாக்களிப்பு நிலையங்களில் கடமையாற்றிய உத்தியோகஸ்தர்களிடமும் உடனடியாக மன்னிப்பு கோரவேண்டும். உடனடியாக மறுவாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும்.

என்னைப் போன்ற இளைஞன் யாருமில்லை -கருணாநிதி

karunanidhi.jpg87 வயது முதியவன் என்று நீங்கள் என்னை அழைத்தாலும், தமிழையும், தன்மானத்தையும், திமுகவையும் காப்பதில் என்னைப் போன்ற இளைஞன் யாரும் இருக்க முடியாது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

முதல்வரின் 87வது பிறந்த நாளையொட்டி நேற்று இரவு சென்னை திருவான்மியூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசியதாவது:

ஒரு இயக்கம் ஒரு வீடு குடும்பம் போல். பெரியார் அவர்களால் வளர்க்கப்பட்ட காரணத்தால், இடையிடையே சில சலசலப்புகள், கருத்து மாறுபாடுகள் ஏற்பட்டதுண்டு. அப்படிப்பட்ட மாறுபாடுகள் கழகத்தை அழித்துவிடாமல் அந்த மாறுபாடு உண்டாக்குகிறவர்கள் திருந்தும் வகையில் கழகத்தின் வலிமை பயன்படுத்தப்பட்டு அதன் காரணமாக கூரேற்றப்பட்ட ஈட்டி முனையை போல் கனையின் முனைபோல் தி.மு.க. விளங்கி வருகிறது.

அதனால்தான், இடையிடையே யார் யாரோ எத்தனையோ முயற்சிகளில் ஈடுபட்டும் கூட இந்த இயக்கத்தை அவர்களால் எதுவும் செய்ய இயலவில்லை. இந்த இயக்கம் இருக்கக் கூடாது என்று தந்திரோபாய சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அந்த சட்டங்களை தாண்டி எப்படி இந்த இயக்கத்தை காப்பாற்றுவது, வீம்பு அல்லது தேவையற்ற வீரபிரதாபம் இவைகளால் இந்த இயக்கத்தை காத்து விடமுடியுமா என்ற கேள்விக்கு அண்ணா அளித்த பதில்-லட்சக்கணக்கான தம்பிமார்களை விழிப்படைய செய்து, ஆத்திரப்பட்டு அவசரப்பட்டு இந்த இயக்கத்தை பலி கொடுத்துவிடக்கூடாது என்று எண்ணிய காரணத்தால் இன்று தமிழகத்தை ஆளும் கட்சியாகவும், டெல்லியை ஆளும் கட்சிக்கு தோழமை கட்சியாக இருக்க முடிகிறது.

அப்படிப்பட்ட இயக்கத்தை நடத்திச்செல்லும் பெரும் பொறுப்பு தலைவர் என்னுடைய கரத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதை அகம்பாவத்தோடு கர்வத்தோடும், திமிரோடும் எண்ணிப் பார்த்து பெருமிதம் கொள்பவன் அல்ல நான். நீங்கள் எல்லாம் என் ஒருவனுடைய சக்தி, அறிவுக் கூர்மையால், சாதுரியத்தால் கிடைத்த வலிமை என்று எண்ணும் அளவுக்கு பைத்தியக்காரன் அல்ல. என்னுடைய வலிமை இந்த இயக்கத்தை நடத்தி செல்வதற்கு எனக்கு ஏற்பட்ட நெஞ்சுரம் எல்லாம் என் எதிரே வீற்றிருக்கும் லட்சோப லட்ச உடன்பிறப்புகளாகிய நீங்கள் வழங்கியது. நானாக உருவாக்கிக் கொண்டவை அல்ல.

நாங்கள் உங்களைவிட பெரியவர்கள் அல்ல. 87 வயது என்ற காரணத்தால் முதியவன், பெரியவன் என்று என்னை அழைக்கலாம். ஆனால், தமிழை, தன்மானத்தை, தி.மு.க.வை காப்பதில் என்னை போல் இளைஞன் இருக்க முடியாது. அந்த உறுதியை நிறைவேற்றுவேன். இந்த இனிய விழாவில் புதிய வரவாக நமது இயக்கத்துக்கு வந்திருக்கும் குஷ்புவை உங்கள் ஆதரவோடு வரவேற்கிறேன் என்றார் கருணாநிதி.

டாக்காவில் பயங்கர தீவிபத்து – 100க்கும் மேற்பட்டோர் பலி

04-dakka-fire.jpgவங்கதேச தலைநகர் டாக்காவின் மையப் பகுதியில் உள்ள பல நூறாண்டு பழமை வாய்ந்த கயதுலி பகுதியில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர். டாக்காவின் மையப் பகுதியில் உள்ள கயதுலி பகுதி மிகவும் பழமை வாய்ந்த ஒன்று. இங்கு நூற்றுக்கணக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகள்,வணிக அலுவலகங்கள், ரசாயாணப் பொருள் தயாரிப்பு ஆலைகள் உள்ளன.

இங்கு நேற்று இரவு டிரான்ஸ்பார்மர் ஒன்றிலிருந்து கிளம்பிய தீப்பொறியால் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. ரசாயாணப் பொருள் நிறுவனங்கள் நிரம்பிய பகுதி என்பதால் தீ படு வேகமாக பரவியது. விடிய விடிய எரிந்த தீயால் அந்தப் பகுதியே சுடுகாடு போலானது. உடனடியாக மீட்புப் படையினர் விரைந்து வந்தனர். தீயணைப்புப் படையினரும், போலீஸாரும் பொதுமக்களும் இணைந்து மீட்புப் பணிகளில் இறங்கினர். மிகவும் குறுகலான பல சந்துகள் அங்கு உள்ளன என்பதால் அந்தப் பகுதிகளுக்குள் மீட்புப் படையினரால் போக முடியவில்லை.

மிகுந்த சிரமத்திற்கிடையே நடந்த மீட்பு நடவடிக்கையில் 100 பேரின் உடல்கள் வரை மீட்கப்பட்டுள்ளன. பலி எண்ணிக்கை 150ஐத் தாண்டும் என விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். தீயணைப்பு படையினர் மிகுந்த போராட்டத்திற்கிடையே தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்தப் பகுதி முழுவதும் பொசுங்கிப் போய்க்கிடக்கிறது. பல உடல்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் இருக்கலாம் எனத்தெரிகிறது. காயமடைந்து மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். அவர்களில் 12 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

கடந்த 1971ம் ஆண்டு டாக்காவில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. அதன் பின்னர் தற்போதுதான் மிகப் பெரிய தீவிபத்து ஏற்பட்டிருப்பதாக டாக்காவாசிகள் தெரிவிக்கின்றனர். டாக்காவை புரட்டிப் போட்டுள்ள இந்த சம்பவத்திற்கு வங்கதேச அரசு பெரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் ஷேக் ஹசீனா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களை அவர்நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் பேகம்கலீதா ஜியாவும் மருத்துவமனைக்குச் சென்று காயம் பட்டவர்களை பார்த்து ஆறுதல் தெரிவித்தார்.இந்த பயங்கர தீ விபத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் பலர் இறந்துள்ளதால் தீவிபத்துக்குள்ளான மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

ராஜபக்ச வருகையை எதிர்த்து மதிமுக ஆர்ப்பாட்டம் – வைகோ அறிக்கை

vaiko.jpgஇலங்கை ஜனாதிபதி ராஜபக்ச இந்தியா வருவதை எதிர்த்து மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ அறிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை, உலகம் தடை செய்த நாசகாரக் குண்டுகளை வீசியும், அணு ஆயுத வல்லரசு நாடுகளின் ஆயுதங்களைப் பயன்படுத்தியும், ஈவு இரக்கம் இன்றிப் படுகொலை செய்த கொடிய குற்றவாளியான இலங்கையின் ஜனாதிபதி ராஜபக்ச அனைத்து உலக நாடுகளின் நீதிமன்றக் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டியவர்.

போரில் ஆயுதம் ஏந்தாத தமிழ் மக்களை, வயது முதிர்ந்தவர்கள், தாய்மார்கள், சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தைகள், சிறுவர் சிறுமியரை, குண்டுகள் வீசிக் கொன்றும், பீரங்கித் தாக்குதல் நடத்தியும், உணவுக்கே வழி இன்றிப் பட்டினி போட்டும், காயம் அடைந்தவர்களுக்குச் சிகிச்சைக்கு, வழி இன்றிச் செய்தும் சாகடித்தவர் ராஜபக்ச. அவர் போர்க்குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டியவர் என்று, அயர்லாந்து நாட்டிலே கூடிய சர்வதேச மக்கள் தீர்ப்பு ஆயம் அறிவித்தது.

மனிதகுலத்துக்கு எதிரான போர்க்குற்றங்கள் புரிந்த ராஜபக்ச  நடத்திய அக்கிரமங்கள் குறித்து விசாரணை மன்றம் அமைக்க, ஐநா சபை அறிவித்தது. தமிழ் ஈழ மண்ணில், தமிழ் இனத்தையே கரு அறுக்கும் ரத்த வேட்டை ஆடிய ராஜபக்ச, ‘ஈழத்தமிழர்களுக்குத் தாயகம் கிடையாது; தமிழ் இனம் தனித் தேசிய இனம் அல்ல என்றும்; தமிழர்களின் பூர்வீகத் தாயகமாக வடக்கு – கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்று கூறியுள்ளார்.

இலங்கையில், லட்சக்கணக்கான தமிழர்களின் வீடுகளை, இடித்து நொறுக்கித் தரைமட்டம் ஆக்கிவிட்டு, தமிழர் தாயகத்தில் சிங்களர்களைக் குடியேற்றும் வேலையைத் தீவிரப்படுத்திவிட்டு, தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களையும் அழித்துவிட்டு, சிங்கள பௌத்த விஹாரைகளைக் கட்டும் வேலையைச் செய்துகொண்டே, தாயக விடுதலைக்காக உயிர் நீத்த மாவீரர்களின் கல்லறைகளை எல்லாம் இடித்துத் தகர்த்து, அவ்வீரர்களின் எலும்புகளைக் குப்பையில் வீசிவிட்டு, கோர வெறியாட்டம் நடத்திக் கொண்டு இருக்கின்ற இலங்கை ஜனாதிபதி தமிழ்க்குலத்தின் ஜென்மப் பகைவன் மட்டும் அல்ல; மனிதநேயம் உள்ள மனிதகுலத்தின் ஒட்டுமொத்த எதிரி.

எண்ணற்ற தமிழ்ப்பெண்கள், பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதும், தமிழ் இளைஞர்களை அம்மணமாக்கி, கைகள், கண்களைக் கட்டி, சிங்களச் சிப்பாய்கள் சுட்டுக் கொன்றதும், நினைக்கும்போதே நம் நெஞ்சில் கண்ணீரையும், ரத்தத்தையும் கொட்டச் செய்கிறது.

வேதனையால் வெந்து போன தமிழர் இதயத்தில், சூட்டுக்கோலை நுழைக்கும் வகையில், ராஜபக்சவுக்கு, இந்திய அரசு, சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கிறது.

ஜூன் 8 ஆம் தேதி, இந்தியப் பிரதமரைச் சந்தித்துப் பேச, ராஜபக்ச  தில்லி வரப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜபக்ச வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும், வரவேற்பு அளிக்கும் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கவும், ஜூன் 8 ஆம் தேதி, சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்துக்கு எதிரே, காலை 10 மணி அளவில், கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதே நாளில், மாவட்டத் தலைநகரங்களில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அறிவித்து இருக்கிறோம்.

இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கென வவுனியாவில் பாடசாலை அமைக்க இந்திய நடிகர் ஒபரோய் முடிவு

viv-ob.jpgஇலங்கை யில் யுத்தத்தால் தமது இள¨மைப் பருவம் சூறையாடப்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கென வவுனியாவில் பாடசாலையொன்றை அமைக்கவுள்ளதாக பிரபல இந்திய நடிகர் விவேக் ஒபரோய் தெரிவித்தார்.

சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா நிறைவுபெற்றதும் வவுனியாவுக்குச் சென்று இப்பாடசாலையை அமைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவு ள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா நேற்று கோலாகலமாக ஆரம்பமாகியது.

முதலாம் நாளான நேற்றுக் காலை கொழும்பு, கொள்ளுப்பிட்டி சினமன்கார்டன் ஹோட்டலில் சர்வதேச ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே விவேக் ஒபரோய் இதனைத் தெரிவித்தார். தமிழ் நாட்டில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காய் தனது தந்தையின் ஒபரோய் பவுண்டேஷன் மூலம் உதவக்கிடைத்ததை நினைவு கூர்ந்த விவேக் ஒபரோய், அதனைத் தொடர்ந்து தமிழ் நாட்டுக்கும் தனக்கும் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், “சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவுக்கு நான் இலங்கை செல்வதை அறிந்த இலங்கையில் உள்ள எனக்கு நெருக்கமான அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகத்தினர் என்னை இலங்கை செல்ல வேண்டாம் என்று தடுத்தனர். இலங்கையில் தமிழர்களின் கஷ்டங்கள் தீர்க்கப்பட சர்வதேச இந்திய திரைப்பட அகடமி வழிசெய்ய வேண்டும் என்று என்னை வேண்டினர்.

அன்றே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ்ச் சிரார்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் உதயமானது. அதனை சர்வதேச இந்திய திரைப்பட அகடமியிடம் சொன்னேன் அவர்களும் அதற்குக் சம்மதித்தார்கள். அதன்படி வவுனியாவில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கான பாடசாலையொன்றை சர்வதேச இந்திய திரைப்பட அகடமி இலங்கை கிரிக்கெட் சபை என்பவற்றின் உதவியோடு நிறுவத் திட்டமிட்டிருக்கிறேன்.

இது கல்வி புகட்டும் நிலையமாக மாத்திரம் அல்லாது பாதிக்கப்பட்ட சிறார்களுக்கான சுகாதார, போஷாக்கு நலனோம்புகை நிலையமாகவும் இருக்கும்.  இது பின்னர் வடக்கு கிழக்கின் ஏனைய பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப் படும் என்றார்.