04

04

ஆழ்கடல் மீன்பிடி அபிவிருத்தி செயலமர்வு – மூன்றாம் கட்டம் மாத்தறையில்

ஆழ்கடலில் மீன் பிடித்தலில் ஈடுபடுகின்றவ்களுக்கு கூடுதல் பலனைப் பெற்றுக்கொள்வது எவ்வாறு என்பது குறித்து விளக்கமளிக்கும் செயலமர்வின் மூன்றாவது கட்டம் எதிர்வரும் 08 ஆம் திகதி மாத்தறையில் நடைபெற உள்ளது.

மீன்பிடித்துறை சார்ந்த நவீன உபகரணங்களை பயன்படுத்துவது குறிதுது இதன்போது விளக்கம் அளிக்கப்படுகின்றது.

இந்தத்திட்டம் முதலில் கடந்த ஓகஸ்ட் மாதம் நீர்கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது. அதில் சுமார் 75 மீனவர்கள் கலந்துகொண்டுதுடன் சிறந்த பிரதிபலனும் கிடைத்துள்ளது. இதனையடுத்து இந்தத் திட்டத்தை ஏனைய பகுதிகளுக்கும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி தென் மாகாணத்தில் மூன்று கட்டங்களாக நடத்த ஒழுங்கு செய்யப்பட்டது.

அதன் முதல் கட்டம் இம்மாதம் 01 ஆம் திகதி பெந்தோட்டையிலும் இரண்டாம் கட்டமாக  02 ஆம் திகதி காலியிலும் நடத்தப்பட்டது. மூன்றாம் கட்ட செயலமர்வு எதிர்வரும் 08 ஆம் திகதி மாத்தறையில் நடத்தப்படவுள்ளது.இலங்கை முதலீட்டு; சபையும் தேசிய நீர்வள ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிறுவனமும் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.

நாட்டில் முழுமையான அபிவிருத்தியை உருவாக்க வேண்டிய பொறுப்பு எம்மிடம் – ஜனாதிபதி

290909mahinda.jpgநாட்டுக்குத் தேவையான முழுமையான அபிவிருத்தியையும், தேசிய முன்னேற்றத்தையும் உருவாக்க வேண்டிய பொறுப்பை நாம் இன்று ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். உலகிலேயே மிக மோசமான பயங்கரவாதிகள் என வர்ணிக்கப்பட்டவர்களுக்கு எதிரான யுத்தத்தில் படையினரின் வீரத்தைக் கண்ட எந்தவொரு அறிவுள்ளவரும் நாட்டைத் துண்டாட வேண்டும் என்றோ பிரிவினைவாதத்திற்காக ஆயுதம் ஏந்த வேண்டும் என்றோ நினைக்கமாட்டார்கள் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இராணுவத்தின் 60வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இராணுவத்தினரின் கண்காட்சி ஒன்று நடைபெறுகிறது. இதன் ஆரம்ப வைபவம் நேற்று நடைபெற்றது. இதில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உயிர்த்தியாகம் செய்த சகல படையினரும் உலகத்தில் ஈடிணையற்ற வீரர்கள் என்ற பெருமையை பெற்றுக் கொண்ட நிலையிலேயே இன்றைய 60 ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறோம். உலகில் ஈடிணையற்ற வீரர்கள் என்ற பெருமை நாம் பெற்ற வெற்றியினூடாகவே ஏற்பட்டுள்ளது.

ஆசியாவிலுள்ள சகல நாடுகளும் நாம் பெற்ற யுத்த ரீதியான வெற்றி தொடர்பாக ஆராய்ந்து வருகின்றன.

உலகம் கண்டிராத மிலேச்சத்தனமான தாக்குதல் முறைகளை பயங்கரவாதிகள் உலகுக்கு காண்பித்துக் கொண்டிருந்தனர். எனினும் எமது வீரர்கள் அவர்களுக்கு முகம் கொடுத்தது மட்டுமல்லாமல் வெற்றியும் கண்டார்கள்.

உலகில் பெரும்பாலும் இராணுவத்தினர் தாம் தயாரித்த நவீன ஆயுதங்களை, கண்காட்சிக்கு வைப்பதற்காக உற்சவங்களை நடத்துவார்கள். அணு ஆயுதங்கள் உட்பட, ஏனைய ஆயுதங்களையும் கண்காட்சிக்கு வைப்பது மட்டும் அல்லாமல் ஊர்வலங்களையும் நடத்துவார்கள். எனினும், பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்த த்தில் பெற்றுக்கொண்ட வெற்றியை நெஞ்சில் உரமாக சுமந்து கொண்டு கண்காட்சிகளை நடத்துவதற்கு உகந்தவர்கள் எமது இராணுவத்தினரே என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இக்கண்காட்சி 3ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் விண்ணப்பங்கள் கையளிப்பு

ramadan-mosque.jpgவட மாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்காக தகவல் திரட்டும் வகையில் வடமாகாண முஸ்லிம்களிடமிருந்து திரட்டப்பட்ட 7000 (ஆயிரம்) விண்ணப்பப் படிவங்களை இலங்கை முஸ்லிம்களின் சம்மேளனம் மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் நேற்று அமைச்சில் வைத்து கையளித்தது.

அநுராதபுரம் வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைப் பிரிவு !

அநுராத புரம் போதனா வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைப் பிரிவொன்று இன்னும் மூன்று மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறுநீரக நோய் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் திலக் அபேசேகர தெரிவித்துள்ளார். அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வளவில் 2850 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஜந்து மாடிக்கட்டடத்தில் இப்பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதனால்,  ரஜரட்ட பிரதேச சிறுநீரக நோயாளர்கள் நன்மையடையவுள்ளனர். இதற்கு முன்னர் ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்து கண்டி மற்றும் கொழும்பு போன்ற பகுதிகளுக்கு சென்றுவந்த இப்பகுதி நோயாளர்களுக்கு இது பெரும் வரப்பிரசாதகமாக அமையவுள்ளது. 

தெல்தோட்டை மினி சூறாவளியில் 25 குடும்பங்கள் பாதிப்பு

011009rain-in-upcountry.jpgதெல் தோட்டை, பட்டிகாமம் தோட்டப் பகுதியில் வீசிய மினி சூறாவளி காரணமாக 3 லயன்களிலுள்ள 25 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. லயன்களிலுள்ள வீடுகளின் கூரைகள் காற்றில் அள்ளிச் செல்லப்பட்டதுடன் வீட்டின் சுவர்கள் இடிந்து வீழ்ந்துள்ளன. நேற்று முன்தினம் பிற்பகல் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

25 குடும்பங்களைச் சேர்ந்த 49 பேர் பட்டிகாமம் மலைமகள் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்குரிய சமைத்த உணவுகள் வழங்கப்பட்டுள்ளன. உடனடியாக நிவாரணங்களை பெற்றுக் கொடுக்கு மாறு அரச அதிபர் பணிப்புரை வழங்கியிருக்கிறார். பிரதேச செயலர்பால கிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டார்.

சாம்பியன் கிண்ணம் இறுதியாட்டத்திற்கு அவுஸ்திரேலியா நியுசிலாந்து அணிகள் தெரிவு.

270909n-s.bmpசாம்பியன்ஸ் கிண்ண தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வெற்றிகொண்ட அவுஸ்திரேலிய அணியும் நேற்று இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாக்கிஸ்தானை வெற்றிகொண்ட நியுசிலாந்து அணியும் நாளை நடைபெறும் ஐ.ஸி.ஸி. சாம்பியன் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

நேற்று பாக்கிஸ்தான் நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான அரையிறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாக்கிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 233 ஓட்டங்களை தனது இனிங்சில் பெற்றது. நேற்றைய போட்டியில் பாக்கிஸ்தானின் துடுப்பாட்டம் மிகவும் மந்கரமாகவே காணப்பட்டதென கிரிக்கட் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்தனர். நியுசிலாந்து அணி இப்போட்டியில் 5 விக்கட் வித்தியாசத்தில் வெற்றி இலக்கை அடைந்து இறுதிப்போட்டிக்குத் தெரிவானது. பந்துவீச்சிலும், துடுப்பாட்டத்திலும் டெனியல் விட்டோரி மிகவும் சிறப்பாக பணியாற்றினார். ஆட்டநாயகனாக தெரிவானார்.

நாளை தினம் அவுஸ்திரேலியா நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான ஆட்டம் மிகவும் விருவிருப்பாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் அவதானிக்கும் கிரிக்கட் விமர்சகர்கள் நியுசிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகமென தெரிவிக்கின்றனர். ஆனால், கிரிக்கட் ஆட்டத்தில் வெற்றி தோல்வியை ஹேஸ்யத்தின் மூலம் தெரிவிக்க முடியாது. அச்சந்தர்ப்பத்தில் காலநிலை மைதான நிலை நாணய சுழற்சியில் வெற்றி தோல்வி ஆகியனவே வெற்றியை தீர்மானிப்பதாக அமையுமென எதிர்பார்க்கலாம்.

நேற்றைய ஆட்டத்தில் அணிகள் பெற்ற ஓட்ட விபரங்கள் கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

ICC Champions Trophy – 2nd semi final
New Zealand v Pakistan
New Zealand won by 5 wickets (with 13 balls remaining)
       
 Pakistan innings (50 overs maximum)
 Imran Nazir  c Taylor b Bond  28 
 Kamran Akmal†  c Redmond b Butler  24
 Shoaib Malik  c Taylor b Butler  2 
 Younis Khan*  c Taylor b Vettori  15
 Mohammad Yousuf  b Mills  45
 Umar Akmal  lbw b Vettori  55 
 Shahid Afridi  c †McCullum b Butler  4 
 Naved-ul-Hasan  c Guptill b Vettori  8 
 Umar Gul  c Broom b Butler  6 
 Mohammad Aamer  not out  19
 Saeed Ajmal  not out  14  
 Extras (lb 6, w 5, nb 2) 13     
      
 Total (9 wickets; 50 overs) 233 (4.66 runs per over)
Fall of wickets1-46 (Imran Nazir, 9.4 ov), 2-61 (Shoaib Malik, 12.5 ov), 3-69 (Kamran Akmal, 14.2 ov), 4-86 (Younis Khan, 20.5 ov), 5-166 (Mohammad Yousuf, 38.6 ov), 6-181 (Umar Akmal, 40.5 ov), 7-183 (Shahid Afridi, 41.2 ov), 8-192 (Umar Gul, 43.3 ov), 9-198 (Naved-ul-Hasan, 44.2 ov) 
        
 Bowling   
 KD Mills 10 0 46 1
 SE Bond 10 1 54 1
IG Butler 10 0 44 4 8
JEC Franklin 8 0 33 0  
 DL Vettori 10 2 43 3
 GD Elliott 2 0 7 0  
 
 New Zealand innings (target: 234 runs from 50 overs)
 BB McCullum†  c Shahid Afridi b Mohammad Aamer  17 
 AJ Redmond  c & b Saeed Ajmal  31 
 MJ Guptill  c Naved-ul-Hasan b Umar Gul  11 
 LRPL Taylor  b Shahid Afridi  38 
 GD Elliott  not out  75  
 DL Vettori*  st †Kamran Akmal b Saeed Ajmal  41 
 NT Broom  not out  3
 
 Extras (b 2, lb 6, w 6, nb 4) 18     
      
 Total (5 wickets; 47.5 overs) 234 (4.89 runs per over)
Did not bat JEC Franklin, KD Mills, IG Butler, SE Bond 
Fall of wickets1-22 (McCullum, 4.3 ov), 2-43 (Guptill, 9.1 ov), 3-71 (Redmond, 16.4 ov), 4-126 (Taylor, 29.5 ov), 5-230 (Vettori, 46.6 ov) 
        
 Bowling  
 Mohammad Aamer 10 2 32 1
 Naved-ul-Hasan 8 0 57 0
 Umar Gul 8.5 0 48 1
 Saeed Ajmal 8 0 39 2
 Shahid Afridi 10 0 41 1 
 Shoaib Malik 3 0 9 0
 
Player of the match DL Vettori (New Zealand)