October

October

சான், ஹேமால், இந்திகவுக்கு கூடுதலான விருப்பு வாக்குகள்

vote.jpgதென் மாகாண சபைத் தேர்தலில் காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் ஐ. ம. சு. முன்னணி சார்பாக போட்டியிட்ட முதன்மை வேட்பாளர்கள் மூவரும் அதிக விருப்பு வாக்குகளை பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

இதன்படி, காலி மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் சான் விஜேலால் த சில்வாவும், மாத்தறை மாவட்டத்தில் முன்னாள் மாகாண அமைச்சர் ஹேமால் குணசேகரவும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் முன்னாள் மாகாண அமைச்சர் வி. ஜே. இந்திகவும் அதிக விரும்பு வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

காலி மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் சான் விஜேலால் த சில்வா 92,294 விருப்பு வாக்குகள் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளதோடு, ஐ. தே. க. சார்பாக நிசாந்த புஷ்பகுமார 52,371 விருப்பு வாக்குகளை பெற்று முதலாமிடத்தை கைப்பற்றியுள்ளார். அமைச்சர் பியசேன கமகேயின் புதல்வரான ரந்திம கமகே 77,418 வாக்குகளைப் பெற்று இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.

மாத்தறை மாவட்டத்தில் ஐ. ம. சு. முன்னணி சார்பாக போட்டியிட்ட முன்னாள் மாகாண அமைச்சர் ஹேமால் குணசேகர 63,323 வாக்குகளைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளதோடு, அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் சகோதரரான சரத் யாப்பா 45,882 வாக்குகளைப் பெற்று இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளார்.

இது தவிர அமைச்சர் மஹிந்த விஜேசேகரவின் மகனான காஞ்சன விஜேசேகர, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் (ஐ. தே. க.) ஜெஸ்ரின் கலப்பத்தி ஆகியோரும் இம்முறை தேர்தலில் வெற்றியீட்டியுள்ளனர். ஐ. ம. சு. முன்னணியில் போட்டியிட்ட தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்சவின் சகோதரன் சரத் வீரவன்ச தோல்வி அடைந்துள்ளார்.

ஐ. தே. க. சார்பாக ஐ. தே. க. முதன்மை வேட்பாளரான புத்திக பதிரன 57,802 வாக்குகளைப் பெற்று முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.

இதேவேளை, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐ. ம. சு. முன்னணி முதன்மை வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் வி. கே. இந்திக 61,855 வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார். ஐ. தே. க. தரப்பில் கமகே தென்னகோன் நிலமே 23,894 வாக்குகளைப் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார்.

மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா இன ஐக்கியத்திற்கு காவலனாக திகழும் – பிரதி அமைச்சர் சச்சிதானந்தன்

13வது அரசியலமைப்பின் கீழ் தமிழ் மொழி தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ் மொழியை நாம் எல்லாக் காரியங்களிலும் பாவிக்க தமிழ் சமூகம் முனைப்புடன் செயல்பட வேண்டும் என பிரதி கல்வியமைச்சர் சச்சிதானந்தன் தெரிவித்தார்.

2009ம் ஆண்டுக்கான மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் அமரர் அருணாசலம் அரங்கில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதி கல்வி அமைச்சர் எம். சச்சிதாநந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மத்திய மாகாண தமிழ்க் கல்வி, இந்து கலாசார தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற மேற்படி விழாவில் தொடர்ந்து உரையாற்றிய பிரதிக் கல்வி அமைச்சர், தமிழ் அன்னைக்கும், தமிழ் கலாசாரத்திற்கும் மெருகூட்டும் மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா இன ஐக்கியத்திற்கும், ஒற்றுமைக்கும் காவலனாகத் திகழும் மாத்தளை மண்ணில் நடைபெறுவது விசேட அம்சமாகும்.

மாத்தளை மண் தமிழ் காத்தமண் தமிழ் இலக்கிய படைப்பாளிகளையும் கலைஞர்களையும் உருவாக்கி தமிழ் மொழிக்கு புத்துயிர் ஊட்டியது மாத்தளை மண். தமிழ் சாஹித்திய விழாவுக்கும், இலங்கைத் தமிழருக்கும் நீண்ட வரலாறு இருக்கின்றது. அந்தத் தொடர்பின் பிரதிபலனே இன்று மாத்தளை மண்ணில் மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா நடைபெறுகிறது.

இன்று நாம் இப்படிப்பட்ட விழாக்களை நாட்டில் எந்த மூலையிலும் நடத்தும் ஒரு இனிமையான சூழல் உருவாகியுள்ளதையிட்டு நாம் அகமகிழ வேண்டும். கடந்த காலங்களில் இப்படிப்பட்ட விழாக்களை நடத்தும் அளவுக்கு இந்த நாட்டில் அவ்வப்போது தலைதூக்கிய வன்செயல்கள் இடம்கொடுக்கவில்லை. இதனால் எமது தமிழ் இலக்கிய பாரம்பரியங்களை தெளிவாக வெளிக்கொணர முடியாமல் போய்விட்டது.

முன்னாள் அமைச்சர் பீ. பீ. தேவராஜ் கலாசார அமைச்சராக செயல்பட்ட போதே இலங்கையில் தமிழ் சாஹித்திய விழா அறிமுகம் செய்யப்பட்டது.  இவரே தமிழ் சாஹித்திய விழாவின் கதாநாயகன் அல்லது காவலன் என்று கூறுவதே சாலப் பொருந்தும். அவரின் பாரிய முயற்சியும், 13வது அரசியலமைப்பில் தமிழ்மொழி தேசிய மொழியாக பிரகடனம் செய்யப்பட்டதன் பிரதிபலனாகவே இன்று தேசிய ரீதியாக, மாகாண ரீதியாக, மாவட்ட ரீதியாக நடைபெற்று வருகிறது.

இலங்கையில் இலவசக் கல்வி வழங்கப்படுகிறது. எனவே எமக்கு வழங்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கல்வி மூலம் நாம் பண்பாடு உள்ள மக்களாக திகழ வேண்டும். எதிர்வரும் ஆண்டை நாம் ஆங்கில மொழி ஆண்டாகவும், தொழில்நுட்ப ஆண்டாகவும் பிரகடனப்படுத்தியுள்ளோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மலையகத்தில் பல்துறைகளிலும் முன்னேற்றம் தெரிகிறது. மலையகக் கல்வி வளர்ச்சியில் புரட்சியை ஏற்படுத்த மத்திய மாகாண தமிழ் கல்வி, இந்து கலாசார, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் வி. இராதாகிருஷ்ணனின் சகல செயல்பாடுகளும வெற்றிகரமாக அமைய இறைவனை வேண்டுகிறேன் எனவும் பிரதிக் கல்வி அமைச்சர் மேலும் கூறினார்.

தமிழக எம்.பிக்கள் குழு இன்று யாழ். பயணம்

baalu.jpgஇலங்கை நிலவரம் குறித்து ஆராயவென ஐந்து நாள் விஜயத்தை மேற் கொண்டு நேற்று இலங்கை வந்த தமிழக எம்.பிக்கள் குழு இன்று காலை யாழ்ப்பாணம் செல்கின்றனர். இக் குழுவினரை யாழ். மாநகர சபை மேயர் திருமதி யோ. பற்குணராஜா யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் வரவேற்பார்.

காலஞ்சென்ற எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களினது நினைவுச் சிலையைத் தரிசித்த பின்னர் இக்குழுவினர்; யாழ். பொதுசன நூலகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கு கூட்டமொன்று நடைபெற விருக்கின்றது. அந்த கூட்டத்தில் யாழ். மாநகர சபையின் மேயர்,  இந்திய தமிழக பா.ஊ.களுக்கு நினைவுப் பரிசு ஒன்றினையும் வழங்கி கௌரவிப்பார்.

இக்குழுவினர்ää அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி,  யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர்,  பல்கலைக்கழக மாணவர்கள்,  மற்றும் இடம்பெயர்ந்த மக்களையும்; சந்திப்பர்.

எதிர்வரும் 14 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் இவர்கள் தமிழ், முஸ்லிம், சிங்கள அரசியல் முக்கியஸ்தர்களைச் சந்தித்துப் பேசவுள்ளனர். ஜனாதிபதியையும் இவர்கள் சந்தித்துப் பேசவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன

வவுனியா நிவாரண கிராமங்களிலிருந்து விவசாயிகளை அழைத்து செல்ல ஏற்பாடு

190909paddy.jpgமுல்லைத் தீவு மாவட்டத்திலுள்ள அனைத்து வயற் காணிகளிலும் பெரும் போகத்திற்கு செய்கை பண்ணக் கூடிய விதத்தில் நிவாரணக் கிராமங்களிலுள்ள முல்லைத்திவு மாவட்ட விவசாயிகள் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

வவுனியா, மன்னார் மாவட்டங்களிலுள்ள விளைநிலங்களில் பெரும் போக செய்கை மேற்கொள்ளப்படும் அதேவேளை முல்லைத்தீவிலும் தரிசு நிலங்களாகக் கிடக்கும் வயற்காணிகளில் செய்கை பண்ண உடனடியாக நட வடிக்கை எடுக்குமாறு வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ எம்.பி. பணிப்புரைகளை வழங்கியதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலக்கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றப்படாத இடங்களைத் தவிர ஏனைய பகுதிகளிலுள்ள விளை நிலங்களின் உரிமையாளர்கள் நிவாரணக் கிராமங்களிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு அவர்களது சொந்த கானிகளில் இருந்தவாறு விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளன.

அத்துடன் நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்களை மீளக்குடியமர்த்து வது தொடர்பாகவும் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை வன்னி இராணுவ கட்டளை தலைமையகத்தில் நடைபெற்ற வடக்கு வசந்தம் மீளாய்வுக் கூட்டத்தி ற்கு தலைமை வகித்து உரையாற்றிய போதே அவர் இதைத் தெரிவித்து ள்ளார்.

வடமாகாண ஆளுநர் ஏ.ஜீ. சந்திர சிறி, அமைச்சர் ரிசாட் பதியுதீன், அத்தியாவசிய சேவைகள் ஆணையா ளர் நாயகம் திவாரட்ண, தேசத்தை கட்டியெழுப்பும் அமைச்சின் செயலா ளர் குமாரசிறி, வடமாகாண சபை செயலாளர் ஏ.சிவசுவாமி, வவுனியா கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட் டங்களின் இராணுவ கட்டளை தளபதி, முக்கிய திணைக்கள தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மீளக்குடியேறும் விவசாயிகளுக்கு விவசாய நடவடிக்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நிவாரண கொடுக்கப்பனவாக 25 ஆயி ரம் ரூபாவும் ஆறு மாதத்திற்கு உலர் உணவுப் பொருட்கள், வீடு அமைத்து கொள்ள கூரைத்தகடுகள் மற்றும் விதை நெல், உரம், தேவையான உபகரணங்களும் வழங்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ரிஷாட்டுக்கு உயர் விருது

rizad_baduradeen1.jpgமீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இலங்கையின் இளம் அரசியல் தலைவராக அதிஉயர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு சினமன் லேக் ஹோட்டலில் (09) நிகழ்ந்த விசேட நிகழ்வின்போது ஜூனியர் சேம்பர் இன்ட நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் 2009ம் ஆண்டுக்கான சிறந்த இளம் அரசியல் தலைவராக அமைச்சர் ரிஷாத் பதியுதீனை தெரிவு செய்து பாராட்டியதுடன் விருதும் வழங்கி கெளரவித்துள்ளது.

முப்படைகளின் தலைமை அதிகாரியும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளருமான சரத் பொன் சேகா பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில், பல் வேறு துறைகளில் சாதனை படைத்த இளைய தலைமுறையினர் பத்துப் பேர் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளனர்.

எட்டு வருடங்களுக்கு மேலாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக சேவையாற்றி வரும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இளம் வயதில் அமைச்சராகியதுடன் மட்டு மல்லாது மிக இளம் வயதில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். அத்துடன் அமைச்சரவை அந்தஸ்துள்ள முதலாவது வடமாகாண முஸ்லிம் மக்களின் பிரதிநிதி இவர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

வை.எம்.எம்.ஏ. சம்மேளனத்தின் 59வது வருடாந்த மாநாட்டின்போது அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு இவ்வாண்டின் சிறந்த ஆளுமைக்கான உயர் விருது வை.எம்.எம்.ஏ. சம்மேளனத்தினால் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

மன்னார் தாராபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் எருக்கலபிட்டி மத்திய மகா வித்தியாலயத்தில் சாதாரண தரத்தில் கல்வி பயின்றதுடன் உயர்தரத்தை கொழும்பு மருதானை ஸாஹிராக் கல்லூரியில் பயின்றார். உயர்தரத்தில் விசேட சித்தியைப் பெற்று மொரட்டுவை பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகி பொறியியல் துறையில் பட்டம் பெற்றார்.

நோபல் பரிசு பணம் – சமூக சேவை அமைப்புகளுக்கு வழங்க ஒபாமா முடிவு

obama.jpg2009ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தேர்வு செய்யப்பட்டுள்ளார். நோபல் பரிசு வழங்கும் விழா வரும் டிசம்பர் மாதம் 10 ந் திகதி ஸ்டாக் ஹோமில் நடக்க உள்ளது.

விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தங்கப்பட்டயம் மற்றும் 7 கோடி ரூபா வழங்கப்படும். நோபல் பரிசை நேரில் சென்று பெற ஒபாமா முடிவு செய்துள்ளார். நோபல் பரிசு பணத்தை சமூக சேவை அமைப்புகளுக்கு தானமாக கொடுக்க ஒபாமா முடிவு செய்துள்ளாரென அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.

‘தமிழ்த் தேசியத்தை ஐரோப்பிய மண்ணில் சிதைப்பதற்காக சிங்கள அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குகநாதன்’ என்பது ”தவறான பிரச்சாரம்” : எஸ் எஸ் குகநாதன் (டான் தமிழ்ஒளி)

Dan_Tamilடான் தமிழ்ஒளி தொலைக்காட்சி தொடர்பாக அண்மைக் காலங்களில் புலிகளின் ஊடகங்களாலும், புலிகளின் ஊதுகுழல்களாக செயற்பட்டுவரும் சில தனிநபர்களாலும் தவறான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கும் போது அதுவே மக்கள் மனதில் பதிந்து விடுகின்றது. அதனாலேயே அதனை பொய் என்று தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகின்றது.

டான் தமிழ்ஒளி 2007ம் ஆண்டு முதல் தனது ஒளிபரப்பை கொழும்பிலிருந்து நடாத்திவருகின்றது. அதனை கொழும்பில் நடாத்திவரும் ஆஸ்க் மீடியா என்ற நிறுவனம் முழுக்க முழுக்க 100 வீதமும் குகநாதன் என்ற தனி நபருக்கும் அவரது குடும்பத்திற்கும் சொந்தமானது.  அதில் வேறு எவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதே உண்மையானது.

‘தமிழ்த் தேசியத்தை ஐரோப்பிய மண்ணில் சிதைப்பதற்காக சிங்கள அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குகநாதன்’ என்று சில அனாமதேயங்கள் தொடர்ந்து துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டு வருகின்றன.

தமிழ்த் தேசியத்தை தமிழ் மண்ணில் சிதைத்தவர்கள் யார் என்பது தமிழ் மக்கள் அனைவரும் நன்கு அறிந்த விடயம். தமிழ்த் தேசயத்தை தமிழ் மண்ணில் அழித்தவர்களாலேயே ஐரோப்பிய மண்ணிலும் சிதைக்க முடியும். அதற்கெல்லாம் குகநாதன் போன்றவர்கள் தேவையே இல்லை. இப்போது தமிழ்த் தேசியத்தை காப்பாற்றப் போகின்றோம் என்று புறப்பட்டிருக்கும் சில புல்லுரிவிகளே போதும்.

நல்லூரில் குண்டு வெடித்தால், யாழ்.நகரத்தில் இருப்பவனுக்கே நல்லூரில் என்ன நடந்தது என்பது சரியாகத் தெரிவதில்லை. இப்படியிருக்கையில் தாயகத்தில் என்ன நடக்கின்றது என்பதை 13 ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து கூறிக் கொண்டிருப்பதை விடுத்து, நேரே நல்லூரிலிருந்தே கூறுவோம் என்று டான் தமிழ்ஒளி தொலைக்காட்சி தாயகத்தை நோக்கி வந்தது. அது உண்மையைக் கூறுவது சிலருக்கு கசப்பானதாக இருக்கலாம். அதற்காக உண்மையைக் கூறுவதற்கு பெயர் துரோகத் தனம் என்றால் அந்த துரோகத்தனத்தை செய்வதற்கு டான் தமிழ்ஒளி தயங்கப் போவதில்லை.

முதல் முதலில் நமது மண்ணில் நடந்த படுகொலை அல்பிரட் துரையப்பா வினுடையது. அப்போது, துரோகிகளுக்கு மரண தண்டனைதான் சரியான தீர்வு என்று அதனை நியாயப்படுத்தியவர் மறைந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள். பின்னர் அதே தண்டயையை அவரும் பெறவேண்டிவந்தது.  இன்னுமொரு வரைப் பார்த்து துரோகி என்று கை நீட்டியவ்hகள் பலர் பின்னர் துரோகிகளாக அறிவிக்கப்பட்ட வரலாறுகள் அதிகம். எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லியே தீரும்.

எஸ்.எஸ். குகநாதன்
தலைவர், டான் தொலைக்காட்சி   

சிறையிலிருந்து கப்பம் கோரிய கைதிகள் தொடர்பான தகவல்கள் அம்பலம்

பொலிஸாரென்ற போர்வையில் தொலைபேசியில் பொது மக்களை அச்சுறுத்தி கப்பம் கோரிய சிறைக் கைதிகள் தொடர்பான தகவல்கள் அம்பலமாகியுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. சிறைச்சாலையிலிருந்து 15 தொலைபேசிகளும் 45 சிம்கார்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மட்டக்களப்பு, கொழும்பு, கண்டி ஆகிய பகுதிகளில் உள்ள பொது மக்களின் நிலையான தொலைபேசிகளுக்கு அழைப்பெடுத்து, அவர்களிடம் கப்பம் கோரப்பட்டுள்ளது.

“புலிகளின் தற்கொலைப் பிரிவினர், தற்கொலை அங்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் தொலை பேசியிலிருந்து உங்களுக்கு அழைப்பு எடுக்கப்பட்டுள்ளது! எனவே, உங்களைக் கைது செய்ய வேண்டும் இல்லையேல், 10 இலட்சம் ரூபாய் வழங்கினால் சமரசமாய்த் தீர்த்துக் கொள்ளலாம்’ என்று தொலைபேசியில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கப்பம் செலுத்த தயார் என்றதும் சம்பத் வங்கியின் 110353544211 மற்றும் 108053547393 ஆகிய கணக்கு இலக்கங்களிலும், செலான் வங்கியின் 06-0002612541101 என்ற கணக்கிலகத்திற்கும் பணத்தை வைப்பிலிடுமாறு கோரப்பட்டுள்ளது.

மெபிட்டெல் வலையமைப்பின் 0718929261, 0718929214 ஆகிய தொலைபேசி இலக்கங்களிலிருந்து அழைப்பு எடுக்கப்பட்டதை ஆதாரமாகக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணைகள் மூலம், இவ்வாறு கப்பம் கோரியவர்கள் வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதிகள் எனத் தெரியவந்துள்ளது.

இவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி 15 தொலைபேசிகளும், சுட்சுமமான முறையில் சுவரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 45 சிம் கார்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற் கொண்டுள்ளனர்

திருமலை கோணேசபுரியில் 192 வீடுகள் இன்று மக்களிடம் கையளிப்பு

260909house_new.jpgதிரு கோணமலை, கோணேசபுரி வீடமைப்பு திட்டத்திலுள்ள 192 வீடுகள் இன்று மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.

கோணேசபுரி தமிழ்க் கிராமத்தில் சுணாமியால் பாதிக்கப்பட்டவர்களு க்கென ஜப்பான் 300 மில்லியன் நிதி உதவியுடன் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் இவ்வீடு களை அமைத்துள்ளது.

வெலிமடை – பதுளை வீதியில் மண் சரிவு: மறு அறிவிப்புவரை மூடப்பட்டது

வெலிமடை – பதுளை பிரதான வீதியில் 106வது கட்டையில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டதால், அந்த வீதி மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளது. பதிலாக மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மண்சரிவு ஏற்பட்டதால் அந்த வீதியில் வாகனப் போக்கு வரத்து பாதிக்கப்பட்டிருந்தது. பாதை சீர்செய்யப்பட்டு போக்குவரத்து இடம் பெற்றுக்கொண்டிருந்தவேளை நேற்று முன்தினம் 106ஆம் கட்டையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டதாகப் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

வீதி மூடப்பட்டுள்ளதால் வெலிமடையிலிருந்து பதுளை செல்லும் வாகனங்கள்

வெலிமடை, டயரபா, பண்டார வளை, அட்டம்பிட்டி ஊடாக ஹாலி -எல மார்க்கமாக பதுளை செல்ல முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.