நோர்வேயில் அமைந்துள்ள சிறீலங்காத் தூதரகம் தாக்கப்பட்டுள்ளது . நேற்று ஞாயிற்றுக்கிழமை தூதரகத்தின் கதவுகள், சாளரங்களை அடித்து நொருக்கியதாக தூதரகம் தெரிவித்துள்ளது
ஓஸ்லோவிலும் கடந்த 5 நாட்களாக இலங்கை தூதரகம் முன் தமிழர்கள் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று காலை இலங்கை பாதுகாப்பு வளையத்துக்குள் அந் நாட்டு ராணுவம் 300 கிரனைட்களை வீசி தமிழர்கள் மீது தாக்குதல் நடத்திய செய்தி வெளியானதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் கொதிப்படைந்தனர்.
பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாரை தள்ளிவிட்டுவிட்டு இலங்கை தூதரகத்துக்குள் நுழைந்த அவர்கள் ஜன்னல்கள் மற்றும் மேஜைகள், நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். அவர்களை போலீசார் உடனடியாக வெளியேற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 500 பேர் பங்கேற்றனர்.
இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.
இலங்கைத் தூதரகம் மீது தாக்குதல் – நோர்வே அரசு கண்டனம்
நோர்வே தலைநகர் ஒஸ்லோவிலுள்ள இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டதையிட்டு நோர்வே அரசு இலங்கையிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.
நோர்வே ஒஸ்லோவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் மக்கள் இலங்கைத் தூதரகத்தைத் தாக்கியிருப்பதையிட்டு நோர்வே அரசாங்கம் தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.
தூதரகத்துக்குப் பலத்த பாதுகாப்பு வழங்கும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாக நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜொனாஸ் கார் ஸ்டோறி தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
இலங்கையில் நோர்வேயின் முயற்சியால் 2002ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை போர் நிறுத்தம் அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
நோர்வே அரசு இலங்கையிடம் மன்னிப்புக் கோரியுள்ளது – நோர்வை நாட்டை சமாதான ஏற்பாட்டாளர் நிலையிருந்து சிறீலங்கா அரசாங்கம் நீக்கியது
இலங்கை சமாதான நடவடிக்கைகளில் அனுசரணை வழங்கி நோர்வே நாட்டை சமாதான ஏற்பாட்டாளர் நிலையிலிருந்து சிறீலங்கா நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான உத்தியோகபூர்வமான கடிதத்தினை சிறீலங்காவுக்கான நோர்வேத் தூதுவரிடம் இன்று திங்கட்கிழமை கையளித்துள்ளது.
1. நோர்வே ஒஸ்லோவில் அமைந்துள்ள சிறீலங்காத் தூதரகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டமை
2. நோர்வே ஒஸ்லோவில் அமைந்துள்ள தூதரகத்திற்கு பாதுகாப்பை வழங்குமாறு சிறீலங்காவினால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட போதும் அதனை நோர்வேயின் அரசாங்கம் அதனை அலட்சியப்படுத்தியமை
3. நோர்வே அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் பன்னாட்டு உறவுச் செயலுரித்தாளர் செல்வராஜா பத்மநாதன் மற்றும் ஐக்கிய நாடுகளின் ஜக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி ஜோன் ஹொல்ம்ஸ் ஆகிய இருவரும் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தமை
ஆகிய உடனடிக் காரணங்களை முன் வைத்து நோர்வே நாட்டை சமாதான ஏற்பாட்டாளர் நிலையிலிருந்து விலக்குவதாக அறிவித்துள்ளது.
சிறீலங்கா அரசாங்கம், தமிழீழ விதலைப் புலிகள், ஐ.நா மற்றும் ஏனைய நாடுகளுடனான தொடர்பாளராக நோர்வே செயற்பட்டு வந்துள்ளது. சிறீலங்கா அரசாங்கத்தின் இத் தீர்மானத்தினால் நோர்வே தனது ஏற்பாட்டாளர் நிலை, தொடர்பாளர் நிலை மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.