ஈரானை சமாளிப்பதற்காக என்று கூறி ரஷ்யாவை எரிச்சல்படுத்தும் வகையில் கடந்த புஷ் ஆட்சியின்போது கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்கா அமல்படுத்த முனைந்த ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைத் திட்டத்தை பாரக் ஒபாமா ரத்து செய்து விட்டார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் வரவேற்றுள்ளார்.
- “பிரபாகரன் ஒரு முட்டாள். சாடிக்கு ஏற்ற மூடி போல, பொட்டு அம்மானும் ஒரு மொக்கன்” எனக்கு துரோகிப்பட்டம் தருபவர்களுக்கு என் பதில்: இரட்டைமுகவராக மாறிய முன்னாள் கடற்புலி புலனாய்வுச் செயற்பாட்டாளர் காகுஸ்தன் அரியரத்தினம் (கனடா)
- புலிகளின் வி. பிரபாகரனும், வெனிசுவேலாவின் அதிபர் நிக்கோலாஸ் மடூரோவும் ஒரே விதமான முடிவை எதிர்கொண்டனர்:
- கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!
- புதிய வடிவில் வரும் வர்த்தக-தொழில் நுட்பப் போர்
- அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறுமா..?
- லார்க்கூர்னே சிவன் கோயில் அர்ச்சகர்கள் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் இந்தியாவில் கைது !
Multiple Page/Post
மத்திய பிலிப்பைன்ஸ் பகுதியில் உள்ள மின்டோரோ தீவில் இன்று 6.1 ரிக்டர் அளவுக்கு பயங்கரநிலநடுக்கம்ஏற்பட்டது. மதியம் சுமார் 2.23 மணிக்கு ஏற்பட்ட இந்தநிலநடுக்கம்தென் சீன கடல் பகுதியில் கலின்டான் நகரில் இருந்து சுமார் 30 கிமீ தூரத்தில் 50 கிமீ ஆழத்தில் மையமிட்டது.
இது குறித்து பிலிப்பைன்ஸ் புவியியல் ஆராய்ச்சியாளர் இஸ்மாயில் நாரக் கூறுகையில், இந்த நிலநடுக்கத்தால் மிகப்பெரும் அலைகள் ஏற்பட்டது. ஆனால், சுனாமி ஏற்படவில்லை. சுமார் 6.5 ரிக்டர் அளவுக்கு மேல் நிலநடுக்கம் ஏற்பட்டால் தான் சுனாமி உருவாகும் என்பதால் அதற்கான எச்சரிக்கையும் விடப்படவில்லை
அகதிகள் என்ற போர்வையில் மாநிலத்திற்குள் விரும்பத்தகாத சக்திகள் எதுவும் நுழையா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது காவல் துறையினரின் கடமையாகும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் 2 நாள் மாநாடு நேற்று ஆரம்பமானது. மாநாட்டை ஆரம்பித்து வைத்து பேசிய முதல்வர் கருணாநிதி, இலங்கையில் பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுடைய குறைகளைக்களைய மத்திய அரசோடு நேரில் விவாதித்தும், மத்தியில் உள்ள தமிழக அமைச்சர்கள் மூலமாக எடுத்துச் சொல்லியும், கடிதங்களின் வாயிலாக வலியுறுத்தியும், மத்திய அரசோடு இணைந்து தமிழக அரசு அனைத்து வகையான நடவடிக்கைகளையும் செயற்படுத்தி வருகின்றது.
![]()
பிரித்தானிய தொழிலாளர் கட்சி (லேபர் கட்சி) தொழிலாளர்க்கு எதிராகவே செயற்படுகிறது என ஊடகத் தொழிலாளர்களின் தொழிற்சங்கமான. CWU (Communication Workers Union) குற்றம்சாட்டி உள்ளது. CWUவின் உறுப்பினர்கள் தமது தொழிலாளர்கள் ஒன்றியம் தொடர்ந்து லேபர் கட்சியுடனான தனது தொடர்புகளையும் நிதி உதவி செய்வது பற்றியும் தீவிரமாக சிந்திக்க வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளனர்.
கொன்சர்வேற்றிவ் கட்சியின் தனியார் மயமாக்கலைத் தொடர்ந்து லேபர் கட்சியும் தனது பங்கிற்கு தனியார் மயமாக்கலை தொடர்ந்து செய்வது பிரிட்டனில் உள்ள பல தொழிலாளர் சங்கங்களை ஆத்திரமடைய வைத்துள்ளது.
தனியார் மயப்படுத்தல், சம்பளம் வெட்டு, ஒய்வூதியம் தவிர்ப்பு போன்றவற்றில் ஏற்படுத்திய மாற்றங்களும் கடந்த பல வருடங்களாக தொழில் புரிந்தவர்களின் உரிமைகளையும் ஜீவாதார நம்பிக்கைகளையும் லேபர் கட்சி தகர்த்துள்ளது. தொழிலாளர்கள் எதிர்கால நம்பிக்கையற்றலை உணர்ந்தும் சில பண முதலைகளுக்கு தீனிபோட்டுக் கொண்டிருக்கும் லேபர் கட்சியிலிருந்து CWU தனது உறவுகளை முறித்துக் கொள்ள வேண்டும் என்ற பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
2001 ஆண்டிலிருந்து இந்த வருடம் வரையில் 6 மில்லியன் பவுண்களை CWUவிடமிருந்து பெற்றுக் கொண்ட லேபர் கட்சி தொடர்ந்தும் எந்த தொழிலாளர்களின் பணத்தை பெற்றதோ அந்த தொழிலாளர்களை அவமானப்படுத்தும் செயல்களில் இறங்கியுள்ளது.
இந்த தொழிலாளர்களின் வேலை நேரங்களில் மாற்றம், இரவு 10 மணி வரையில் வேலைக்கமர்த்தல், நிரந்தரமற்ற தொழிலாளர்களை ஒரு கிழமை அறிவிப்புடன் வெளியேற்றல், அதிகளவு பழுக்களை தொழிலாளர்கள் மீது சுமத்துதல் போன்ற மனிதாபிமானமற்ற முறையில் தொழிலாளர்களை நடாத்துகின்றதை CWU உறுப்பினர்கள் எதிர்க்க ஆரம்பித்துள்ளனர்.
அதுமட்டுமல்ல CWU உறுப்பினர்கள் அண்மையில் நடாத்திய வேலைநிறுத்தத்தின் போது பிரித்தானியப் பிரதமரின் ‘வேலைக்கு போ’ என்ற வாசகம் CWU தொழிலாளிகளை கேவலப்படுத்தியுள்ளது. இந்த CWU உறுப்பினர்களின் லேபருடனான உறவை முறிக்கும் செயற்பாடுகளுக்கு CNWP ஆதரவளித்து வருகிறது.
அரசும் லேபர்கட்சியும் தமது உறுப்பினர்கள் பணி தபால் சேவைகளை முற்றாக தனியார் மயப்படுத்தும் வேலைகளை கைவிடாது போனால் லேபர் கட்சிக்கு கொடுக்ம் ஆதரவு பற்றிய ஒரு பொதுவாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என பல CWU மேல்மட்ட உறுப்பினர்கள் 2009 CWU மாநாட்டில் கருத்து வெளியிட்டுள்ளது மிகவும் முக்கியமானதாகவே கருதப்படுகிறது. இது லேபர் கட்சிக்கு ஒரு தலையிடியாகவும் அமையலாம்.
இதற்கிடையில் லேபர் கட்சி தனது தனியார் மயப்படுத்தும் முயற்சியில், தொடர்ந்தும் தபால் சேவைகளை தனியார் மயப்படுத்தும் பணிகளை செய்து வருவதும் நாட்டின் பொருளாதார நிலைமைகள் மிகவும் மோசமான காலகட்டத்தில் உள்ள போது இந்த CWUன் முடிவுகள் மிகவும் அவதானமாக பார்க்கப்படுகின்றது.
இதே போன்று தொழிலாளர் சங்கங்களுக்கான சட்டவரையறை மாற்றங்களும் பொது மக்கள் சேவைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் முக்கியமாக சுகாதார சேவைகள் கல்வி வீடமைப்பு சேவைகள் விடயத்தில் பாரிய சிக்கல்களை அரசும் லேபர் கட்சியும் எதிர்நோக்கும் இந்தகாலத்தில் CWU லேபர் உடைவுகள் பலவீனமான லேபர் கட்சியை தோற்றுவிக்கும். இந்த லேபர் கட்சியினால் தாழ்ந்து போயுள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டி எழுப்புமா? என்ற சந்தேகமும் வலுப்பெற்றுள்ளது.
முல்லைத் தீவு மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளில் சிவில் நிர்வாக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்குப் பாதுகாப்பு தரப்பினர் அனுமதி வழங்கியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரும், கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபருமான இமெல்டா சுகுமார் நேற்றுத் தெரிவித்தார். இப் பிரதேச செயலகப் பிரிவுகளிலும் அங்குள்ள திணைக்களங்களிலும் கடமை புரியும் 119 உத்தியோகத்தர்களும் அங்கு சென்று கடமையாற்றுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான், துணுக்காய் ஆகிய மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி முதல் மீண்டும் சிவில் நிர்வாக செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படு வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை கிளிநொச்சி மாவட்ட செய லகத்திலும், கரைச்சி பிரதேச செயலகப் பிரி விலும் இம் மாதம் 25 ஆம் திகதி முதல் சிவில் நிர்வாக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப் பதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மாந்தை கிழக்கு, ஒட்டி சுட்டான், துணுக்காய் ஆகிய மூன்று பிரதேச செயலகப் பிரிவு கட்டடங் களையும், பிரதேச செயலாளர்களதும், உத்தியோகத்தர்களதும் தங்குமிடக் கட்டிடங்க ளையும் புனரமைக்கவென பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு 21.8 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
இதேநேரம் கிளிநொச்சி மாவட்ட செயலகக் கட்டிடம், மாவட்ட செயலாளரின் தங்கும் விடுதிக் கட்டிடம், பூநகரி பிரதேச செயலாளர் தங்கும் விடுதி கட்டிடம், அரசாங்க அதிகாரிகள் தங்கும் விடுதி கட்டடம் ஆகியவற்றைப் புனரமைக்கவென பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு 42.8 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
இந் நிதியூடான வேலைத் திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இக் கட்டட வேலைகள் பூர்த்தியானதும் சிவில் நிர்வாகப் பணிகளை அங்கேயே மீண்டும் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம். தற்போது கண்டாவளை மற்றும் பூநகரி பிரதேச செயலாளர்கள் கிளிநொச்சியில் தங்கி இருந்தபடியே தங்களது பணிகளை மேற் கொள்ளுகின்றனர் என்றார்.
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்களின் சிறப்பு பிரதிநிதியாக இலங்கை சென்றுள்ள ஐ நாவின் அரசியல் விவகாரங்களுக்கான துணைத் தலைமைச் செயலர் லின் பாஸ்கோ நேற்று வடக்கேயுள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு விஜயம் செய்துள்ளார்.
அங்குள்ள முகாம்களின் நிலமைகளை அவர் நேரில் கண்டறிந்துள்ளார். நிலக் கண்ணி வெடிகளை அகற்றுவதிலும், பாடசாலைகள் மற்றும் பொருளாதார கட்டுமானங்களை மேம்படுத்துவதன் மூலம் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பிலும் சில முன்னேற்றங்கள் காணப்படுவதாக லின் பாஸ்கோ தெரிவித்துள்ளார். தான் சந்தித்த மக்கள் உடனடியாக தமது இருப்பிடங்களுக்கு செல்லவே விரும்புகிறார்கள் என்றும் ஆனால் அப்படி செல்ல முடியாத நிலை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மக்களிடையே தங்களது எதிர்காலம் குறித்த கவலை காணப்படுவதாகவும் அவர்கள் பொறுமையிழந்து வருகிறார்கள் என்றும் லின்பாஸ்கோ கருத்து வெளியிட்டுள்ளார் இலங்கையில் அரசியல் மற்றும் மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பான விடயங்களில் முன்னேற்றம் மிகவும் மந்தமான நிலையில் இருப்பதன் காரணமாக ஐ நா ஏமாற்றம் அடைந்திருப்பதாலேயே அவர் அங்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.
இலங் கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பட்றீஷியா பூட்டனிஸ் நேற்று வியாழக்கிழமை 17 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து தமது நியமனம் குறித்து உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவராக இவரை நியமித்துள்ளார். பட்றீஷியா பூட்டனிஸ் அமைச்சர்களுக்கான ஆலோசகர் நிலையில் உள்ள அமெரிக்க வெளிவிவகார சேவையின் மூத்த அதிகாரிகளில் ஒருவராவார். இலங்கை மற்றும் மாலை தீவுக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், பங்களாதேஷின் அமெரிக்கத் தூதுவராக இவர் பணியாற்றியுள்ளார். பாக்தாத், இஸ்லாமாபாத் ஆகிய இடங்களில் பிரதி அமெரிக்க தூதுவராகவும் இவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
மாகாண முதலமைச்சர்களின் மாநாடு இன்றும் (2009.09.18) மற்றும் நாளையும் (2009.09.19) ஹபரண ஜாயா விலேஜ் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது. மாகாண மட்டத்தில் நடைபெறும் 26 ஆவது முதலமைச்சர்களின் மாநாடு இதுவாகும்.
மாகாண சபை மட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகளைத் துரிதப்படுத்தல், மாகாண சபை செயற்பாடுகளில் ஏற்படும் சட்ட ரீதியான பிரச்சினைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றல் என்பன குறித்து இந்த மாநாட்டின் போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்ட்டி பிரேமலால் திசாநயக்க தெரிவித்தார்.
தற்போது கலைக்கப்பட்டுள்ள தென் மாகாண சபை தவிர்ந்த, ஏனைய மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர் என்றும் முதலமைச்சர் மேலும் கூறினார்.
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் அவுஸ்திரேலியா முதல் 5 போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய நிலையில் 6வது ஒருநாள் போட்டியிலும் அபார ஆட்டம் காரணமாக அவுஸ்திரேலியா எளிதாக வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலியா 7 போட்டி கொண்ட தொடரில் 6-0 என முன்னிலை பெற்றுள்ளது. டெஸ்ட் தொடரில் 1-2 என தோல்வி அடைந்த அவுஸ்திரேலியா அதற்கு பழி தீர்க்கும் வகையில் ஒருநாள் தொடரில் இங்கிலாந்தை மண்ணைக் கவ்வவைத்து வருகிறது.
NatWest Series [Australia in England] – 6th ODI
England v Australia
Australia won by 111 runs
ODI no. 2891 | 2009 season
Played at Trent Bridge, Nottingham
17 September 2009 – day/night (50-over match)
Australia innings (50 overs maximum)
SR Watson b Anderson 4
TD Paine† c †Prior b Mascarenhas 111
RT Ponting* c Sidebottom b Anderson 6
MEK Hussey c Denly b Swann 65
CJ Ferguson b Anderson 6
CL White c Denly b Anderson 35
JR Hopes c Strauss b Sidebottom 38
B Lee run out (Anderson) 0
NM Hauritz not out 1
PM Siddle not out 8
Extras (b 1, lb 7, w 14) 22
Total (8 wickets; 50 overs) 296 (5.92 runs per over)
Did not bat NW Bracken
Fall of wickets1-19 (Watson, 4.3 ov), 2-40 (Ponting, 8.6 ov), 3-203 (Hussey, 39.2 ov), 4-206 (Paine, 40.3 ov), 5-220 (Ferguson, 43.1 ov), 6-273 (White, 47.4 ov), 7-281 (Lee, 48.4 ov), 8-288 (Hopes, 49.3 ov)
Bowling
JM Anderson 10 0 55 4
AD Mascarenhas 10 0 49 1
TT Bresnan 9 0 60 0
RS Bopara 2 0 11 0
England innings (target: 297 runs from 50 overs)
AJ Strauss* c †Paine b Lee 0
JL Denly c Lee b Hopes 25
RS Bopara run out (Ponting) 24
MJ Prior† run out (Ponting) 6
OA Shah c Watson b Hopes 23
EJG Morgan c Hussey b Bracken 23
AD Mascarenhas b Hopes 11
TT Bresnan not out 31
GP Swann b Bracken 12
RJ Sidebottom b Siddle 15
JM Anderson b Lee 1
Extras (lb 3, w 8, nb 3) 14
Total (all out; 41 overs) 185 (4.51 runs per over) Fall of wickets1-0 (Strauss, 0.2 ov), 2-45 (Denly, 10.5 ov), 3-59 (Prior, 13.6 ov), 4-60 (Bopara, 14.5 ov), 5-100 (Morgan, 23.2 ov), 6-114 (Shah, 27.2 ov), 7-125 (Mascarenhas, 29.4 ov), 8-159 (Swann, 34.5 ov), 9-182 (Sidebottom, 39.2 ov), 10-185 (Anderson, 40.6 ov)
Bowling
B Lee 8 0 48 2
NW Bracken 10 0 42 2
PM Siddle 8 1 22 1
JR Hopes 9 0 32 3
NM Hauritz 6 0 38 0
Match details
Toss Australia, who chose to bat
Series Australia led the 7-match series 6-0
Umpires Asad Rauf (Pakistan) and NJ Llong
TV umpire RA Kettleborough
Match referee RS Mahanama (Sri Lanka)
Reserve umpire NL Bainton
வவுனியா நிவாரணக் கிராமங்களில் க. பொ. த. சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றும் 10,000 மாணவர்களையும் பதிவு செய்யும் நடவடிக்கைகள் நேற்று ஆரம்பமாகின. கொழும்பிலிருந்து கொண்டு செல்லப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் நேற்று முகாம்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
பழைய மற்றும் புதிய பாடத்திட்டத்திற்கமைய மேற்படி பரீட்சைக்குத் தோற்றும் நிவாரண கிராமத்திலுள்ள மாணவர்கள் விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்வதற்கு விபரங்களை வழங்குமாறு வலய கல்வி பணிப்பாளர் திருமதி ரஞ்சனி ஒஸ்வர்ல்ட் கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன் பரீட்சைக்குத் தோற்றும் முகாமிலுள்ள 6250 மாணவர்களுக்கும், 3750 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கும் பரீட்சை திணைக்களத்தினால் வழங்கப்படவுள்ள விசேட அடையாள அட்டைகளுக்கான புகைப்படம் எடுத்தல் மட்டும் விபரங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளையும் வலய கல்விப் பணிப்பாளர் அலுவலகம் ஆரம்பித்துள்ளது.
மேலும் இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள் வதற்காக தளபாட பற்றாக்குறை நிலவுவதால் கல்வி அமைச்சு மேலதிக தளபாடங்களை அனுப்பி வைக்கவுள்ளது.
வலய கல்விப் பணிப்பாளர் திருமதி ரஞ்ஜனி ஒஸ்வர்ல்ட் கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டாரவைச் சந்தித்து பேச்சு நடத்தியதன் பலனாகவே தளபாடங்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளன.
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள நிவாரணக் கிராமத்திலுள்ள 10,000 மாணவர்களினதும் பதிவுகள் முடிவடைந்தவுடன் எதிர்வரும் 28ஆம் திகதி பரீட்சை திணைக்களத்தில் கையளிக்கப்படும் அதன் பின்னரேயே பரீட்சை நிலையங்கள் அமைப்பது தொடர்பாக தீர்மானிக்கப்படும்.
சரணடைந்தவர்களுள் 160 பேர் உட்பட பாடசாலை மாணவர்கள் 6250 பேர் இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
கடந்த இர ண்டு அல்லது மூன்று வருடங்களாக பரீட்சைக்குத் தோற்ற முடியாமல்போன மாணவர்கள் உட்பட தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக சுமார் 3750 மாணவர்கள் உள்ளனர். இத்தொகை மேலும் அதிகரிக்கலாம் என்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் ரஞ்ஜனி ஒஸ்வர்ல்ட் தெரிவித்தார்.