Multiple Page/Post

ஐ.தே.க முஸ்லிம் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து காதர் இராஜினாமா

cadar.jpgஐ. தே. கவின் முஸ்லிம் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய கண்டி மாவட்ட எம்.பி. ஏ. ஆர். எம். அப்துல் காதர் முடிவு செய்துள்ளார். அடுத்தடுத்து கட்சியில் அவர் வகிக்கும் ஏனைய பதவிகளிலிருந்தும் இராஜினாமாச் செய்யவும் காதர் எம்.பி. தீர்மானித்துள்ளார்.

இராஜினாமாக் கடிதங்களை அடுத்துவரும் ஓரிரு தினங்களுக்குள் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக காதர் எம்.பி. தெரிவித்தார். இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அப்துல் காதர் எம்.பி. :- கண்டி மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் ஐ. தே. க. சார்பில் மூன்று முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்த வேண்டாமென்று கட்சித் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்தேன்.

தேர்தல்களில் மாவட்டம் தாவும் ஹக்கீமை கண்டியில் நிறுத்த வேண்டாம் என்றும் சுட்டிக்காட்டினேன். சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மை இதன்மூலம் தோற்றம் பெறும் என்ற உண்மையையும் விபரித்தேன். ஆனால், அவர் எனது கருத்தை ஏற்கவில்லை. மூன்று முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிபெற்றதன் மூலம் முஸ்லிம்கள் மீது நம்பிக்கையற்ற தன்மை இன்று சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

கட்சியின் முஸ்லிம் தேசிய அமைப்பாளர் என்ற வகையில் எனது கருத்தை கட்சித் தலைவர் ஏற்கவில்லை. அதனால் பொம்மையாக அப்பதவியில் இருக்க நான் தயாரில்லை. 21 வருடமாக ஐ. தே. க. எம்.பியாக இருந்த எனக்கு இப்போது கட்சியின் மீது நம்பிக்கையின்மை ஏற்பட்டுவிட்டது. தலைமை எதேச்சதிகாரமாக செயற்படுகிறது. கடந்த காலங்களில் சிங்கள மக்களின் வாக்குகள் சுமார் 40000 வரை எனக்கு கிடைத்து வந்துள்ளது. இந்த முறை 10,000 வாக்குகளே எனக்கு கிடைத்தன. சிங்கள மக்கள் முஸ்லிம்கள் மிது நம்பிக்கையற்றுப் போனமையே இதற்குக் காரணம்.

அதுமட்டுமன்றி முஸ்லிம்களும், மூன்று முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் வாக்களிக்கவில்லை. முஸ்லிம் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு வித்தியாசம் இதற்குச் சான்று. முஸ்லிம் – சிங்கள மக்கள் மத்தியிலான இந்த மனப்போக்குக்குக் காரணம் ஹக்கீம் கண்டியில் போட்டியிட்டதே. மட்டுமன்றி ஹக்கீம் போட்டியிடாவிட்டிருந்தால் ஐ. தே. க. 5 ஆசனங்களைப் பெற்றிருக்கும். கட்சிக்கு ஆசனம் குறைந்ததற்கும் ஹக்கீமே காரணம்.

ஐ. தே. க தனக்குக் கிடைத்த தேசியப் பட்டியலையும் பொருத்தமாக செய்யவில்லை. கட்சித் தலைமை எதேச்சதிகாரமாக செயற்பட்டுவிட்டது.

கொழும்பு முஸ்லிம்களுக்காக முன்னாள் எம்.பி. மஹ்ரூபை தேசியப் பட்டியல் மூலம் நியமித்திருக்க வேண்டும். கட்சிக்காக நிறைய அர்ப்பணிப்புக்களைச் செய்தவர் அவர். மு. காவுக்கு இரண்டு பேரை வழங்கியதை கண்டிக்கின்றேன். இதில் ஒன்றை மஹ்ரூபுக்கு வழங்கியிருக்க முடியும் என்றார்.

60 வருட காலத்திற்குப் பின்னர் பாராளுமன்றத்தில் புதிய அணுகுமுறை – இரா.சம்பந்தன்

Sambanthan_R_TNAஅறுபது வருட காலத்திற்குப் பின்னர் இலங்கைப் பாராளுமன்றத்தில் புதியதொரு நிலைமை தோன்றியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தப் பாராளுமன்றமாவது நியாயமானதும் நீதியானதுமான தீர்வைக் காணுமெனத் தாம் நம்புவதாகவும் சம்பந்தன் குறிப்பிட்டார். ஏழாவது பாராளுமன்றத்திற்கான முதலாவது அமர்வு நேற்று ஆரம்பமான போது புதிய சபாநாயகராக சமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து கட்சித் தலைவர்கள் புதிய சபாநாயகரைப் பாராட்டி உரை யாற்றினார்கள். இதன்போது சம்பந்தனும் உரையாற்றினார்.

சம்பந்தனின் உரை நேற்று முற்றிலும் வித்தியாசமான ஓர் அணுகுமுறையை வெளிப்படுத்தியது. விபரம் வருமாறு :-

‘சபாநாயகர் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டமைக்கு எனது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். சென்ற பாராளுமன்றம் முதன் முறையாகக் கூடியபோது சபாநாயகர் தெரிவு எவ்வாறு இடம்பெற்றது என்பது என் ஞாபகத்திற்கு வருகிறது. ஆளுந் தரப்புக்கும் எதிர்த் தரப்புக்கும் இடையில் போட்டி ஏற்பட்டதால் முழு நாளும் வாக்கெடுப்பு நடந்தது.

இறுதியில் ஒரு வாக்கில் சபாநாயகர் தெரிவானார். நாம் 22 வாக்குகளைப் பெற்றுக் கொடுத்தோம். இம்முறை நீங்கள் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்Zர்கள். இது இந்தச் சபை உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. நான் உங்கள் தெரிவை வரவேற்கிறேன். உங்களின் செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவைப் பெற்றுத் தருவதாக உறுதியளிக்கிறேன்.

30 வருடகால யுத்தம் முடிவடைந்த நிலையில், சபை கூடுவதாகப் பிரதமர் உரையாற்றும் போது கூறினார். அது பொருத்தமான கருத்து. யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது உண்மை. நாட்டு மக்கள் யுத்தத்தை விரும்பவில்லை. மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டார்கள். யுத்தம் முடிவுக்கு வந்ததை நாம் வரவேற்கின்றோம்.

அதே சமயம், நாட்டில் சமாதானம், நீதி, நேர்மை ஏற்பட்டுவிட்டதாக நாம் கருத முடியாது, ஏற்க முடியாது. நீதி, நியாயம் மக்களுக்குக் கிடைக்க இந்தப் பாராளுமன்றம் பணியாற்ற வேண்டும். இதற்கு முன் இருந்த பாராளுமன்றங்கள் அந்த நிலையில் இருக்கவில்லை. கடந்த 60 வருட காலமாக நியாயமான, நீதியான தீர்வைக்காண்பதற்கு முடியவில்லை. புதிய பாராளுமன்றம் அதனை நிறைவேற்றும் என நம்புகிறேன். அரசியல் சாசனத்தையும் நிலையியற் கட்டளைகளையும் பாதுகாப்பது மாத்திரமன்றி மரபுகளும் உள்ளன.

பாராளுமன்றத்தின் கெளரவம் முழுமையாக உங்களில் (சபாநாயகரில்) தங்கியிருக்கிறது. உங்களின் கெளரவம் பாராளுமன்ற கெளரவத்தில் தங்கியிருக்கிறது. இதனைப் பிரிக்க முடியாது’ என்றும் சம்பந்தன் மேலும் குறிப்பிட்டார்.

பிரதி சபாநாயகர் பிரியங்கர; குழு. பிரதி தலைவர் சந்திரகுமார்

paa.jpgஏழாவது பாராளு மன்றத்தின் பிரதி சபா நாயகராக பிரியங்கர ஜயரட்ன ஏகமனதாகத் தேர்ந்தெடுக்க ப்பட்டார். அதேநேரம் குழுக்களில் பிரதித் தலைவராக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் முருகேசு ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சபை நடவடிக்கைகள் புதிய சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று (22) ஆரம்பமானபோது காலை 9.50 மணியளவில் பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது.

சபாநாயகரின் அறிவிப்பை யடுத்து முன்னாள் பிரதமர் ரத்னசிரி விக்கிரமநாயக்க, பிரதி சபாநாயகர் பதவிக்கு முன்னாள் பிரதி சபாநாய கராகவிருந்த பிரியங்கர ஜயரட்னவின் பெயரை முன்மொழிந்தார். அவரது பெயரை ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஜோன் அமரதுங்க வழிமொழிந்தார்.

வேறு பெயர்கள் முன்மொழியப்படாததால் பிரதி சபாநாயகரும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து குழுக்களின் பிரதித் தலைவரைத் தெரிவு செய்யுமாறு சபாநாயகர் கேட்டுக்கொண்டதும் சபை முதல்வர் நிமல் சிறிபால டி சில்வா, யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் முருகேசின் பெயரை முன்மொழிந்தார். அவரது பெயரை ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழிமொழிந்தார். குழுக்களின் பிரதித் தலைவரும் ஏகமனதாகத் தெரிவானார்.

பொதுவாக ஏழாவது பாராளுமன்றத்தின் ஆரம்பம் பாராளுமன்ற வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாகவே அமைந்திருந்தது. ஆளுந்தரப்பும் எதிர்த்தரப்பும் இணக்கப்பாட்டுடன் நாட்டு நிர்வாகத்தை ஆரம்பித்தமை விசேட அம்சமாக இருந்தது.

புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

parliament.jpgஇலங் கையின் ஏழாவது பாராளுமன்றத்திற்கான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கிறது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் நடைபெறும் உத்தியோகபூர்வ நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.

இந்த நிகழ்வில் பிரதமர், சபாநாயகர், கட்சித் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், இராஜதந்திரிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இன்று நடைபெறவுள்ள இப் பதவிப் பிரமாண வைபவம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. புதியவர்களுக்கும், இளையவர்களுக்கும் முன்னுரிமையளிக்கப்படுவதோடு 40 பேரைக் கொண்டதாக இந்த அமைச்சரவை அமையவுள்ளது. கடந்த அமைச்சரவைகளில் அமைச்சர்களாகத் திகழ்ந்த சிரேஷ்ட அமைச்சர்கள் பலருடன் புதிய முகங்கள் பலவும் இம்முறை அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்கின்றனர்.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இம்முறை அமைச்சர் தெரிவு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அமைச்சரவை 40 பேரைக் கொண்டதாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து ஒரு அமைச்சருக்குப் பல அமைச்சுப் பொறுப்புக்கள் ஒப்ப டைக்கப்படுகின்றன.

புதிய சபாநாயகராக சாமல் ராஜபக்ஷ தெரிவு

chamal_rajapakse.jpgஇலங் கையின் 7ஆவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக சாமல் ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரது தெரிவினை பிரதமர் தி.மு. ஜயரட்ன முன்மொழிந்தார். எதிர்க்கட்சியின் உப தலைவர் கருஜயசூரிய வழிமொழிந்தார். அதேவேளை, பிரதி சபாநாயகராக பிரியங்கர ஜயரட்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் சரத் பொன்சேகா

sarath_.jpgஏழாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை ஆரம்பமானது. ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியும், ஏழாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளவருமான ஜெனரல் சரத் பொன்சேகா இக்கூட்டத் தொடரில் கலந்து கொண்டுள்ளதாக ஜனநாயக தேசிய முன்னணி வட்டாரங்கள் தெரிவித்தன. 

சனத் ஜயசூரிய தொடர்ந்தும் தேசிய போட்டிகளில் விளையாடுவார்

sanath-jayasuriya.jpgஇலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூரிய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற அமைச்சுப் பொறுப்பு ஏற்க உள்ளதாகத் தெரிய வருகிறது.

40 வயதுடைய ஜயசூரிய தற்போது ஐ. பி. எல். போட்டிகளில் மும்பை அணி சார்பில் விளையாடி வருகின்றார். நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 74,352 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இலங்கையின் வரலாற்றில் மூன்றாவது விளையாட்டு வீரர் ஒருவர் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் உலகக் கிண்ண வீரர் அர்ஜுன ரணதுங்க, ஹசான் திலகரட்ன ஆகியோர் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இதேவேளை முன்பு ஆளுங்கட்சி சார்பில் செயற்பட்ட அர்ஜுன ரணதுங்க தற்போது ஜனநாயகத் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுகின்றார்.

பாராளுமன்றத்திற்கு தெரிவாகிய போதிலும் தொடர்ந்தும் தனது இடத்திற்காக தேசிய போட்டிகளில் தனது பங்களிப்பைத் தொடர்ந்து மேற்கொள்ளுவார் எனவும் ஏ. எப். பி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மாகாணசபையின் ஆளுநராக முன்னாள் சபாநாயகர் தெரிவு

former-speaker.jpgஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியலில் இடம் பெற்றிருந்த முன்னாள் சபாநாயகர் லொக்குபண்டார சப்ரகமுவ மாகாணசபையின் ஆளுநராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

புதன் கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைப்பெற்ற ஊடவியலாளர் மாநாட்டின் போதே முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சப்ரகமுவ மாகாண ஆளுணராகப் பதவிப்பிரமானம் செய்து கொண்டுள்ளார்.

ஹரி போட்டர் புகழ் ராவ்லிங் அரசியல் களத்தில்! ஆளும் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம்

harry_potter.jpgஹரி போட்டர் புத்தகம் எழுதிய பிரபல பெண் எழுத்தாளர் ஜே.கே.ராவ்லிங், பிரிட்டன் அரசியல் களத்தில் குதித்துள்ளார். அடுத்த மாதம் நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக ஆளும் கட்சிக்கு ஆதரவாக அவர் பிரசாரம் செய்து வருகிறார். பிரிட்டனின் பிரபல பெண் எழுத்தாளர் ஜே.கே.ராவ்லிங்  உலகம் முழுவதும் உள்ள சிறுவர்களின் மனம் கவர்ந்தஇ ‘ஹரி போட்டர்’ புத்தகங்களை எழுதியதால் பிரபலமானார்.

ஹாரி போட்டர் புத்தகம் எழுதியதன் மூலம் கிடைத்த வருவாயால் பிரிட்டனின் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் ராவ்லிங்கும் இடம் பெற்றுள்ளார்.

ஜே.கே.ராவ்லிங்கிற்கு தற்போது அரசியல் ஆசை வந்துள்ளது. வரும் மே 6ம் தேதி நடக்கவுள்ள பிரிட்டன் தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சிக்கு ஆதரவாக அவர் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் கூறப்பட்டுள்ள விஷயங்களை மேடைகள் தோறும் கடுமையாக விமர்சித்து வருகிறார். 

கொடுத்த வாக்குறுதியை ரணில் மீறிவிட்டார்- ரணில் மனோ உறவு முறிந்தது

ranil-mano.bmpஇலங்கையின் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் அமைந்துள்ள கூட்டணியிலிருந்து விலகுவதாக மனோ கணேசனின் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. மனோ கணேசனுக்கு ஐக்கிய தேசிய முன்னணி வாக்களித்தபடி தேசியப் பட்டியலில் நியமனம் வழங்கப்படாததை எதிர்த்தே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மனோ கணேசனுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையிலான ஒன்பது வருடகால உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியினர் தம்முடன் எழுத்துபூர்வகச் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி நடந்து கொள்ளவில்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன்  தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சிக்குளேயே இருக்கும் சில பேரினவாத நபர்களாலேயே தமது கட்சிக்கு தேசியப் பட்டியலில் இடம் கிடைக்காமல் போனது என்றும் பிரபா கணேசன் கருத்து வெளியிடுகிறார்.

நாடாளுமன்றத் தேர்தலின் போது தமது கட்சிக்கு கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் ஒரு இடத்தை விட்டுக் கொடுப்பதற்கு ஈடாக தேசியப் பட்டியலில் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு ஒரு இடம் வழங்கப்படும் என்று ரணில் விக்ரமசிங்க உறுதியளித்ததாகவும் மனோ கணேசன் கூறுகிறார்.

இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உப தலைவர் வேலணை வேணியன் விடுத்துள்ள அறிக்கையில் :- கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக எமது தலைவரும் நாங்களும் நேற்றுவரை ஐ. தே. கட்சியின் தலைவரை நம்பியிருந்தோம். எமது தலைவருக்கு ஐ. தே. கட்சி மனிதாபிமான அடிப்படையில் தேசியப் பட்டியலில் ஒரு கூட்டுக் கட்சியின் தலைவர் என்ற வகையில் பாராளுமன்றத்தில் ஓர் இடம் கொடுத்திருக்க வேண்டும்.

இன்று அக்கட்சி தமிழ் மக்களின் காலையே வாரி விட்டது போலவே கருதுகிறோம். இன்று முதல் ஐ. தே. கட்சிக்கும் எமக்கும் இடையே இருந்த கூட்டணி முறிவடைந்துவிட்டது. ஐக்கிய தேசியக் கட்சி ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரை மட்டுமல்ல எமது கட்சி சார்ந்த பல இலட்சக் கணக்கான வாக்காளர்களான தமிழ் மக்களுக்கே துரோகம் செய்து விட்டதாகவே கருதுகிறோம்.