ஏழாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை ஆரம்பமானது. ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியும், ஏழாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளவருமான ஜெனரல் சரத் பொன்சேகா இக்கூட்டத் தொடரில் கலந்து கொண்டுள்ளதாக ஜனநாயக தேசிய முன்னணி வட்டாரங்கள் தெரிவித்தன.