Multiple Page/Post

கண்டி யாழ்ப்பாணம் ஏ9 வீதியை புனரமைக்க சீனா 350 கோடி டொலர்

a9.jpgகண்டி யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் 32 கிலோமீற்றர் நீளப் பாதையை அபிவிருத்தி செய்வதற்கு 350 கோடி டொலர்களை (3.5 பில்லியன்) சீனா வழங்கவுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் யோசனைக்கிணங்க வட மாகாணத்தில் சீன நிதியுதவியுடனான பாரிய வீதிப் புனரமைப்பு திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தின் அநேகமான பகுதிகளை உள்ளடக்கியதாக இத்திட்டம் அமைவதுடன், நீண்ட காலமாக பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட மக்கள் தமது பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தவும் இத்திட்டம் உதவியாக அமையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்கமுவவிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான வீதியானது நவீனமயப்படுத்தப்படும். அத்துடன் இத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம்பருத்தித்துறை வீதி,புத்தூர்மீசாலை வீதி, யாழ்ப்பாணம்பளை வீதி என்பனவும் புனரமைக்கப்படவுள்ளது.

மேலும் முல்லைத்தீவு கொக்கிளாய்புல்மோட்டை வீதி, ஒட்டுசுட்டான்நெடுங்கேணி வீதி, முல்லைத்தீவுபுளியங்குளம் வீதிகளும் வெவ்வேறான திட்டங்களின் கீழ் புனரமைக்கப்படவுள்ளன. இதற்கான மொத்த செலவினத்தில் 85% சீன அரசு வழங்கவுள்ளது. மீதி 15% செலவினத்தை இலங்கை அரசு செலவிடும்.

அரசியலமைப்புத் திருத்த நகல்வரைபை பரிசீலனைக்கு ஏற்றது உயர்நீதிமன்றம்

அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட உத்தேச அரசியலமைப்புத் திருத்த யோசனைகளடங்கிய ஆவணத்தை உயர்நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்டது. இந்தச் சட்டமூலத்தை ஏற்றுக்கொண்ட 5 நீதியரசர்கள் குழாமின் தலைவரான நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க நீதிமன்றத்தின் இறுதித் தீர்மானம் சபாநாயகருக்கு அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை, ஜனாதிபதியின் பதவிக்காலத்தை இரு தடவைகளுக்கு மட்டுப்படுத்தும் ஏற்பாடுகள் நீக்கப்படுவதையும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் பிரசன்னமாகி இருக்கவேண்டும் என்ற ஏற்பாடுகளையும் உள்ளடக்கியதாக நகல்வரைபு இருப்பதாக சட்டமா அதிபர் மொகான் பீரிஸ் தெரிவித்திருக்கிறார்.

நீதியரசர்கள் ஷிரானி பண்டாரநாயக்கா, கே.ஸ்ரீபவன், பி.ஏ.இரட்நாயக்கா, எஸ்.ஐ. இமாம், ஆர்.கே.சுரேஷ் சந்திர ஆகிய நீதியரசர்கள் குழாமே உத்தேச திருத்தங்கள் அரசியலமைப்புக்கு இசைவானதாக உள்ளதா என்பதை பரிசீலிக்கவுள்ளது.

சு.க.வின் 59 வது மாநாடு நாளை அலரிமாளிகையில்

mini.jpgஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 59 ஆவது மாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நாளை (2 ஆம் திகதி) அலரி மாளிகையில் நடைபெறவுள்ளதாக சுதந்திரக் கட்சி செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன கூறினார்.

மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநா ட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 1951 செப்டம்பர் 2 ஆம் திகதி உருவாக்கப்பட்டது. கடந்த 59 வருடங்களில் 4 பேர் கட்சிக்கு சிறந்த தலைமைத்துவம் அளித்தனர். கட்சியின் 59 வருட வரலாற்றில் அதிகூடுதலாக இம்முறை 118 சு.க. உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர் என்றார்.

மூன்று லட்சம் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளன

l-m.jpgவடக்கு கிழக்கில் புதைக்கப்பட்ட மூன்று லட்சம் கண்ணி வெடிகள் இதுவரை அகற்றப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்

அரசியலமைப்பு சபைக்கு பதிலாக பாராளுமன்ற சபை – அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தில் மாற்றம்

அரசியலமைப்பு சபைக்குப் பதிலாக பாராளுமன்ற சபையொன்றை அமைக்க உத்தேச அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ள்ளது. இதற்கு பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறினார்.

சகல இனங்களும் பிரதிநிதித்துவ மாகும் வகையில் அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். அரசியலமைப்பு சபைக்கு நியமிக்கும் உறுப்பினர்களை நீக்கும் வகையிலும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கும் காலத்திலும் பாராளுமன்ற சபை இயங்கும் வகையிலும் திருத்தங்கள் செய்யப்படவுள்ளன எனவும் அமைச்சர் கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அவர், பிரதமரதும், எதிர்க்கட்சி தலைவரினதும் பிரதிநிதிகளாக எம்.பி. க்கள் இருவர் நியமிக்கப்படுவர்.

இதற்குத் தகுதியானவர்களின் பெயர்களை கட்சித் தலைவர்களால் சிபார்சு செய்ய முடியும். தற்போதைய அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர் ஒருவரை நியமித்தால் அவரை நீக்குவதற்கு தற்பொழுதுள்ள யாப்பின் படி முடியாது. ஆனால் பாராளுமன்ற சட்டத்தின் மூலமே ஜனாதிபதியின் அதிகாரத்தைப் பயன்படுத்தியோ உறுப்பினரை நீக்கும் வகையிலும் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. முன்மொழியப்படும் உறுப்பினர்களின் விபரங்கள் ஒருவாரத்தினுள் ஜனாதிபதிக்கு அனுப்பப்படவேண்டும். இன்றேல் தேவையானவரை ஜனாதிபதியே நியமிப்பார்.

அரசியலமைப்பு சபைக்குப் பதிலாக பாராளுமன்ற சபையொன்றை அமைக்கும் வகையில் அரசியலமைப்பில் 41 (அ) என புதிதாக ஒரு ஷரத்து சேர்க்கப்பட வுள்ளது. உத்தேச அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதன் வழிகாட்டல்களின் படி சட்டபூர்வமாக யாப்பு திருத்தங்கள் முன்னெடுக்கப்படும். மூன்று பிரதான அம்சங்களே உத்தேச யாப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட் டுள்ளன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான 31 (2) சரத்து நீக்கப்பட் டுள்ளது.  இதனூடாக ஒருவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் ஜனாதிபதித் தேர்தலில்

தெரண தில்கா சமன்மளிக்கு அச்சுறுத்தல்

samanmaliranjan.gif360 என்ற தெரண தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் தில்கா சமன்மளிக்கு இரத்தினபுர மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

500 விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர்!

வவனியா தடுப்பு முகாமில் புனர்வாழ்வளிக்கப்பட்ட 500 முன்னாள் விடுதலைப் புலிகள் எதிர்வரும் 4ம் திகதி சனிக்கிழமை விடுவிக்கப்படவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது சிறைச்சாலை மறுசிரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டியூ.குணசேகர, பிரதி அமைச்சர் விஜிதமுனி தலைமையில் வவனியா பம்பைமடு புனர்வாழ்வ நிலையத்தில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளதாக புனர்வாழ்வ ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

வவனியா பம்பைமடு புனர்வாழ்வு முகாமில் பயிற்சிகளை நிறைவு செய்த 500பேர் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைப்பக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் போது பயிற்சிகளைப் பெற்றுக்கொண்ட 180 பேருக்கு சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன. பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ள 500 முன்னாள் போராளிகளில் 17  தாய்மார், இவ்வருடம் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள், சிறுவர்கள், உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் உள்ளடங்குகின்றனர் என பிரிகேடியர் சுதந்த ரணதுங்கா தெரிவித்துள்ளார்.

Related News:

புலிகள் அமைப்பில் இணைக்கப்பட்டிருந்த 200 சிறுவர்கள் விடுதலை!

 முன்னாள் போராளிகள் உட்பட 495 பேர் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு

துப்பாக்கியில் இருந்து இசையை நோக்கி! – முன்னாள் குழந்தைப் போராளிகள் : ரி கொன்ஸ்ரன்ரைன்

சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 738 தமிழ் கைதிகள் இந்தவாரம் விடுதலை

கிளிநொச்சியில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் கிடைப்பதில் தாமதம்!

Dry_Rationகிளி நொச்சியில் மீள்குடியமாத்தப்பட்ட மக்களுக்கு நிவாரண உணவப் பொருட்கள் வழங்குவதில் தாமதங்கள் எற்படுவதாக மீள்குடிடியற்றப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டு வருகின்றனர். அவர்கள் படையினராலும் கிராம அலுவலர்களாலும் பதிவுகளுக்குட்படுத்துப்பட்டு குடும்ப அட்டை. நிவாரண உணவுப் பங்கிட்டு அட்டை என்பனவும் உடனடியாக வழங்கப்படுகின்றன.

ஆனால், பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களில் அவர்களுக்கான உலருணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் தாமதங்கள் எற்படுத்தப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக கடந்த 4ம் திகதி பதிவுகளுக்கு உட்படுத்தப்பட்டு மீள்குடியேற்றப்பட்ட மக்கள் பலருக்கு இன்னமும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படவில்லை என சம்பந்தப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை, கிளிநொச்சி அறிவியல் நகரில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு கடந்த ஒரு மாதங்களுக் மேலாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீள் குடியேற்றப்படும் மக்கள் எவ்விதத் தொழில் வாய்ப்புக்களுமற்ற நிலையில் நிவாரண உணவுப்பொருட்களை மட்டுமே நம்பி வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி நகரில் வியாபார நிலையங்கள் அதிகரித்து வருகின்ற போதும் அவற்றில் எதிர்பார்த்த வியாபாரம் இல்லை.

Murukandi_Kovilகிளிநொச்சி நகரில் பலதரப்பட்ட வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்ற போதும் எதிர்பார்த்த அளவிற்கு வியபாரம் நடைபெறவில்லை என வியாபாரிகள்  தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி நகரில் ஏற்கனவே வியாபாரம் செய்த வர்த்தகர்கள் மட்டுமல்லாது தென்னிலங்கையிலுள்ள புதிய வர்த்தகர்களும் வந்து வியாபார நிலையங்களை ஆரம்பித்துள்ளனர். கொழும்பிலுள்ள பெரிய வியாபார நிறுவனங்களும் அவற்றின் கிளைகளை கிளிநொச்சியில் ஆரம்பித்துள்ளன.

Murukandi_Kovil மக்கள் கட்டம் கட்டமா மீள் குடியமர்த்தப்பட்டு வருகின்ற போதும், அவர்களின் வீடுகள் அழிவடைந்த நிலையில் கூடாரங்கள் அமைத்தே வசித்து வருகின்றனர். அவர்கள் தங்கள் வீடுகளை அமைத்து இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பும் போதே அவர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்யக் கூடியதாக இருக்கும். எனவே, அதுவரை வியாபார நிலையங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பூனகரி மீனவர்களுக்கு உதவி வழங்க ‘வேள்ட் விசன்’ நிறுவனம் முன்வந்துள்ளது.

World_Vision_SLகிளிநொச்சி மாவட்டத்தில் பூனகரி பிரதேசச் செயலர் பிரிவிலுள்ள பள்ளிக்குடா பிரதேசத்தில் உள்ள இரண்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு கண்ணாடி இழைப் படகுகளும், அவற்றிற்குரிய இயந்திரங்களும் ‘வேள்ட் விசன்’ நிறுவனத்தால் வழங்கப்படவுள்ளன.

வளர்மதி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்திற்கு இரண்டு படகுகளும், பள்ளிக்குடா கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்திற்கு நான்கு படகுகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான பயனாளிகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.