கண்டி யாழ்ப்பாணம் ஏ9 வீதியை புனரமைக்க சீனா 350 கோடி டொலர்

a9.jpgகண்டி யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் 32 கிலோமீற்றர் நீளப் பாதையை அபிவிருத்தி செய்வதற்கு 350 கோடி டொலர்களை (3.5 பில்லியன்) சீனா வழங்கவுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் யோசனைக்கிணங்க வட மாகாணத்தில் சீன நிதியுதவியுடனான பாரிய வீதிப் புனரமைப்பு திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தின் அநேகமான பகுதிகளை உள்ளடக்கியதாக இத்திட்டம் அமைவதுடன், நீண்ட காலமாக பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட மக்கள் தமது பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தவும் இத்திட்டம் உதவியாக அமையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்கமுவவிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான வீதியானது நவீனமயப்படுத்தப்படும். அத்துடன் இத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம்பருத்தித்துறை வீதி,புத்தூர்மீசாலை வீதி, யாழ்ப்பாணம்பளை வீதி என்பனவும் புனரமைக்கப்படவுள்ளது.

மேலும் முல்லைத்தீவு கொக்கிளாய்புல்மோட்டை வீதி, ஒட்டுசுட்டான்நெடுங்கேணி வீதி, முல்லைத்தீவுபுளியங்குளம் வீதிகளும் வெவ்வேறான திட்டங்களின் கீழ் புனரமைக்கப்படவுள்ளன. இதற்கான மொத்த செலவினத்தில் 85% சீன அரசு வழங்கவுள்ளது. மீதி 15% செலவினத்தை இலங்கை அரசு செலவிடும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *