அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட உத்தேச அரசியலமைப்புத் திருத்த யோசனைகளடங்கிய ஆவணத்தை உயர்நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்டது. இந்தச் சட்டமூலத்தை ஏற்றுக்கொண்ட 5 நீதியரசர்கள் குழாமின் தலைவரான நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க நீதிமன்றத்தின் இறுதித் தீர்மானம் சபாநாயகருக்கு அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
இதேவேளை, ஜனாதிபதியின் பதவிக்காலத்தை இரு தடவைகளுக்கு மட்டுப்படுத்தும் ஏற்பாடுகள் நீக்கப்படுவதையும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் பிரசன்னமாகி இருக்கவேண்டும் என்ற ஏற்பாடுகளையும் உள்ளடக்கியதாக நகல்வரைபு இருப்பதாக சட்டமா அதிபர் மொகான் பீரிஸ் தெரிவித்திருக்கிறார்.
நீதியரசர்கள் ஷிரானி பண்டாரநாயக்கா, கே.ஸ்ரீபவன், பி.ஏ.இரட்நாயக்கா, எஸ்.ஐ. இமாம், ஆர்.கே.சுரேஷ் சந்திர ஆகிய நீதியரசர்கள் குழாமே உத்தேச திருத்தங்கள் அரசியலமைப்புக்கு இசைவானதாக உள்ளதா என்பதை பரிசீலிக்கவுள்ளது.