Multiple Page/Post

சீனாவில் 100கோடியை தாண்டிய செலுத்தப்பட்ட டோஸ்களின் எண்ணிக்கை – உலகளவில் செலுத்தப்பட்ட அளவுகளில் மூன்றில் ஒரு பங்காம் !

சீனாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இன்று செலுத்தப்பட்ட டோஸ்களின் எண்ணிக்கை 100 கோடி என்ற சாதனையை கடந்துள்ளது. இத்தகவலை சீனாவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது,  உலகளவில் செலுத்தப்பட்ட அளவுகளில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, உலக அளவில் 250 கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தடுப்பூசி நிலவரத்தை இன்று வெளியிட்டுள்ளது.
சீனாவின் மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது சீனாவில் தாமதமாகவே கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. கொரோனா வைரசுக்கு எதிரான ஒரு வெற்றிகரமான போராட்டத்திற்குப் பிறகு, தடுப்பூசி திட்டம் தொடங்கியது.
வெளிப்படைத்தன்மை இல்லாதது மற்றும் முந்தைய தடுப்பூசி முறைகேடுகளால் தடுப்பூசி போடுவதில் மக்களிடையே தயக்கம் ஏற்பட்டது. பின்னர் கடந்த ஒரு மாத காலமாக தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்திருக்கிறது.
இந்த மாத இறுதிக்குள் நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையான 140 கோடியில், 40 சதவீத மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடவேண்டும் என்ற இலக்குடன் அதிகாரிகள் செயலாற்றி வருவதாகவும் அறியமுடிகின்றது.

அமைச்சர்கள் செய்தால் தவறு இல்லை – சாதாரண மக்கள் செய்தால் தவறு – இடத்துக்கொரு சட்டம் – நபருக்கொரு தண்டனை என பயணிக்கும் ஆசியாவின் ஆச்சரியம் !

சட்டதிட்டங்கள் அனைவருக்கும் பொதுவானது . நகர்ப்புறங்களில் வாழ்பவனுக்கு ஒரு சட்டம் – கிராமங்களில் வாழபவனுக்கு ஒரு சட்டம் – படித்தவனுக்கு ஒரு சட்டம் – பாமரனுக்கு ஒரு சட்டம் – பணக்காரனுக்கு ஒரு சட்டம் என்றெல்லாம் இயற்ற முடியாது. சட்டம் அது ஒன்று தான். யார் செய்தாலும் அதற்கான தண்டனை ஒன்று தான். ஆனால் நேற்றைய தினம் சமூக வளைத்தளங்களில் வெளியாகியிருந்த படங்கள் பார்ப்போரை கோவப்படச்செய்வதாகவே அமைந்திருந்தது.
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் போக்குவரத்து தடைகளை மீறியவர்களிற்கு இராணுவத்தினர் வழங்கிய தண்டனை தனி மனிதர்களுடைய சுயமரியாதையை சிதைப்பதாகவே அமைந்தருந்தது. ஜனநாயக நாடு எனக்கூறிக்கொண்டு தனிமனித சுயமரியாதையை உள்ளிருந்து சிதைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
May be an image of motorcycle, street, road and tree
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதிகளில் பயணத்தடையினை மீறி செயற்பட்டோர் நேற்று காலை இராணுவத்தினரால் தண்டிக்கப்பட்டனர். அவர்கள் என்ன தேவைக்காக வெளியே வந்தார்கள் என்பது அடுத்த கட்டம். ஏதோ பாடசாலைச்சிறுவர்களுக்கு ஆசிரியர்கள் முழந்தாழிட்டு தண்டனை வழங்குவது போல வழங்கியிருக்கிறார்கள் இராணுவத்தினர். பாடசாலை மாணவர்களுக்கு கூட அப்படியான தண்டணை வழங்கப்படக்கூடாது என வலியுறுத்தி வருகின்றோம்.
தவறு செய்கின்ற எல்லோராரையும் உங்களால் இப்படி தண்டிக்க முடியுமாயின் வரவேற்கத்தக்கது. ஆனால் அப்படியில்லையே. உயர் இடங்கள் என்றாலோ – எதிர்கக்கூடிய மக்கள் கூட்டம் எனறாலோ ஒதுங்கி விடுகின்றீர்கள். சாதாரண மக்கள் என்றால் எகிறி பாய்கின்றீர்கள். அண்மையில் தென்னிலங்கையில் தடுப்பூசி வழங்கிக்கொண்டிருக்கும் போது அனைத்துமக்களும் வரிசையில் நின்று தடுப்பூசி பெற்றுக்கொண்டிருந்த போது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மனைவி முண்டியடித்துக்கொண்டு தடுப்பூசியை பெற்றுக்கொண்டார். இதே சட்டம் அங்கு தூங்கிக்கொண்டு தான் இருந்தது.
முகக்கவசம் அணியாத சாதாரண மக்களை பொது இடங்களில் வைத்து அவர்களினுடைய சுயமரியாதையை கவனத்தில் எடுக்காது ஏதோ தெருநாய்களை பிடிப்பது போல அள்ளிக்கொண்டு சென்றது இந்த நாட்டு காவல்துறையும் – பொலிஸாரும் தான். ஆனால் அமைச்சர் சரத்வீரசேகர முகக்கவசம் அணியாது ஒரு பொது நிகழ்வில் பங்கு பற்றிய போது அவருக்கு இதே இராணுவம் தலைகுனிந்து வணக்கம் சொன்னது. அவரை இப்படி அமர வைத்திருக்கலாமே..? முடியாது. அங்கு எல்லாம் சட்டம் பாயாது.
இவ்வளவு ஏன் கொரோனா தீவிரமாக பரவிக்கொண்டிருந்த போது தம்மிக பண்டார என்பவர் கேகாலையில் கொரோனாவுக்கான பாணி மருந்து விற்ற போது சமூக இடைவெளியின்றி ஆயிரக்கணக்கில் சிங்கள மக்கள் குவிந்தனர். முக்கியமாக சுகாதார அமைச்சர் கூட அங்கு சென்று குறித்த பாணியை வாங்கி அருந்தி சிறுபிள்ளைத்தனமாக செயற்பட்டார்.  அங்கு யாரையும் கைது செய்யவுமில்லை. கட்டுப்படுத்தவுமில்லை இந்த அதிகாரிகள்.
இது போக மேல் மாகாணத்தில் பயணத்தடை கணக்கேயில்லாமால் வழமையான நாட்கள் போலவே இயங்கிக்கொண்டிருக்கின்றது. அங்கே சட்டம் இல்லை- இராணுவமும் இல்லை போலும்.
இங்கு பிரச்சினை சரத்வீரசேகரவோ – மேல்மாகாணமோ – தம்மிக பண்டாரவோ அல்ல. அவர்கள் எல்லோருக்கும் சட்டம் செல்லுபடியற்றது எனின் எல்லா இடங்களுக்கும் அதுதான் சட்டமாக இருக்க வேண்டும். இதை விடுத்து ஒரு சில இடங்களில் மட்டும் கொரோனா கட்டுப்பாடு என கூறி தனிமனித சுதந்திரம் மறறும் சுயமரியாதை  பறிக்கப்படுவதை ஏற்றுக்ககொள்ள முடியாது.
பயணத்தடை காலங்களில் வெளியே செல்வது தவறு எனின் யார் சென்றாலும் தவறு தானே.  எல்லோரையு் கட்டுப்படுத்துவீர்களா என்றால் முடியாது. இலங்கையில் ஓரளவாவது கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இருப்பதற்கு இராணுவத்தினரின் கண்காணிப்பும் காரணம் தான் மறுக்க முடியாது.
ஆனால் தனிமனிதரை அவமானப்படுத்தும் – மன நோகடிக்கும்  தண்டனைகளுக்கு இடமில்லை என இலங்கையின் அரசியலமைப்பு வலியுறுத்துகின்றது. அரச காவல்துறையினருக்கும் – இராணுவப்பிரிவினருக்கும் முதலில் அரசியலமைப்பில் உள்ள மனித உரிமைகள் தொடர்பான  அறிவை வழங்கிவிட்டு அவர்களை பணிக்கமர்த்த வேண்டும்.  அப்போது தான் தன்னை  ஜனநாயக நாடு என குறிப்பிடும் இலங்கை அதற்கான – அந்த ஜனநாயகத்தை அடைவதற்கான பாதையை நோக்கி கொஞ்சமாவது முன்னேற முடியும்.

காட்டுத்தீயாய் பரவும் புதிய வகை கொரோனா – கட்டுப்படுத்த முடியாது திணறும் லத்தீன் அமெரிக்கா !

கொரோனா பாதிப்பு பெரும்பாலான நாடுகளில் குறைய தொடங்கியபோது அந்த வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் வெவ்வேறு வகையில் உருமாற்ற கொரோனா வைரஸ் பரவியது தெரிய வந்தது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உருமாற்ற வைரஸ் லத்தீன், அமெரிக்க நாடுகளில் பரவி உள்ளது என்றும், இதற்கு லாம்ப்டா என்று பெயரிடப்பட்டுள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு கூறும்போது, லாம்ப்டா என்ற உருமாற்றம் அடைந்தகொரோனா வைரஸ்  பெரு நாட்டில் கண்டறியப்பட்டது. இந்த வகையான வைரஸ் 29 லத்தீன், அமெரிக்க நாடுகளில் பரவியுள்ளது. குறிப்பாக அர்ஜென்டினா, சிலி போன்ற நாடுகளில் வைரஸ் பரவி இருக்கிறது.

இந்த உருமாற்றம் அடைந்த புதிய வகை வைரசின் தாக்கம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளது.

ஏற்கனவே டெல்டா வகை கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மற்றொரு புதிய வகை கொரோனா வைரசை உலக சுகாதார அமைப்பு கண்டறிந்துள்ளது.

இதற்கிடையே டெல்டா வகை கொரோனா வைரஸ் உலகளவில் ஆதிக்கம் செலுத்தி வருவதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். அந்த வைரஸ் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் மாறி வருகிறது என்றும், அதன் பரவும் தன்மை அதிகரித்து வருகிறது என்றும் கூறினார்.

அதிகளவில் அணு ஆயுதங்களை வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் ரஷ்யா – அமெரிக்கா முன்னிலை !

உலகிலேயே ரஷ்யா மற்றும் அமெரிக்‍கா நாடுகள் அதிகளவில் அணு ஆயுதங்களை வைத்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஸ்வீடன் நாட்டில் உள்ள ஸ்டாக்ஹோம் அமைதி ஆராய்ச்சி நிறுவனம், பல்வேறு நாடுகளின் அணு ஆயுத குவிப்பு குறித்து, ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

எஸ்.ஐ.பி.ஆர்.ஐ. ஆண்டு புத்தகம் 2021′ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த புத்தகத்தில், அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வட கொரியா ஆகிய 9 நாடுகள் அணு ஆயுதங்களை அதிகளவில் வைத்திருப்பதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

உலகளவில் குவிக்கப்பட்டுள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 80 என்றும், இவற்றில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆயுதங்கள் இரு வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷியா வசமே உள்ளதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இதில், 6 ஆயிரத்து 375 அணு ஆயுதங்களுடன் உலகிலேயே ரஷ்யா முதலிடத்தில் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக, 5 ஆயிரத்து 800 அணு ஆயுதங்களுடன் அமெரிக்கா 2-வது இடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து சீனா 320 – ஃப்ரான்ஸ் 290 – இங்கிலாந்து 225 – பாகிஸ்தான் 160 – இந்தியா 150 – இஸ்ரேலிடம் 90 மற்றும் வடகொரியா 50 அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக அந்த ஆய்வு அறிவிக்‍கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக ஆன்டனியோ குட்டரெஸ் !

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக ஆன்டனியோ குட்டரெஸ், மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

72 வயதான ஆன்டனியோ குட்டரெஸின் பதவிக்காலம், இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடையும் நிலையில், சமீபத்தில் நடந்த ஐ.நா.வின் அதிகாரம் மிகுந்த பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆன்டனியோ குட்டரெசையே மீண்டும் பொதுச் செயலாளராக்குவது என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தநிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஐ.நா.வின் பொதுச்சபை கூட்டத்தில் ஆன்டனியோ-குட்டரெஸ் ஐ.நா.சபை பொது செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் 2026ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 9ஆவது பொதுச்செயலாளரான போர்த்துகல் முன்னாள் பிரதமஐ.நா. பொதுச்செயலாள ஆன்டனியோ குட்டரெஸ், கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகிறாஐ.நா. பொதுச்செயலாள என்பது குறிப்பிடத்தக்கது.

Apple Daily பத்திரிகை அலுவலகத்தை சுற்றி வளைத்த சீன பொலிஸார் – தலைமை செய்தி ஆசிரியர் கைது !

சீனாவின் ஹாங்காங்கில் நெக்ஸ்ட் டிஜிட்டல் என்ற நிறுவனம் சார்பில் ஆப்பிள் டெய்லி என்கிற தினசரி செய்தித்தாள் பிரசுரமாகி வருகிறது. இந்த செய்தித்தாளில் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்டு கட்சிக்கு எதிராகவும், அதன் தலைவர்களின் சர்வாதிகாரப் போக்கை விமர்சித்தும், ஹாங்காங்கில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் கட்டுரைகளும், செய்திகளும் வெளியிடப்பட்டு வருகிறது.

ஏற்கனவே இந்த பத்திரிகையின் உரிமையாளர் ஜிம்மி லாய், சீனாவுக்கு எதிராக போராடிய வழக்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஆப்பிள் டெய்லி பத்திரிகை தேசிய பாதுகாப்பு சட்டத்தை மீறியதாக கூறி நேற்று 500-க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பத்திரிகை அலுவலகத்துக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.

Hong Kong Police Raid Pro-Democracy Newspaper Apple Daily, Arrest 5அதனை தொடர்ந்து ஆப்பிள் டெய்லி பத்திரிகையின் தலைமை செய்தி ஆசிரியர் மற்றும் மூத்த நிர்வாகிகள் 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அந்த பத்திரிகை நிறுவனத்துக்கு சொந்தமான 18 மில்லியன் ஹாங்காங் டாலர் சொத்துக்களையும் போலீசார் முடக்கினர்.

முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதே போல் ஆப்பிள் டெய்லி (Apple Daily) பத்திரிகை அலுவலகத்துக்குள் அதிரடியாக நுழைந்த போலீசார் உரிமையாளர் ஜிம்மி லாய் மற்றும் அவரது மகன்கள் 2 பேரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

5 ஆண்டுகளுக்கு பிறகு சீனாவின் விண்வெளி செல்லும் மூன்று விண்வெளி வீரர்கள் !

சீனா உருவாக்கியுள்ள தியான்ஹே என்ற விண்வெளி நிலையத்தில், கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காக, பயிற்சி பெற்ற மூன்று விண்வெளி வீரர்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இன்று (வியாழக்கிழமை) லாங் மார்ச் 2எப் ரொக்கெட் மூலம் ஷென்சூ-12 என்ற விண்கலத்தில் 3 விண்வெளி வீரர்களும் பயணித்தனர்.

புதிய விண்வெளி நிலைய கட்டுமான பணிகள்... முதல் முறையாக வீரர்களை அனுப்பியது சீனா

கோபி பாலைவனத்தில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து 09:22 பெய்ஜிங் நேரத்தில் விண்கலம் ஏவப்பட்டது. நீ ஹைஷெங்,  லியு போமிங் மற்றும் டாங் ஹாங்க்போ ஆகிய மூன்று மனிதர்களும் பூமிக்கு மேலே 380 கி.மீ (236 மைல்) தொலைவில் உள்ள தியான்ஹே தொகுதியில் மூன்று மாதங்கள் செலவிட உள்ளனர்.

ரொக்கெட் புறப்பட்ட 10 நிமிடங்களில் புவி வட்டப்பாதையை அடைந்ததும், வீரர்கள் இருந்த விண்கலம் தனியாக பிரிந்து விண்வெளி நிலையத்தை நோக்கி பயணித்தது. விரைவில் அந்த விண்கலம் விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்படும். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு சீனா விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி உள்ளது. இந்த வீரர்கள் மூன்று மாதங்கள் தியான்ஹெ பெட்டகத்தில் தங்கி, விண்வெளி நிலையத்தின் கட்டுமான பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டு, பெட்டகத்தை விட்டு வெளியேறி, பல மணி நேரங்கள் விண்வெளியில் மிதந்தபடி, கட்டுமான பணிகளை மேற்கொள்வார்கள். இந்த அபாயகரமான பணிகளை மேற்கொள்வதற்காக அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது அனுப்பியதை போல, அடுத்த ஆண்டு இறுதிக்குள் 10 முறை விண்வெளி நிலையத்துக்கு தேவையான பொருட்கள் மற்றும் ஆய்வு பணிக்கான வீரர்களை அனுப்பி வைக்க சீன விண்வெளி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மொத்தம் 70 டன் எடையில் விண்வெளி நிலையம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த விண்வெளி நிலையம் முழுமையான செயற்பாட்டுக்கு வந்ததும் 340 முதல் 450 கி.மீ உயரத்தில் அது பூமியை சுற்றி வரும்.

கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி தியான்ஹெ பெட்டகம், ஆட்களே இல்லாமல் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு, வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து விண்வெளி நிலையத்துக்கான எரிபொருள் உள்ளிட்ட பொருள்கள், விண்வெளி உடைகள், உணவுப் பொருள்களுடன் தியான்சோ- 2 என்ற சரக்கு விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலம் விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.

அதன் தொடர்ச்சியாக, விண்வெளி நிலைய கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காக, பயிற்சி பெற்ற மூன்று விண்வெளி வீரர்கள் இன்று அனுப்பப்பட்டுள்ளனர்.

கோகோ-கோலா போத்தல்களை தள்ளி வைத்துவிட்டு தண்ணீரை தெரிவு செய்த ரொனால்டோ – கோகோ-கோலாவுக்கு 4 பில்லியன் நட்டமாம் !

பாட்டிலை தூக்கி காமித்து ஒரே நாளில் கோகோ கோலாவிற்கு பெரிய ஆப்பு வைத்த  ரொனால்டோ
அந்த வைரல் வீடியோவில், பத்திரிகையாளர் சந்திப்புக்கு ரொனால்டோ வந்தவுடன்  மேஜையின் மீது கோலா பாட்டில்கள் இருந்ததை பார்த்து அதிருப்தியடைந்தார். உடனே முன்னால் இருந்த 2 கோலா பாட்டில்களை எடுத்துவிட்டு, தண்ணீர் பாட்டிலை தூக்கி, “அகுவா” என தெரிவித்ததோடு (தண்ணீருக்கான போர்ச்சுக்கீசிய வார்த்தை) மக்கள் குளிர்பானங்களுக்கு பதிலாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சமிக்ஞை செய்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் போர்ச்சுகல் அணியின் மேலாளர் பெர்னாண்டோ சாண்டோஸ் கலந்து கொண்டார். இருப்பினும், மேஜையில் வைக்கப்பட்டிருந்த கோலா பாட்டில்களை அவர் அகற்றவில்லை. யூரோ 2020 போட்டிக்கான ஸ்பான்சர்களில் கோகோ கோலாவும் ஒன்றாகும். மேலும் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற ரொனால்டோவுக்கு எதிராக யுஇஎஃப்ஏ  நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரலாக ஆரம்பித்துள்ள இந்த வீடியோவால் அவருடைய ரசிகர்கள் கோகோ-கோலாவை புறக்கணிக்க ஆரம்பித்துள்ளனர். அவருடைய அந்த சின்ன அசைவு காரணமாக கோகோ-கோலா கம்பெனிக்கு சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா புதிய வடிவில் உருமாற்றம் – டெல்டா ப்ளஸ் !

இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரசான “டெல்டா” மீண்டும் உருமாற்றம் அடைந்து, “டெல்டா ப்ளஸ்”-ஆக மாறியுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கண்டறியப்பட்ட B.1.617.2 என்ற உருமாறிய கொரோனா, மிக வேகமாக பரவக் கூடியதாகவும், மிகுந்த ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகவும் அமைந்தது. டெல்டா என பெயர் வைக்கப்பட்ட இந்த வைரஸ், இந்தியாவில் ஏராளமான உயிரிழப்பை ஏற்படுத்திய நிலையில் இங்கிலாந்திலும் தற்போது வேகமாக பரவி வருகிறது.

தற்போது, இந்த டெல்டா வைரஸ் மேலும் உருமாற்றம் அடைந்துள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. சி.எஸ்.ஐ.ஆர். விஞ்ஞானி வினோத் ஸ்கேரியா தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார். B.1.617.2.1 என வரிசைப்படுத்தப்பட்டுள்ள இந்த வகை வைரசிற்கு டெல்டா ப்ளஸ் என பெயரிடப்பட்டுள்ளது. வைரசின் புரதத்தில் இந்த உருமாற்றம் நிகழ்ந்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வகை வைரஸ் மோனோகுளோனல் ஆண்டிபாடி சிகிச்சைக்கு எதிராக செயலாற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள ‘ஜி-7’ – ஜி-7 போன்ற சிறிய குழுக்கள் உலகை ஆள முடியாது என சீனா பதிலடி !

உலகின் வளர்ந்த பொருளாதார நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பை கொண்டு செயல்படுகிற ‘ஜி-7’ அமைப்பின் உச்சிமாநாடு, இங்கிலாந்தில் கார்ன்வாலில் உள்ள கார்பிஸ் பே கடலோர பகுதியில் கடந்த 11-ந் தேதி தொடங்கியது. நேற்று இந்த மாநாடு முடிந்தது.

உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி - ‘ஜி-7’ உச்சி மாநாட்டில் தலைவர்கள் உறுதி

பிரிட்டனின் கார்ன்வால் பகுதியில் செயின்ட் ஐவ்ஸ் நகரில் உள்ள காா்பில் பே பகுதியில் இந்த மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க இந்தியா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டடிருந்தது. கொரோனா வைரசுக்கு எதிராக உலகமெங்கும் உள்ள மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது, பெரிய நிறுவனங்கள் தங்கள் நியாயமான வரிகளை செலுத்தச்செய்வது மற்றும் தொழில்நுட்பம் மற்றும் பணத்தின் உதவி கொண்டு பருவநிலை மாற்றம் பிரச்சினையை சமாளிப்பது என தலைவர்கள் உறுதி எடுத்துக்கொண்டனர்.

இது எல்லாம் ஒரு புறமிருக்க இந்த கூட்டத்தொடர் முழுவதும் அதிகம் பேசுபொருளாகவிருந்த விடயம் சீனா தொடர்பானதே.

இதே நிலையில் , மூன்று நாட்கள் நடைபெற்ற உச்சிமாநாட்டின் முடிவில், உலகின் ஏழு பெரிய மேம்பட்ட பொருளாதார நாடுகள் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், ‘சீனாவை மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை மதிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தின. இது உய்குர் முஸ்லீம் சிறுபான்மைக் குழுவிற்கு எதிரான துஷ்பிரயோகம் மற்றும் ஹொங்கொங் ஜனநாயக சார்பு ஆர்வலர்கள் மீதான ஒடுக்குமுறை ஆகியவையை உள்ளடக்கியதாகும்.

இதே நேரம் இந்த மாநாட்டில், சீனா முன்வைத்துள்ள `பெல்ட் அண்ட் ரோட்’ திட்டத்துக்கு ஜி-7 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதற்கு பதிலாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முன்வைத்துள்ள `பில்ட் பேக் பெட்டர் வேர்ல்ட்’ (பி3டபிள்யூ) எனும் திட்டத்தை செயல்படுத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ஏழை மற்றும் மத்திய தர நாடுகள் கட்டமைப்பில் பயன்பெறும் என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பிரித்தானியாவிலுள்ள சீனாவின் தூதரகம், ஜி-7 நாடுகளின் கூட்டு அறிக்கை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த முடிவு தொடர்பாக பிரிட்டனில் உள்ள சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர், “ஒருசில நாடுகள் அடங்கிய சிறு குழுக்கள் முடிவு எடுக்கும் காலம் நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே முடிந்துவிட்டது. சிறு குழுக்கள் இனியும் உலகை ஆள முடியாது.

சீனாவைப் பொறுத்தவரை அளவில் பெரிய நாடோ அல்லது சிறிய நாடோ, பலவீனமானதோ அல்லது பலமான நாடோ, ஏழையோ அல்லது பணக்கார நாடோ அனைத்தும் சமமே.

சர்வதேச விவகாரங்களில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். ஐ.நா.,கொள்கையை ஒட்டிய சர்வதேச முடிவுகள் எட்டப்பட வேண்டும்.ஜி-7 போன்ற குழுக்கள் உலகை ஆள முடியாது” என்று கூறியிருக்கிறார்.

………………………………………………………………………………………………………………………………….

அண்மைய நாட்களில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி மேற்கத்தைய முதலாளித்துவ நாடுகளுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருமாறி வருகின்றது.  முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் சீனாவின் ஆதிக்கம் வேகமாக வளர ஆரம்பித்துள்ளதையும் அறிய முடிகின்றது. முக்கியமாக கொரோனா தடுப்பூசி தொடர்பான விநியோகம் இன்றைய உலக அரசியலின் மிகப்பெரும் சக்தியாக மாற்றமடைய ஆரம்பித்துள்ளது.

சீனா முதற்கட்டமாக பல நாடுகளுக்கு தடுப்பபூசி விநியோகம் செய்ய ஆரம்பித்துள்ளமை மூலம் சீனச்சார்பு நாடுகளின் எண்ணிக்கை சடுதியாக உயர்வடைய ஆரம்பித்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் நோக்குடனேயே மேற்கத்தேய நாடுகள் கொரோனாவை பரப்பிய பழியை வலுக்கட்டாயமாக சீனாவை  ஏற்க வைக்க முற்படுகின்றன. சீனாவும் ஏற்றுக்கொள்வதாயில்லை. ட்ரம்ப் அடுத்து வந்த பைடன் எல்லோரும் சீன எதிர்ப்பு என்ற கோணத்தில் ஒரே முகத்தையே காட்டுகின்றனர்.

இவ்வளவு நாள் தடுப்பூசி தொடர்பான மட்டுப்பாடுகளை அறிவித்து வந்த அமெரிக்கா , பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் வறுமைப்பட்ட நாடுகளுக்கு 100 கோடி டோஸ்களை கொடுக்க முன்வருவதாக தெரிவித்துள்ளமை கூட சீன எதிர்ப்பின் ஒரு நீட்சியே தவிர மற்றும் படி உலக நாடுகள் மீது கொண்ட கரிசனை என்று கூறமுடியாது. அவ்வளவு அக்கறை இருப்பின் தடுப்பூசி உற்பத்திக்கான அனுமதியை பல நாடுகளுக்கு வழங்க முடியும். எனினும் அதில் கூட கட்டுப்பாட்டை இந்த நாடுகள் விதித்து வைத்திருப்பது இல்லாத நாடுகள் இவர்களிடம் இரந்து வாழ வேண்டும் என்பனாலேயே தவிர வேறு ஒன்றுமில்லை.

 

பொருத்திருந்து பார்ப்போம். சீனா இவர்களின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு  பணிந்து போகுமுா..? அல்லது தன்னுடைய பெல்ட் அன்ட் ரோட் திட்டத்தை இன்னும் முனைகப்பாக நடத்துமா என்று.