Multiple Page/Post

ஜோர்தான் குயீன் ஆலியா விமானநிலையத்தில் ஜனாதிபதிக்கு வரவேற்பு

g-11-mahi.jpgஜோர்தானில் இன்று ஆரம்பமாகவுள்ள குறைந்த மற்றும் நடுத்தர வருமானங்களைப் பெறும் நாடுகளின் ஜீ-11 உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்றுள்ள  ஜனாதிபதிக்கு ஜோர்தான் குயீன் ஆலியா விமானநிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.ஜோர்தானின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் அமீர் ஹதீதி ஜனாதிபதியை வரவேற்றார். அதன் பின்னர் ஜனாதிக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

 மூன்று நாட்களுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்கு சென்றுள்ள ஜனாதிபதி மத்திய கிழக்கின் பொருளாதாரம் தொடர்பாக ஆராயும் மாநாட்டிலும் கலந்துகொள்வார்.

பாகிஸ்தான், மோரோக்கோ, எல்சல்வடோர், ஜோர்ஜியா, குரோசியா, ஹொண்டுராஸ், பெரகுவே, ஈக்குவாடோர், இந்தோனேசியா மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளின் தலைவர்களையும் ஜனாதிபதி சந்தித்து உரையாடுவார். பொருளாதார வர்த்தக மற்றும் கலாசார கூட்டுறவு தொடர்பான ஓர் உடன்படிக்கையில் இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் சகல நாடுகளும் கைச்சாத்திடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்றாவது புலிகள் சரணடையவேண்டும் – கோஹன

palitha_koahana.jpgவிடுதலை புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கவேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்றாவது புலிகள் ஆயுதங்களை களைந்து சரணடைவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித்த கோஹன தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பிலேயே பாலித்த கோஹன இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், புலிகள் ஆயுதங்களை கீழே வைத்து சரணடையவேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அத்துடன் பல சர்வதேச நாடுகளும் புலிகள் ஆயுதங்களை கைவிட்டு சரணடையவேண்டும் என்று கோரிக்கை விடுத்துவருகின்றன. இலங்கை அரசாங்கமும் இந்த கோரிக்கையையே முன்வைத்துவருகின்றது.

தற்போதைய நிலைமையில் சர்வதேச சமூகம் கடுமையான தொனியில் புலிகளுக்கு அழுத்தம் தெரிவித்து வருகின்றது. எனவே சர்வதேசத்தின் கோரிக்கைக்கு தற்போதைய நிலைமையிலாவது புலிகள் இணங்கி அரசாங்கப் படையினரிடம் சரணடையவேண்டும் என்றார்.

2400 க்கு மேற்பட்ட மக்கள் இராணுவம் விடுவித்த பிரதேசத்துக்குள் வருகை

mullivaikaal-01.jpgமுள்ளி வாய்க்கால் பகுதியில் புதிதாக அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்தில் பொது மக்களை விடுவிக்கும் மனிதாபிமான மீட்டுப் பணியின் இறுதி அத்தியாயத்தில் படையினர் இறங்கியுள்ளனர். கரையாமுள்ளி வாய்க்காயைத் தாண்டி வெள்ளமுள்ளி வாய்க்கால், பகுதிகளை நோக்கி இரு திசைகளிலும் இராணுவம் இன்று ( மே 14) முன்னேறி, புதிய பாதுகாப்பு வலயத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுசனத்தில் 2400க்கு மேற்பட்ட மக்கள், பாதுகாப்பாக வெளியேறக் கூடிய சூழலை ஏற்படுத்தினர் என தெரிய வருகிறது.

புதிய பாதுகாப்பு வலயத்தை நோக்கிய இராணுவத்தின் வருகையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி  அதிகமான மக்கள் களப்புக் கடல் ஊடாக வெளியேறிவருவதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

mullivaikaal-02.jpg

தமிழர்களுக்கு குரல் தந்த ஒபாமாவுக்கு நன்றி: விடுதலைப்புலிகள்

obama_.jpgஇலங்கை அரசை எச்சரிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பேசியிருப்பதற்கு விடுதலைப் புலிகள் இயக்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஈழம் மற்றும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் பேச்சை வரவேற்கின்றனர், நன்றி கூறுகின்றனர். ஈழத்தில் தமிழர்கள் படும் துயரம் குறித்து அவர் பரிவுடன் பேசியதற்காகவும், மனிதாபிமான நெருக்கடியை நிறுத்த அவர் விடுத்துள்ள கோரிக்கைக்காகவும் நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

அதேபோல, ஐ.நா. பாதுகாப்பு சபையும், ஐ.நா. அவையும், மனிதாபிமான நெருக்கடியைத் தீர்க்க ஆக்கப்பூர்வமான முறையில் விவாதித்ததையும், ஈழத் தமிழர்களைக் காக்க விடுத்த வேண்டுகோளையும் நாங்கள் வரவேற்கிறோம். மனிதாபிமான நெருக்கடியைத் தீர்க்க அதிபர் ஒபாமாவின் தலையீட்டை ஈழத் தமிழர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர்.

அதிபர் ஒபாமா கூறியதுபோல, பாதுகாப்புடன் கூடிய, நீடித்த அமைதிக்கு இலங்கை அரசு உத்தரவாதம் தர வேண்டும் என்பதை நாங்களும் ஆதரிக்கிறோம். மேலும், அமைதியை நோக்கிய நிரந்தர போர் நிறுத்தத்திற்கும் நாங்கள் ஆதரவு தருகிறோம். நாங்கள் வைத்துள்ள ஆயுதங்கள், ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையிலான அமைதியான இறுதித் தீர்வை பாதுகாப்பதற்காகத்தான்.

இன்று இலங்கை அரசு, ஈழத்தில் வசிக்கும் அனைத்துத் தமிழர்களையும் ஒட்டுமொத்தமாக தண்டித்துக் கொண்டிருக்கிறது. தங்களது சுய நிர்ணயத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும் போராடும் தமிழர்களை அது தண்டித்துக் கொண்டிருக்கிறது. ஈழத் தமிழர்களை அவர்களது சொந்த நிலத்திலிருந்து இலங்கை அரசு அப்புறப்படுத்திக் கொண்டிருக்கிறது. எந்தவித மரியாதையும், கௌரவமும் இல்லாத முகாம்களில் அடைத்து சித்திரவதை செய்து கொண்டிருக்கிறது.

தமிழர்களின் நிலங்களுக்குள் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் இருக்கும் தமிழர்களையும், அரசுப் பகுதிகளுக்கு வந்த தமிழர்களையும் கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்கி அழித்து வருகிறது. இடம் பெயர்ந்து வரும் அப்பாவி மக்களை முகாம்களில் அடைத்து சித்திரவதை செய்து கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான தமிழர்களைக் காணவில்லை. இவற்றை எந்தவித சாட்சியமும் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறது இலங்கை அரசு.

அதிபர் ஒபாமா கூறுவதைப் போல, தமிழர்களை பேரழிவிலிருந்து காக்க, மனிதாபிமான நெருக்கடியிலிருந்து மீட்க அவசர நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. சர்வதேச சமுதாயத்தின் கண்களை மூடி விட்டு, இலங்கை அரசு தனது தாக்குதல்களை தங்கு தடையின்றி தொடர்ந்து கொண்டிருக்கிரது. தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறி உலக சமுதாயத்தை அது ஏமாற்றி வருகிறது.

மனிதாபிமான மீட்பு நடவடிக்கைகளைக் கூட அது ஏற்கவில்லை. அனுமதிக்கவில்லை. இந்த சமயத்தில், மனிதாபிமான நெருக்கடியைத் தீர்க்க அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசுக்கு அதிபர் ஒபாமா கோரிக்கை விடுத்திருப்பதற்கு நாங்கள் நன்றி கூறிக் கொள்கிறோம்.

தற்போது போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சுயேச்சையான மனிதாபிமான உதவிப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். அவர்கள் இப்பகுதிகளுக்கு குறிப்பாக தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு சுதந்திரமாக செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.  ஈழத் தமிழர்களுக்காக நேரம் ஒதுக்கி, அவர்களுக்காக பேசிய அதிபர் ஒபாமாவுக்கு நாங்கள் மீண்டும் நன்றிகளைக் கூறிக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார் நடேசன்.

3ஆவது நாளாகவும் கிறீன் ஓசியன் கப்பல் முள்ளிவாய்க்கால் நோக்கி பயணம்

ship.jpgமூன்றாவது நாளாகவும் உணவுப்பொருட்களை ஏற்றிக் கொண்டு முள்ளிவாய்க்கால் பகுதிக்கு கிறீன் ஓசியன் கப்பல் பயணிக்கிறது. 500 தொன் உணவுப் பொருட்களுடன் ஓரியன்டல் பிரின்சஸ் கப்பல் புறப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ச்சியாக இரண்டு தினங்கள் முயன்றும் முள்ளிவாய்க்கால் பகுதியைச் சென்றடைய முடியாமல் திருகோணமலைக்குத் திரும்பிய கிறீன் ஓசியன் கப்பல் இன்று காலை மீண்டும் முல்லைத்தீவு பகுதிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக ஐசிஆர்சியின் தகவல் அதிகாரி சரசி விஜேரட்ண தெரிவித்துள்ளார்.

லண்டனிலும், பிரான்ஸிலும் வழிபாட்டுத்தலங்கள் மீது தாக்குதல்

temple1.jpgபிரான்ஸிலும், லண்டனிலும் அமைந்துள்ள இலங்கையர்களின் இரண்டு வழிபாட்டுத்தலங்கள் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளன. கடந்த திங்களன்று இரவு பிரான்ஸின் பாரிஸ் பகுதியில், லாக்குரணோ என்னும் இடத்தில் உள்ள சிவன் கோயிலின் ஆலய கோபுரம் இனந்தெரியாதோரால் பெட்ரோல் குண்டு வீசி தாக்கப்பட்டதாக ஆலயத் தலைமை அர்ச்சகர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேரை சந்தேகத்தில் கைது செய்திருப்பதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேவேளை, லண்டனில் கிங்ஸ்பரி பகுதியில் அமைந்துள்ள சிறி சதாதிஸ்ஸ சர்வதேச பௌத்த மையம் என்னும் வழிபாட்டிடம் இன்று அதிகாலை சிலரால் தாக்கப்பட்டிருக்கிறது.

தாக்குதலை நடத்தியவர்கள் கற்களை வீசி மையத்தின் யன்னல்கள் மற்றும் கதவுகளுக்கு சேதம் ஏற்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக அங்கிருந்த பௌத்த மதகுரு தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது

பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா, இடம்பெயர்ந்தோர் முகாம்களை பார்வையிட வவுனியா விஜயம்

sarath-n-silva.jpgபிரதம நீதியரசர் சரத் என்.சில்வா இன்று காலை வவுனியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இவருடன் நீதியமைச்சின் முக்கிய அதிகாரிகளும் வருகை தந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இடம் பெயர்ந்தவர்களுக்கு கூட்டுத்தாபன நிவாரண உதவி

kumarawelgama.jpgவடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு கூட்டுத்தாபனங்கள் ஊடாக  நிவாரண உதவிகளை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் குமார வெல்கம இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

அதன்படி நிவாரண உதவித்தொகையாக ஐந்து நிறுவனங்களால் 3.8 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது.

முஸ்லிம் கவுன்சிலின் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

muslim_council_donation.jpgவடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு வழங்குவதற்காக முஸ்லிம் கவுன்சிலினால் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் இன்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டன. இது தொடர்பான வைபவம் இன்று முற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இவ்வைபவத்தில் கலந்துகொண்ட முஸ்லிம் கவுன்சிலின் பிரதிநதிகள் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்களை அமைச்சரிடம் கையளித்தனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா,  இலங்கையிலுள்ள முஸ்லிம் அமைப்புக்களின் ஒன்றியமான முஸ்லிம் கவுன்சில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தோருக்கு ஏற்கனவே பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. இன்று 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளனர். இதற்காக அந்த அமைப்புக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனக் கூறினார்.

G-11 நாடுகளின் உலக பொருளாதார பேரவை கலந்து கொள்ள ஜனாதிபதி ஜோர்தான் பயணம்

mahinda-rajapaksha.jpgG-11 நாடுகளின் உலக பொருளாதார பேரவை கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜோர்தானுக்கான பயணமாகியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.