3ஆவது நாளாகவும் கிறீன் ஓசியன் கப்பல் முள்ளிவாய்க்கால் நோக்கி பயணம்

ship.jpgமூன்றாவது நாளாகவும் உணவுப்பொருட்களை ஏற்றிக் கொண்டு முள்ளிவாய்க்கால் பகுதிக்கு கிறீன் ஓசியன் கப்பல் பயணிக்கிறது. 500 தொன் உணவுப் பொருட்களுடன் ஓரியன்டல் பிரின்சஸ் கப்பல் புறப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ச்சியாக இரண்டு தினங்கள் முயன்றும் முள்ளிவாய்க்கால் பகுதியைச் சென்றடைய முடியாமல் திருகோணமலைக்குத் திரும்பிய கிறீன் ஓசியன் கப்பல் இன்று காலை மீண்டும் முல்லைத்தீவு பகுதிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக ஐசிஆர்சியின் தகவல் அதிகாரி சரசி விஜேரட்ண தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *