- “பிரபாகரன் ஒரு முட்டாள். சாடிக்கு ஏற்ற மூடி போல, பொட்டு அம்மானும் ஒரு மொக்கன்” எனக்கு துரோகிப்பட்டம் தருபவர்களுக்கு என் பதில்: இரட்டைமுகவராக மாறிய முன்னாள் கடற்புலி புலனாய்வுச் செயற்பாட்டாளர் காகுஸ்தன் அரியரத்தினம் (கனடா)
- புலிகளின் வி. பிரபாகரனும், வெனிசுவேலாவின் அதிபர் நிக்கோலாஸ் மடூரோவும் ஒரே விதமான முடிவை எதிர்கொண்டனர்:
- கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!
- புதிய வடிவில் வரும் வர்த்தக-தொழில் நுட்பப் போர்
- அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறுமா..?
- லார்க்கூர்னே சிவன் கோயில் அர்ச்சகர்கள் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் இந்தியாவில் கைது !
Multiple Page/Post
வரி செலுத்தாவிடில் திறைசேரி வங்கிக்கணக்கில் கைவைக்கும்!
‘உள்நாட்டு இறைவரித் திணக்களத்தின் அறிவுறுத்தல் படி 2023/24 மதிப்பீட்டு ஆண்டிற்கான வரிநிலுவைகள் எதிர்வரும் டிசம்பர் 26 முன்னர் செலுத்தப்பட வேண்டும், செலுத்தப்படாத வரி நிலுவைகள் முன் அறிவுறுத்தலின்றி சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளினூடாக அறவிடப்படும்’ என இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. ‘நிலுவையாகவுள்ள சுய மதிப்பீட்டு வரி போன்றன தொடர்பில் உள்நாட்டு இறைவரி கட்டளைச் சட்டத்தின் கள ஆய்வுகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் தொடர்கின்றன’ எனத் தெரிவித்துள்ள இறைவரித் திணைக்களம், ‘வரி நிலுவையின் தொகையை பொறுத்து குற்ற வழக்குகள் தாக்கல் செய்யப்படும்’ என அறிவித்துள்ளது.
உழைக்க வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
உழைக்க வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு மூன்று லட்சத்தைத் தாண்டியுள்ளது. இவ்வாண்டு மூன்று லட்சத்து பதினோராயிரம் பேர் வெளிநாட்டில் வேலைவாயப்புப் பெற்று சென்றுள்ளனர். இவர்கள் ஆறு பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அந்நியச் செலாவணியாகக் கொண்டு வருகின்றனர். சுற்றுலாத்துறைக்கு அடுத்ததாக அதற்குச் சமமாக இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தருபவர்களாக இந்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் ஒரு இலட்சத்து எண்பத்தியையாயிரம் பேர் ஆண்களாகவும் ஒரு இலட்சத்து பதினையாயயிரம் பேர் பெண்களாகவும் உள்ளனர்.
இத்தொழிலாளர்களில் 75,000 பேர் குவைத்துக்கும் 50,000 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் பயணிக்கின்றனர். அதையும் விட தென்கொரியா, இஸ்ரேல், ரொமேனியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் 10,000க்கும் உட்பட்டவர்கள் செல்கின்றனர்.
இந்த அந்நியச் செலாவணியை இலங்கைக்கு கொண்டு வருவதில் மேற்கில் உள்ள புலம்பெயர்ந்தவர்கள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் அவர் பணத்தை உண்டியல் மூலமாக அனுப்புகின்ற போது அந்நியச் செலாவணி இலங்கையை அடைவதில்லை. அந்தப் பணம் அந்த நாடுகளிலேயே தங்கிவிடுகிறது. அதற்குச் சமமான இலங்கை ரூபாய் இலங்கையில் உள்ளவருக்கு வழங்கப்படும். அது டொலராகவோ அல்லது ஏனைய அந்நியச் செலாவணியாகவோ இலங்கைக்கு கிடைப்பதில்லை.
வெளிநாட்டு அலுவல்கள் வெளிநாட்டு வேலையாப்பு பதில் அமைச்சராக அருண் ஹேமச்சந்திரா நியமனம்!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் குழுவினரும் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா புறப்பட்டுச் சென்றதன் காரணமாக 05 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, ஜனாதிபதியின் கீழ் காணப்படும் டிஜிட்டல் பொருளாதாரம், பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி மற்றும் திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய 03 அமைச்சுக்களுக்கும், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு ஆகியவற்றுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, பதில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன, பதில் பாதுகாப்பு அமைச்சராக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, நிதி மற்றும் திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி பதில் அமைச்சராக, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா பதில் அமைச்சராக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர, பதில் தொழில் அமைச்சராக, பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரச வேலையே வேண்டும் – கலைப்பட்டதாரிகள் விடாப்பிடி : இவர்கள் வரிச்சுமையை கூட்டப் போகின்றனர் – மக்கள் விசனம்
தனியார் வேலையோ அல்லது சுயதொழிலோ எமக்கு வேண்டாம். அரசாங்க நியமனங்களை அரசு தமக்கு வழங்கியே ஆகவேண்டும் என வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் மீண்டும் போராட்டம் நடத்தியுள்ளனர். இதேவேளை இத்தனை வருடங்கள் தம்முடைய வரிப்பணத்தில் இலவசக் கல்வியில் படித்துவிட்டு 5 வருடங்களாக நாட்டின் பொருளாதாரத்துக்கு பங்களிக்காமல் வீட்டில் இருந்துகொண்டு மேலும் தம் வரிச்சுமையை கூட்டுவதற்கு அரச வேலை கேட்டு போராட்டம் நடத்துகின்றனர் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். யாழ்மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று முன்தினம் இடம்பெற்றபோது மாவட்ட செயலகத்தின் முன்பு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
தாங்கள் பட்டப் படிப்பினை நிறைவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்ற போதிலும் அரச வேலைவாய்ப்பு தமக்கு இதுவரை வழங்கப்படவில்லை. புதிதாக ஆட்சி அமைத்திருக்கும் அரசாங்கம் தமக்கான அரச நியமனத்தை வழங்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை முன்வைத்தனர். இதில் கலந்துகொண்டிருந்தோரில் மிகப்பெரும்பாலோனோர் கலைப்பீட பட்டதாரிகளாகவே காணப்பட்டனர். அவர்களிடம் பல்கலைக்கழக கல்வி தொடர்பான போதிய புரிதலோ அல்லது அதன் நோக்கம் பற்றிய தெளிவையோ காண முடியவில்லை.
பாடசாலைக் கல்வி தொடக்கம் பல்கலைக்கழகம் வரையான தம்முடைய கல்வியின் நோக்கம் அரச வேலைக்கானது என்பதே அவர்களுடைய எண்ணமாக உள்ளமையை அவதானிக்க முடிந்தது. அரசவேலையற்ற கல்வி வீணானது என்ற கருத்தை அவர்கள் வெளியிட்டிருந்தனர். வேலையில்லா பட்டதாரிகளை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அரச்சுனா அரசாங்கம் வேலைதராது என்றும், போராடுவது வீண் என்றும் – ஏதாவது திட்டங்களை தொடங்கி வேலை கொடுப்பதாக தெரிவித்திருந்தார். அத்தோடு நின்று விடாமல் மாவட்டத்திற்கு ஒரு குறைகாண் அதிகாரிகளை நியமித்து பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்தப் போவதாகவும் அவர்களுக்கான சம்பளத்தை புலம்பெயர் தமிழர்கள் பொறுப்பெடுக்க வேண்டும் என்றும் முகநூலில் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கனவே அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என்ற பெயரில் நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிக்காமல் பெரும்சுமையாக ஒருதொகை அரச உத்தியோகத்தர்கள் காணப்படுகின்ற நிலையில் குறைகேள் அதிகாரிகள் எனும் பெயரில் பட்டதாரிகளை நியமித்து அந்தச் சுமையை புலம்பெயர் தமிழர்களின் தலையில் கட்டுவதற்கு அர்ச்சுனா தயாராகிவிட்டார். நாடு எதிர்நோக்கியுள்ள பெரும் பொருளாதார சரிவுக்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்று அரசசேவைகளில் தேவைக்கு அதிகமானோர் உள்ளீர்க்கப்பட்டமை என்பது வெளிப்படையானது.
பட்டதாரிகளுக்கு அரச நியமனங்கள் வழங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதும் கடந்த கால அரசாங்கங்கள் வாக்கு வங்கிக்கான கருவியாக அரச நியமனங்களை பயன்படுத்தியுள்ளன என்பதும் மிகத் தெளிவாக பேசப்பட்டு வருகின்றது . அவ்வாறான நிலையில் பட்டதாரிகளின் இவ்வாறான சிறுபிள்ளைத்தனமான கருத்துக்கள் பெரும் அதிர்ச்சியையும் அவர்களின் தகமை தொடர்பில் கேள்விகளையும் எழுப்பியுள்ளன . பட்டதாரிகளின் இந்த நிலைக்கு அவர்கள் மட்டுமல்லாது இலங்கையின் கல்வி முறையிலுள்ள குறைபாடும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் குறிப்பாக கலைப்பீடத்தின் வினைத்திறனற்ற செயற்பாடுகளும் பயனற்ற கற்கை நெறிகளுக்கான விரிவுரையாளர்களின் ஆட்சேர்ப்பும் முக்கிய காரணங்களாகும் . இலங்கையில் வேலைவாய்ப்புகள் தாராளமாக உள்ளபோதும் அவற்றுற்குரிய தகமைகள் கலைப்பீட பட்டதாரிகளிடம் போதுமானதாக இல்லை. சந்தையில் இருக்கும் கேள்விகளுக்கு ஏற்ப தம்மை வளர்த்துக்கொள்ளும் ஆர்வமும் அவர்களிடம் இருப்பதாக தெரியவில்லை . தற்போதைய அரசாங்கம் டிஜிட்டல்மயமாக்கத்தை நோக்கி நாட்டை நகர்த்த ஆரம்பித்துள்ளது. அதற்கான ஆளணிப் பற்றாக்குறையும் நிலவுகிறது. ஆனால் இவற்றுக்கு பொருத்தமானவர்களாக கலைப் பட்டதாரிகள் இல்லை என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. அரசாங்க வேலை இல்லாமையால் தங்களுடைய காலம் வீணடிக்கப்பட்டுவிட்டது என்று பட்டதாரிகள் புலம்புகின்றார்கள் . உண்மையில் இவர்கள் இந்த நாட்டுக்கும் சமூகத்துக்கும் பயன்கொடுப்பார்கள் என்று நம்பி மக்களுடைய வரிப்பணத்தில் இவர்களுடைய இலவசக் கல்விக்காக இறைக்கப்பட்ட பெருமளவு முதலீட்டை 5 வருடங்களாக வீட்டிலிருந்து இவர்கள் வீணடிக்கின்றனர் என்பதை இவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை. பல்கலைக்கழகத்தில் பெறப்படும் கல்வியின் நோக்கம் துறைசர்ந்த திறமைகளைப் பெறுவதோடு , புதியதொரு பார்வையை உருவாக்கி . தனிமனித வளர்ச்சிக்கும் சமூக மேம்பாட்டுக்கும் பங்களிக்க முடியுமாறு ஒருவரை தயாரிப்பதாகும்.அதைவிடுத்து மக்களின் வரிப்பணத்தில் படித்து விட்டு மீண்டும் அரச வேலை எனும் பெயரில் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்காமல் நாட்டுக்கும் சமூகத்துக்கும் முன்னேற்றகரமான முயற்சிகளை நோக்கி இவர்கள் நகரவேண்டும் .
இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 2624.29 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்படும் – மீள்குடியேற்ற திட்டங்களுக்காக1303.42 மில்லியன் ரூபா நிதி !
தேசிய மக்கள் சக்தி ஊடக பிரச்சாரங்கள் ஏதுமின்றி அமைதியாக தமிழ் மக்களின் தேவைக்களையும் அவர்கள் மீதான காலாதிகாலமான அடக்குமுறை திட்டங்களையும் கைவிட்டு வருகிறது. இராணுவ சாவடிகள் நீக்கப்படுகிறது, ஏற்கனவே காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன, இராணுவ சாவடிக்குள் உள்ள வழிபாட்டு தலங்கள் விடுவிக்கப்படுகின்றன என்றவாறு அரசின் மீதான மக்கள் நம்பிக்கை அதிகரிப்பதாக செயற்பாட்டுத்தளத்தில் இருப்போர் மூலம் அறிய முடிகிறது.
இந்த நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் 2624.29 ஏக்கர் நிலப்பரப்பு எதிர்வரும் காலங்களில் படிப்படியாக விடுவிக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரியவருவதாவது,
தற்போது படையினரிடம் உள்ள காணிகள் 2025ஆம் ஆண்டு முதல் படிப்படியாக விடுவிக்கப்படும். அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்காக இந்த வருடம் 1303.42 மில்லியன் ரூபா நிதி செலவழிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சர்வதேச தமிழ் தேசிய ஆதரவோடு ஆட்சிக்கு வந்த மைத்திரி அடிக்கல் நாட்டிய தையிட்டி விகாரையும் கஜாவின் போரட்டமும் !
யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்சவைத் தோற்கடித்து சர்வதேசத்தின் ஆதரவோடு தமிழ் தேசியமும் இணைந்து மைத்திரியை ஜனாதிபதியாக்கினர். இந்த ஜனாதிபதி அவசர அவசரமாக அடிக்கல் நாட்டியது தான் இந்தத் தையிட்டி விகாரை, இந்த விகாரையின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு அன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது . அப்போது கஜா கோமாவில் இருந்தாரா தெரியவில்லை. நேற்று நடந்த இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்டவர்களும் பொது மக்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர் . குறித்த போராட்டத்தின் போது பொலிஸார் – ஆரப்பாட்டக்காரரிடையே போராட்ட நிலை வலுவடைந்துள்ளதுடன் இதனை கஜா – கஜா குழுவினர் சமூக வலைத்தளங்களில் தமிழீழ விடுதலைப் போராட்டம் செய்தது போல பகிர்ந்து கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
நாட்டில் நல்லிணக்க சூழல் ஒன்று உருவாகும் நிலையில் இத்தகைய செயற்பாடுகள் பலரை முகஞ்சுழிக்க வைத்துள்ளது. குறித்த தையிட்டி விகாரை 2021 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு முழுமை நிலையை அடைந்தது. குறித்த விகாரை அமைக்கப்பட்டிருப்பது தனியார் காணியில் . இக்காணி வலிகாமம் வடக்கு பிரதேசசபைக்குட்பட்ட பகுதியாகவே காணப்படுகிறது. ஆதலால் வடக்கு பிரதேச சபையினரையே கஜா கஜா குழுவினர் கைநீட்டி கேள்வி கேட்க வேண்டியுள்ளது. இதேவேளை குறித்த விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களில் ஒருவரான ஆறுமுகம் பத்மநாதன் என்பவர் விகாரை அமைக்கப்படும் போதே அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் இது தொடர்பில் முறைப்பாடளித்ததாகவும் அப்போது யாருமே கண்டு கொள்ளவில்லை எனவும் இப்போது தான் கோமாவிலிருந்து எழும்பிய மாமாக்கள் மாதிரி நடிக்கிறார்கள் தமிழ் தலைவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் விகாரை அமைக்கும் போதே நிபுணத்துவம் மிக்க சட்டம்பிகளை வைத்திருக்கிறோம் என கூறும் கஜா கஜா கோஷ்டி விகாரை அமைக்கும் போது கோமா நிலையில் இருந்து விட்டு பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் போதும் – தற்போது பாராளுமன்ற தேர்தல் தோல்வியின் பின்பும் போராட்டங்களை மேற்கொண்டு மக்களின் கவனத்தை திசைதிருப்ப முயற்சிப்பதாக பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். விகாரைப்பணிகள் முழுமைகண்டு விட்ட நிலையில் ஒரு மதஸ்தலத்தை இடிப்பதோ அல்லது அதனை இல்லாதாக்குவதோ மிகவும் உணர்வுபூர்வமான விடயம் . இனிமேல் இந்த விகாரையை அகற்றுவது நடக்க முடியாத காரியம் என்பது தெரிந்தும் கூட அடுத்த மாகாண சபை . உள்ளூராட்சி தேர்தல்களை இலக்கு வைத்து தன் இருப்பை நிலைநாட்ட கஜா குழுவினர் இந்த போராட்டங்களை தம் அரசியலுக்காக பயன்படுத்தி வருகின்றனர். இதே போல் தான் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் காணாமல் போனவர்கள் தான் என்பதைத் தெரிந்தும் வாக்கு வங்கி அரசியலுக்காக அதனை தொடர்ந்தும் செய்கின்றனர் என யாழ் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
யார் அங்கே ? மாவை எங்கே ? அவர் உள்ளேயா ? வெளியேயா ? – பாவம் தமிழரசுக் கட்சி : சுமந்திரன் பீலிங்ஸ்
பாராளுமன்ற தேர்தலுக்கு பின் டிசம்பர் 14 இல் வவுனியாவில் கூடிய தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் குழாய் அடிச்சண்டை. 10 மணிக்கு வர வேண்டிய பதவி விலகிய மாவை சேனாதிராஜா வரத் தாமதித்தே இந்த வாய்க்கால் சண்டைக்கு காரணம். பதவி விலகியவர் கூட்டத்தை தலைமைதாங்க முடியாது. தாமதியாமல் கூட்டத்தை தொடங்கும்படி செயலாளரை கிழக்கின் தமிழ்த்தேசியத் தலைவர் இரா சாணக்கியன் தூண்ட அதற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்தார். மாவைக்கு தொலைபேசி அழைப்பெடுத்து கூட்டத்திற்கு அழையுங்கள் என சிவமோகனும் இடையில் குறுக்கிட்ட சாணக்கியன் ” இது கோல் சென்ரர் அல்ல , கட்சி … ‘ உங்கள் வைத்தியசாலை இதுவல்ல என்று பதிலளித்தார் . இப்படியே உறுப்பினர்களிடையே வார்த்தைகள் தடிக்க சாணக்கியனுக்கு வக்காலத்திற்கு வந்த பீற்றர் இளஞ்செழியனும் சிரேஷ்ட உபதலைவர் தலைமையில் கூட்டத்தை நடத்துங்கள் அல்லது குழப்பவாதிகளை வெளியேற்ற வேண்டும் என உறுமினார் . இதற்கிடையில் விடாப்பிடியாக நின்ற சிவமோகனை நாற்காலி அருகில் சமாதானப்படுத்த முயன்ற சுமந்திரனின் இராஜதந்திரமும் தோற்றுப்போனது . வென்றது என்னவோ மாவை தான் . அடித்துப்பிடித்து ஒருவழியாக 10:45 கூட்டத்திற்கு வந்து சேர்ந்த மாவை குடுகுடு என்று ஓடிப்போய் முன்வரிசையில் தலைவர் இருக்கையில் இடத்தைப் பிடித்துக் கொண்டார் . இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக விவாதிக்க இக் கூட்டம் நடைபெற்றது . ஓக்டோபரில் மாவை பதவி விலகல் கடிதத்தைக் கையளித்தார் . அது தொடர்பில் கட்சி செயலாளர் விளக்கத்தை கேட்ட போது மாவை உடனடியாகப் பதில் வழங்கவில்லை . அதனைத் தொடர்ந்து செயலாளர் , மாவையின் பதவி விலகல் நடைமுறைக்கு வந்ததாக எடுத்துக்கொண்டு மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதாக அறிவித்தார். இதற்கிடையில் சிறிதரன் ஊடாக மாவை கையொப்பமிட்ட பதவி விலகலை மீளப்பெறும் கடிதமொன்று செயலாளரிடம் ஒப்படைத்திருந்தார் . மறுநாள் மாவையும் நேரடியாக குறிப்பிட்ட கடிதத்தை செயலாளருக்கு அனுப்பியிருந்தார் . இந்த இழுபறிக்குள் கட்சியின் அடுத்த மாநாடு வரைக்குமான எஞ்சிய காலப்பகுதிக்கு தமிழரசுக்கட்சியின் யாப்பின் பிரகாரம் சி.வி. கே . சிவஞானம் தலைவராக முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டார் . இதற்கு போட்டியாக மாவை பதவி விலகலை மீளப்பெற்றதால் அவர் தொடர்ந்தும் தலைவராக இருக்க வேண்டும் என முன்மொழியப்பட்டது , யார் தலைவர் ? என்ற கேள்விக்கு விவாதங்களுாடாக பதில் கிடைக்கவில்லை . அதனால் மாவையின் பதவிவிலகலை ஏற்றுக்கொண்ட தரப்பு இந்த விடயத்தை வாக்கெடுப்பிற்கு விட அழைப்பு விடுத்தது . எந்தவொரு முடிவும் எடுக்கப்படாத நிலையில் டிசம்பர் 28 இல் வாக்கெடுப்பிற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது .









