இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 2624.29 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்படும் – மீள்குடியேற்ற திட்டங்களுக்காக1303.42 மில்லியன் ரூபா நிதி !
தேசிய மக்கள் சக்தி ஊடக பிரச்சாரங்கள் ஏதுமின்றி அமைதியாக தமிழ் மக்களின் தேவைக்களையும் அவர்கள் மீதான காலாதிகாலமான அடக்குமுறை திட்டங்களையும் கைவிட்டு வருகிறது. இராணுவ சாவடிகள் நீக்கப்படுகிறது, ஏற்கனவே காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன, இராணுவ சாவடிக்குள் உள்ள வழிபாட்டு தலங்கள் விடுவிக்கப்படுகின்றன என்றவாறு அரசின் மீதான மக்கள் நம்பிக்கை அதிகரிப்பதாக செயற்பாட்டுத்தளத்தில் இருப்போர் மூலம் அறிய முடிகிறது.
இந்த நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் 2624.29 ஏக்கர் நிலப்பரப்பு எதிர்வரும் காலங்களில் படிப்படியாக விடுவிக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரியவருவதாவது,
தற்போது படையினரிடம் உள்ள காணிகள் 2025ஆம் ஆண்டு முதல் படிப்படியாக விடுவிக்கப்படும். அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்காக இந்த வருடம் 1303.42 மில்லியன் ரூபா நிதி செலவழிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.