கணவனின் அரசியல் தஞ்சத்திற்கு கடிதம் கேட்ட பெண்ணை படுக்கைக்கு அழைத்த எம்பி சிறிதரனின் வலதுகரம் வேழமாலிதன்
தமிழ்த்தேசிய அரசியலின் புதிய காவலனான எம்பி சிறிதரனின் அலுவலகம் மற்றும் கையாட்களின் காமக்களியாட்டங்களால் சமூக ஊடகங்கள் பரபரப்பாகியுள்ளன. சிறிதரனின் அரசியல் பிரவேசத்திற்கு பின்னணியில் இருந்து செயற்பட்ட வேழமாலிகிதனின் லீலைகளால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
வெளிநாட்டில் வாழும் கணவரின் அரசியல் தஞ்சத்திற்கு உதவியாக, கடிதம் கேட்டுச் சென்ற பெண்ணிடம் சில்மிஷத்தில் வேழமாலிகிதன் ஈடுபட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தனது பிரத்யேக கைத்தொலைபேசியிலிருந்து வட்ஸ்அப் ஊடாக படுக்கைக்கு அழைத்துள்ளார். வேழமாலிதனின் காம உரையாடல்கள் முகநூலில் வெளியாகியுள்ளன. இதனால் ஆத்திரம் அடைந்த வேழமாலிகிதன். அடியாட்களுடன் அப்பெண்ணின் வீட்டுக்கு சென்று அஸிட் ஊற்றப்போவதாக மிரட்டியுள்ளார். சிறிதரன் எம்பியும் இந்த விடயத்தை வெளியே சொல்லக்கூடாது என அப்பெண்ணை மிரட்டியுள்ளார்.
வேழமாலிதனின் கிளிநொச்சி பசுமைப் பூங்கா நிதி மோசடி, காணி அகரிப்பு, பாலியல் இலஞ்சம், கட்டப்பஞ்சாயத்து எனப் பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. ‘ஊழல் ஒழிப்பு வன்னி அணி’ என்ற முகநூல் கணக்கில் புகைப்பட ஆதாரங்களுடன் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பந்தப்பட்ட முகநூலை நடத்துவோரை தொடர்பு கொண்ட வேழமாலிதன். தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செய்திகளை நீக்கும்படி கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
வேழமாலிதனால் ஒரு பெண் தீக்குளித்து இறந்துள்ளார் என்றும் அந்தக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. தேசம் இவ் விடயம் தொடர்பில் ஆராய்ந்த போது மக்கள் வேழமாலிதன் பெண் பித்தர் என குறிப்பிடுகிறார்கள். ஊழல் ஒழிப்பு அணி வன்னி முகநூலில் வேழமாலிதனும் அவரது கையாளும் மது போதையில் கைது செய்யப்பட்டு விடுதலையானதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனை வேழமாலிதன் மறுக்கிறார். சிறிதரனின் அரசியலுக்கு வேழமாலிதனால் அஸ்தமனம் ஆரம்பமாகிவிட்டதாக சிறிதரன் ஆதரவாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
பா உ சிறிதரன் தன்னை தேசியத் தலைவரின் நிலையில் வைத்து தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்கின்றார். இவர் போர்த்தியுள்ள புலித்தோல் போர்த்த தேசியத்திற்குப் பின்னால் கள்ள மண் அகழ்வு, கள்ள மரம் கடத்துவது, கசிப்பு, வட்டிக்கு பணம் கொடுத்தல் போன்ற முடிச்சவிக்கிகள் மொள்ளமாரிகள் எல்லோரும் கூட்டிணைந்துள்ளனர். மாவீரர் துயிலும் இல்லங்களை அதனை பராமரிக்கும் அமைப்புகளிடம் கொடுக்காமல் தனது கட்டுப்பாட்டில் வைத்து நிதி மற்றும் அரசியல் வியாபாரம் செய்வது போன்ற பல குற்றச்சாட்டுக்கள் பா உ சிறிதரன் மீது வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் சிறிதரன் தனக்கு எதிரானவர்களுக்குத் துரோகிப்பட்டம் கட்டி தனது தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்கின்றார். அண்மையில் உண்ணாவிரதம் இருந்த வனகுலராசாவை றோ ஏஜென்ட் என சிறிதரனின் ஊடகவியலாளர் பிரச்சாரம் செய்திருந்தமை தெரிந்ததே.
ஆனாலும் தற்போது முதற்தடவையாக சிறிதரனின் கிளிநொச்சி தமிழரசுக் கட்சிக் காரியாலயமும் ஒரு அந்தப்புரமாக மாறுகிறதா என்ற சந்தேகத்தை தற்போது அம்பலமாகியுள்ள செய்திகள் தெரிவிக்கின்றன
https://www.facebook.com/share/v/12G4evzFruv/
