11

11

எத்தியோப்பிய ஏதிலிகயுடன் சென்ற படகு கவிழ்ந்து 38 பேர் பலி!

யேமன் கடற்பரப்பில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்தனர்.

சுமார் 250 பேருடன் பயணித்த இப்படகு, சீரற்ற காலநிலை காரணமாக கவிழ்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

படகில் இருந்தவர்கள் எத்தியோப்பிய ஏதிலிகள் என தெரியவந்துள்ளது. விபத்தில் காணாமல் போன நூற்றிற்கும் மேற்பட்டவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதுவரையில் 78 பேர் வரை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் –  காசா போரை நிறுத்த அமெரிக்காவின் திட்டம் – ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவை ஆதரவு !

இஸ்ரேல் –  காசா போர் நிறுத்தத் திட்டத்தை ஆதரிக்கும் அமெரிக்காவின்  முன்மொழிவுக்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவை ஆதரவாக வாக்களித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்தோடு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையில் உள்ள 15 உறுப்பினர்களில் 14 பேர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதுடன் ரஷ்யா வாக்களிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையான போர் நிறுத்தம், ஹமாஸ் பணயக் கைதிகளை விடுவித்தல் மற்றும் உயிரிழந்த பணயக் கைதிகளின் உடல்களை மீளப் பெறுதல் போன்ற விடயங்களை அமெரிக்கா முன்மொழிந்துள்ளது.

இஸ்ரேலியர்கள் குறித்த திட்டத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்திருந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எவ்வாறாயினும் நிரந்தர போர்நிறுத்தம் மற்றும் காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் முழுவதுமாக வெளியேறுவதற்கான உத்தரவாதத்தை ஹமாஸ் கோருவதற்கான வாய்ப்பு உள்ளதாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவை அறிக்கையின் ஊடாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.