எத்தியோப்பிய ஏதிலிகயுடன் சென்ற படகு கவிழ்ந்து 38 பேர் பலி!

யேமன் கடற்பரப்பில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்தனர்.

சுமார் 250 பேருடன் பயணித்த இப்படகு, சீரற்ற காலநிலை காரணமாக கவிழ்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

படகில் இருந்தவர்கள் எத்தியோப்பிய ஏதிலிகள் என தெரியவந்துள்ளது. விபத்தில் காணாமல் போன நூற்றிற்கும் மேற்பட்டவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதுவரையில் 78 பேர் வரை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *