புலத்துத்தமிழா!!
ஊரை எண்ணி உருகினோம்
உண்மை அறிய உயரினோம்
தாரை வார்த்து வந்த பூமி – என்றும்
தாமரை இலைத் தண்ணீர்தானேவேரை தேட முயல்வதனால்
விழுதுகளில் வாழ முடிவதில்லை
ஊரை எண்ணி உளல்வதனால்
உண்மையின் தரிசனம் தெரியதில்லைபொக்குவாய் திறந்து என்பிள்ளை சிரிக்க
பக்கென்று சுனாமி தெரியுதயையோ
திக்குவாய் திறந்து தீந்தமிழ் பிறக்க
தொக்குவாய் ஒப்பாரி கேட்குதையோஉடலிங்கு இருக்க உயிரங்கு வாழும்
உரமிங்கு இருக்க பயிர்ரெங்கு போகும்.
கடலிங்கு இருக்க மீனெங்கு வாழும்
கடனிங்கு இருக்க ஊரிலுடன்கட்டை ஏறும்.சேவல் செத்த தேசத்தில்
சேதி சொல்ல யாருமில்லை
ஏவல் செய்து வாழ்வதற்கு – காலையில்
எகிறி அலறும் அலாரமிங்கேபூங்காலை பிறக்கும் பூபாளம் பாடி – இங்கோ
பனிவானம் கொட்டும் பகலள்ளி ஓடி
தேன்காலை என்று ரொட்டியைத் தின்றும்
தேடிய பணமும் எமைத்தேடாது போகும்வேரை அறுத்து வந்த உனக்கு
வேற்று மண்ணில் பவுசுப்பெருக்கு
ஊரை ஊன்றிய மக்கள் தமக்கு
உத்தமனாய் விடாதே கணக்குதலைவிதி தன்னை தானே தீர்க்கும்
தலையாய கடமை தமிழர்க்குண்டு
கொலைவெறி கொண்டு ஈழம் என்று – மீண்டும்
கொல்லநினைக்க முள்ளிவாய்காலிலுண்டுபண்டா நினைத்ததை பிரபாகரன் முடித்தான்
திண்டாடும் தமிழன் அரசியலைத் தொலைத்தான்
கொண்டாடும் கொடுவினம் கொடியுயர்த்தி கோலோச்ச
மன்றாடி மகிழுதோ பின்னணியில் த.தே.முன்னணியும்மண்ணை வேண்டிப் போராடி
மண்ணாய் போன மன்னர்களே!
கண்ணாய் மனிதம் காட்டி
காதலி தமிழை மனதில் ஊட்டிதமிழ் வாழ்ந்தால் தமிழன் வாழ்வான்
தவறிபோனால் இனத்தோடழிவான்
அமிழ் தினிய தமிழைக் காக்க
எழுந்து வாடா இனத்தை மீட்கபத்துப் பெத்தால் பரிசளிப்போம்
பத்தாது போனால் பரிசகியோம்
முத்தாய் எம்மினம் முகிழ்வுறவே
வித்தாய் விழைவோமா புலத்தினிலே
நோர்வே நக்கீரா
27.02 2010
