26

26

இத்தாலி பேராயர் சபை 1 மில்லியன் யூரோ உதவி

refugee_.jpgஇலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு மில்லியன் யூரோவை இத்தாலி பேராயர் சபை அன்பளிப்பு செய்தமைக்காக தனது நன்றியை அதி.வண.மெல்கம் ரஞ்சித்துக்கு ஐ.தே.கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்கடர் ஜெயலத் ஜயவர்தன கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். தங்களின் தலையீட்டின் மூலம் இத்தாலி பேராயர் சபையின் மூலதனத்திலிருந்து இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு மில்லியன் யூரோ ஒதுக்கப்பட்டுள்ளதாக வண. நெலில் ஜோபெரேரா தெரிவித்தார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீங்கள் காட்டுகின்ற அன்புக்கும் அக்கறைக்கும் இலங்கையின் மக்கள் பிரதிநிதியென்ற ரீதியில் உங்களுக்கு எனது நன்றிகள்.

இதனை முன்னின்று செய்தமைக்காக எனது கௌரவம் அவருக்கு உரித்தாகட்டுமெனவும் ஜெயலத் ஜயவர்தன தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்

வடக்கின் 5 மாவட்டத்துக்கும் துரித கெதியில் மின்சார வசதி – அமைச்சு அதிகாரிகள் விரைவு

வடக்கிலுள்ள 5 மாவட்டங்களுக்கும் துரிதமாக மின்சார வசதி வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சு கூறியது. இதற்காக வெளிநாட்டு உதவிகள் பெறப்படவுள்ளதோடு இது தொடர்பாக பல நாடுகளுடன் பேசி வருவதாகவும் அமைச்சு தெரிவித்தது.

இதே வேளை வடக்கு கிழக்கில் மோதல் காரணமாக சேதமாகியுள்ள உப மின் உற்பத்தி நிலையங்கள், மின்மாற்றிகள், மின் கோபுரங்கள் என்பனவற்றை திருத்தியமைக்கும் பணிகள் கடந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு உயரதிகாரி ஒருவர் கூறினார்.

ஈரான் உதவியுடன் வடக்கு கிழக்கிலுள்ள சில பகுதிகளுக்கு மின்சார வசதி அளிக்கப்படவுள்ளது. மீட்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு, வன்னி மாவட்டங்களுக்கும் மின்சார வசதியற்ற யாழ். மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கும் துரிதமாக மின்சார வசதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக மின்சார சபை அதிகாரிகள் அப்பகுதிகளுக்கு நேரில் சென்று ஆராய்ந்து வருவதாகவும் அவர் சொன்னார்.

மன்னார் பிரதேசத்தில் சில பகுதிகளுக்கு மின்சார வசதிகள் வழங்கப்பட்டு வருவதோடு மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு முன்னதாக ஏனைய பகுதிகளுக்கும் மின்வசதி அளிக்க அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணத்திலுள்ள மக்களுக்கு தடையின்றி மின்சார வசதி வழங்குவதற்காக சுண்ணாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் உற்பத்தி நிலையம் விரைவில் திறக்கப்படவுள்ளது.

தெங்குப் பொருட்களின் ஏற்றுமதி 56 சதவீதத்தால் அதகரிப்பு

coconut_tree.jpgஇவ் வருடத்தின் முதல் காலாண்டுப் பகுதியில் தெங்குப் பொருட்களின் ஏற்றுமதி 56 தவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

கடந்த வருட முதலாம் காலாண்டுப் பகுததியில் மூலப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவிய காரணத்தால் தெங்குப்பொருள் ஏற்றுமதி பல சவால்களை எதிர்கொள்ள நேரிட்டது. எனினும் பின்னர் படிப்படியாக அந்த நிலை மாறி ஏற்றுமதியில் அபிவிருத்தி ஏற்பட்டது என்று சபை அறிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா,  இந்தியா, ஆகிய நாடுகள் வரிசையில் தெங்குப்பொருள் ஏற்றுமதியில் இலங்கை முக்கிய இடம் வகிக்கின்றது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.