May

May

உள்ளூராட்சி சபைகள் திருத்தச் சட்டமூலம் வாபஸ் பெறப்பட்டாலும் வேறு வடிவத்தில் அது மீண்டும் கொண்டுவரப்படலாம்

batticaloa-sri-lanka.jpgஉள்ளூராட்சி சபைகள் திருத்த சட்டமூலம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் அது தொடர்பில் நாம் தொடர்ந்தும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏனெனில், அது வேறொரு உருவில் மீண்டும் கொண்டு வரப்படலாமென எச்சரித்துள்ள இ.தொ.கா. சிரேஷ்ட தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான ஆர். யோகராஜன், இந்த சட்டமூலத்தை கடுமையாக எதிர்த்ததன் மூலம் சிறுபான்மை மக்களின் உரிமைகளை கிழக்கு மாகாண முதலமைச்சர் பாதுகாத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

உள்ளூர் அதிகார சபைகள் திருத்த சட்டமூலத்தின் மூலம் சிறுபான்மை இனங்களுக்கும் சிறிய கட்சிகளுக்கும் ஏற்பட்டிருக்கும் ஆபத்தே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் விளக்கும் முகமாக மு.கா. தலைமையகமான தாருஸ்ஸலாமில் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற செயலமர்வில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த யோகராஜன் மேலும் கூறியதாவது;

“கிழக்கு மாகாண சபை, உள்ளூர் அதிகார சபைகள் திருத்த சட்டமூலத்தை எதிர்த்து இன்று முறியடித்திருக்கிறது. இம் மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐ.தே.க., ஜே.வி.பி. கட்சிகளுக்கு அரசாங்கத்தை விட 2 ஆசனங்கள் குறைவாக 17 ஆசனங்கள் இருக்கின்ற நிலையில் அரச தரப்பில் 2 பேர் இச்சட்டமூலத்தை எதிர்த்தால் அல்லது வாக்களிக்காமல் தவிர்த்துக்கொண்டால் சட்டமூலம் நிராகரிக்கப்பட்டதாகிவிடும். தானிருந்து வந்த அமைப்பைக் காட்டிக் கொடுத்து வந்தவர் என்று என்னால் விமர்சிக்கப்பட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் இதனை முழுமையாக எதிர்த்ததினால் தான் இது சாத்தியமாகியுள்ளது. அந்த வகையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் தென்னிலங்கையில் வாழும் எல்லாச் சிறுபான்மை மக்களையும் காப்பாற்றி இருக்கிறார். அதற்கு அவரை நான் பாராட்டாதிருக்க முடியாது.

கிழக்கு மாகாணஅபிவிருத்திக்காக ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதி

abdul-majeed.jpgஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கிழக்கு மாகாண அபிவிருத்தியில் விசேட கவனம் செலுத்தியுள்ளார். இம்மாகாண அபிவிருத்திக்காக இதுவரையில் ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு அமைச்சர் நஜீப் ஏ மஜீத் தெரிவித்தார். சின்னக் கிண்ணியா கோப் சிற்றி திறப்பு விழா கடந்த சனிக்கிழமை கிண்ணியா பலநோக்குக் கூட்டுறவுச் சங்கப் பணிப்பாளர் சபைத் தலைவர் எஸ்.ஏ. மஜீத் தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்டக் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் ஜீ. ராஜினி மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம். நஸீர் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்

காங். எதிராக பிரசாரம் செய்த சீமான் விரட்டியடிப்பு

india-elc.jpg
காரைக்குடியில் ஒரு வாக்குச் சாவடிக்கு வந்து இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டதாகக் கூறி, அதிமுகவுக்கு வாக்களிக்குமாறு பிரசாரம் செய்த இயக்குனர் சீமானை திமுகவினரும் காங்கிரஸாரும் விரட்டியடித்தனர்.

வாக்குச் சாவடிக்கு அருகே வந்த சீமான், காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரத்துக்கு வாக்களிக்காதீர்கள், அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்று அங்கிருந்த மக்களிடம் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த சிதம்பரத்தின் ஆதரவாளர்களும் திமுகவினரும் அவரைச் சுற்றி வளைத்தனர். பின்னர் அவரை அங்கிருந்து விரட்டியடித்தனர். அடிதடி நடக்கும் சூழல் ஏற்பட்டதால் பொலிஸார் அவரை ஒரு ஜீப்பில் அழைத்துச் சென்று தூர இடத்தில் இறக்கி விட்டுவிட்டு வந்தனர். இதையடுத்து தனது சொந்த ஊரான அரணையூர் சென்று வாக்களித்தார் சீமான்.

அமீருக்கு வாக்கு இல்லை…

அதே போன்று இலங்கைத் தமிழர் விஷயத்தில் தீவிரம் காட்டி வரும் இன்னொரு இயக்குனரான அமீரின் குடும்பத்தினர் மதுரை கே.கே. நகரில் ஒரு அபார்ட்மென்டில் வசிக்கின்றனர். ஆனால் இம்முறை வாக்காளர் பட்டியலில் அமீரின் பெயர் இல்லை. இதனால் வாக்களிக்க வந்த அவர் வாக்களிக்க முடியாமல் திரும்பினார்.

தற்போது கிடைத்த செய்தி: கிளேமோர் மீட்பு

claymore.jpgகொழும்பு, கிராண்டன்பாஸ் பொலிஸ் பிரதேசத்துக்குட்பட்ட தொட்டலங்க லூக்கஸ் வீதியிலுள்ள கராஜ் ஒன்றிலிருந்து மிகச் சக்தி வாய்ந்த 18 கிளேமோர்களைப் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

புலிகளின் முயற்சி படையினரால் முறியடிப்பு – பிரிகேடியர் உதய நாணயக்கார

udaya_nanayakkara_brigediars.jpgபடையினரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள்ளிருக்கும் முல்லைத்தீவு, சரவாத்தோட்டம் பிரதேசத்தைக் மீண்டும் கைப்பற்றுவதற்காக விடுதலைப் புலிகள் இன்று அதிகாலை மேற்கொண்ட முயற்சி இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டுள்ளது என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். சுமார் நான்கு மணித்தியாலங்கள் வரை நீடித்த இந்த முறியடிப்புத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் மூன்று தற்கொலைப் படகுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு படகு கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் மேலும் சில படகுகள் பகுதியளவில் சேதமாக்கப்பட்டுள்ளன. இதில் புலிகள் தரப்புக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் மேலும் கூறியதாவது சரவாத்தோட்டம் பகுதியில் நிலைக்கொண்டுள்ள படையினரின் பாதுகாப்பு அரணைத் தகர்த்து அந்தப் பகுதியைக் கைப்பற்றுவதற்கான முயற்சியிலேயே விடுதலைப் புலிகள் இன்று அதிகாலை முயற்சித்தனர். இதில் நான்கு தற்கொலைப் படகுகள், 15 தற்கொலைக் குண்டுதாரிகள், உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று இரவு 9 மணிமுதல் அதிகாலை 1.30 வரையான சுமார் நான்கு மணிநேரமாக இடம்பெற்ற படையினரின் இந்த முறியடிபபுத் தாக்குதலில் விடுதலைப் புலிகள் தரப்புக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பணியாளர் ஷெல் தாக்குதலில் பலி

medical_lorry.jpgசர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பணியாளர் ஒருவர் மோதல் இடம்பெறும் பகுதியில் ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.ஷெல் தாக்குதலில் உயிரிழந்தவர் நீர் விநியோகம் தொடர்பான தொழில்நுட்பவியலாளராக கடமையாற்றியவர் என சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

ஒரு பிள்ளையின் தந்தையான இவரும், இவரது தாயாரும் ஷெல் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மோதல் வலயத்தில் இதுவரை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் 3 பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

பாதுகாப்பற்ற நிலைமைகளினால் பொதுமக்களை வெளியேற்ற முடியாத நிலை உருவாகியுள்ளது – போல் கஸ்டல்லா

paul_castella.jpgவன்னி யுத்த சூன்ய பிரதேசத்தில் இடம்பெற்று வரும் மோதல்களினால் பிரதேசத்தில் பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளதாகவும் இதனால் யுத்த சூன்ய பிரதேசத்தில் சிக்கியுள்ள பொதுமக்களை வெளியேற்ற முடியாத நிலை உருவாகியுள்ளதென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் போல் கஸ்டல்லா தெரிவித்துள்ளார்

பிரித்தானியாவில் 168 மணித்தியால அடையாள உண்ணாநிலை கவனயீர்ப்பு

uk-pas.jpg
பிரித்தானியாவில்168 மணித்தியால பட்டினி போராட்டத்தை ஒரு மாணவர் உட்பட 6 தமிழ் மக்கள் பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் நேற்று இரவு 9 மணிக்கு ஆரம்பித்துள்ளனர்

ஜ.நா மூலம் வன்னி மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ பொருட்கள் அனுப்பவேண்டும், வன்னி மக்களின் நிலையை அறிய ஜ.நா ஒரு செயற்குழு அமைக்கவேண்டும், மற்றும் உடனடி நிரந்தர சமாதானத்தை அமுல்படுத்தவேண்டும் ஆகிய மூன்று உடனடி தேவைகளை கோரிக்கைகளாக முன்வைத்து 168 மணித்தியால பட்டினி போராட்டத்தை ஒரு மாணவர் உட்பட 6 தமிழ் மக்கள் பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் ஆரம்பித்துள்ளனர்

மோதல் வலயங்களில் சிக்கியுள்ள பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்குமாறு ஹிலாறி – மிலிபண்டும் மீண்டும் அழைப்பு

david-miliband-and-hillar.jpgஇலங்கையின் வடக்கே இடம்பெற்று வரும் மோதல்களை உடனடியாக நிறுத்தி மோதல் வலயங்களில் சிக்கியுள்ள பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்குமாறு அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஹிலாறி கிளிண்டனும், பிரிட்டன வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபண்டும் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளனர்.

இலங்கையில் மனிதாபிமான நிலைமைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையில் நிறைய செய்ய வேண்டியிருப்பதாக அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன் அவர்கள் கூறியுள்ளார்.

வாஷிங்டனில் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் அவர்களுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய ஹிலாறி கிளிண்டன் அங்கு நடக்கின்ற மோதல்களில் சிக்கியுள்ள மக்களை பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றுவதற்கு உதவ முயற்சிக்க வேண்டியுள்ளது”எனத் தெரிவித்தார். அத்துடன் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு சகல இலங்கையர்க்கும் கிடைக்க வேண்டும். தமிழ் மற்றும் ஏனைய சிறுபான்மை இனத்தவர்க்கு அர்த்தமுள்ள அரசியல் வாழ்க்கை கிடைபதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் ஓராண்டு நினைவு.

miss-mageswari.jpgசட்டத்தரணியும் மனித உரிமைகள் ஆர்வலரும் ஈபிடிபி செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஆலோசகருமான செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

தமிழ் பேசும் சமூகத்திற்குள் சமூக சிந்தனையும் சுய ஆளுமையும் கொண்ட ஒரு சில பெண்களில் மகேஸ்வரி வேலாயுதம் அவர்களும் ஒருவர். தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டுமென்ற உந்துதலால் பொது வாழ்வுக்குள் காலடி வைத்தவர். மூன்று தசாப்த காலமாக மக்களின் துயர் தீர்க்கும் வாழ்வில் தம்மை அர்பணித்து வாழ்ந்தவர்.

இறந்தும் இறவாது வாழ்பவர் என்பதற்கு உதாரணமாக இன்று ஈபிடிபி செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டில் மகேஸ்வரி அறக்கட்டளை நிதியமானது பாராளுமன்றத்தின் சட்ட அங்கீகாரத்தின் மூலம் உதயமாகியுள்ளது. மகேஸ்வரி வேலாயுதம் உயிருடன் இருந்தபோது ஆற்றிய பணிகளை மகேஸ்வரி அறக்கட்டளை நிதியம் தொடர்ந்தும் முழுமையாக மேற்கொள்ளும் என அதன் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.