Multiple Page/Post

வியட்நாம் குடியரசின் 64 தேசிய தின வைபவம்

வியட்நாமிய குடியரசின் 64 தேசிய தின வைபவம் இரத்தினபுரியில் இன்று நடைபெறவுள்ளது.  இரத்தினபுரி நவநகரிலுள்ள சமுர்தி மண்டபத்தில் நடைபெறும் இவ்வைபவத்தில் வியட்நாம் தூதுவர் க்வேன்ஹோன் சோன் விஷேட அதிதியாக் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

இலங்கை-வியட்நாம் ஒத்துழைப்பு சங்கம் ஏற்பாடு செய்துள்ள இவ்வைபவத்தில் அமைச்சர்களான பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண, டியூ குணசேகர, சாலிந்த திஸாநாயக்கா, டாக்டர் ராஜித சேனாரத்ன,  ஜனாதிபதியின் ஆலோசகர் வாசுதேவ நாணயக்கார,  சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் அசோக ஜயவர்தன,  சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். சுதசிங்க உட்பட பலர் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

இந்திய அணியின் இலங்கை பயணம்-நீதிபதிகளை மாற்ற கோரிக்கை

indian-cricket-team.jpgஇந்திய அணி இலங்கைக்கு சென்று கிரிக்கெட் தொடரில் பங்கேற்க கூடாது என கோரி தொடுக்கப்பட்ட வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை 6 வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளது. இதையடுத்து வழக்கை வேறு நீதிபதிகளை கொண்ட பெஞ்ச்க்கு மாற்ற வேண்டும் என மனுதாரர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்தியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் வரும் 8ம் தேதி துவங்குகிறது. இலங்கையில் தமிழர்கள் ரத்தம் சிந்தி வரும் நிலையில் இந்திய அணி அங்கு சென்று கிரிக்கெட் விளையாட கூடாது என கோரி மதுரையில் வக்கீல் ஜோயல் பவுல் அந்தோணி என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்தார்.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், கிரிக்கெட் வாரியத்துக்கு பேக்ஸ் மூலம் நோட்டீஸ் அனுப்பியதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வழக்கை 6 வாரத்துக்கு ஒத்திவைக்கிறேன் என்று அறிவித்தனர்.மனுதாரரின் வக்கீல்கள், சிவில் சட்டமுறை சட்டத்தில் பேக்ஸ் மூலம் அனுப்பும் நோட்டீஸை முறையான நோட்டீஸாக எடுத்து கொள்ளும் வழி வகை இருப்பதாக கூறினார். ஆனால், நீதிபதிகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதையடுத்து மனுதாரர் ஜோயல் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பேக்ஸ் மூலம் ஒரு மனு அனுப்பினார். அதில், இந்திய அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்யக்கூடாது என தொடுக்கப்பட்ட வழக்கை தற்போது நீதிபதிகள் 6 வாரத்துக்கு ஒத்தி வைத்துள்ளனர். ஆனால், அதற்குள் இந்த தொடர் முடிந்துவிடும்.

தொடர் வரும் 8ம் தேதி துவங்குகிறது என்பது தெளிவாக தெரிந்த நிலையிலும் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர் முடிந்த பின்னர் அந்த தொடரில் பங்கேற்க அணியை அனுப்புவதா வேண்டாமா என்பது குறித்து பேசுவதற்கு கூட இடமில்லை. இதனால் எங்கள் கோரிக்கை நிறைவேறாமல் போய்விடும்.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பதை கருத்தில் கொண்டு இந்த வழக்கு வேறு நீதிபதிகளை கொண்ட பெஞ்ச் மூலம் 7ம் தேதிக்கு முன்பு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

அமைச்சர் சந்திரசேகரனின் வீட்டு மின் இணைப்பு துண்டிப்பு

சமூக அபிவிருத்தி மற்றும் சமூக அநீதி ஒழிப்பு அமைச்சரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான பெ. சந்திரசேகரனின் வீட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணத்தை உரிய முறையில் செலுத்தாத காரணத்தினால் அவரது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
 
அமைச்சர் சந்திரசேகரன் கடந்த 8 மாதங்களான மின்சார கட்டணத்தை செலுத்தவில்லை எனவும், இலங்கை மின்சார சபைக்கு சுமார் 736,172 ரூபா நிலுவை செலுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
ஒரு தடவை மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட போது குறித்த நிலுவைப் பணத்தை நான்கு தவணைகளில் செலுத்துவதாக அமைச்சர் தெரிவித்த போதிலும், ஒரு லட்ச ரூபா மட்டுமே அவர் செலுத்தியதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
 
இதன் காரணமாக கடந்த 31ம் திகதி மீண்டும் அமைச்சர் வீட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம்

AI_Protest_02Sep09இலங் கையில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவியலாளர் ஜே.எஸ்.திஸ்ஸநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

AI_Protest_02Sep09பயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் பேரில் கடந்த திங்கட்கிழமை அன்று திஸ்ஸநாயகத்திற்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.  இந்த தண்டனையை இலங்கை மற்றும் சர்வதேச ஊடக அமைப்புக்கள் கண்டித்திருந்தன.

பிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்கு வெளியே நடத்தப்பட்ட இந்த போராட்டத்தை அம்னெஸ்டி இண்டர்நேஷனல் என்கிற மனித உரிமை அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.  இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தங்கள் வாய் மீது கறுப்புத்துணியை கட்டியிருந்தனர்.

ராஜசேகர ரெட்டி உள்ளிட்டோரின் உடல்கள் கருகி விட்டன – ப.சிதம்பரம்

03-reddy222.jpgஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மற்றும் அவருடன் பயணித்த நால்வரின் உடல்களும் கருகிப் போன நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. இன்னும் உடல்கள் மலைப் பகுதியிலிருந்து மீட்கப்படவில்லை என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ராஜசேகர ரெட்டியினம் மரணச் செய்தியை ஆந்திர அரசு அறிவித்தவுடன், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை கூடியது. இக்கூட்டத்திற்குப் பின்னர் அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சற்று முன்புதான் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மற்றும் அவருடன் பயணித்த நால்வரின் மரணச் செய்தியை ஆந்திர அரசு அறிவித்தது. இதை பிரதமரிடம் சோகத்துடன் தெரிவித்தோம்.

இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் உடல்கள் இருந்த இடத்தையும், ஹெலிகாப்டரையும் கண்டுபிடித்தது. காலை 8.35 மணிக்கு ஹெலிகாப்டர் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது. கர்னூலிலிருந்து 48 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ள மலைக் குன்றில் ஹெலிகாப்டர் விழுந்திருந்தது. இதையடுத்து மேலும் பல ஹெலிகாப்டர்கள் அங்கு சென்றன. பாரா கமாண்டோக்கள் கயிற்றின் மூலம் கீழே இறங்கி ஹெலிகாப்டரை நெருங்கினர்.

பின்னர் உடல்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடல்கள் கருகிப் போயுள்ளன. ஹெலிகாப்டர் 7 பாகங்களாக சிதறியுள்ளது. அந்த இடத்திற்கு டாக்டர்களைக் கொண்டு செல்ல முயற்சி நடக்கிறது.

உடல் பாகங்களை சேகரித்து கர்னூல் கொண்டு செல்லும் முயற்சியில் விமானப்படை ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன. பின்னர் பிரேதப் பரிசோதனை முடிந்ததும் உடல்கள் ஹைதராபாத் கொண்டு செல்லப்படும். இந்தப் பணி எப்போது முடிவடையும் என்பதைச் சொல்ல முடியாது.

இன்று மாலை 3 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் கூடுகிறது. அப்போது ராஜசேகர ரெட்டிக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும்.

மிகச் சிறந்த முதல்வர், மிகப் பெரிய தலைவர். ராஜசேகர ரெட்டியின் மறைவால் அனைவரும் அதிர்ந்தும், உறைந்தும் போயுள்ளோம் என்றார் ப.சிதம்பரம்.

“மின்சார விரயத்தை தடுக்க ஆண் ஊழியர்கள் கோட் சூட் அணிவதை தவிர்க்க வேண்டும்”-வங்கதேச பிரதமர்

hasina-speaking203.jpgமின் சாரத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காக அரசு வேலையில் இருக்கும் ஆண் ஊழியர்கள் கோட் சூட் அணிவதை தவிர்க்குமாறு வங்கதேச பிரதமர் உத்திரவிட்டுள்ளார்.

ஆண் ஊழியர்கள் சூட்டுகள், கோட்டுகள், டை போன்றவற்றை அணிவதை தவிற்தால், குளிர்சாதனப் பெட்டிகளுக்கான தேவை குறையும் என்று வங்க தேச பிரதமர் ஹசினா கூறியுள்ளார்.

இந்த ஆணை அரசின் அமைச்சர்களையும் கட்டுப்படுத்தும். கோடை காலத்தில் அவர்களும் வெறும் பேண்ட் சட்டை மட்டுமே அணிவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. வங்க தேசத்தில் தினமும் மின் தட்டுப்பாடு நிலவுகிறது.

வெளிநாடுகளில் உள்ள புலிகளின் ஆதரவாளர்களே சமாதானத்திற்கு தடையாகவுள்ளனர்: ஜாலிய விக்கிரமசூரிய

jaliya_wickramasuriya.jpgஇலங் கையில் தமிழீழ விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள பொழுதிலும் வெளிநாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் சமாதானத்தை தேற்கடிக்க முனைவதாக அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.

ஆந்திர முதல்வருடன் காணாமல்போன ஹெலிகொப்டர் கண்டுபிடிப்பு!

02-rajasekara-reddy.jpgஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகொப்டர் கர்னூல் மலை உச்சி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக இந்திய  ராணுவ விமானப்படை அதிகாரி கூறியுள்ளார்.

நேற்று காலை 8.30 மணிக்கு கிளம்பிய ஹெலிகாப்டர், 9.30 மணிக்கு தொலைத் தொடர்பை இழந்தது. நல்லமலா வனப்பகுதியில் பறந்து கொண்டிருந்த போதுதான் காணாமல்போயுள்ளது. ஹெலிகொப்டரில் பயணித்த அதிகாரிகள் யாரிடமும் செயற்கைகோள் தொலைபேசி; இருக்கவில்லை. இதுவும் நிர்வாகத்தினருக்கு ஹெலிகொப்டரை தேடுவதில் சிக்கலை ஏற்படுத்தியது.

கர்னூலுக்கு கிழக்கே 40; மைல் தூரத்தில் உள்ள இப்பகுதியை ராணுவ ஹெலிகொப்டர்கள் சுற்றிவளைத்துள்ளன. ஹெலிகொப்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை இந்திய உள்துறை அமைச்சு உறுதிசெய்துள்ளது.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த ஹெலிகொப்டர் எந்த நிலையில் உள்ளது, விமானம் விபத்தில் சிக்கியதா என்ற கேள்விக்கு விமான அதிகாரி உறுதியான தகவல் ஏதும் கூற முடியாது என்றார். ஹெலிகொப்டர் கிடக்கும் பகுதி மிக சிரமமான மலைப்பகுதி என்பதால் அங்கு செல்ல சிரமம் ஏற்படும் என கருதப்படுகிறது.

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளரை கத்தியால் குத்திய மாணவன் பல மணி நேரம் சுதந்திரமாக பல்கலைக்கழகத்தில்…. – நிர்வாகம் ஒத்துழைத்ததா? – வி. அருட்செல்வன்

Sivarajah_N_Drயாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளரும்,  உலக சுகாதார நிறுவனத்தின் வடக்கு இணைப்பாளருமான வைத்தியகலாநிதி என். சிவராஜா கடந்த ஆகஸ்ட் 24ஆம் திகதி சமூக மருத்துவத்துறை அலுவலகத்தில் வேறு இரண்டு மருத்துவபீட மாணவர்களுடன் பரீட்சையில் ஈடுபட்டிருந்த வேளையில்  பல்கலைக்கழக மாணவன் ஒருவரின் கத்திக்குத்துக்கு இலக்கானமை தெரிந்ததே.

இந்த சம்பவத்தின் பின்னணியில் இருந்த வைத்திய பீட மாணவன் ரிஜி ரஜிவ் என்பவர் கலாநிதியை கத்தியால் குத்திய பின்பும் பல மணி நேரங்கள் பல்கலைக்கழக வளவினுள்ளே சுதந்திரமாக இருந்துள்ளதாகவும் அடுத்தநாளே இவர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறியதாகவும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது பற்றி மேலும் தெரிய வருவதாவது, ஆகஸ்ட் 24ஆம் திகதி மாலை 4.00 மணியளவில் வைத்தியகலாநிதி என். சிவராஜா யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மருத்துவபீட மாணவர்களின் ஆய்வு தொடர்பாக மாணவர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்தார். அத்தினம் 14 மாணவர்கள் வைத்தியகலாநிதியிடம் கலந்துரையாட நேரம் ஒதுக்கியிருந்தனர். சமூக மருத்துவத்துறை அலுவலகத்தில் இவ்விரு மாணவர்களாக அழைத்து  பரீட்சையில் ஈடுபட்டிருந்த வேளையில் திடீரென ஒரு மாணவன் வைத்தியகலாநிதியின் அறைக்குள் நுழைந்து தங்களுடன் கதைக்க வேண்டும் என்று கோரியுள்ளார். அச்சந்தர்ப்பத்தில் தான் விரிவுரை நடத்திக் கொண்டிருப்பதாகவும், இந்த மாணவர்கள் ஏற்கனவே நேரம் ஒதுக்கியிருப்பதாகவும் எனவே தற்போது கதைக்க முடியாது நாளைய தினம் கதைப்போம் என வைத்தியகலாநிதி கூறியுள்ளார். அச்சந்தர்ப்பத்தில் பரீட்சையில் ஈடுபட்டிருந்த இரண்டு மாணவிகளையும் வெளியே செல்லும்படி அச்சுறுத்திவிட்டு வைத்தியகலாநிதியை கத்தியால் குத்த பாய்ந்துள்ளார். பேராசிரியர் தனது இருக்கையிலிருந்து எழுந்த நேரத்தில் கத்தி அவரின் வயிற்றில் பாய்ந்துள்ளது. இருக்கையிலிருந்து எழுந்திராவிடின் கத்தி நெஞ்சில் பாய்ந்திருக்குமென கூறப்படுகின்றது. மறுபடியும் வைத்தியகலாநிதியை கத்தியால் குத்த எத்தனித்த நேரத்தில் வைத்தியகலாநிதி மாணவனின் கையைப் பிடித்து தடுத்துள்ளார். கண்ணன் என்ற ஒரு உதவியாளர் கலாநிதி சிவராஜாவின் அவலக்குரல் கேட்டு உள்ளேபாய்ந்து அந்த மாணவனை வெளியேற்றியிருக்கிறார் எனத் தெரியவருகின்றது.

ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கலாநிதி என். சிவராஜா அவர்கள் தீவிர கண்காணிப்புப் பிரிவில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இது விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,  கலாநிதியை கத்தியால் குத்திய மாணவன் ரிஜி ரஜிவ் எனும் பெயரையுடையவன். இவர் 1998ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்துக்கு அனுமதிபெற்றவர். தற்போது 3ம் ஆண்டில் கற்றுவரும் இவர் தொடர்ச்சியாக பல வருடங்கள் பரீட்சையில் சித்தியடைய தவறியுள்ளார். அதேநேரம்,  இந்த மாணவன் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட ஒருவன் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக வேண்டி வைத்திய சிகிச்சைகள் பெற்றுள்ளதுடன்,  தனக்கு எந்தவித வியாதியும் இல்லையென மருந்துகள் அருந்துவதை தவிர்த்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது. சம்பவ தினம் இந்த மாணவன் மருத்துவபீட விரிவுரையாளர்களையும் துறைத்தலைவரையும் தேடித்தேடிவந்து கடைசியில் சமூக மருத்துவத்துறை அலுவலகத்தில் இருந்து மாணவர்களுடன் பரீட்சையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கலாநிதி சிவராஜாவிடம் தனது கைவரிசையைக் காட்டியுள்ளான். மருத்துவபீடத்தினை தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தில் இயங்க வைப்பதற்கு டாக்டர் நந்திபோன்ற பேராசிரியர்களின் வழியையொற்றி கலாநிதி சிவராஜா பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. 

கலாநிதியை கத்தியால் குத்திய பின்பு சுமார் 1மணிநேரம் சமூக மருத்துவத்துறை அலுவலகத்தினருகே இம்மாணவன் சுதந்திரமாக நடமாடியுள்ளதாகவும் அந்நாள் இரவு அந்த மாணவன் மாணவர் விடுதியில் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கத்தியால் குத்திய மாணவனை பிடித்து பொலிஸில் ஒப்படைக்க ஏனைய மாணவர்களோ அங்குள்ளவர்களோ நிர்வாகத்தினரோ முனையவில்லை எனவும் அந்த மாணவன் மிகவும் சுதந்திரமான முறையிலே நடமாடியதாகவும் மேலும் தெரியவருகின்றது.

இது போன்ற சம்பவம் நிகழுமிடத்து பல்கலைக்கழக நிர்வாகம் உரிய விடயத்தை உடன் பொலிஸிக்கு அறிய கொடுக்க வேண்டிய நிலையுள்ளது. ஆனால்,  இந்த விடயம் குறித்து உடனடியாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்படவில்லை என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கலாநிதி என். சிவராஜா 72 வயது நிரம்பியவர். தனது 65ஆவது வயதில் ஓய்வுபெற்ற பின்பும் உலக சுகாதார நிறுவனத்தின் வடக்கு இணைப்பாளராக பணியாற்றிவந்தார். அதேநேரம்,  யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களுக்கு எதுவித ஊதியங்களும் பெறாமல் சேவையடிப்படையில் வருகை விரிவுரையாளராக விரிவுரைகள் நடத்தி வந்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் தனது விரிவுரையாளர் தாக்கப்பட்ட நேரத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் அசமந்தப் போக்குடன் நடந்து கொண்டமை அனைவரினதும் விமர்சனங்களுக்கு உட்பட்டுள்ளது. குறித்த மாணவன் மறுதினம் வவுனியா காவலரங்கை பாதுகாப்பாக தாண்டிய பிற்பாடே முறைப்பாடு செய்யதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மறு புறமாக இந்த மாணவன் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற இவ்வளவு விரைவாக எவ்வாறு அனுமதி பெற்றான் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

பொலிஸ் தரப்பில் இது தொடர்பாக உடனடியாக முறைப்பாடு செய்யப்படவில்லை என்றும் கலாநிதி கத்தியால் குத்தப்பட்ட விடயம் குறித்த முறைப்பாட்டினை கடிதம் மூலமாகவே பல்கலைக்கழக நிர்வாகத்தால் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட சிலரினால் மறுதினம் இந்த விடயம் தொடர்பாக கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையக உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளப்பட்டு கொழும்பிலிருந்து யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட பின்பே பொலிஸார் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதுவரை உத்தியோகபூர்வமான முறைப்பாடுகள் பொலிஸாருக்கு பல்கலைக்கழக நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது. இது விடயமாக உண்மை நிலை அறிந்து கொள்ள பல்கலைக்கழக நிர்வாகத்துடன் தொடர்பு கொண்ட போதிலும்கூட தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை. தற்போது அந்த மாணவன் எங்குள்ளார் என்று தெரியவில்லை. அவரை தேடும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் கூட பல்கலைக்கழக விரிவுரையாளரை கத்தி குத்துக்கு இலக்காக்கிய ஒரு மாணவனுக்கு பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருக்க எவ்வாறு இடம் வழங்கப்பட்டது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இவ்விடயத்தில் நிர்வாகம் ஒத்துழைத்ததா என்ற கேள்வி ஏற்படுகின்றது. மறுபுறமாக இந்த சம்பவங்களை வைத்துப்பார்க்கும் போது மாணவர்கள் எதிர் காலத்தில் விரிவுரையாளர்களை அச்சுருத்தியே தமது சித்தியை அடைந்து கொள்ள முனைவார்கள் என்ற நிலை ஏற்பட மாட்டாது என்பதை உறுதிப்படுத்த முடியுமா? என்ற சந்தேகமும் எழுகின்றது.

20-20 நியூஸிலாந்து போராடி வெற்றி

20-20.jpgஇலங் கையுடனான முதல் இருபது20 சர்வதேச போட்டியில் கடைசி பந்துவரை போராடிய நியூஸிலாந்து அணி 3 ஓட்டங்களால் வெற்றியீட்டிக்கொண்டது. இதன்மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட இருபது 20 தொடரில் நியூஸிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது.

ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்களை பெற்றது. மத்திய வரிசையில் வந்து பொறுப்புடன் ஆடிய ரொஸ் டெய்லர் 45 பந்துகளுக்கு 5 பௌண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கலாக 60 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் லசித் மாலிங்க 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு நுவன் குலசேகர, அன்ஜலோ மத்தியூஸ், அஜந்த மெண்டிஸ் மற்றும் மாலிங்க பண்டார ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை பதம்பார்த்தனர்.

இந்நிலையில் 142 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலெடுத்தாடிய இலங்கை அணி முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்து அதிரடியாக ஆடிய டி. எம். டில்ஷான் 28 பந்துகளில் 8 பௌண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கலாக 57 ஓட்டங்களை பெற்றார்.

இதன்போது அவர் 23 பந்துகளில் அரைச்சதம் அடைந்து இருபது 20 போட்டிகளில் அதிவேக அரைச்சதம் பெற்றோர் வரிசையில் 4 ஆவது இடத்தை பகிர்ந்துகொண்டார். இதில் முன்னணி வீரர்களான சனத் ஜயசூரிய (01), சங்கக்கார (13), மஹேல ஜயவர்தன (03) சோபிக்க தவறினர். இறுதியில் இலங்கை அணி கடைசி இரண்டு ஓவர்களுக்கும் 13 ஓட்டங்களை பெறவேண்டி ஏற்பட்டது.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நியூஸிலாந்து அணிக்கு திரும்பிய ஷேன் பொன்ட் மற்றும் ஜகப் ஓரம் ஆகியோரின் அபார பந்துவீச்சால் இலங்கை கடைசி 12 பந்துகளுக்கு 10 ஓட்டங்களையே பெற முடிந்தது. இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களையே பெற்றது.

நியூஸிலாந்து சார்பில் ஜகப் ஓரம் 3 விக்கெட்டுகளையும் இயன் பட்லர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதில் அணித்தலைவர் டானியல் விட்டோரி 4 ஓவர்களுக்கும் 11 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

NEW ZEALAND:
B. McCullum run out     9
J. Ryder c Bandara b Kulasekara  13
M. Guptill c Kapugedara b Bandara  29
R. Taylor c Kulasekara b Mathews  60
J. Oram c Kulasekara b Mendis    8
N. Broom not out           5
P. McGlashan run out    1
K. Mills b Malinga     7
D. Vettori b Malinga    0
I. Butler not out      0
Extras: (b3, lb3, w3)      9
Total (for 8 wkts, 20 overs)  141

Did not bat: Shane Bond.

Fall of wickets: 1-14 (McCullum), 2-26 (Ryder), 3-79 (Guptill), 4-117 (Oram),
   5-126 (Taylor), 6-127 (McGlashan), 7-136 (Mills), 8-136 (Vettori).

Bowling: Kulasekara 4-0-21-1,
  Malinga (w1) 4-0-21-2,
  Mathews 2-0-19-1,
  Mendis 4-0-25-1,
  Bandara 4-0-25-1 (w1),
  Jayasuriya 2-0-24-0 (w1).

SRI LANKA:
T. Dilshan c Ryder b Butler   57
S. Jayasuriya c Bond b Mills    1
M. Jayawardene run out     3
K. Sangakkara c McCullum b Vettori  13
G. Rupasinghe lbw b Vettori  15
C. Kapugedara b Butler      3
A. Mathews c and b Oram   21
N. Kulasekara c Broom b Oram  12
M. Bandara c McCullum b Oram   7
L. Malinga not out    4
A. Mendis not out    0
Extras: (lb2)                            2
Total (for 9 wkts, 20 overs)   138

Fall of wickets: 1-22 (Jayasuriya), 2-43 (Jayawardene), 3-67 (Sangakkara),
   4-75 (Dilshan), 5-85 (Kapugedara), 6-109 (Rupasinghe), 7-122 (Mathews),
   8-133 (Bandara), 9-133 (Kulasekara).

Bowling: Bond 4-0-27-0,
  Mills 4-0-36-1,
  Butler 4-0-29-2,
  Oram 4-0-33-3,
  Vettori 4-0-11-2.