வியட்நாமிய குடியரசின் 64 தேசிய தின வைபவம் இரத்தினபுரியில் இன்று நடைபெறவுள்ளது. இரத்தினபுரி நவநகரிலுள்ள சமுர்தி மண்டபத்தில் நடைபெறும் இவ்வைபவத்தில் வியட்நாம் தூதுவர் க்வேன்ஹோன் சோன் விஷேட அதிதியாக் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
இலங்கை-வியட்நாம் ஒத்துழைப்பு சங்கம் ஏற்பாடு செய்துள்ள இவ்வைபவத்தில் அமைச்சர்களான பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண, டியூ குணசேகர, சாலிந்த திஸாநாயக்கா, டாக்டர் ராஜித சேனாரத்ன, ஜனாதிபதியின் ஆலோசகர் வாசுதேவ நாணயக்கார, சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் அசோக ஜயவர்தன, சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். சுதசிங்க உட்பட பலர் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.