ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக மருத்துவபீடம் ஆரம்பிக்கப்படவுள்ளது. பாதுகாப்பு அமைச்சில் நேற்று ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் றுஹ{ணு பல்கலைக்கழகத்துடன் இது தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடும் வைபவம் இடம்பெற்றது.
இவ்வைபவத்தில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, பல்கலைக்கழக ஆணைக்குழுத் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க, சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழ உபவேந்தர் மேஜ ஜெனரல் மிலிந்த பீரிஸ் மற்றும் றுஹ{ணு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் திலக் விரசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்துதெரிவித்த பாதுகாப்பச் செயலாளர், இப்பயிற்ச்சி நெறிக்கு தெரிவு செய்யப்படும் படை அதிகாரிகள் நாட்டுக்கு இராணுவ அதிகாரியாகவும் மருத்துவராகவும் சேவைசெய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள் எனத் தெரிவித்தார். இவ்வாறு தெரிவு செய்யப்பட்டிருக்கும் 25 படை அதிகாரிகளுக்கும் அடிப்படை இராணுவப்பயிற்சி முடிவடைந்ததும் றுஹ{ணு பல்கலைக்கழக மருத்துவபீடத்துடன் இணைக்கப்டுவர்.