அமைச்சர் சந்திரசேகரனின் வீட்டு மின் இணைப்பு துண்டிப்பு

சமூக அபிவிருத்தி மற்றும் சமூக அநீதி ஒழிப்பு அமைச்சரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான பெ. சந்திரசேகரனின் வீட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணத்தை உரிய முறையில் செலுத்தாத காரணத்தினால் அவரது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
 
அமைச்சர் சந்திரசேகரன் கடந்த 8 மாதங்களான மின்சார கட்டணத்தை செலுத்தவில்லை எனவும், இலங்கை மின்சார சபைக்கு சுமார் 736,172 ரூபா நிலுவை செலுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
ஒரு தடவை மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட போது குறித்த நிலுவைப் பணத்தை நான்கு தவணைகளில் செலுத்துவதாக அமைச்சர் தெரிவித்த போதிலும், ஒரு லட்ச ரூபா மட்டுமே அவர் செலுத்தியதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
 
இதன் காரணமாக கடந்த 31ம் திகதி மீண்டும் அமைச்சர் வீட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *