Multiple Page/Post

தேர்தல் வரலாற்றில் என்றுமில்லாதளவிற்கு இம்முறை வன்முறைகள் இடம்பெறலாம் – ஐ.தே.க. பிரதித் தலைவர் கரு ஜயசூரிய

இலங்கையின் தேர்தல் வரலாற்றில் இதுவரையில் இடம்பெறாதளவு வன்முறைகள் இந்த ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெறப் போவதாக எச்சரித்துள்ள ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, வடக்கில் சுதந்திரமான தேர்தல் நடைபெறுவதற்கான சூழல் இதுவரையில் அரசினால் ஏற்படுத்தப்படவில்லையெனவும் குற்றம் சாட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். கரு ஜயசூரிய மேலும் கூறியதாவதுதேர்தல் பிரசாரங்களை நீதியாகவும் நேர்மையாகவும் முன்னெடுத்துச் செல்ல ஊடகங்களின் பங்களிப்பு அவசியமானது. நாம் ஊடகங்களை மதித்தே செயற்படுகின்றோம். எம்மீது அரசு சேறு பூசும் நடவடிக்கையில் தற்போது இறங்கியுள்ளது. இதற்காக அரச ஊடகங்களை பாவித்து மக்களை ஏமாற்றி வருகின்றது.

வியாழக்கிழமை தேர்தல் பிரசாரம் தொடர்பில் 20/20 போட்டி தொடர்கின்றது. இந்நிலையில் தேர்தல் சட்டவிதிகளை மீறிய செயற்பாடுகள் இடம்பெறலாம். ஜே.வி.பி. உறுப்பினர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வரும் நிலையில் எம் மீதும் ஆரம்பித்துள்ளது. கிழக்கிலுள்ள எமது கட்சி உறுப்பினரான சசிதரன் வீட்டின் மீது குண்டு வீசப்பட்டுள்ளதுடன் கம்புறுப்பிட்டியிலுள்ள எமது அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது. அரசு அரசியலமைப்பை மீறி செயற்படுவதனாலேயே இவ்வாறான தேர்தல் சட்டவிதிகளை மீறும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. 17 ஆவது அரசியல் திருத்தம் அமுல்படுத்தப்பட்டிருந்தால் சுயாதீன தேர்தல், பொலிஸ் உட்பட ஏனைய ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் தேர்தல் சுயாதீனமாக இடம்பெற்றிருக்கும். இந்நிலையில் தேர்தல் வன்முறைகள் மற்றும் சட்டவிதிகளை மீறும் வகையிலான செயற்பாடுகளை தடுப்பதற்கு நடவடிக்கையெடுப்பதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதனை நாம் வரவேற்கின்றோம்.

இன்று அலரி மாளிகை அன்னதான மடமாக மாறியுள்ளது. இது தேர்தல் சட்டவிதிகளை மீறிய செயற்பாடாகும். அவர்கள் சொந்த பணத்தைக் கொண்டு இதனை செய்தால் பிரச்சினையில்லை. அரச இடம் மற்றும் நிதியைக் கொண்டு மேற்கொள்வதால் எதிர்க்கின்றோம். பொலிஸ் அதிகாரிகள் நீதியாகவும் நேர்மையாகவும் செயற்படுகின்றனர். எனினும் அதிலுள்ள சிலர் பக்கச்சார்பாக செயற்படுகின்றனர். எனவே சகல தரப்பினரும் நடுநிலையுடன் செயற்படவேண்டுமெனக் கோருகின்றோம்.

தேர்தல் வரலாற்றில் இத்தேர்தலிலேயே அதிகளவு வன்முறைகள் இடம்பெறப் போகின்றன. இதனை அரசே தற்போது ஆரம்பித்துள்ளது. அரச செலவுடனேயே பதாகைகள் அமைக்கப்படுவதுடன் நியமனங்களும் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையாளர் தேர்தல் காலப்பகுதியில் இடமாற்றம் மேற்கொள்ள வேண்டாமெனக் கோரிய நிலையில் வடமத்திய மாகாணத்தில் 205 பேர் இடமாற்றப்பட்டுள்ளனர். இது சட்டவிரோதமானது.

அரச ஊடகங்களில் இரண்டில் முக்கிய பதவிகளை வகிப்பவர்களுக்கு அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஊடகங்கள் எவ்வாறு நேர்மையாக செயற்படும்.தேர்தல் வடக்கில் சுயாதீனமாக இடம்பெற அதற்கான சூழல் ஏற்படுத்தப்படவில்லை. நாம் வடக்கில் பிரசாரம் முன்னெடுக்க அனுமதி பெற்றே செல்ல வேண்டியுள்ளது. குறிப்பாக முகாம்களிலுள்ள மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க அவர்கள் அனைவரையும் விடுவிக்குமாறு கோருகின்றோம்.

தற்போது முகாம்களில் எஞ்சியுள்ளவர்களில் 75 வீதமானவர்களுக்கு வீடுகள் உள்ளன. எனவே இவர்களை அடைத்து வைக்க வேண்டாமெனக் கோருகின்றேன். மக்கள் தமது விருப்புக்கேற்ப எந்த அழுத்தமுமின்றி சுயாதீனமாக வாக்களிக்கவும் எதிர்க்கட்சிகள் பிரச்சினையின்றி சுதந்திரமாக பிரசாரத்தை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பில் அரசுக்கு முக்கிய பங்குண்டு.

வெள்ள அனர்த்தம் – கிழக்கில் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு

front.jpgகிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஒரு இலட்சத்து 40 ஆயிரத்து 363 குடும்பங்களைச் சேர்ந்த 5 இலட்சத்து ஆயிரத்து 363 பேர் பாதிக்கப்பட்டதாக தேசிய அனர்த்த நிவாரண நிலையப் பணிப்பாளர் சரத் பெரேரா நேற்றுத் தெரிவித்தார்.

இந்த வெள்ள நிலைமையினால் 136 வீடுகள் முழுமையாக அழிவுற்றுள்ளதுடன் 1336 வீடுகள் பகுதியாக சேதமடைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த வார இறுதியில் பெய்த அடை மழையினால் இவ்வாரத்தின் முற்பகுதியில் அம்பாறை, மட்டக்களப்பு, திருமலை மாவட்டங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாகவே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்:- கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிப்புக்களின் விபரங்களை அந்தந்த மாவட்ட செயலாளர்கள் அனுப்பி வைத்துள்ளார்கள்.

அம்பாறை மாவட்ட செயலாளரின் தகவலின் படி, அங்குள்ள 15 பிரதேச வாழும் 54 ஆயிரத்து 308 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 75 ஆயிரத்து 730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு இரு மரணங்கள் இடம்பெற்றுள்ளன. அத்தோடு 45 வீடுகள் முழுமையாகவும், 316 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன.

எட்டாவது கிராமிய மின்விநியோகத் திட்டம்!

எட்டாவது கிராமிய மின்விநியோகத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.
57 மில்லியன் யூரோவை ஈரான் அரசாங்கம் இத்திட்டத்திற்கு கடனுதவியாக வழங்குகின்றது. இத்திட்டத்தினூடாக 1000 கிராமங்களைச் சேர்ந்த 1 இலட்சத்து 80 ஆயிரம் பாவனையாளர்கள் நன்மையடைவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேர்தலை சிறந்த முறையில் நடத்த அரசு ஒத்துழைப்பு வழங்கும்

vote.jpgநீதியானதும், நியாயமானதுமான தேர்தலை நடத்தி முடிப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், தகவல், ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலை சிறந்த முறையில் நடத்துவதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை தேர்தல் ஆணையாளருக்கு வழங்க தயாராகவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை ஊடகங்களுக்கு அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்று பிற்பகல் அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில் :- கடந்த காலங்களிலும் சிறந்த தேர்தல்களை நடத்துவதற்கான ஒத்துழைப்புக்களை அரசாங்கம் எல்லா சந்தர்ப்பங்களிலும் வழங்கியுள்ளது.

புனித முஹர்ரம் மாத ஆரம்பம்

வியாழன் மாலை மஃரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளி வாசலில் நடைபெற்ற பிறைக்குழு மாநாட்டில் புனித முஹர்ரம் மாதத்தின் தலைப்பிறை வியாழன் மாலை தென்பட்டதற்கான தகவல்கள் கிடைக்கப்பெறாமையினால் துல்ஹிஜ்ஜஹ் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்து வெள்ளி மாலை சனி இரவு புனித முஹர்ரம் மாதத்தை ஆரம்பிப்பதென தீர்மானிக்கப்பட்டது.

இம் மாநாட்டில் கலந்துகொண்ட உலமாக்கள், கதீப்மார்கள், அகில இலங்கை ஜம்இயதுல் உலமா, ஷரீஆ கவுன்சில், அன்ஜுமன் பாயிஸ் இ. ரஸா (மேமன் சங்கம்) முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஜும்ஆ பள்ளி வாசல்கள், ஸாவியா, தக்கியா நிருவாகிகள் ஆகியோரால் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. இதன் பிரகாரம் ‘புனித ஸபர்’ மாதத்தின் தலைப்பிறை பார்க்க வேண்டிய நாள் (புனித முஹர்ரம் 29) 16.01.2010 சனி பின்னேரம் ஞாயிறு இரவு எனவும் முடிவு செய்யப்பட்டது.

அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைப்பது நடைமுறைச் சாத்தியமற்றது -அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா

anura-priya.jpgபாராளு மன்றத்தில் அரசாங்கத்துக்கு பெரும்பான்மைப் பலம் இல்லாத நிலையில் அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைப்பது நடைமுறைச்சாத்தியமற்றது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார் .

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,

நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு வழங்க முன்வரும்போது அவர்களுக்கு அமைச்சுப் பொறுப்புகள் வழங்குவது சரியானதே. இதற்காக அரசாங்கம் புதிய அமைச்சுக்களை உருவாக்கவில்லை. ஏற்கனவே இருந்த அமைச்சுக்களுக்கே அமைச்சர்களாக புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதி ஜே.ஆர். ஜெயவர்தனாவின் ஆட்சிக் காலத்தில் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின்படி நூற்றுக்கும் அதிகமான அமைச்சர்கள் நியமிக்கபட்டனர் என்பது அனைவரும் அறிந்ததே.

பொது மக்களிடமிருந்து அறவிடப்படும் வரிகள் அமைச்சர்களுக்கு மட்டும் செலவிடப்படுவதில்லை. அவற்றில் பெருந்தொகைப் பணம் நாட்டின் இலவசக் கல்வி மற்றும் சுகாதார சேவை என்பனபோன்றவற்றுக்குச் செலவிடப்படுகின்றன. உலகில் இலவசக் கல்வியும் மருத்துவ வசதிகளும் வழங்கப்படும் ஒரே நாடு எமது இலங்கையே என்றும் அமைச்சர் கூறினார்.

புதிய நியமனங்கள் இடமாற்றங்கள் பதவி உயர்வுகள் இடை நிறுத்தம்;!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையாளரின் உத்தரவுக்கு மதிப்பளிக்கும் வகையில் புதிய நியமனங்கள் இடமாற்றங்கள் பதவி உயர்வுகள் என்பவற்றை இடைநறுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் சுகாதார சேவை போன்ற அத்தியவசிய சேவைகளில் இதற்கு விதிவிலக்களிக்கப்பட வேண்டும் என அமைச்சரவையால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஐரோப்பிய ‘புலி’ ஆதரவாளர் மகிந்த ராஜபக்சவுக்காக பிரச்சாரம் செய்ய இலங்கை செல்கிறார். : த ஜெயபாலன்

Nadarajah_Sethurubanவருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் நடராஜா சேதுரூபன் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும் தமிழ் மக்களின் விவகாரங்கள் தொடர்பாக ஜனாதிபதிக்கு ஆலோசணை வழங்குபவருமான கலாநிதி லெவின் வி சி ராஜரட்ணம் தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ் காலப்பகுதியில் இலங்கை வரவுள்ள சேதுரூபன் இலங்கையில் உள்ள குறிப்பாக தமிழ் ஊடகங்களுக்கு ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து நேர்காணல்கள வழங்க இருப்பதாகவும் கலாநிதி லெவின் வி சி ராஜரட்ணம் தெரிவித்துள்ளார். இத்தகவல் உண்மையானது என்பதை தேசம்நெற்க்கு உறுதிப்படுத்திய சேதுரூபன் இன்னும் இரு வாரங்களுக்குள் தான் இலங்கை செல்லவுள்ளதாகவும் தெரிவித்தார்.  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குழு ஒன்று இலங்கையில் இருந்து நோர்வேக்கு வரவுள்ளதாகக் கூறிய அவர் இக்குழு சர்வதேச ஆதரவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு திரட்டும் நோக்கில் வருவதாகவும் தெரிவித்தார். விரைவில் இலங்கை செல்லவுள்ள சேதுரூபன் மீண்டும் அக்குழுவுடன் நோர்வே வரலாம் எனவும் கூறினார்.

நடராஜா சேதுரூபன் இலங்கைத் தமிழ் மக்களின் வாக்கு வங்கிமீது பிடிமானத்தை கொண்ட ஒருவரல்ல. ஆனால் இலங்கையில் ஊடகவியலாளராகக் கடமையாற்றிய சேதுரூபன் காலஞ்சென்ற தவிபு இன் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் அன்புக்குரியவருடன் பணியாற்றியவர். அதன் மூலம் அன்ரன் பாலசிங்கத்துக்கு அறிமுகமானவர். 2002 நோர்வேயில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ரிபிசி ஊடகவியலாளராகக் கலந்துகொண்ட சேதுரூபன் அன்ரன் பாலசிங்கத்துடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டவர்.

அதன் பின்னர் ரிபிசி வானொலியில் ரிபிசி 10வது ஆண்டு : கடந்து வந்த பாதை : த ஜெயபாலன் ஏற்பட்ட முரண்பாட்டுடன் அவ்வானொலியைவிட்டு வெளியேறி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான செயற்பாடுகளில் ஈடுபட்டவர். குறிப்பாக ரிபிசி யில் இருந்த காலத்தில் நட்பான ஹரோ கவுன்சிலர் தயா இடைக்காடர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான உண்ணாவிரதம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்ட போது அதன் பின்புலத்தில் நின்றவர்களில் சேதுரூபன் குறிப்பிடத்தக்கவர். இக்காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து விலகிய ஆர் ஜெயதேவனுக்கு எதிரான மிகக் கடுமையான பிரச்சாரங்கள் சேதுரூபனால் முன்னெடுக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பானவர்களின் அரசியல் நிலைப்பாடுகளில் திடீர் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த ஆர் ஜெயதேவன், ரிபிசி வானொலி என்பன தற்போது அரசுக்கு எதிரான போக்கை வெளிப்படுத்துகின்றன. அன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த சேதுரூபன் தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கின்றார்.

தற்போது சேதுரூபனுடன் தொடர்புடைய எதிரும் புதிருமான சட்ட நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நோர்வேயில் வாழும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளரான நெடியவனின் மனைவியின் குடும்பத்தினர் தான் இலங்கை அரசுக்கு உளவு பார்த்து வழங்குவதாக ஒஸ்லோவிற்கு வெளியே உள்ள மோல்டே பொலிஸ் நிலையத்தில் குற்றப்பதிவு செய்துள்ளதாக சேதுரூபன் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மற்றுமொரு பொறுப்பாளரான முரளி என்பவரும் அதே குற்றச்சாட்டை ஸ்ரோனர் பொலிஸ் நிலையத்திலும் தன்மீது பதிவு செய்திரப்பதாகவும் தெரிவித்தார். நோர்வேயில் மற்றுமொரு அரசுக்கு சார்பாக உளவு பார்ப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

தற்போது நோர்வே நியூஸ் என்ற இணையத்தளத்தின் ஆசிரியராகச் செயற்படும் சேதுரூபன் ஏசியன் ரிபியூன் ஆசிரியர் கெ ரி ராஜசிங்கத்திற்கு எதிராக மானநஸ்ட வழக்கைத் தொடுத்துள்ளார். சுவீடனில் வாழும் கே ரி ராஜசிங்கம் பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் எனத் தன்னைக் குறிப்பிட்டு தன் பற்றிய அபாண்டமான செய்திகளை வெளியிட்டதாக சேதுரூபன் குற்றம்சாட்டியுள்ளார். Submissions_to_the_court_2009-09-16_and_2009-09-30.pdf , Letter_from_the_court_dated_2009-12-03_and_submission_from_the_defendants_dated_2009-11-16.pdf

இதே சமயம் லண்டன் ரிபிசி வானொலி உடைப்பிலும் சேதுரூபன் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்று குற்றம்சாட்டப்பட்டு இருந்தார்.

இவற்றுக்கிடையே ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டின் ஆதரவுடன் போட்டியிடும் முன்னாள் ஜெனரல் சரத் பொன்சேகாவின் சட்டக் குழு தன்னுடன் தொடர்பு கொண்டதாகவும் சேதுரூபன் தெரிவிக்கின்றார். ஏசியன் ரிபியூன் ஆசிரியர் கே ரி ராஜசிங்கம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர். தற்போது ஏசியன் ரிபியூன் இணையத்திற்கான நிதியை இலங்கை அரசே வழங்கி வருகின்றது என்ற செய்தி கடந்த ஆண்டு இலங்கைத் தேசிய நாளிதள்களில் வெளிவந்திருந்தது. அண்மையில் சரத் பொன்சேகா பற்றிய ஆதாரமற்ற செய்திகள் ஏசியன் ரிபியூனில் வெளிவந்தது தொடர்பாக சரத் பொன்சேகாவின் சட்ட குழு ஏசியன் ரிபியூன் மீதும் கே ரி ராஜசிங்கம் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க முற்பட்டு உள்ளனர். ஏசியன் ரிபியூன் மீது ஏற்கனவே சேதுரூபனின் வழக்கும் இருப்பதால் அது பற்றிய விபரம் அறியவே சரத் பொன்சேகாவின் சட்டக் குழு சேதுரூபனைத் தொடர்பு கொண்டதாக தெரியவருகின்றது.

மகிந்த ராஜபக்சவிற்கு சேதுரூபனின் ஆதரவு என்பது இவ்வாறான சட்டச் சிக்கல்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கான ஒரு நகர்வா எனக் கேட்ட போது எவ்வித கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்கான வாய்ப்பும் உள்ளதா எனக் கேட்ட போது ‘சரத் பொன்சேகா ஆட்சிக்கு வரும்பட்சத்தில் ஆயுதக் குழுக்கள் அனைத்தும் இல்லாமல் போய்விடும் அதுவொரு நல்லஅம்சம்’ எனத் தெரிவித்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராவதற்கோ அல்லது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் உண்டா எனக் கேட்டதற்கு இப்போதைக்கு அவை பற்றி எதுவும் குறிப்பிட முடியாது எனத் தெரிவித்தார்.

._._._._._.

த ஜெயபாலனின் குறிப்பு:

//இலங்கையில் ஊடகவியலாளராகக் கடமையாற்றிய சேதுரூபன் காலஞ்சென்ற தவிபு இன் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் முதல் மனைவியுடன் பணியாற்றியவர்.// என்று ஆரம்பத்தில் எழுதப்பட்டு இருந்தது.

மேற்படி குறிப்பில் //’முதல் மனைவியுடன்’ என்பது ‘அன்புக்குரியவருடன்’// என்று வந்திருக்க வேண்டும். தகவல் மூலம் அன்புக்குரியவர் என்று அவரது பெயரைக் குறிப்பிட்டு இருந்தது. அதனைக் கேட்டுப் பதிவு செய்யும் போது நான் தவறாக அது அவருடைய மனைவி என்று அர்த்தப்படுத்திக் கொண்டேன். மேற்படி அந்த அன்புக்குரியவருடன் சேது வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றி இருந்தார்.

தவறுக்கு வருந்துகிறேன். தற்போது திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது.

த ஜெயபாலன்

முதல் வெற்றியைப் போன்று இரண்டாவதையும் வெற்றிகொள்வேன் – ஜனாதிபதி

presi_election.jpgமுதல் வெற்றியைப் போன்று இரண்டாவது வெற்றியையும் நிச்சயம்  பெறுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவை தேர்தல் ஆணையாளர் நாயகம் செயலகத்தில் தாக்கல் செய்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

முதல் வெற்றியாக யுத்தத்தை வெற்றிகொண்டென். அதேபோன்று இரண்டாவது வெற்றியாக பொருளாதார வெற்றியையும் நிச்சயமாகப் பெறுவேன். நாட்டின் முன்னேற்றத்தக்காவே பாடுபடுவதாகவும் ஜனாதிபதி மெலும் தெரிவித்தார்.

அர்ஜூனா ரணதுங்க ஜெனரல் பொன்சேகாவிற்கு ஆதரவு.

arjuna-ranatunga.jpgசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூனா ரணதுங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக இன்று அறிவித்துள்ளார்.