முன்னாள் ஐரோப்பிய ‘புலி’ ஆதரவாளர் மகிந்த ராஜபக்சவுக்காக பிரச்சாரம் செய்ய இலங்கை செல்கிறார். : த ஜெயபாலன்

Nadarajah_Sethurubanவருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் நடராஜா சேதுரூபன் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும் தமிழ் மக்களின் விவகாரங்கள் தொடர்பாக ஜனாதிபதிக்கு ஆலோசணை வழங்குபவருமான கலாநிதி லெவின் வி சி ராஜரட்ணம் தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ் காலப்பகுதியில் இலங்கை வரவுள்ள சேதுரூபன் இலங்கையில் உள்ள குறிப்பாக தமிழ் ஊடகங்களுக்கு ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து நேர்காணல்கள வழங்க இருப்பதாகவும் கலாநிதி லெவின் வி சி ராஜரட்ணம் தெரிவித்துள்ளார். இத்தகவல் உண்மையானது என்பதை தேசம்நெற்க்கு உறுதிப்படுத்திய சேதுரூபன் இன்னும் இரு வாரங்களுக்குள் தான் இலங்கை செல்லவுள்ளதாகவும் தெரிவித்தார்.  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குழு ஒன்று இலங்கையில் இருந்து நோர்வேக்கு வரவுள்ளதாகக் கூறிய அவர் இக்குழு சர்வதேச ஆதரவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு திரட்டும் நோக்கில் வருவதாகவும் தெரிவித்தார். விரைவில் இலங்கை செல்லவுள்ள சேதுரூபன் மீண்டும் அக்குழுவுடன் நோர்வே வரலாம் எனவும் கூறினார்.

நடராஜா சேதுரூபன் இலங்கைத் தமிழ் மக்களின் வாக்கு வங்கிமீது பிடிமானத்தை கொண்ட ஒருவரல்ல. ஆனால் இலங்கையில் ஊடகவியலாளராகக் கடமையாற்றிய சேதுரூபன் காலஞ்சென்ற தவிபு இன் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் அன்புக்குரியவருடன் பணியாற்றியவர். அதன் மூலம் அன்ரன் பாலசிங்கத்துக்கு அறிமுகமானவர். 2002 நோர்வேயில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ரிபிசி ஊடகவியலாளராகக் கலந்துகொண்ட சேதுரூபன் அன்ரன் பாலசிங்கத்துடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டவர்.

அதன் பின்னர் ரிபிசி வானொலியில் ரிபிசி 10வது ஆண்டு : கடந்து வந்த பாதை : த ஜெயபாலன் ஏற்பட்ட முரண்பாட்டுடன் அவ்வானொலியைவிட்டு வெளியேறி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான செயற்பாடுகளில் ஈடுபட்டவர். குறிப்பாக ரிபிசி யில் இருந்த காலத்தில் நட்பான ஹரோ கவுன்சிலர் தயா இடைக்காடர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான உண்ணாவிரதம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்ட போது அதன் பின்புலத்தில் நின்றவர்களில் சேதுரூபன் குறிப்பிடத்தக்கவர். இக்காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து விலகிய ஆர் ஜெயதேவனுக்கு எதிரான மிகக் கடுமையான பிரச்சாரங்கள் சேதுரூபனால் முன்னெடுக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பானவர்களின் அரசியல் நிலைப்பாடுகளில் திடீர் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த ஆர் ஜெயதேவன், ரிபிசி வானொலி என்பன தற்போது அரசுக்கு எதிரான போக்கை வெளிப்படுத்துகின்றன. அன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த சேதுரூபன் தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கின்றார்.

தற்போது சேதுரூபனுடன் தொடர்புடைய எதிரும் புதிருமான சட்ட நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நோர்வேயில் வாழும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளரான நெடியவனின் மனைவியின் குடும்பத்தினர் தான் இலங்கை அரசுக்கு உளவு பார்த்து வழங்குவதாக ஒஸ்லோவிற்கு வெளியே உள்ள மோல்டே பொலிஸ் நிலையத்தில் குற்றப்பதிவு செய்துள்ளதாக சேதுரூபன் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மற்றுமொரு பொறுப்பாளரான முரளி என்பவரும் அதே குற்றச்சாட்டை ஸ்ரோனர் பொலிஸ் நிலையத்திலும் தன்மீது பதிவு செய்திரப்பதாகவும் தெரிவித்தார். நோர்வேயில் மற்றுமொரு அரசுக்கு சார்பாக உளவு பார்ப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

தற்போது நோர்வே நியூஸ் என்ற இணையத்தளத்தின் ஆசிரியராகச் செயற்படும் சேதுரூபன் ஏசியன் ரிபியூன் ஆசிரியர் கெ ரி ராஜசிங்கத்திற்கு எதிராக மானநஸ்ட வழக்கைத் தொடுத்துள்ளார். சுவீடனில் வாழும் கே ரி ராஜசிங்கம் பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் எனத் தன்னைக் குறிப்பிட்டு தன் பற்றிய அபாண்டமான செய்திகளை வெளியிட்டதாக சேதுரூபன் குற்றம்சாட்டியுள்ளார். Submissions_to_the_court_2009-09-16_and_2009-09-30.pdf , Letter_from_the_court_dated_2009-12-03_and_submission_from_the_defendants_dated_2009-11-16.pdf

இதே சமயம் லண்டன் ரிபிசி வானொலி உடைப்பிலும் சேதுரூபன் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்று குற்றம்சாட்டப்பட்டு இருந்தார்.

இவற்றுக்கிடையே ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டின் ஆதரவுடன் போட்டியிடும் முன்னாள் ஜெனரல் சரத் பொன்சேகாவின் சட்டக் குழு தன்னுடன் தொடர்பு கொண்டதாகவும் சேதுரூபன் தெரிவிக்கின்றார். ஏசியன் ரிபியூன் ஆசிரியர் கே ரி ராஜசிங்கம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர். தற்போது ஏசியன் ரிபியூன் இணையத்திற்கான நிதியை இலங்கை அரசே வழங்கி வருகின்றது என்ற செய்தி கடந்த ஆண்டு இலங்கைத் தேசிய நாளிதள்களில் வெளிவந்திருந்தது. அண்மையில் சரத் பொன்சேகா பற்றிய ஆதாரமற்ற செய்திகள் ஏசியன் ரிபியூனில் வெளிவந்தது தொடர்பாக சரத் பொன்சேகாவின் சட்ட குழு ஏசியன் ரிபியூன் மீதும் கே ரி ராஜசிங்கம் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க முற்பட்டு உள்ளனர். ஏசியன் ரிபியூன் மீது ஏற்கனவே சேதுரூபனின் வழக்கும் இருப்பதால் அது பற்றிய விபரம் அறியவே சரத் பொன்சேகாவின் சட்டக் குழு சேதுரூபனைத் தொடர்பு கொண்டதாக தெரியவருகின்றது.

மகிந்த ராஜபக்சவிற்கு சேதுரூபனின் ஆதரவு என்பது இவ்வாறான சட்டச் சிக்கல்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கான ஒரு நகர்வா எனக் கேட்ட போது எவ்வித கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்கான வாய்ப்பும் உள்ளதா எனக் கேட்ட போது ‘சரத் பொன்சேகா ஆட்சிக்கு வரும்பட்சத்தில் ஆயுதக் குழுக்கள் அனைத்தும் இல்லாமல் போய்விடும் அதுவொரு நல்லஅம்சம்’ எனத் தெரிவித்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராவதற்கோ அல்லது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் உண்டா எனக் கேட்டதற்கு இப்போதைக்கு அவை பற்றி எதுவும் குறிப்பிட முடியாது எனத் தெரிவித்தார்.

._._._._._.

த ஜெயபாலனின் குறிப்பு:

//இலங்கையில் ஊடகவியலாளராகக் கடமையாற்றிய சேதுரூபன் காலஞ்சென்ற தவிபு இன் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் முதல் மனைவியுடன் பணியாற்றியவர்.// என்று ஆரம்பத்தில் எழுதப்பட்டு இருந்தது.

மேற்படி குறிப்பில் //’முதல் மனைவியுடன்’ என்பது ‘அன்புக்குரியவருடன்’// என்று வந்திருக்க வேண்டும். தகவல் மூலம் அன்புக்குரியவர் என்று அவரது பெயரைக் குறிப்பிட்டு இருந்தது. அதனைக் கேட்டுப் பதிவு செய்யும் போது நான் தவறாக அது அவருடைய மனைவி என்று அர்த்தப்படுத்திக் கொண்டேன். மேற்படி அந்த அன்புக்குரியவருடன் சேது வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றி இருந்தார்.

தவறுக்கு வருந்துகிறேன். தற்போது திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது.

த ஜெயபாலன்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

70 Comments

  • சோழன்
    சோழன்

    மே17 க்கு முன் வன்னியின் கட்டுக்குள் இருந்தவர்களிற்கு அடுத்த தெரிவு பேரினவாதத்துடன் கை கோர்த்து சுதந்திர பறவையாக உலா வர ஓரு ஆசை அதற்கு பேரினவாதத்திற்கு புண்ணியதார்த்தம் செய்து தொட்டுவணங்கதான் வேண்டும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    ஜெயபாலன்,
    சேதுரூபன் ஊடகவியலாளராக இலங்கையில் இருந்ததாக தங்களுக்கு யார் சொன்னது?? இவர் ஐரோப்பியாவில் தன்னைத் தானே ஊடகவியலாளர் என அறிவித்து கொண்டவர். பிரித்தானியாவில் வசித்து வந்த இவர், எதனால் பிரித்தானியாவை விட்டு ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது என்பதையும் நீங்கள் தெளிவாக்கியிருக்கலாம். இவர் மகிந்தவிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வெளிக்கிட்டு, ஆதரவாக விழவிருக்கும் தமிழர்களின் வாக்குகளையும் விழாமல் வைக்கவே பயன்படப் போகின்றது.

    Reply
  • Sethurupan
    Sethurupan

    லண்டன் ரிபிசி வானொலி உடைப்பிலும் சேதுரூபன் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்று குற்றம்சாட்டப்பட்டு இருந்தார். ஆனால் பிரித்தானிய அரசும் அதன் உளவுத்துறையும் அதனை விசாரித்து விடுதலைப் புலிகளுடன் தொடர்பற்றவர் என்று தெரிவித்திருந்தார்கள்.

    ஆசியன்ரிபுயுன் இணையம் சேதுவை புலி என்று முத்திரை குத்தியது ரிபிசி வானொலி பிரச்சனைக்கு முன்னதே தவிர ரிபிசி சிக்கலுக்கு பின்னர் இல்லை.

    Reply
  • பல்லி
    பல்லி

    இது எந்த சேதுரூபன் நிழலா? நிஜமா?
    அதை சொல்லுகப்பா முன்னதாக;

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பல்லி,
    சந்தேகமே வேண்டாம் இது சேதுவி்ன் நிழல் தான். காரணம் உண்மையான சேதுவிற்கு கணனியில் ஒழுங்காக தமிழ் எழுத வராது. அவரின் தமிழை வாசித்தால், வாசித்தவர்கள் திரைப்பட சேதுவாகி விடுவார்கள். இவ்விடயம் சேதுவை நன்கு தெரிந்தவர்களுக்குத் தெரியும்.

    Reply
  • மோகன்
    மோகன்

    இதை யாரோ எழுதி அனுப்பியிருந்தால் பரவாயில்லை. ஜெயபாலன் சேதுரூபன் பற்றி அறிந்தவர் போல அவர் பற்றிய பிழையான தகவல்களை வழங்கியிருப்பது தகவல் நம்பகத்தன்மை குறித்த கேள்வியே எழும்புகிறது. தன்னைப் பற்றி எப்போதுமே பில்டப்புகளை பரப்பிவிடுவதில் கில்லாடி சேதுரூபன். இலங்கையில் ஒரு போதும் எங்குமே ஒரு ஊடகவியலாளராக இருந்ததுமில்லை. இருந்ததாகக் கூறி ஏனைய இடங்களில் தனக்கான இடத்தை பெற முயற்சித்தாலும், அதற்குரிய அடிப்படை மொழி அறிவோ, ஊடக அறமோ, ஊடக அனுபமோ இருந்ததில்லை. அவர் குறித்த தகவல்களை சேதுரூபனே கூறியிருக்கும் பட்சத்தில் சேதுரூபன் குறிப்பிட்டதாகவே குறிப்பிட்டிருக்கலாம். ஜெயபாலன் தனக்குத் தெரிந்திதாகக் கூறியிருக்கத் தேவையில்லை.

    Reply
  • பாலன்
    பாலன்

    சேது வீரகேசரியிலும் இலங்கை ரூபவாகினியிலும் ஒரு ஊடகவியலாளராக இருந்தவர்.

    தமிழ்/ஆங்கிலம்/சிங்களம்/நோர்வே / சரளமாக படித்தவர்.

    தனது வேலைக்கு றஸ்சிய மொழிகளை பயன்படகூடிய விதத்தில் பயன்படுத்தகூடியவர்.

    நோர்வே நாட்டில் கணக்கியல் துறையிலும், இலங்கையில் பொருளாதார துறையிலும், பிரித்தானியாவில் கணக்காய்வு துறையிலும் படித்து முடித்து
    தற்போது ஊடகத்துறையில் படிப்பையும், அரச நிர்வாக துறையில் பட்டபடிப்பையும், வேறு 02 நாடுகளில் படித்து வருகிறார் என அறியமுடிகிறது. தற்போது கணனி துறையிலும் நோர்வே அரசு கல்வி வசதி கொடுத்துள்ளது.

    தமிழ் ஊடகத்துறையினருடன் ஒப்பிடும்போது அதிக பட்டம் கல்வி அறிவு உடையவர்.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    When does a film become a philosophy?
    When does a creator become God?
    When does a work of art become a miracle?
    When does a dream become so real that we can almost reach out and touch it?
    James Cameron’s new masterpiece Avatar is about the power of dreams.

    B. Man Versus Machine.
    Like The Matrix and Star Wars before that, Avatar too is the quintessential story about good warriors led by the destined Chosen One battling evil oppressors who control the system. Today, with the ever-increasing role of technology, it’s not a fair match at all. The villains of today have become more difficult to beat, they have become more perverted in their greed and will stop at nothing to win. The villains today are companies with deep pockets, people in white collar jobs controlling people in army fatigues to get them what they want by force simply because they can.
    “இந்த “அவதார்” திரைப்படம் ஒரு “இதிகாசம்” என்று கூறப்பட்டிருக்கிறது-“http://beta.thehindu.com/arts/movies/article66463.ece?homepage=true”.இதிகாசம் என்றால்,”கனவுலகம்” மட்டுமல்ல,”வரலாறும் கூட”.நவீன இராஜதந்திர- இராணுவ- தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திதான், தற்போதைய பீக்கன் முடிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவுக்குள்ளேயே இதற்கு எதிரான உணர்வுகள் உள்ளன. தானும் தண்ட பாடும்தான் துவக்கத்திலிருந்து பிரச்சனை. நான் இதை சொல்லுவதால், இந்தியாவுக்குள் போராடவேண்டியதுதானே!, ஏன் எங்கள் நிம்மதியைக் குலைக்கிறீர்கள் என்பது, இன்னொரு ஆராயப்படவேண்டிய மூலம். 1980களிலேயே, ஐயோ நீங்கள் திராவிடநாடு?!! கேட்டவர்களா!, உங்கட பிரச்சனை வேற, எங்கடப் பிரச்சனை வேற!, மோட்டு சிங்களவனை கொஞ்சம் மிரட்டி, இந்தியாகிட்ட கதைச்சு, எங்கட ஆட்கள் வென்டிடுவினம், நாங்கள் உழைச்சால் காணும் என்றீர்கள்,- “இயங்கியல்” நிம்மதியாக இருக்கவிட்டதா?. தற்போதைய வில்லன்கள், மிகவும் வில்லங்கமானவர்கள். நிர்வாகம் என்பது “இயந்திரம் போன்றது”. எந்தப் பகுதி, எந்த இனம், எந்த மொழியானாலும் விஷயம் ஒன்றுதான் – செவ்விந்தியர்களுக்கும், அஸ்டெக்குகளுக்கும், ஆப்பிரிக்க அடிமைகளுக்கும் இது பொருந்தும். உதட்டளவில் இதை(இயந்திரம்) எதிர்த்துவிட்டு, உள்ளத்தளவில், இலாபம் இருப்பதால், ஜால்ரா தட்டுவது “கங்காணிகள் குணம்” இன்னும் மாறவில்லை என்பதாகிறது!. யார் எதிரி, யார் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்பது புலனாகிறது. “பூஜியத்திற்கு உள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுக் கொண்டு புரியாமலேயே இருப்பான் ஒருவன்” என்பது போல, “கடவுள் என்பவன்”, “அண்டம் முழுவதுக்கும்” ஒருவன்தான்!. அவனுக்கு தான் கடவுள் என்று கடைசிவரை தெரியாது- உலகில் உள்ள அனைவரும் நீதான் கடவுள் என்று சுட்டிகாட்டும் வரை!. “அசைவியக்கத்திற்கு பிரஞ்கை இல்லை” அதனால் அது ஒரு குழந்தை!. திரு.ஜகதீஸ் சந்திர போஸ் அவர்கள் கண்டுபிடித்த,- பிரபஞ்சத்திற்கு “சக்தி” வழங்கும் “போஸான்(அவர் பெயர்)” என்ற “பார்ட்டிகல்(துகள்)?”,இதனையே தெளிவுப் படுத்த விரும்புகிறது!.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    /சேதுரூபன் ஊடகவியலாளராக இலங்கையில் இருந்ததாக தங்களுக்கு யார் சொன்னது?? இவர் ஐரோப்பியாவில் தன்னைத் தானே ஊடகவியலாளர் என அறிவித்து கொண்டவர்/ பார்த்தீபன் எழுதியதே உண்மை. இந்த சேதுவை எப்படி நம்புவது. நல்ல நண்பனாகவும் இருக்க மாட்டார் நல்ல எதிரியாகவும் இருக்க மாட்டார். மகிந்த கட்சிக்கு மாராப்பு (மார்பில் ஆப்பு) தான். சேதுவின் வாய்கு புலியாதரவாளர்கள் அடித்தார்கள் என்று கேள்வி. அதன் பின்புதான் புலிகளுடன் சிறாச்சுக்கொண்டு திரிகிறார். ஜெயபாலன்! நீங்கள் ஊடகவியலாளர் என்று குறிப்பிடும் இந்த சேதுவின் பக்கத்தை போய் படித்துப்பாருங்கள் இவர் ஊடகவியலாளரா? என்பது புரியும். படு தூசணவார்த்தைகளையே தனது இணையத்தளத்தில் எழுதும் ஒருவரை உங்களால் எப்படி ஒரு ஊடகவியலாளர் என்று சொல்ல முடிகிறது. தனிப்பட்ட தனக்குப் பிடிக்காதவர்களை இணையத்தளத்தில் போட்டு சேறடிப்பதுதான் ஊடகமா? ஊடகங்களின் தொழிலா? இவர் போன்றோர்தான் ஊடகவியலாளர்களா? இவருக்கு மட்டும் தான் இப்படி எழுதமுடியும் என்று எண்ணக்கூடாது.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    /பல்லி
    சந்தேகமே வேண்டாம் இது சேதுவி்ன் நிழல் தான். காரணம் உண்மையான சேதுவிற்கு கணனியில் ஒழுங்காக தமிழ் எழுத வராது. அவரின் தமிழை வாசித்தால் வாசித்தவர்கள் திரைப்பட சேதுவாகி விடுவார்கள். இவ்விடயம் சேதுவை நன்கு தெரிந்தவர்களுக்குத் தெரியும்./- பார்த்தீபன் சேதுவின் இணையத்தளத்தை போய் வாசித்துப்பாருங்கள் தெரியும் நிழலா நிஜமா என்று. அவருக்கு கணனியில் மட்டுமல்ல தமிழே சரியாகத் தெரியுமோ என்பதும் கேள்விதான்.பார்த்தீபன்;பல்லி மோகன் எழுதியது முழு உண்மையே. பாலன் என்ன வெள்ளிபார்த்துப் பார்த்து குத்துறியள் காது. அவரின் தமிழ் எழுத்தைபாக்கத் தெரிகிறது தமிழறிவு.

    //நோர்வே நாட்டில் கணக்கியல் துறையிலும், இலங்கையில் பொருளாதார துறையிலும், பிரித்தானியாவில் கணக்காய்வு துறையிலும் படித்து முடித்து// இப்படி எழுதியிருக்கிறீர்களே. சேது எப்போ நோவேய்குப் போனார்? இலண்டனில் எவ்வளவு காலம் இருந்தார். ஏன் நோர்வேக்குப் போனார் தெரியுமா? நீங்கள் கூறியதன்படி இவ்வளவுக்கும் பட்டப்படடிப்பை முடிக்க குறைந்தது 15வருடங்கள் தேவை. நோர்வேயில் தமிழோ இங்கிலிசோ மூலமொழியல்ல. மொழிபடிக்காமலே படித்து முடித்த பண்டிதர் சேது என்கிறீர்கள். நாங்கள் காது குத்தவில்லை. அதனாலை பூவும் வைக்க இயலாது. தற்போது நோர்வேக்கு தொடர்பு சேதுவைப்பற்றிக் கேட்டபோது சிரிக்கிறார்கள்.

    Reply
  • Anonymous
    Anonymous

    இவர் எழுதுகிற டமில் நியூஷ் வெப் இணையத்தை பார்த்தாலே தெரியும், இவரது தகமையும், திறமையும். பாலன் சொல்கிறபடி கணக்கு விடவும், பொருளை தேடவும், அரச நிர்வாகம் நாடவும் இவரது ‘அதிக பட்டம் கல்வி அறிவு ‘ விளைகிற இடத்தில் அறுவடை செய்யத் தெர்கிறது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பாலன்,
    தங்களுக்கு உண்மையில் சேதுவைத் தெரியுமா?? தெரிந்திருந்தால் உப்படி புலூடா விட முடியாது. சேது வீரகேசரியில் வேலை செய்திருந்தால் அவருக்கு ஏற்கனவே அன்ரன் பாலசிங்கத்தை தெரிந்திருக்க வேண்டும். அடிப்படையே தெரியாமல் சும்மா பூச் சுத்த வெளிக்கிடாதீர்கள்.

    Reply
  • மரியதாசன்
    மரியதாசன்

    இவர்களுக்கு மக்களை அடக்கி ஆள அதிகாரம் தேவைபடுகிறதே தவிர மக்கள் அமைதியுடனும் சுபீட்சத்துடன் வாழ அல்ல.

    Reply
  • mathan
    mathan

    சேது தான் செய்யப்போவதை வெளிப்படையாக சொல்லிப் போட்டுச் செய்கிறார். அவரை தெரிந்தவர்கள் விமர்சிக்கிறீர்கள். நீங்களும் உங்கள் குவாலிபிக்கேசனைச் சொல்லி முகத்தைக்காட்ட மாட்டீங்ட்கள் தேசத்தில். பயம். காரணம் நான் சொல்லத் தேவையில்லை.

    அதேபோல்தான் சிவாஜிலிங்கமும். அவரையும் தாக்கிறீங்கள். என்னைப் பொறுத்தவரையில் இருவரும் வெளிப்படையாகச் சொல்லிப் போட்டுச் செய்கிறார்கள். அந்தவகையில் பாராட்டத்தான் வேணும்.அதேநேரம் நான் இந்த இருவரையும் தெரிந்தவன் அல்ல என்பதையும் நான் எந்தவொருஅரசியலில் சம்பந்தப்பட்டவன் அல்ல என்பதையும் கூறிக்கொள்கிறேன். என்னை அபிப்பிராயம் கேட்டால் இலங்கையில் இருப்பவர்கள், வாக்குப் போடுபவர்கள் தமக்கச் சரியெனப் பட்டதைச் செய்யட்டும் என்பேன்

    Reply
  • பாலன்
    பாலன்

    பார்த்திபன் அன்ரன் பாலசிங்கமும் சேதுவும் ஒரே ஊரவர்கள். சேதுக்கு பாலாவை தெரிய சந்தர்ப்பம் உண்டு.

    குசும்பு – சேது லண்டனில் 03வருடம் / நோர்வெயில் 08 வருடம். தற்போது உலகில் எங்கிருந்தும் எந்த நாட்டு படிப்பையும் படிக்க முடியும். அது படிப்பு அறிவு இருப்பவனுக்கு புரியும்.

    சேது நடாத்தும் இணையம் பல. அதில் இலங்கைநெற்ரும் ஒண்று.

    Reply
  • பல்லி
    பல்லி

    :://சேது நடாத்தும் இணையம் பல. அதில் இலங்கைநெற்ரும் ஒண்று.//
    இருக்கலாம் அத்துடன் நெருப்பு.ORG

    அண்ணன் ராமராஜை கேட்டால் சேதுவின் சாதகம் சொல்லுவார்; இல்லாவிட்டால் அவரது தகமைகளை ரி பி சி உடைப்பில் பார்க்கலாம்: பின்னாடி போங்க தேசத்தில்;

    Reply
  • ஜெயா
    ஜெயா

    தலைவர் இல்லாத பட்டிமன்றம்தான் இங்கு நடக்கிறது ஒரு கருத்தை சொன்னால் அது சரியா? பிழையா? என்ற தீர்வு இல்லை அல்லாவிடில் வாசகர்களிடம் அதைவிட்டுவிடுவது அல்லது நடுநிலைமை இது ஒரு முடிவைத் தராது

    பல விடயங்கள் தெளிவாக தெரிந்தவர்கள் கூட பிழை என்றால் தட்டிக் கேட்டும் சரி என்றால் தட்டிக் கொடுத்தும் எழுதுபவர்கள் கூட ஏன் சரத்துக்கு தான் ஆதரவு என்று எழுதவது எமக்கு எழுதவில்லை. நாங்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பின்புலத்தில் நம்பிக்கை வைத்து அதற்காக இயங்குவத போல் தான் எமது எழுத்துக்கள்.

    லங்காசிறியிடம் வேட்டைக்காரனுக்கு வேட்டு என்று எழுதி அதற்குப் பக்கத்தில் வேட்டைக்காரனுக்கு விளம்பரம் போடுவது போல்த்தான் சேதுவின் பிரச்சினை.

    எங்களது பேனா சிரிக்குதோ? அழுகிறதோ? தெரியாது நாம் எழுதுவதற்கு முதல் தான் இருந்த இடத்திலேயே தனது இந்த குழந்தையையே குழி தோண்டி புதைத்து விட்டுப்போய் இன்று நிர்கதியாய் நிற்கும் அந்த தாயை முதலில் நினைவ கூர்ந்து எழுத வேண்டும். அவர்களுக்குத்தான் தீர்வு வேண்டும்.

    Reply
  • பல்லி
    பல்லி

    மதன் வெளிபடையாக கொடுமை செய்வதை விட மறைமுகமாக நல்லது செய்வதோ அல்லது கொடுமையை தடுப்பதோ மேல் என தங்களுக்கு தெரியாதா என்ன??

    Reply
  • பல்லி
    பல்லி

    //ஏன் சரத்துக்கு தான் ஆதரவு என்று எழுதவது எமக்கு எழுதவில்லை //
    ஜெயா இது புரியவில்லை; முடிந்தால் விளக்கவும் நன்றி;

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    நடராஜா சேதுரூபன் என்பவரின் கடந்த காலமும் நிகழ்காலமும் சர்ச்சைக்குரியனவே. சேதுவினுடைய அல்லது சேதுவின் பின்னணியைக் கொண்ட இணையங்கள் மிக மோசமான தனிநபர் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது. அதில் குறிப்பாக ஆர் ஜெயதேவன் – ரிபிசி வானொலியினர் தொடர்பான தாக்குதல்கள் குறிப்பிடத்தக்கவை. இவற்றில் சில சேதுவினுடையதாகவும் ஏனையவை சேதுவின் பின்னால் நின்றவர்களினாலும் மேற்கொள்ளப்பட்டது. பலரது வன்மமும் சேதுவின் மீது இருந்தபடியால் ஒட்டுமொத்த ஊத்தைத் தனத்திற்கும் சேது சொந்தக்காரர் ஆக்கப்பட்டு ஊதைச் சேது என்ற பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.

    சேது இலங்கையில் வீரகேசரியின் தினசரிப் பதிப்பிலும் குறிப்பாக ரிபிசி யில் இருந்து பிரியும்வரை ரிபிசி யிலும் பணியாற்றியவர். சேதுவுடன் சமகாலத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர்கள் இன்னமும் இலங்கையிலும் ஐரோப்பிய நாடுகளிலும் உள்ளனர். அவர்கள் அதனை உறுதிப்படுத்தியும் உள்ளனர். சேது வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் அன்ரன் பாலசிங்த்தின் அன்புக்குரியவரும் அங்கு பணிபுரிந்திருந்தார். அந்த உறவும் அன்ரன் பாலசிங்கத்தின் ஒரே ஊரவன் என்ற பிடிப்பும் ஒஸ்லோவில் சேதுவின் ரையை பாலா அண்ணை சரி செய்துவிடத் தூண்டியது.

    படித்தவன் எல்லாம் பண்பாணவன் பண்பாணவன் எல்லாம் படித்தவன் என்ற இந்தச் சிந்தகனயே சேதுவினை ஒரு ஊடகவியலாளனாக பொறுப்பான தொழில் செய்பவனாக பார்க்க முடியாமல் தடுக்கின்றது. என்னைப் பொறுத்தவரை சேது ஒரு தெரிந்த கெட்டவன். இங்கு ஒளிவு மறைவு இல்லை.

    ஆனால் இங்கு பின்னூட்டங்கள் சொல்லும் ஊடக நேர்மையை எப்படி மதிப்பிடுவது. ஜனநாயம் மார்க்ஸியம் புரட்சி பேசுகின்ற ஊடகங்களுக்கும் சேதுவின் அன்றைய எழுத்துகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. தமிழ்சேர்க்கிள் இணையத்தளத்தின் இத்தொடுப்பில் உள்ள கருத்துக்களை ஒரு தடவை பார்க்கவும். (18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும்) http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6223:2009-09-11-10-49-49&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50

    சேது பின்னணியில் இருந்ததாகக் குற்றம்சாட்டப்படும் நிதர்சனம் இணையத்தில் அல்லது மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள இணையங்களில் எழுதப்பட்டவைக்கும் தமிழ் சேர்க்கிளில் உள்ள கருத்துக்கும் என்ன வித்தியாசம். தமிழ்சேர்க்கிளில் மே 18க்குப் பின் அதன் மொழியில் ஓரளவு திருப்பம் ஏற்பட்டு உள்ளது. அதற்கு முன் இரயாகரனனின் கட்டுரைக்கும் நிதர்சனம் கட்டுரைகளுக்கும் என்ன வேறுபாடு? நிதர்சனம் கட்டுரையில் மார்க்சியம் சோசலிசம் லெனின் மாஓ போன்ற சொற்கள் காணப்படமாட்டாது. மற்றுப்படி இரு இணையங்களிலும் தமிழில் உள்ள அத்தனை வன்மம் கொண்ட சொற்களையும் பார்க்கலாம்.

    லண்டனில் பத்திரிகை நடத்தியவர் தலைமறைவாக இருந்து நடத்திய பின்னூட்டம்.கொம் இணையத்தளம் அதில் கருத்துக்கள் மொட்டைக் கடிதங்கள் எழுதிய ஜனநாயகவாதிகள்> மாவோயிஸ்ட்டுக்கள் இவர்களையெல்லாம் எப்படி மதிப்பிடுவது. இவர்கள் எழுதியதற்கும் சேது எழுதியதற்கும் எவ்வித வேறுபாடுகளும் இல்லை.

    சேது முக்காடு போடாமல் அவற்றைச் செய்ய மற்றையவர்கள் முக்காடு போட்டுக்கொண்டு அதனைச் செய்கிறார்கள். இந்த ஊத்தைக் கனவான்கள் ஒரு இயக்கத்திற்கு அல்லது ஒருசாராருக்கு மட்டும் உரித்தானவர்கள் அல்ல. இவர்கள் ஜனநாயகம் மார்க்ஸியம் படித்தவன் பொறுப்பான தொழில் செய்பவன் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு சமூகத்தை மெல்ல மெல்ல நாசமாக்குகிறார்கள். சேது போன்றவர்களை இலகுவில் அடையாளம் கண்டு சிகிச்சையளிக்கலாம். ஆனால் மற்றையவர்களை அவ்வளவு இலகுவாக அடையாளம் காணவும் முடியாது சிகிச்சை அளிக்கவும் முடியாது. இவர்களே சமூகத்திற்கு மிக ஆபத்தானவர்கள். மிகமோசமான சமூகக்கொல்லிகள்.

    த ஜெயபாலன்.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    /படித்தவன் எல்லாம் பண்பாணவன் பண்பாணவன் எல்லாம் படித்தவன் என்ற இந்தச் சிந்தகனயே சேதுவினை ஒரு ஊடகவியலாளனாக பொறுப்பான தொழில் செய்பவனாக பார்க்க முடியாமல் தடுக்கின்றது/ உண்மையாக இருக்காலம் ஜெயபாலன். படிப்பு என்பது மனிதனை சிந்திக்கத் தூண்டுகிறது. அறிவு என்பது அறிவதால் வருவதுதானே. அந்த அறிவை சேதுவின் எழுதில் அறிய முடியவில்லை.
    /இவர்கள் ஜனநாயகம் மார்க்ஸியம் படித்தவன் பொறுப்பான தொழில் செய்பவன்/ கிண்டுசியம்>புத்திசம்>கிறிஸ்டியானிசம் போன்று மாக்கிசமும் ஒரு நிசமே. அதாவது மாக்சிசமும் மதமே.

    ஜெயபாலன் தாங்கள் தந்த இணைப்பூடாக தமிழரங்கம் பார்த்தேன் அரங்கம் அசிங்கமாகவே இருக்கிறது. என்ன பெரிய வித்தியாசமில்லை சேதுவின் அண்ணன் தம்பிதான். இவர்கள் யோசிப்பதே இல்லையா?

    Reply
  • பாலன்
    பாலன்

    சேது என்பருடைய இணையத்தளம் என்று நிதர்சனம்.கொம்/நெருப்பு.ஓக் ஆகியவற்றை சொல்ல முடியாது. சேதுவுடன் கனவில் கூட கதைத்திராத புலிகளின் டென்மாக் பொறுப்பாளன் பிரியனுடையதே நெருப்பு.ஓக் ஆனால் அது சேது செய்வதாக போலியாக செய்தி பரப்பட்டது.

    நிதர்சனம்.கொம் சேதுவால் நோர்வேயில் இருந்து செய்திகள் அனுப்பப்படவில்லை ஆனால் சேது அதனுடன் தொடர்பில் இருந்திருக்கலாம் அது அவரடைய தனிப்பட்ட விடயம். நிதர்சனம்.கொம் காவி வந்த செய்திகளுக்கு சேதுவே உரிமம் ஆக முடியாது.

    ஜெயதேவன் தொடர்பாக எதவுமே கதைக்காமல் இருந்த சேதுவை முதலில் தனக்கு எதிராக ஜெயதேவனே ரி.பி.சி ஊடாக தூண்டி இருந்தார் அல்லது ரி.பி.சி தமது எதிரியான சேதுக்கு எதிராக ஜெயதேவனை பயன்படுத்தியது எனலாம்.

    ஆனால் வேறு சில சனல்கள் ஊடாக ரி.பி.சி தொடர்பாகவும் ஜெயதேவன் தொடர்பாக மகிந்த அரசு சேதுவிடம் இரகசியங்களை கேட்டு அறிந்ததால் ஜெயதேவனை எட்டத்தில் வைத்திருந்தனர்.

    ரி.பி.சி க்கு எதிரான சேதுவின் சட்ட நடவடிக்கையோ ஜெயதேவனுக்கு எதிரான சட்டநடவடிக்கையோ இன்னும் முடிந்துவிடவில்லை.

    கே.ரி.றாஜசிங்கம் சேதுவின் சட்ட நடவடிக்கையில் இறுகியுள்ள நிலையில் அது இலங்கை அரசை சர்வதேச நாட்டு நீதிமன்றில் சிக்கலில் மாட்டலாம் என்பதற்காக சேதுவுடன் இலங்கை அரசு பேரம் பேசலில் ஈடுபட்டுள்ளது என்பதே உண்மை.

    சேது இலங்கையின் அனைத்து பொந்துகளுக்குள்ளும் தனது ஊடுருவலை வைத்திருந்தார் என்றே சொல்ல முடியும். சேது கல்வித்தரத்தில் எவரையும் எடைபோடவில்லை ஆனால் ஒருவர் இங்கு கேட்ட கேள்விக்கே பதில் வேறு ஒருவரால் போடபட்டது.

    சேதுவால் இயக்கப்படாத நிதர்சனம்.கொம் இணையத்தை வைத்து சேது கெட்டவன் என்பது தேசம் இணையத்தையே கேவலாமக்கிறது.

    இலங்கைநெட் இணையம் சேதுவால் நடத்தபடுவதாக ஒருவர் எழுதினார் ஆனால் இலங்கைநெட் இணையம் சேதுவால் இயக்கபடுவது இல்லை. இலங்கை.கொம் என்ற இணையமே சேதுவால் இயக்கபடுவது.

    சேதுவை புலிக்கு எதிராக தூண்டிது புலிகள்தான். அதற்கு சேது தன்னை இனங்காட்டி புலிகளுக்கு நோர்வேயில் அரசியல் பாடம் புகட்டி வருகிறார்.

    தமிழ்நியூஸ்வெப்.கொம் தொடர்பாக கருத்து முன்வைக்கபட்டது. அந்த இணையத்தை சென்று வாசித்தேன். ஆரோ வந்து சந்தித்து சேதுவுக்கு செய்த கொடுமைக்கு பகிரங்க மன்னிப்புக்கேட்டு கை எடுத்து கும்பிட்டு மன்றாடியதாக அறிந்தேன்.

    சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் தலைமறைவாக இருப்பதாகவும் அவரும் வந்து இனிமேல் எதுவும் நடவாது என்ற உத்தரவாதம் தந்தால் இணையம் மூடபடும் என சேது கூறியதாகவும் அறிந்தேன். நல்லவிடம் சேது முள்ளை முள்ளால் எடுக்க முனைந்தார் செய்து காட்டி விட்டார். சேது சவால்களை ஏற்பவர் என்றே நான் கருதுகின்றேன்.

    Reply
  • BC
    BC

    //த ஜெயபாலன்-தமிழ்சேர்க்கிள் இணையத்தளத்தின் இத்தொடுப்பில் உள்ள கருத்துக்களை ஒரு தடவை பார்க்கவும்.//

    இது மட்டும் எனக்கு விளங்கவில்லை. நீங்கள் எழுதிய கட்டுரை தமிழ்சேர்க்கிளில் மறு பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. அதற்க்கு புலி ஆதரவாளர்கள் வழக்கம் போல தங்கள் பாணியில் கருத்து(!) தெரிவித்துள்ளனர். இரயாகரனுக்கும் இதற்க்கும் என்ன சம்பத்தம்?

    Reply
  • sinna
    sinna

    பிசி அந்தக் கருத்து எழுதியவர்கள் புலி ஆதரவாளர்கள் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பாலன்,
    சேதுவிற்காக நீங்கள் நன்றாக கதை அளக்கின்றீர்களள். ரிபிசி வானொலியில் சேது இருந்த போதும் சரி அதற்கு பின்னரும் சரி, பல காலமாக சேது எனது நணண்பர் ஒருவருக்குத் தான் தனது ஆக்கங்களின் தமிழ் எழுத்துப் பிழைகளை திருத்தி அனுப்பி வைக்குமாறு அனுப்பி வந்தார். எனது நண்பரும் அதனை செவ்வனே செய்து வந்தார், சேதுவின் ஆக்கங்கள் அரசியல் சம்மந்தமாக இருந்தவரை. ஆனால் சேது பின்பு பல பெண்களைப் பற்றி மிகக் கேவலமாகவும் வேறு பலரை கீழ்த்தரமாகவுமம் அசிங்கமாகவும் எழுத வெளிக்கிட்டு, அவற்றையும் எழுத்துப் பிழைகளை திருத்தித் தருமாறு எனது நண்பருக்கு அனுப்பிய போது, ஆத்திரமுற்ற எனது நண்பர் சேதுவுடனான தனது தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டார். சேது இந்தளவு மோசமானவனாக இருப்பானென்று தான் கனவிலும் நினைக்கவில்லையென்றும், ஊத்தை சேதுவென்று சரியாகத் தான் சொல்லுகின்றார்கள் என்றும் என்னிடம் எனது நண்பர் கூறி வேதனைப்பட்டார்.

    Reply
  • மாயா
    மாயா

    பாவம் சேது, மிக நல்லவர் , படித்தவர் , வல்லவர். ஆனால் கொடுமை என்னவென்றால்? இவர் , தன்னை தானே பிரபல்யப்படுத்திக் கொள்ள ஆசைப்படுபவர். குப்பைகளைக் கொட்டும் புலி ஆதரவு யாழ் இணையம் , அதிகமாக தடை செய்தது, இவரைத்தான். ஒரே நேரத்தில் பல பெயர்களில் அதிகமாக வந்தவர் சேதுதான். தடை செய்யும் ஒவ்வோரு முறையும் , அழுது , அழுது நண்பர்களுக்கு தனி மடலிட்டு தன்னை எழுத இடமளிக்குமாறு கெஞ்சுவார். புலிகளுக்கா எழுதிய இவரது எழுத்துகளை , புலிகளே வெறுத்தனர் என்றால் பாருங்களேன்? இவரது புலி ஆதரவுக் கட்டுரைகள் கூட, புலிகளது தாக்குதல்களை அரசுக்கு சொன்னது. அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. இவரது நிதர்சனம் இணையம் வழி , புலியாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு MSN வழி , வன்னியில் இருந்து செய்திகளை பெற்ற சேது, வன்னியில் இருந்த மொக்கு பொடிகளிடம் தகவல் பெற்று கட்டுரை வரைந்தார். அதையும் வேறு யாரையாவது வைத்தே எழுதினார். இந்தியர்களை வைத்து இணையத்தளம் அமைத்தும் கொடுக்கிறார்? புலத்து வானோலிகளில் எந்த மடையனும் , தொலைபேசியில் கருத்து சொல்லலாம். தண்ணி அடிச்சிட்டு வந்து , வானொலி – தொலைக் காட்சிகளுக்கு போண் போட்டு, என்ன தலைப்பு போகுது என்று பின்பக்கம் மறந்து கதைக்கும் புண்ணாக்கு கூட்டத்துக்கு இடையே , சற்று அலட்டத் தெரிந்த சேது போன்றவர்கள், ஊடகவியலாளர் ஆக முடியாதா என்ன? படிக்காதவன் எல்லாம் புலத்தில் மாஸ்டர் ஆகியிருக்கிறதை போல, படிக்காதவன் பள்ளி்க்கூட வாத்தியாகியிருக்கிற புலத்து கோலங்களை, நாம் கண் கூடாக பார்க்கிறோம்?

    பாலன் சொல்வது போல , இவருக்கு சிங்களம் எல்லாம் தெரியாது. புலத்தில் டொச் கதைக்காதவன் , இலங்கைக்கு போய் டொச்சில் கதைத்து , தான் டொச் அறிவாளி என்பது போன்ற மொக்கு தனமான கதை இது. ( ஏனைய புலம் பெயர் நாட்டவர்கள் , தமது மொழியாகவும் எடுத்துக் கொள்ளலாம்) ஏனைய மொழிகளையும் அப்படித்தான் எடுத்துக் கொள்ள முடிகிறது. தமிழ் , ஆங்கில அறிவு இருக்கலாம். ஓருமுறை இவரது இணையத்தில் வந்த செய்தி என ஒரு சிங்கள பத்திரிகை ஏதோ போட , அது என்னவென்று விழங்காமல் வழக்கு போடப் போவதாக அந்த சிங்கள பத்திரிகைக்கு எழுதியதோடு இல்லாமல் , அதை அவருக்கு தெரிந்த அனைவருக்கும் போர்வர்ட் பண்ணி சுய விளம்பரம் தேட முயன்றவர். நல்ல காலம் அதை பார்த்த சிங்களம் தெரிந்த ஒருவர் , நீர் முட்டாள் தனமாக மாட்டிக் கொள்ளப் போகறீர். அவர் உம்மைப் பற்றி தவறாக ஏழுதவில்லை என சொன்ன பிறகு அமுக்கி வாசித்து , அந்த சிங்கள தினசரியோடு சமரச கடிதம் எழுதினாராம்.

    பலருக்கு , அவர் வழக்கு போடப் போவதாக எழுதியது மட்டுமே தெரியும். அதன் பிறகு சரண்டாரானது தெரியாது . இப்படிப் பல…. ( அவர் வழக்கு போடப் போவதை ஏன் மற்றவர்களுக்கு தெரியப்படுத்துகிறார்? தேவையென்றால் போட்டுவிட்டு போக வேண்டியதுதானே?)

    இவரை ஊடகவியலாளர் என்று லண்டனுக்கு வரவழைக்க ரீபீசி ராமராஜன் ஊடகவியலாளர் என சுத்து மாத்து வீஸா வாங்கி அழைத்தார். கடைசியில் ராமராஜனுக்கே ஆப்பு வைத்தார். இவருக்கு இலங்கையில் பிரச்சனை என ஆனந்தசங்கரியிடம் கடிதம் பெற்றுக் கொண்டார். பின்னர் , அந்த சங்கரிக்கே சங்கூத வெளிக்கிட்டார். இதனிடையே ரீபீசியில் இருந்த அறிவிப்பாளர் இர்பான் (இவர் நிலா முற்றம் என்ற இணையம் , இணைய வானோலியான நிலா வானோலி என்பவற்றை நடத்துகிறார். இவரை தாக்க போனதோடு , அவரது வீட்டுக்குள் சென்று அடாவடித்தனம் செய்யப் போக , அவர் லண்டன் போலீசாருக்கு அறிவிக்க , வந்த பிரச்சனையோடு , நோர்வேக்கு ஓடி வந்து ஒரு பெண்ணை மணந்து தன்னை நோர்வேயில் புலியாக வலம் வந்தவர் சேது.

    இப்போது அரசுக்கு ஆதரவு பிரச்சாரமா? அட பாவமே, இவர் புலியாக தம்மைக் காட்டிக் கொண்டு அரசுக்கு தகவல் வழங்கிய இன்போமர். இதை விட இவராவது , ஊடகவியலாளராவது? வாயை கிளராதேங்கோ? தமிழன் ஏன் , இவ்வளவு பேயனாக இருக்கிறான்?

    Reply
  • பாலன்
    பாலன்

    மாயா யாழ் இணையத்தை சுமார் 6 வருடங்களுக்கு முதல் சென்று வாசித்து கருத்து எழுதினாராம் ஆனால் அதன் பின்னர் அங்கு செல்வது இல்லை காரணம் அவருக்கு நேரம் இல்லையாம்.

    சேது புலிகளின் நிதர்சனத்துடன் எந்த தொடர்பும் நேரடியாக வைத்திருந்தது இல்லை. தனக்கு இந்தியர்கள் எவரையும் இணைய விடயத்தில் தெரியாது இந்தியாவில் குருவி கூட நட்பு இல்லை என்கிறாராம் சேது.

    சிங்கள பத்திரிகை எதுவுடனும் சேது சமரச கடிதம் எழுதவில்லை. பல சிங்கள பத்திரிகைகள் தன்னை புலி என்று எழுதி அதற்கு பின்னர் பகிரங்கமாக மன்னிப்பும் கோரி இருந்தன என்று அதன் ஆதாரத்தை காட்டுகிறார்.

    ரீ.பி.சி றாமறாஜன் சுத்துமாத்து வீசாவை சேதுக்கு கொடுக்கவிலை என்பது ரீபிசி றாமறாஜனுக்கும் தெரியும் வீசா போட்டு லண்டன் வந்து அகதி அந்தஸ்து கோரியவர்களுக்கும் தெரியும். இர்பான் என்பவருடன் சண்டையிட்டது றாஜன் என்பரே தவிர சேது இல்லை. இதுவே தெரியாத மாயா தனது கருத்துக்கு முலாம் பூசபுறபட்டுள்ளார்

    சேது தனது உயர் கல்வியை சிங்கள பாடசாலை ஒண்றில் கற்றிருந்தார். மாயா சிங்கள பாடசாலையில் கல்வி கற்றவனுக்கு சிங்களமே தெரியாது என்பது வேடிக்கையானது.

    Reply
  • மாயா
    மாயா

    சேது ஏன் லண்டன் போவதில்லை?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பாலன்,
    சேது தான் பாலனென்ற பெயரில் வந்து எழுதுவதாக பலர் சந்தேகப்படக் கூடியளவிற்கு, தாங்கள் சேதுவிற்கு வக்காலத்தை மீண்டும் மீண்டும் வாங்குகின்றீர்கள். சேது யாழ்க்களத்தில் ஆரம்பதத்தில் தான் சொந்தப் பெயரில் வந்தார். ஆனால் அவரை யாழ்க்களம் தடைசெய்த பின் பல வேறு பெயர்களில் வந்து வந்து எழுதத் தொடங்கினார். போக்கிரியில் வடிவேலு எத்தனை மாறு வேடம் போட்டாலும் அவரின் குடும்பியே அவரைக் காட்டிக் கொடுப்பது போல், சேது எத்தனை பெயரரில் வந்தாலும் அவரின் வழமையான எழுத்துப் பிழைகளே அவரை யார் என அடையாளம் காட்டியது. இடைக்காடார் உண்ணாவிரதமிருந்த போது கூட சேது யாழ்க்களத்தில் கருத்துப் பதிந்தார். இடைக்காடார் 6 வருடத்திற்க முன்னரா உண்ணாவிரத நாடகமாடினார். போதும் உமது வக்காலத்துகள்.

    Reply
  • ஆ.முகம்
    ஆ.முகம்

    //நடராஜா சேதுரூபன் என்பவரின் கடந்த காலமும் நிகழ்காலமும் சர்ச்சைக்குரியனவே//சேதுவின் பின்னால் நின்றவர்களினாலும் மேற்கொள்ளப்பட்டது சேது ஒரு தெரிந்த கெட்டவன். இங்கு ஒளிவு மறைவு இல்லை.//ஜெயபாலன்
    ஜெயபாலன் கருத்தில் 100 வீதம் உண்மை உண்டு இந்த தேசியவிடுதலை போரட்டத்தை யாருடைய சிந்தனைக்கும் அப்பாற்பட்டு தனது சிந்தனையோட்டத்திலும் தனது பிறந்த ஊரின் மண்அறிவுடனும் மிகவும் தேர்ச்சியான தேடலில் இந்தவிடுதலை போரட்டத்தின் திசையை அறிந்துள்ளார் நோர்வேக்கு அனைத்து ராயதந்திரிகளின் பத்திரிகை மாநாட்டில் ஒருதமிழன் ஊடகவியளாராக பங்குபற்றுகிறார் என்றால் இதைபல நோர்வேவாழ் தமிழர் கண்டுள்ளனர்.

    Reply
  • பாலன்
    பாலன்

    பார்த்திபன் – சேது யாழ் இணையத்தில் வருவது இல்லை என்பதை யாழ்மோகன் உறுதிபடுத்தினார் ஆனால் சேதுவாக எவராவது உலாகிறார்களா தெரியாது. ஒருவனை ஆராய ஒரு பந்தியை தந்து மோப்பம் பாத்திருக்க சந்தர்பம் உண்டு. ஒருவன் தமிழ் தெரியாது என்று ஒரு பந்தியை காட்டிவுடன் அவனுக்கு தமிழ் தெரியாது என்றும் கருத முடியாது. அதற்கு பின்புலத்தில் தருபவன் ஏதோ ஒரு திட்டமிடலில் தந்திருக்கலாம் அல்லவா. இதுதான் சேதுவுக்கு அதை வாசித்து காட்ட முற்பட்டவருக்கும் வேறுபாடு. தேசத்தில் சேது தொடர்பாக வந்துள்ள கட்டுரையிலும் சேது ஏதாவது ஒரு திட்டமிடலை பின்புலத்தில் வைத்திருப்பான் என்பது 100 வீதம் உண்மை. சேது சந்திரானந்த டீ சிலா முதல் ஒஸ்ரின் பனான்டோ வரை றத்தவத்தை முதல் பொன்சேகாவரை பிரபா முதல் பொட்டன் வரை மலையை மக்காக கடைந்தவன். சேதுவின் இலங்கை இணையம் 03 மொழி செய்தியாக வருகிறது போய் வாசித்து பாருங்கள்.

    Reply
  • பல்லி
    பல்லி

    //சேது தான் பாலனென்ற பெயரில் வந்து எழுதுவதாக பலர் சந்தேகப்படக் கூடியளவிற்கு, //
    பல்லிக்கும் சேதுவுடன் சிறிது பளக்கம் உண்டு; அதனால்தான் கேட்டேன் இதில் பின்னோட்டம் இடும் சேது நிழலா? அல்லது நிஜமா? என; அதுக்கு சேதுரூபன் தனது பதிலை சொல்லியிருக்கலாம்; அதை விட்டு ,,,,,,,,,,, கவனிக்கவும் கட்டுரைக்கு பின் வந்த பின்னோட்டங்களை; தடபுடலாய் வந்த சேதுரூபன் பல்லியின் வினாவுக்கு பின் காணவில்லை
    தேசத்தில் பின்னோட்டம் விடும் பலரும் வலக்கையுக்கும் இடது கையுக்கும் வித்தியாசமோ செயல்பாடோ தெரியாதவர்கள் அல்ல; ஏல்லோரையும் பல்லிபோல் காமடியனாய் கணக்கு பண்ணலாமா???

    Reply
  • பல்லி
    பல்லி

    :://சேது ஏன் லண்டன் போவதில்லை?//
    மாயா இவர் ரி பி சீ உடைப்பை ஏற்று கொண்டு அதில் தனது பங்கு சிறியதுதான் ஆனால் பளய தளபதி மற்றும் கீ;;;;;; போன்றோர்தான் முதன்மையாளர் என கருனா போல் அவர்களை தேசத்திடம் காட்டி கொடுத்ததால் எங்கே சுபாஸ் நெப்போலியன் உதவியுடன் ஏதாவது விபரீதம் வந்துவிடுமோ என பயத்தில் லண்டனுக்கு கா கா சொல்லிவிட்டாராம்; பளய தளபதி அன்புடன் அழைத்தும் இந்த விளையாட்டுக்கு தான் வரவில்லையென வில்லண்டத்துக்கு விக்கல் எடுதாராம் மாண்பு மிகு படிப்பாளர் பண்பாளர் திரு, சேது அவர்கள்;

    Reply
  • Sethurupan
    Sethurupan

    நிதர்சனம் இணையத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நெருப்பு.ஓக் எனது இணையம் இல்லை. நான் வைத்திருக்கும் இணையம் இலங்கை மற்றும் நோர்வேநியூஸ் தமிழ்நியூஸ்வெப் ஆகியன. எனக்கு அடித்த புலிகள் தவறை ஏற்றால் தமிழ்நியூஸ்வெப் நிறுத்தப்படும். எனக்கு பல்லியையும் தெரியாது.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    பாலன்//நோர்வெயில் 08 வருடம். தற்போது உலகில் எங்கிருந்தும் எந்த நாட்டு படிப்பையும் படிக்க முடியும். அது படிப்பு அறிவு இருப்பவனுக்கு புரியும்.// பாலன் இங்கே பின்னோட்டம் எழுதுவபர்கள் எல்லம் படிப்பறிவு இல்லாதவர்கள் என்று உம்மால் எப்படிச் சொல்லமுடியும். எதையும் சரியா அறிந்த பின் ஆய்து எழுதுங்கள். சேதுமாதிரி எழுதப்பழகாதீர்கள்.

    //அதற்க்கு புலி ஆதரவாளர்கள் வழக்கம் போல தங்கள் பாணியில் கருத்து(!) தெரிவித்துள்ளனர். இரயாகரனுக்கும் இதற்க்கும் என்ன சம்பத்தம்?// பிசி- அதை யார் எழுதியிருந்தாலும் இதை தளத்தில் விட்டு பொறுப்பு இரயாகரனையே சாரும். மனிதர்கள் வாசிக்கக்கூடிய மாதியா இந்தப்பின்நோட்டம் இருக்கிறது. பின்நோட்டங்கள் இல்லை என்பதற்காக இப்படியான பின்நோட்டங்களை விடுவது அபத்தமானதே

    மாயா- அருமையிலும் அருமை./பாலன் சொல்வது போல இவருக்கு சிங்களம் எல்லாம் தெரியாது. புலத்தில் டொச் கதைக்காதவன் இலங்கைக்கு போய் டொச்சில் கதைத்து, தான் டொச் அறிவாளி என்பது போன்ற மொக்கு தனமான கதை இது/ இதே விளையாட்டுத்தான் நோர்வேயிலும் என்று கேள்வி. புதிய தகவலின்படி அங்கே புலிகள் சேதுவுக்குச் சாத்தத் திரிகிறார்களாம். உண்மை பொய் தெரியாது. சேது இருக்கும் நாட்டில் இல்லாததால் நாமும் கேள்விச் செவிடர்கள் தானே

    Reply
  • பாலன்
    பாலன்

    குசும்பு.
    நோர்வேயில் புலிகளின் பருப்பு இப்ப அவியாது. நோர்வே அரசு சேது தாக்கபட்டதுடன் புலிகளை பயங்கரவாதியாகவே பாக்கிறது. இது 100 வீதம் உண்மை. நோர்வேயில் சேது பாவிக்கும் கை தொலைபேசியில் இருந்து அவருடைய வீட்டுக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமாக எந்த தமிழர் நடமாடினாலும் பொலிஸ் சென்று விசாரித்து வருகிறது. அவசர சமிக்கை வசதி உட்பட இரகசிய கடும் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. புலிகள் சேதுவுக்கு தாக்கினால் பல புலிகள் நிதந்தரமாக சிறை போக வேண்டிவரும். நோர்வே அரச உளவுத்துறையினரின் புலிகளுக்கு எதிரான பல நடவடிக்கைகளில் பதறிப்போன புலிகளின் பொறுப்பாளர் உட்பட அனைவரும் கடந்த வாரம் சேதுவை சந்தித்து மன்னிப்பு கேட்டது குசும்புக்கு தெரியாதா? தன்னை தாக்கியவர்கள் சமாதானத்திற்கு வந்தால் பரிசீலிக்க முடியும் என்று சேது தெரிவித்துள்ளார். சேதுவில் முட்டினால் நெடியவன் உட்பட அனைவருக்கும் ஆபத்து.

    Reply
  • பல்லி
    பல்லி

    எனக்கும் சேதுவை தெரியாது ஆனால் பளக்கம் உண்டு; அதுக்குதான் சொன்னேன் தேசத்தில் பிநோக்கிய பின்னோட்டங்களை கவனிக்கவும் என,

    குசும்பு சேதுவுடன் வைத்துகொள்ள வேண்டாமென பாலன் மிரட்டுகிறார், புலிக்கே இந்த நிலையெனில் நீங்கள்;;;;; மொத்தத்தில் புலம்பெயர் தேசத்தில் ஒரு கருனா உருவாகிவிட்டார், ஆனாலும் நோர்வேயில் அமைச்சர் பதவி கொடுப்பார்களோ தெரியாது;

    Reply
  • பாலன்
    பாலன்

    பல்லி – நோர்வேயில் வாழும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளரான நெடியவனின் மனைவியின் குடும்பத்தினர் சேதுரூபன் இலங்கை அரசுக்கு உளவு பார்த்து வழங்குவதாக ஒஸ்லோவிற்கு வெளியே உள்ள மோல்டே பொலிஸ் நிலையத்தில் குற்றப்பதிவு செய்துள்ளதாக சேது தெரிவித்தார். மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மற்றுமொரு பொறுப்பாளரான முரளி என்பவரும் அதே குற்றச்சாட்டை ஸ்ரோனர் பொலிஸ் நிலையத்திலும் தன்மீது பதிவு செய்திரப்பதாகவும் தெரிவித்தார்.

    புலிகளின் புதிய புடலங்காய் தலைவர்கள் சேதுவுக்கு செய்த சாதனைகள் இவை. இது சரியா பல்லி? சேது கருணா ஆகவும் முடியாது கருணா சேது ஆகவும் முடியாது.

    சந்தித்து மன்னிப்பு கேட்ட புலிகள் ஏன் அடிக்க அனுப்பியவரை கூட்டிவர மறுக்கினம்? அடித்தவர் வரும்வரை புலிக்கு நோர்வேயில் சேது கொடுப்பான் வலி.

    சேது தாக்கபட்டமைக்கு நோர்வே உளவுத்துறை புலிகளின் நோர்வே பிரதி பொறுப்பாளரை கைது செய்து விசாரித்தாகவும் தான் டென்மாக் போனதால் தனக்கு எதுவும் தெரியாது எனவும் நடந்த அனைத்திற்கும் பகிரங்கமாக கை எடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேப்பதாகவும் வந்தவர்கள் தெரிவித்தார்களாமே. சேதுவோ எனக்கு அது எல்லாம் தேவை இல்லை அடிக்க அனுப்பிய இருவரில் ஒருவரைதனும் கூட்டி வந்து நடந்தவற்றை மறக்குமாறு கோருமாறு சேது அனுப்பி வைத்தாராமே புலிகளை.

    பல்லி ஏன் அதையும் செய்து நோர்வே சலசலப்பை முடிக்க கூடாது? நோர்வே உளவுத்துறை சேதுவின் மீதான 12 புலிகளின் கொலை அச்சுறுத்தல்களை விசாரித்து வருகிறார்களாமே. சேது கேட்பது எல்லாம் தனது காலில் விழுந்து மன்னிப்பு கேட்க சொல்லவில்லை வலியை தந்தவனுக்கு தேசிய தலைவர் திரும்பி கொடு என்டு சொன்வராம் அதைத்தான் சேது செய்கிறார்.

    Reply
  • அருமை
    அருமை

    சேது செய்வது 100 வீதம் சரி.
    1) புலிகள்தான் முதலில் சேதுவை தாக்கினார்கள்.
    2) புலிகள்தான் சேது இலங்கை அரச உளவுக்காரன் என்று முதலில் பொலிஸ் சென்றனர்.
    3) புலிகள்தான் சேது துரோகி என சங்கதி இணையத்தில் முதலில் எழுதினர்.
    4) புலிகள் சேதுவின் முதுகில் சொறிய முற்பட்டனர்.

    தற்போது அதன் பலாபலனை நோர்வேயில் புலிகள் அறுவடை செய்கின்றனர். சேது விடயத்தில் புலிகள் தாம் சேதுவை தாக்க அனுப்பிய இருவரையும் வைத்து சமரசம் செய்து தப்புவதே சிறந்தது. இதுவே புலிகளை நோர்வேயில் பாதுகாக்கும்.

    Reply
  • முரளி
    முரளி

    சேது விடயத்தில் புலிகள் செய்தது மாபெரும் தவறு. மன்னிக்கமுடியாத தவறு.
    நோர்வே ஒரு சிறிய நாடு. சிறிய தொகை தமிழர் வாழும் நாடு. புலிகள் நோர்வேயில் சேதுவை தாக்கியது வரலாற்றுத்தவறு.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    பாலன் எமக்கும் நோவேயில் தொடபுகள் உண்டு. சேதுவுக்கு அடித்தபின் நெடியவனைக் கூப்பிட்டு விசாரித்தார்களால் சேது கொடுத்த தகவலின் படி. இது பொலிசுடைய கடமை. சேதுவுக்கு எதிராகப் பல விசயங்கள் இருக்கிறது என்று கூறுகிறார்களே. நாம் சேதுவின் கதைகளை ஒரு பொருட்டாக எடுப்பதில்லை. காரணம் சொல்வது முழுவதும் பொய்தானே. இக்கட்டுரையில் தானே இருக்கிறது சேதுவின் மேல் உளவுபார்த்த வழக்கு உண்ட என்று. நான் அறிந்தவரையில் சேது என்ன துள்ளுத் துள்ளினாலும் புலிகளை ஒன்றும் பண்ண இயலாது. நோவேயில் பிரதமருக்கே உந்தப்பாதுகாப்பு இல்லையாம். சேது பிரதமரை விடப் பெரிய ஆளோ? பிரதமர் தெருவில் சைக்கிள் ஓடித்திரிகிறாராம். சும்மா கதையளக்காதீர்கள். நாங்களும் அடிக்கடி நோர்வே போய் வாறனாங்கள். இனசனம் ஊர் உலகு என்று எமக்கும் போதியளவு சனம் உண்டு.

    Reply
  • Sarana
    Sarana

    சேதுவை பிரபல்யப் படுத்தவென்று சேதுவிடம் எதையோ வாங்கிக்கொண்டு எழுதிய ஒரு வெளிப்பாடோ என்ற சந்தேகமே மிஞ்சுகிறது. சேது முக்காடு போடாமல் செய்கிறார். என்ற வாpகள் மேலும் உறுதியாக்குகின்றன.
    தன்னார்வத்தோடு வெளியிலிருந்து நூற்றுக்கணக்கானவர்கள் போய் சில அலுவல்களைப் பொறுப்பெடுத்து செய்துகொண்டும் மக்கள் மத்தியில் அர்ப்பணிப்போடு நடந்துகொண்டும் இருக்கிறார்கள் இவர்களில் ஒருவரைப்பற்றி எழுதவில்லை வந்திட்டாங்க சேதுவைத் து}க்கிக்கொண்டு.
    தமிழர்> உள்நாடு >சர்வதேசம் எல்லா அரசியலும் மக்கள் நடைமுறையும் நன்கு கற்றுக்கொண்டு அரசியல் பண்ணும் மகிந்தாவுக்கு சேதுவை எங்கு வைக்கவேண்டும் என்பது நன்றாகவே தொpயும்.
    எமதுக்கெடுத்தாலும் ஜனநாயகம் மாக்ஸியம் பேசிக்கொண்டு சமூகக் கொல்லிகளாக இருக்கிறார்கள் என்றால் தனிப்பட அவர்களை அம்பலப் படுத்வேண்டிய ஊடகக் கடமையைக் கையிலெடுப்பதைவிட்டு பொதுவில் எழுதுவதால் பயனில்லை என்பது மட்டுமல்ல எதிர்ப்புரட்சிக்கு இட்டுச்செல்லும் ஈனவியாபாரிகளில் ஒருவனாகிவிடுகிறீர் திரு ஜெயபாலன்.
    சேதுவின் எழுத்துக்கள் தேசத்தின் எழுத்தக்கள் அற்புதமாக நீரே கணித்துக்கொண்டீர் உமது எழுத்துக்களுக்கு அசல் முக்காடு உண்டு!

    Reply
  • சோழன்
    சோழன்

    பாலன் நீங்கள் சேதுவைபற்றி சொன்னவிடயம் முற்றிலும் உண்மை. நோர்வேயில் சருகுபுலிகள் எல்லாம் சேது என்றால் கலக்கத்தில் உள்ளனர் அவர்களை சேதுவின் விடயத்தில் புலிகளும் கைவிரித்துவிட்டனர். அதனால் தாங்கள் தான் புலிகள் என்றவர்கள் சேதுவிடம் விட்ட மிகபெரியதவறுக்கு அவரிடம் சென்று மன்னிப்பு கோரியதாக நான் அறிந்தேன்.

    Reply
  • பாலன்
    பாலன்

    குசும்பு நான் இங்கு பந்தா பிடிக்கவில்லை. நான் சொல்வது 100 வீதம் ஆதாரத்துடன் சொல்கிறேன். சேதுவுக்கு அடித்தபின் நெடியவனைக் கூப்பிட்டு விசாரித்தார்கள் தற்போது எப்போதும் அவர் விசாரனை கைதிதான். பிரதி நோர்வே பொறுப்பாளன் செல்லகண்னி நோர்வே உளவுத்துறையால் கைது செய்யபட்டார் தெரியாதா? முகிலன் நாட்டைவிட்டே தலைமறைவானார் தெரியாதா? சேதுவை தாக்கிய இருவரும் நீதிமன்றில் நிக்கிறது தெரியாதா?

    சேதுவை வந்து சந்தித்த புலிகளே பொலிசார் கொடுத்த அவசர சமிக்கைகளையும் பாதுகாப்பு கருவிகளையும் பார்த்து, சேது அமத்தி போடாதை பொலிஸ் வந்திடும் எண்று கெஞ்சினார்களாமே தெரியாதா?

    தாக்கியவர்கள் உட்பட பல புலி உறுப்பினர்களை பொலிஸ் கூப்பிட்டு சேதுவின் வீட்டில் இருந்து 600 மீட்டர்க்குள் போக கூடாது அந்த இடம் புலிகளுக்கு தடை செய்யபட்டதாக தாக்கியவர்களிடம் சொல்லி அனுப்பியது தெரியாதா? சேதுவை சென்று சந்தித்து மன்னிப்புக்கேட்ட புலிகளின் பிரதிதளபதி செல்லகணனி புலிகளின் உளவுத்துறை (புகைபட) சதீஸ் புலிகளின் தேர்தல் குழு புலிகளின் அரசியல் குழு புலிகளின் உறுப்பினர்கள் என 10 புலிகளின் முக்கிய தலைகள் சென்று மன்னிப்பு கேட்டுள்ளனர்.

    சேது கேட்பது எல்லாம் அடித்த இருவரில் ஒருவரை கொண்டு வரவும் என்பதே. மேலும் தேவை என்டால் புலியிடமே கேட்கவும். நோர்வேயில் சேது எப்படி இருக்கிறார் என்று.

    Reply
  • கறுப்பு
    கறுப்பு

    குசும்பு – சேதுவுக்கு எதிராகப் பல விசயங்கள் இருக்கிறது என்றால் அதை பொலிஸ் ஏன் சேதுவிடம் விசாரிக்கவில்லை. சேது மூச்சுவிடுவதுகூட சேதுவுக்கும் தெரியும் நோர்வே பொலிசிக்கும் தெரியும் ஆகவே நீங்கள் போடுற தப்பு கணக்கு வெறும் அவியாத பயறு. என்னை பொறுத்தமட்டில் சேது நல்வர்களுக்கு மிகவும் நல்லவன் ஆனால் கெட்டவர்களுக்கு மிகவும் கெட்டவன் அதில் சந்தேகமே இல்லை. ஆனால் சேது ஒரு கிருமி என்பது மட்டும் எனக்கு நன்கு தெரியும். புலிகளின் பிரச்சார தளபதி மாமுனை மனோ பொலிசாரால் கைது செய்யபட்டு சேது முன்னிலையில் விசாரிக்கபட்டு சேதுவை எந்த இடத்தில் பாத்தாலும் உரியமுறையில் நடக்கவேண்டும் என உத்தரவு கொடுகபட்டது தெரியாதா? புலிகளின் முதலீட்டு பொறுப்பாளன் வட்டிச் சூரி / புலிகளின் இரகசிய பிரிவு தளபதி றஞ்கப்பா எல்லோரும் சேதுவிடம் சந்தித்து நடந்தவைக்கு மன்னிப்பு கேட்டது தெரியாதா? புலிகள் சரித்திரத்தில் செய்த தவறு சேதுவை தாக்கியது பின்னர் பதறி அடித்தது.

    Reply
  • சோழன்
    சோழன்

    குசும்பு நான் நோர்வேயில் யு.டி யில்தான் வேலைசெய்கிறேன் சேது விடயம் என்னுடன் விசாரித்தவர்கள் பாலன் எழுதிய அனைத்தும் உண்மை.

    Reply
  • BC
    BC

    //Sinna- அந்தக் கருத்து எழுதியவர்கள் புலி ஆதரவாளர்கள் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?//
    வேறு பதிவுகளில் பார்த்திருக்கிறேன்.புலியை புலிசார்பை யாராவது விமர்சித்தால் இதே பாணியில் பதில் கொடுத்துள்ளார்கள்.

    குசும்பு, அந்த பின்நோட்டங்கள் மிக கேவலமானவையே.

    மாயா, சரியாக சொன்னீர்கள் குப்பைகளைக் கொட்டும் புலி ஆதரவு யாழ் இணையம்.

    Reply
  • பல்லி
    பல்லி

    அது சரி இந்த சேதுவுக்கு நொர்வே பொலிஸ் நோர்வேயில் மட்டும்தன் பாதுகாப்பா? அல்லது அனைத்து நாட்டு அதிபர்கள்போல் உலகம் எல்லாம் பாதுகாப்பு இருக்கா? அத்துடன் சேது தேசத்திடம் வந்து ரி பி சி உடைப்பில் மாட்டி தன்னை இதில் மாட்டவேண்டாம் என கூப்பாடு போட்டது பாலனுக்கு தெரியதா? சேதுவுக்கு புலிகள் அடித்தால் அதை நோர்வே அரசு விசாரிக்கதான் செய்யும்; இது சேதுவுக்கல்ல எந்த ஒரு நோர்வே மக்களுக்கும் உண்டு, இதில் புலியால் பாதிக்கபட்ட பல மாற்று கருத்துகாரர் உண்டு, ஆனாலும் யாரும் சேதுபோல் பொலிஸ்சின் உதவியை நாடவில்லை; அவர்களும் அன்று நாடியிருந்தால் சேது ரி பி சி உடைக்க வருமுன்பே நோர்வே பொலிசால் புலியின் திருகுதாளத்தால் இன்று நெடியவன் போல் அமைதியாகி இருப்பார்; இதே சேது கொழும்பில் சங்கரியரிடம் எதுக்கு போனார் என பாலன் கேட்டு தெரிந்து கொள்ளுங்க;

    ஜெயபாலனுடன் ரி பி சி உடைப்பு பற்றி தனது கேவலமான விடயத்தை சொல்லவில்லையா. ,? எமது கருத்து சேது பல்லுபோன புளி; நீங்க என்ன சொல்லுறியளென்றால் சேது புலியையே அடக்கிய மாபெரும் மன்னன் என; சுவிஸ்சிலும் சிலர் புலிகளை (அன்று) திரத்தி திரத்தி அடித்தார்களே அப்ப அவர்களும் சேதுபோல் பண்டிதர்களா?? சேதுவுக்கும் புலிக்கும் என்ன பிரச்சனை மக்கள் பற்றியதா? அல்லது கொடுக்கல் வாங்கலா? புலியின் இரு முக்கிய தளபதிகள் நோர்வேயில் இருக்கினம் அதுவாவது உங்கள் சேதுவுக்கு தெரியுமா என கேக்கவும்;

    Reply
  • ராஜா
    ராஜா

    நடராஜா சேதுரூபன் இலங்கை அரச உளவுக்காரன் என்று தவறான தகவலை பொலிசுக்கு கொடுத்ததும் சட்டபடி தவறு ஆகவே புலிகளுக்கும் சேது மாறி கேஸ் போட்டால் புலி நோர்வேயில் செத்துப்போம். புலிகள் அதில் இருந்து தப்பதான் சேதுவிடம் மன்னிப்பு கேட்டு கெஞ்சி மன்றாடுகினமோ? அப்ப புலிகதை நோர்வேயில் மிகவிரைவில் சங்கு ஊதப்படலாம். சேதுவை தொட்டதால் வந்த வினை.

    Reply
  • Anonymous
    Anonymous

    /சேதுவை வந்து சந்தித்த புலிகளே பொலிசார் கொடுத்த அவசர சமிக்கைகளையும் பாதுகாப்பு கருவிகளையும் பார்த்து……../

    ஒரு உளவாளிக்கு அரசுகள் அது மட்டுமா கொடுக்கிறார்கள், காசு, பொருள், புகழ் இணையத்தள இயக்கும் நெறிப்படுத்தலும் கொடுக்கிறார்கள். எனக்கும் இவ்வாறான சமிக்கைகள் வந்தன. இருக்கிற உழைப்பு வயிற்றை நிரப்புகிறது. எல்லோரையும் போல புரட்சி, சமூகப் பிரக்ஞை என்று சொல்லி பதவி, புகழ், பணம் தேடவிரும்பவில்லை

    Reply
  • பல்லி
    பல்லி

    இந்த கட்டுரையில் பல்லி இந்த பின்னோட்டத்துடன் எனது கருத்தை முடித்து கொள்கிறேன்; சேதுவுக்கு கடந்த கால செயல்பாடுகள் கருதி!ஊத்தை சேது! எனவும் ஒரு பெயர் உண்டு, எப்படி அந்த பெயரை பெற்று கொண்டார்; அதுக்காக அவர் செய்த தியாகங்கள் என்ன? இந்த பட்டத்தை அவர் படித்த எந்த கல்லூரி கொடுத்தது? இத்தனைக்கும் முடிந்தால் விடை காணுங்கள், சேது பண்டிதரா?? அல்லது பல்லு போன புளியா என தெரியவரும்; இருந்தாலும் நோர்வேயில் பல தொழில்நுட்ப்ப கருவிகளுடன் கழம் ஆடும் சேது லண்டனில் பளய தளபதிக்கு பயம் ஏனோ என்பது பல்லிக்கு இன்றுவரை கேள்வியாகவே(கேலியாகவே) உள்ளது; சேது நன்றி வணக்கம்;

    Reply
  • பாலன்
    பாலன்

    பல்லி – சேதுவுக்கு நொர்வே பொலிஸ் நோர்வேயில் மட்டும்தன் பாதுகாப்பு என்று சொல்ல முடியாது. /
    பாதுகாப்பு என்பது தனது நாட்டவனுக்கு உலகபந்தில் பாதுகாப்பு.

    ரி பி சி உடைப்பில் மாட்டி தன்னை இதில் மாட்டவேண்டாம் என கூப்பாடு போட்டது பாலனுக்கு தெரியதா என்பது தவறு/
    பல்லி போய் தேசத்தை வாசித்து பாரும்.

    ரி.பி.சி றாம்றாஜ் சேதுவுக்கு தகவல் தெரியும் சம்பவம் தெரியும் ஆனால் நேரடி தாக்குதலில் அவருக்கு தொடர்பு இல்லை என்பதை இதே தேசத்தில் கூறி இருந்தார்./ரி.பி.சி உடைக்கும்போது சேது லண்டனில் இல்லை என்பது நோர்வேக்கும் தெரியும் பிரித்தானிய அரசுக்கும் தெரியும்.

    ஒரு செய்தியாளனுக்கு செய்தி முன்போ அல்லது சம்பவத்திற்கு பின்போது தெரிந்திருப்பது தவறு இல்லை என்பது சட்டம்/
    பல்லி இது என்ன வன்னியா தங்கள் சாத்திரம் சட்டமாக?

    இதில் புலியால் பாதிக்கபட்ட பல மாற்று கருத்துகாரர் உண்டு ஆனாலும் யாரும் சேதுபோல் பொலிஸ்சின் உதவியை நாடவில்லை என்பது தவறு பலர் சேதுவுக்கு எதிராக பொலிஸ் சென்றனர் ஆனால் சேது அனைத்திற்கும் உரிய பதிலை கொடுத்தவன்.
    புலி போல புறமுதுகு காட்டி ஓடவில்லை.

    புளொட் றாஜா/ மங்கள சமரவீர/ ஆணந்த சங்கரி/ இலங்கை தூதவராலயம் / பந்துல ஜெயசேகர/ இப்படி பலரை அடுக்கலாம் அனைத்தும் சேது புலிக்கு ஆதரவாக எழுதுவதாக குற்றச்சாட்டு புலியுடன் தொடர்புடைய குற்றச்சாட்டு ஏன் ரி.பி.சி வானொலி முதல் ஜெயதேவன் வரை முறையிட்டு மூக்குடைபட்டவர்கள்.

    அனைத்து குற்றச்சாட்டும் தூக்கி வீசபட்டது. இது சேதுவின் பலம். இதே சேது கொழும்பில் சங்கரியரிடம் எதுக்கு போனார் என பாலன் கேட்டு தெரிவவேண்டியது இல்லை./
    அவன் எவனையும் சந்திக்கலாம். அது அவன் தொழில்.

    சேது பல்லுபோன புளி இல்லை அவன் அண்றும் இண்றும் எண்றும் பல்லு அகற்ற முடியாத தேசியவாதி. சேது புலியையே அடக்கிய மாபெரும் மன்னன் என சொல்லவில்லை சேது விடயத்தில் புலி செய்தது தவறு என்பதே எமது வாதம்.

    சேதுவுக்கும் புலிக்கும் என்ன பிரச்சனை மக்கள் பற்றியதா?/ இல்லை.

    அல்லது கொடுக்கல் வாங்கலா? /ஆம் புலி அடி கொடுத்தது சேது அடி வாங்கியது சேது பதில் கொடுத்தது கொடுத்த பதிலில் புலி குப்பற படுத்தது.

    புலியின் இரு முக்கிய தளபதிகள் நோர்வேயில் இருக்கினம் அதுவாவது உங்கள் சேதுவுக்கு தெரியுமா என கேக்கவும் என கேட்டீர்கள் அது நோர்வே பொலிஸ் விடயம்.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    பாலன் நீங்கள் என்னிடம் கேட்கும் தெரியாதா தெரியாதா என்ற கேள்விகளுக்கு என்னால் பதில் செல்ல இயலாது. காரணம் நோவேயில் வசிக்கவுமில்லை நோவே சட்டதிட்டமும் எனக்குத் தெரியாது. உங்களது கேள்வி பற்றி நோர்வே உறவினரிடம் விசாரித்த போது அவர்களின் பதில் இப்படி இருந்தது. நோர்வேயில் பலாற்காரத்துக்கு உட்படுத்தப் படுபவர்களுக்கு அலார்ம் கொடுப்பார்களாம். இது சேருவுக்குப் விசேசமாகக் கொடுக்கப்பட்ட ஒன்றல்ல. அடித்தவரை குறைந்தது 500 மீட்டருக்குள் போகக் கூடாது என்று பொலிஸ் கட்டளை பிறப்பிப்பதும் வளமையான ஒன்றுதானாம். ஆனால் ஒருவிசயம் மட்டும் உண்மை சேதுவிற்கு பலமாக அடித்திருக்கிறார்கள் என்பது. மிருகங்களிடம் இருந்த இதை விட வேறு எதை எதிர்பார்க்காலம். சேதுவும் சிறிது கவனமாக இருந்திருக்கலாம். விசர் நாய் என்று தெரிந்தால் அடி ஓட்டாமல் இருப்பதும் அவசியமே. என் நோர்வே உறவினர்கள் முன்பு புலிசார்ந்த இருந்தவர்கள். அவர்களின் கூறியது இதுதான் “புலிகளை உலகமே தேடும் போது அவர்கள் தம்பாதுகாப்புக் கருதி தலைமறைவை மேற்கொள்கிறார்கள் என்றும் இது சேது புழுகுவதற்கு வாய்பாகப் போய்விட்டது” நான் வசிக்கும் நாட்டிலும் ஐரோப்பாவில் அலாம் கொடுப்பதும் தொடர்ந்த தாக்குதல்கள் வளராமல் இருக்க அவர்களின் பகுதிக்குள் போகக்கூடாது என்று கட்டளை பிறப்பிப்பதும் வளமையே. புலிகளின் நியாயமற்ற வன்முறைதான் சுத்திக் கொண்டிருந்த சேதுவை பெரியாள் ஆக்கிறது.

    சோழன்- /குசும்பு நான் நோர்வேயில் யு.டி யில்தான் வேலைசெய்கிறேன் சேது விடயம் என்னுடன் விசாரித்தவர்கள் பாலன் எழுதிய அனைத்தும் உண்மை/சோழன் யுடி என்றால் என்ன. யுனைட்டட் ….? இங்கிலிசில் இப்படி ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை?/
    //சேதுவுக்கு புலிகள் அடித்தால் அதை நோர்வே அரசு விசாரிக்கதான் செய்யும்; இது சேதுவுக்கல்ல எந்த ஒரு நோர்வே மக்களுக்கும் உண்டு/ பல்லி சொல்வதே சரியென்ற நானும் நினைக்கிறேன். நான் வசிக்கும் நாட்டிலும் யார் என்றி போட்டாலும் கூப்பிட்டு விசாரிப்பார்கள். பாதுகாப்புக் கொடுக்க வேண்டியது நாட்டின் கடமை தானே.
    பாலன்;கறுப்பு; இது தெரியாதா அது தெரியாதா என்று என்னிடம் கேட்கிறீர்கள் எனக்கு எப்படியப்பா தெரியவரும். குறைந்தபட்சம் நோர்வேயில் இருந்தாவது தெரிந்திருக்கம். உங்கள் போன்றவர்களை நாங்கள் கிண்டவதே நீங்கள் கொண்டு வந்து கொட்ட வேண்டும் என்பதனால்தான். எனக்குச் சேதுவைத் தெரியும்; சில இணையத்தளங்களைப் பார்வையிடுபவன் என்பதைத்தவிர வேறு எதுவுமே எனக்குத் தெரியாது. நோர்வேயின் வசிப்பர்களைக் கேட்டால் யாரும் நல்லாச் சொல்லவில்லை. எது எப்படி இருந்தாலும் புலிகள் மட்டுமல்ல யார் மற்றவர்கள் உடலில் கைவைத்தாலும் தவறு தவறே. அடிபட்ட சேது அடித்தவர்களுக்கு எதிராக நிற்பது இயல்பானதே. /அப்ப புலிகதை நோர்வேயில் மிகவிரைவில் சங்கு ஊதப்படலாம். சேதுவை தொட்டதால் வந்த வினை./ ராஜா- நானறிந்தவரை சேவை அல்ல யாரைத் தொட்டாலும் நடந்ததே நடந்திருக்கும் என்பது என்கருத்து.
    அனநிமஸ் சரியாகச் சொன்னீர்கள்.
    கறுப்பு- /சேது ஒரு கிருமி என்பது மட்டும் எனக்கு நன்கு தெரியும். புலிகளின் பிரச்சார தளபதி மாமுனை மனோ /கறுப்பு.. அவர்தான் இலங்கை எம்பசி உடைப்பிலும் முன்னின்றவர் என்றும் பொலில் பிடித்த எழுதிவிட்டுக் கலைத்து விட்டார்கள் என்றும் இந்த மனோதான் அடைப்புக்குத் தலைமை தாங்கினார் என்றும் நோவே நண்பர்கள் சொல்கிறார்கள் உண்மையில் நோர்வேயில் என்தான் நடக்கிறது. ஒரு வெளிநாட்டவரின் தூதரகத்தைப் பாதுகாக்க வேண்டிய நோவே குற்றவாளிளைக் கண்டும் காணாமலும் இருக்கிறது. எனக்கு உங்கள் நோர்வேலைப்பற்றி என்றுமாய் விளங்கவில்லை. எல்லா நசலுக்கும் நோவேதான் கால் என்று மட்டும் தெரிகிறது.

    /குசும்பு சேதுவுடன் வைத்துகொள்ள வேண்டாமென பாலன் மிரட்டுகிறார்இ புலிக்கே இந்த நிலையெனில் நீங்கள்;;;;; மொத்தத்தில் புலம்பெயர் தேசத்தில் ஒரு கருனா உருவாகிவிட்டார்/ நன்றி பல்லி… பாலனுக்கும் நன்றி என்மேல் அக்கறை கொண்டதற்கு. சேது என்னிடம் வரவேண்டும் என்றால் நாடுகடந்த பலமைலகள் கடந்தான் என்னிடம் வரவேண்டும். அப்படி வந்தாலும் எம்நாட்டில் சேது எம்மை ஒன்றும் பண்ண முடியாது. எமக்கும் போதியளவு தொடர்பு நோவேயில் உள்ளது. எமது ஊரவர்கள்தான் அங்கே அதிகமாக உள்ளார்கள்

    Reply
  • பாலன்
    பாலன்

    பல்லி, புலிகள் பொலிசாருக்கு முன்னால் கை வைத்தனர். பொலிசார் கையும் மெய்யுமாக பிடித்தனர். பின்னர் புலிகளே பொலிசில் போய் சேது இலங்கை அரச உளவுக்காரன் என தம்மை தாமே மாட்டினர்.

    இது சேதுவின் தவறா? புலியின் தவறா?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    யாழ் இணையத்தில் வரும் அத்தனை பெயர்களும் இங்கு வர ஆரம்பித்து விட்டன. ஏனப்பா நெடியவன் பெயரை விட்டுவிட்டீர்கள். அதிலும் ஒருவர் வந்து பிளந்து கட்டலாமே. நோர்வேயில் புலிப் பினாமிகளால் இலங்கைத் தூதுவராலயம் தாக்கப்பட்ட போது, நோர்வே பொலிஸாரே அவர்களை பத்திரமாக வெளியேற்றி விட்டு (இவை ஒளிப்பதிவிலும் வந்திருந்தன), தாக்குதல் சம்பவம் தொடர்பாக தாம் எவரையும் அடையாளம் காணவில்லையென அறிவித்தனர். இவ்வளவிற்குப் பின்னும் நோர்வேயில் புலிகளுக்கு ஆப்பு சேதுவால் என்று கதையளக்கினம். இதே நோர்வேயில் தான் தொடர்ந்தும் வட்டுக்கோட்டைத் தீர்மான வாக்கெடுப்பும் நாடு கடந்த தமிழீழ புலூடாவும் இன்றும் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துனம். கதையளப்பவர்கள் கொஞ்சம் சிந்தித்தாவது கதையளவுங்கள்.

    Reply
  • santhanam
    santhanam

    பல்லி புலிகளின் தளபதிகள் எல்லாம் தலைமைக்கு டாட்டா காட்டி போட்டு இங்கு வந்தவர்கள் தான் பல்லுபுடுங்கபட்ட புலிகள் மக்களின் பணத்தில் மனைவி பிள்ளைகலை இந்தியாவிலும் இங்கு புலத்தில் தமிழ்ழம் காணுகிறார்கள் எனது கணிப்பில் புலத்தில் மக்களின் இரத்திலும் மக்களின் அழிவிலும் பூங்காவனம் செய்யும் குழுதான் இந்த புண்ணாக்குகள் பணம் ஒன்றுக்காக இதுகள் புனையும் கற்பனைகள் அதிகம் தலைமை அழைத்தும் போகத தளபதிகள் இவர்கள்.

    Reply
  • Norway Nackeera
    Norway Nackeera

    மாற்றங்களை மறுதலிப்பவர்கள் வளர்ச்சியை விரும்பாதவர்கள் என்றே எண்ணலாம். சந்தர்பத்துக்கேற்றால் போல் தொப்பி பிரட்டுவதைக் கூறவில்லை. சேது எப்படியானவர் என்பதற்கு அப்பால் அவர் தன்கருத்துக்களையோ; எந்த அரசியலைப் பின்பற்ற விரும்புகிறார் என்பதையே முடிவெடுக்கும் உரிமை அவருக்கு உண்டு. பிடிக்காதவர்கள் சுட்டிக்காட்டலாம். ஏற்பதும் விடுவதும் சேதுவைப் பொறுத்ததே. கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள முடியாதவர்கள் தான் கை தூக்குகிறார்கள். எனது வீட்டுக்கும் பலவருடங்களுக்கு முன் சிலர் என் பேனாவை முறிப்பதற்கு கத்தியுடன் வந்து உள்ளே போட்ட அனுபவம் உண்டு. பாதுகாப்பு என்பது சேதுவுக்கு மட்டுமல்ல அவரை அடித்த நோர்வே வாழ்புலிகளுக்கும் தேவை என்றால் நோர்வேயில் கொடுக்கப்படும். பத்திரிகை பத்திரிகா தர்மம் என்ற ஒன்று நடைமுறையில் இருப்பதால் அவற்றைக் கடைப்பிடிப்பது அவசியமே. ஒரு இணையத்தளத்திலோ பத்திரிகையிலோ பொய்யான தகவலை திரிபு படுத்தியோ அன்றேல் தனிமனித சுதந்திரத்தைக் கெடுக்கக் கூடிய வகையில் எழுதப்பட்டிருந்தால் அதற்கென நோர்வேயில் ஒரு சட்டபாதுகாப்பு மன்று உள்ளது. அங்கே பத்திரிகைகள் பற்றிய முறைப்பாடுகளைச் செய்யலாம். சட்டத்தில் சகலவற்றுக்கும் இடம் உண்டு. அதை விட்டு விட்டு கை தூக்குவது மறுக்கப்பட வேண்டிய ஒன்றே. பேசித்தீர்க்க வேண்டிய பல இடையில் நிற்பவர்களால் திரிபு படுத்தப்பட்டு வானெலிகளிலும் செய்தித்தாள்களிலும் இணையத்தளங்களிலும் வலம் வருகின்றன. இது பகைமைய வளர்க்குமே அன்றி ஆரோக்கியமான ஒரு சமூகத்தைக் கட்டி எழுப்ப முடியாது. சேதுவும் இதைக் கருத்தில் கொள்வார் என்று எண்ணுகிறேன். தனிமனிதர்களால் தான் ஒரு சமூகம் கட்டிஎழுப்பப்படுகிறது. குறிக்கோள் சமூகமே அன்றி தனிமனிதர்கள் அல்ல. எமது சமூகம் தனிமனிதத் துதிபாடல்களிலேயே கட்டி எழுப்பட்டது. அதை ஒரு நாளில் உடைப்பது என்பது இலகுவல்ல. இதற்காக பாடுபடவேண்டியது பேனா தூக்கிய ஒவ்வொருவரின் பொறுப்புமாகும்.

    Reply
  • Sethurupan
    Sethurupan

    நோர்வே நக்கீரா – பேசித்தீர்க்க வேண்டியவற்றை நான் பேசி தீர்க்க தயார். கூட்டி வாருங்கள்.

    பார்த்திபன் – புலிகள் சேது விடயத்தில்தான் பொலிசில் வதமாக மாட்டினார்கள்.

    பாலன் – ஆம் புலிகள்தான் அடித்தனர் தாமே பொலிசில் போய் மாட்டினர்.

    குசும்பு – தலைமறைவை மேற்கொள்கிறார்கள் அல்லை தலையின் மறைவாலோ என்னவோ புலிகள் செய்ததை நியாயபடுத்துகிறீர்களா?

    பல்லி – பளய தளபதிக்கு பயம் ஏனோ? ஆர் அது? தளபதியா? பல்லியைவிட?

    அனிமொவுஸ் – சேது இண்றுவரை விலைபேசப்படாத ஒருவன்.

    சேது இப்ப எந்த பக்கம் என்று மனதிற்குள் கேப்பவர்களிடம் ஒரு கேள்வி / சேது எந்த பக்கம் நிக்கவேணும்? அது ஆர் தலைமையில்? தேசியத்தின் பக்கம் என்று கருதினால் இப்ப ஆர் தேசிய தலைவர்? அப்ப சேது நிக்கும் பக்கம் தேசியம் இல்லையா?

    Reply
  • பல்லி
    பல்லி

    //நோர்வே நக்கீரா – பேசித்தீர்க்க வேண்டியவற்றை நான் பேசி தீர்க்க தயார். கூட்டி வாருங்கள்.//
    இப்போது கூட கூட்டி வாருங்கள் என்னும் புலி குணம் அப்படியே;;;;

    //பார்த்திபன் – புலிகள் சேது விடயத்தில்தான் பொலிசில் வதமாக மாட்டினார்கள்.//
    அப்படியா?? கடந்தகாலம் மறந்த சேது என நாம் நினைக்கலாமா??

    //பாலன் – ஆம் புலிகள்தான் அடித்தனர் தாமே பொலிசில் போய் மாட்டினர். //
    சிவாஜிலிங்கத்துக்கும் ரசிகர் இருக்கும் போது சேதுவுக்கு இருப்பதில் விய;;;;;;;;;

    //குசும்பு – தலைமறைவை மேற்கொள்கிறார்கள் அல்லை தலையின் மறைவாலோ என்னவோ புலிகள் செய்ததை நியாயபடுத்துகிறீர்களா? //
    சிலரை புலிகள் கொல்லும் போது தாங்கள் தூங்கியது போலோ அல்லது கோலா வேண்டி கொடுத்தது போலோ அல்ல; புலி செய்த்தது தவறுதான் ஆனால் அதை சர்வதேச பிரச்சனையாய் பேசுவது அதுவும் சேது(முன்னாள்புலி) மிக தவறு:

    //பல்லி – பளய தளபதிக்கு பயம் ஏனோ? ஆர் அது? தளபதியா? பல்லியைவிட? //
    யாருடன் ரிபிசி உடைப்புக்கு புறப்படீர்களோ அவரேதான் பெயரை சொல்லுவது நாகரிகமல்ல; பல்லியையும் அந்த தளபதி தேடுகிறாராம்; காரனம் பல்லி தளபதி இல்லை பலருக்கு தலைவலியாக எழுதுவதால்;

    //அனிமொவுஸ் – சேது இண்றுவரை விலைபேசப்படாத ஒருவன். //
    இதை இப்படி எடுத்து கொள்ளலாமா தருவதை ஏற்று கொள்பவர்தான் இவரென::::

    // சேது இப்ப எந்த பக்கம் என்று மனதிற்குள் கேப்பவர்களிடம் ஒரு கேள்வி / சேது எந்த பக்கம் நிக்கவேணும்? அது ஆர் தலைமையில்? தேசியத்தின் பக்கம் என்று கருதினால் இப்ப ஆர் தேசிய தலைவர்? அப்ப சேது நிக்கும் பக்கம் தேசியம் இல்லையா?
    இப்போது கூட மனிதனாய் இருக்க சிந்திக்கவில்லை எந்தபக்கம் நிக்கவேண்டும் என கேப்பதால் சேது ஏதோ ஒருபக்கம் சார்ந்துதான் அவரது வாழ்வு ஓடும், பண்டிதரல்லவா! அதுவும் படித்த பண்டிதரல்லவா!

    Reply
  • மாயா
    மாயா

    // ஒரு இணையத்தளத்திலோ பத்திரிகையிலோ பொய்யான தகவலை திரிபு படுத்தியோ அன்றேல் தனிமனித சுதந்திரத்தைக் கெடுக்கக் கூடிய வகையில் எழுதப்பட்டிருந்தால் அதற்கென நோர்வேயில் ஒரு சட்டபாதுகாப்பு மன்று உள்ளது. அங்கே பத்திரிகைகள் பற்றிய முறைப்பாடுகளைச் செய்யலாம். சட்டத்தில் சகலவற்றுக்கும் இடம் உண்டு. அதை விட்டு விட்டு கை தூக்குவது மறுக்கப்பட வேண்டிய ஒன்றே.- Norway//

    தனக்கு தலை வலி வந்தால்தான் , தலைவலியின் அருமை தெரியும் என்பார்கள். புலிகளது கொலைகளை நியாயப்படுத்தி கை தட்டி வாழ்ந்தோர் ,ஒரு சில அடிகளை , இலவச இணைப்பு போல வாங்கியதற்கே இந்த ஒப்பாரி வைக்கிறாங்கள். அட, உங்கள் கை தட்டல்களால் , அங்கே செத்துப் போனவர்கள் உயிரும் , அதற்காக வேதனைப்படும் உறவுகளின் வேதனையும் உணர , சேது போன்றவர்கள் தொடர்ந்து அடி வாங்க வேண்டும்.

    புலத்தில் பிரச்சனையென்றால் , போலீஸுக்கு தமிழர் போவதில்லை. அது ஒன்று கெளரவ பிரச்சனை அல்லது ஊரில் யாருக்காவது பிரச்சனை வருமென்ற பயம். இதை மீறி புலிகளை புலத்தில் சரியாக எதிர்த்த அனைவருக்கும் , புலிகள் பயந்தே வாழ்ந்தனர். இடம் , ஏவல் அறிந்தே வெருட்டல் , உருட்டல் எல்லாம் நடந்தது. அண்ணன் (பிரபா) பெயரை சொல்லி மிரட்டி வாழ்ந்த , சாது மிராண்டால்கள் புலத்து புலிகள். பிரபா, பங்கருக்குள் என்ன பயத்தோடு இருக்கிறார் என்பதைக் கூட உணராத பசுக்கள் , புலத்து பு(எ)லிகள்.

    ஜேர்மன் , சுவிஸ் போன்ற நாடுகளில் மனைவியை , குழந்தைகளை கொடுமைப்படுத்தும் ஆட்களுக்கு 500 மீட்டரிலிருந்து 1 கிலோ மீட்டர் ….. என தடை போடும் போலீசார் , அதை மீறுவோரைக் கூட போலீசார் பிடிக்க பஸ்ஸர் கருவிகளை வழங்குவதுண்டு. இது கூட அறியாத புலிப் புண்ணாக்குகள், மற்றும் சேது எனும் ஊடகவியலாளர்? என நினைத்தால் சிரிப்பு தாங்கல்லப்பா?

    புலத்தில படிக்கிற சின்ன குழந்தைகளிடம் கேளுங்க, விலா வாரியா தெரியும். குப்பை இணையங்களையும், ஊத்தை தொலைக் காட்சிகளையும் , மொக்கு ரேடியோகளையும் கேட்டால் , உங்கள் அறிவு , மட்டமாத்தான் இருக்கும். இவர்களை , வீட்டில் கூட மதிப்பதில்லை. அந்தளவு மொக்குகள். முடிந்தால் சின்னப் பிள்ளைகளின் காட்டூன் டீவியாவது பார்த்தால் , உங்களைப் போன்றவர்களுக்கு தெளிவு கிடைக்கும். மூளையும் சற்று வளரும்.

    Reply
  • பாலன்
    பாலன்

    மாயா – சேது பாவிப்பது ஜ.பி.எஸ் என அறிந்தேன். அது சேதுவை பொலிஸ் பாதுகாக்கவா? பொலிஸ் சேதுவின் நடமாட்டத்தை பாதுகாக்கவா? என்பது சந்தேகமே. உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அல்லது சேது கடத்தபட்டாலும் ஜி.பி.எஸ் காட்டும் அதாவது இந்த கருவி எங்கு இருக்கிறது என்று காட்டும்.

    இதில் செய்மதி தொலைபேசி பெருத்தபட்டிருக்கும். தொலைபேசி வசதி 24 மணிநேர தொடர்பில் இருக்கும். பாதிப்பு சேதுவுக்கு தெரியாமலே சேதுவை சுற்றி உள்ளவர்கள் கதைப்பதை பொலிசார் இந்த ஜி.பி.எஸ் ஊடாக ஒலிபதிவு செய்ய முடியும்.

    Reply
  • பல்லி
    பல்லி

    //பல்லி போய் தேசத்தை வாசித்து பாரும்//
    வாசிக்கிறேன் தப்பில்லை ஆனால் பாலன் அலுப்பை பாராமல் நீங்களும் அதை படியுங்க; அங்கேயும் பல்லி சேதுவை சேதுவின் திருமுகத்தை காட்டியுள்ளேன்,

    //./ரி.பி.சி உடைக்கும்போது சேது லண்டனில் இல்லை என்பது நோர்வேக்கும் தெரியும் பிரித்தானிய அரசுக்கும் தெரியும். //
    இருக்கலாம் ஆனால் சேதுவுக்கும்,தளபதிக்கும் ,கீரனுக்கும் ஏன் சுவிஸ்ல் வசிக்கும் ஒருவருக்கும் கூட நல்லாவே தெரியும் இதில் சேதுவின் பங்கு என்ன என்பது, திரும்பவும் ஒரு பாட்டியா? உடம்பு தாங்கது பாலா??

    //ஒரு செய்தியாளனுக்கு செய்தி முன்போ அல்லது சம்பவத்திற்கு பின்போது தெரிந்திருப்பது தவறு இல்லை என்பது சட்டம்//
    பின்பு தெரிந்தால் அது தப்பில்லை; ஆனால் முன்பு தெரிந்தால்; உதாரனத்துக்கு ரி பி சி உடைப்பை வைக்கலாமா??

    //ஆனால் சேது அனைத்திற்கும் உரிய பதிலை கொடுத்தவன்//
    மந்திரியாரே மாற்றுங்கள் கொடுத்தவனல்ல கெடுத்தவன்;

    //புளொட் றாஜா/ மங்கள சமரவீர/ ஆணந்த சங்கரி/ இலங்கை தூதவராலயம் / பந்துல ஜெயசேகர/ இப்படி பலரை அடுக்கலாம் அனைத்தும் சேது புலிக்கு ஆதரவாக எழுதுவதாக குற்றச்சாட்டு புலியுடன் தொடர்புடைய குற்றச்சாட்டு ஏன் ரி.பி.சி வானொலி முதல் ஜெயதேவன் வரை முறையிட்டு மூக்குடைபட்டவர்கள்.//
    மீண்டும் ஒருமுறை சேது பலரிடம் பல்லி காட்டவேண்டிய சூழலை பலன் உருவாக்குகிறார்; மேலே குறிப்பிட்ட அனைவரிடமும் சேது முழங்காலில்
    நின்றவர்தான்;

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இங்கே சேது எதையும் அறிவித்து விட்டு நேரடியாகத் தான் செய்கின்றார் என்று வக்காலத்து வாங்குவோரே, அப்படியாயின் இந்த சேது ஏன் GTV யில் “உண்மை” என்ற பெயரில் பதுங்கி வந்து கருத்து வைக்கின்றார் என்பதையும் புரிய வைப்பீர்களா??

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //சேது பாவிப்பது ஜ.பி.எஸ் என அறிந்தேன். அது சேதுவை பொலிஸ் பாதுகாக்கவா? பொலிஸ் சேதுவின் நடமாட்டத்தை பாதுகாக்கவா? என்பது சந்தேகமே. உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அல்லது சேது கடத்தபட்டாலும் ஜி.பி.எஸ் காட்டும் அதாவது இந்த கருவி எங்கு இருக்கிறது என்று காட்டும்.- பாலன் //

    பாலன்,
    உங்க அதீத புலம்பல்கள் சேதுவை ஏதோ அமெரிக்கக அதிபர் அளவிற்கு காட்டும் முயற்சியே. சேதுவிடம் நீங்கள் ஏமாந்திருக்கலாம், அதற்காக எல்லோரையும் உங்களைப் போல் எண்ணி விடாதீர்கள்…..

    Reply
  • Kusumpu
    Kusumpu

    ஐயோ ஐயோ பாலன் நாங்கள் என்ன கற்காலத்திலா வாழுகிறோம் எமது நாட்டுப் பொலிசும் ஜிபிஎஸ் பாவிக்கிறது. கார்களுக்கும் ஜிபிஎஸ் முதலில் பாவித்தது எமது புலம்பெயர் நாடுதான். //இது கூட அறியாத புலிப் புண்ணாக்குகள்இ மற்றும் சேது எனும் ஊடகவியலாளர்? என நினைத்தால் சிரிப்பு தாங்கல்லப்பா? // மாயா உண்மையிலும் உண்மை.

    //சேது எந்த பக்கம் நிக்கவேணும்? அது ஆர் தலைமையில்? தேசியத்தின் பக்கம் என்று கருதினால் இப்ப ஆர் தேசிய தலைவர்? //சேது. அட இஞ்சை பாரடா இப்பவும் தேடுகிறாங்கடா தேசியத்தலைவனை. எங்கள் தேசத்து மக்களை வேரும் விழுதுமாகப்பிடுங்கி எறிந்து இனத்துக்கே துரொகியாய்போன புலித்தலைவன் தேசித்தலைவனாம். இனி ஒரு புதுத்தலைவனைத் தேடுகிறார்களா இப்ப? மகிந்ததான் இன்றை தேசியத்தலைவராக்கும்?

    Reply
  • Sethurupan
    Sethurupan

    பல்லி/திரும்பவும் ஒரு பாட்டியா? உடம்பு தாங்கது பாலா??/
    சேது கீரன் என்பவருடனோ ரி.பி.சி உடைத்தவர்களுடனோ என்ன நோர்வேயில் பாட்டி நடாத்தினவரோ? 2002 ம் ஆண்டுக்கு பிறகு சேது கீரனுடனோ அல்லது ரிபிசி உத்தவர்களுடனனோ ஒரு பாட்டியிலும் கலந்தது இல்லை. ரி.பி.சி உடைக்கபட்டது 2002க்கு பிறகுதான் பல்லி.

    உதாரனத்துக்கு ரி பி சி உடைப்பை வைக்கலாமா??
    ஆதற்குரிய பதிலை சொல்லிவிட்டேன் தகவல்களை அறிந்து வைத்திருப்பது குற்றமா?

    மேலே குறிப்பிட்ட அனைவரிடமும் சேது முழங்காலில் நின்றவர்தான்;
    பல்லி சேது சரித்திரத்திலையே இவர்களுக்கு பல்லு காட்டாமாட்டான். ஆப்படியான பச்சோந்தியாக சேது இருக்க மாட்டான். சுரித்திரத்தில் சேது எவனிடமும் முளங்காலில் நின்றதும் இல்லை நிக்க போவதும் இல்லை.

    பார்த்திபன் :- ஒருவன் ஒரு தகவலை சொன்னால் தாங்க முடியவில்லை. நான் அறிந்தமட்டில் நோர்வே பொலிசார் அச்சுறுத்தல் கனத்திற்கு ஏற்ப அவர்கள் பயன்படுத்தும் கருவிகளும் வேறபடும்.

    Reply
  • santhanam
    santhanam

    இங்கே வந்து கருத்து எழுதும் அனைவரிற்கும் ஒரு விடயம் விளங்க வேண்டும்
    வெள்ளையனும் ஆரியனும் எமது இலக்கியவட்டம் முதல் இயக்கங்களின் வட்டம் வரை எப்படி உலக வல்லாதிக்க சக்திகள் கையாள்கிறார்கள் அதற்கு இவர்கள் அவர்களிடம் எமது தேசியத்தையும் இறைமையையும் அடைவு வைத்து விட்டு எமது மக்களின் முதுகில் இறைமையையும் தேசியத்தையும் தேடிகொண்டு இருக்கிறார்கள் இதுதான் முப்பது வருடமாக……

    Reply
  • Norway Nackeera
    Norway Nackeera

    //நோர்வே நக்கீரா – பேசித்தீர்க்க வேண்டியவற்றை நான் பேசி தீர்க்க தயார். கூட்டி வாருங்கள்.// சேது- பிழையாவே புரிந்திருக்கிறீர்கள். அடித்தது யார்? கைதூக்காமல் கதைத்திருக்க வேண்டியது யார்? அதுவும் அவர்களே தான். அடிக்குப்பதிலாகக் கதைத்திருக்கலாம் என்பதே என் எண்ணம்.
    //தனக்கு தலை வலி வந்தால்தான், தலைவலியின் அருமை தெரியும் என்பார்கள்.// மாயா- நான் சேதுவுக்குப் பரிந்துரைக்கவில்லை. சேதுவுடன் பேசியிருக்கலாம். பேசவிரும்பாவிட்டால் சட்டநடவடிக்கை எடுத்திருக்கலாம். தான்விரித்த வலையில் தானே விழுந்த கதையாகவல்லவா இருக்கிறது. கலாச்சாரத்தை எப்படி விடுவது? ஊரில் சொல்வார்கள் -அடிச்சுச் சொல்லடா மச்சான்- என்று. இங்கும் அடிச்சே சொல்கிறார்கள். வளர்த்து விட்டவர்களே வரிகட்டியிருக்கிறார்கள்

    Reply
  • Kusumpu
    Kusumpu

    பின்நோக்கிய ஒரு பார்வை
    http://www.asiantribune.com/index.php?q=node/527

    Reply
  • பல்லி
    பல்லி

    //. ரி.பி.சி உடைக்கபட்டது 2002க்கு பிறகுதான் பல்லி.//
    சேது திரும்பவும் எனது பின்னோட்டத்தை கவனிக்கவும்:

    //ஆதற்குரிய பதிலை சொல்லிவிட்டேன் தகவல்களை அறிந்து வைத்திருப்பது குற்றமா?//
    இல்லை ஆனால் எனது வினா உடைப்புக்கு முன்பு தெரியுமா. என்பதுதான்,

    //சுரித்திரத்தில் சேது எவனிடமும் முளங்காலில் நின்றதும் இல்லை நிக்க போவதும் இல்லை. //
    இதை தேசத்தில் சொல்லுவது வேடிக்கை;

    எனக்கும் பார்த்திபன் போல் ஒரு சந்தேகம் உண்டு ;
    இவர் வீட்டு காவலா? அல்லது இவருக்கு காவலா??

    எல்லாதுக்கும் மேலாக பாலாவின் வினாக்களுக்கு சேதுவின் விடைகள் அருமை; எது எப்படியோ சேதுவிடம் எனக்கு பிடித்தது சரியோ தவறோ தானே நேரில் வந்து தனது நிலைபாட்டை சொலவது நன்றி சேது; நமக்குள் போட்டி வேண்டாம்; எதை செய்தாலும் மக்களுக்காக செய்யுங்கள் மக்கள்.

    Reply