Multiple Page/Post

பிரான்ஸ் தமிழரிடம் பணம் பறித்த விடுதலைப்புலிகளுக்கு சிறைத்தண்டனை

பிரான்ஸில் வாழுகின்ற தமிழர் சமூகத்திடம் மிரட்டிப் பணம் பறித்த குற்றச்சாட்டின் கீழ் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒரு குழுவினருக்கு ஒரு பிரஞ்சு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. என BBC தெரிவித்துள்ளது

இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான போருக்காக பல லட்சக் கணக்கான டாலர்களை இந்தக் குழுவினர் பிரான்ஸில் வாழும் தமிழ் மக்களிடம் மிரட்டிப் பறித்ததாக கூறப்படுகிறது.

விடுதலைப்புலிகள் அமைப்பின் பிரான்ஸ் நாட்டுப் பிரிவின் தலைவரான நடராஜா மதிந்திரன் என்பவர் உட்பட 21 பேர் இந்த வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்டுள்ளனர்.

பாரிஸிலும், அண்மைய பகுதிகளிலும் வாழும், பெரும்பாலும் அரசியல் அகதிகளான தமிழர்களிடம், புரட்சி வரி என்ற பெயரில் இந்தப் பணம் அறவிடபட்டதாக அரச தரப்பு வழக்குத்தொடுனர்கள் தெரிவித்துள்ளனர்.

சவூதிஅரேபியாவில் பன்றிக்காய்ச்சல் நான்கு பேர் மரணம்; நான்கு பேர் வைத்தியசாலையில்

macca.jpgசவூதி அரேபியாவில் புனித ஹஜ்ஜுக்குச் சென்றோரில் நான்கு பேர் இன்புளுவென் சியா நோயினால் மரணமடைந்துள்ளனர். சுமார் 25 இலட்சம் மக்கள் இம்முறை ஹஜ் கடமைக்காக மக்கா, மதீனா நகரங்களில் கூடுகின்றனர்.

இவர்களில் நான்கு பேர் மரணமடைந்துள்ளதாகவும் மொரோக்கோ, சூடான், இந்தியா, நைஜீரியாவைச் சேர்ந்தவர்களென்று சவூதிஅரேபிய சுகாதார அமைச்சு அறிவி த்துள்ளது. 17 வயதுச் சிறுமியும் 75 வயது மிக்க முதியோருமே இவ்வாறு பலியாகியுள்ளனர்.

புனித ஹஜ்ஜுக்காக சவூதிஅரேபியா வருவோர் மருத்துவச் சான்றிதழ்களைப் பெற்ற பின்னரே அனுமதிக்கப்படுவதுண்டு. இவ்வாறு சான்றிதழ்களைப் பெற்று வந்தோரில் இருபது பேருக்கு இன்புளு வென்சியா கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இவர்களில் 12 பேர் தடுப்பூசி ஏற்றப்பட்டனர். நான்கு பேர் வைத்தியசாலைகளில் அனு மதிக்கப்ப ட்டுள்ளனர்.

நான்கு பேர் உயிரிழந்தனர்.சவூதிஅரேபியாவில் இம் முறை 25 இலட்சம் மக்கள் ஹஜ்ஜுக்காக வரவுள்ளதால் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விசேடமாக மருத்துவ ஏற்பாடுகள் விரிவாகச் செய்யப்பட்டுள்ளன. நடமாடும் மருத்துவ நிலையங்களும் சேவையிலுள்ளன. மதவைபவங்களுக்காகப் இலட்சக்கணக்கானோர் கூடும் இடமாக சவூதிஅரேபியா உள்ளது.

இலங்கை விவகாரம்; மலேசிய பாராளுமன்றத்தில் கடும் விவாதம்

மலேசியப் பாராளுமன்றத்தில் இலங்கை விவகாரம் தொடர்பாக நேற்று திங்கட்கிழமை கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம் பெற்றுள்ளன. மலேசியாவிலுள்ள இந்திய சமூகத்தவர்கள் (பெரும்பான்மையானோர் தமிழர்கள்) மத்தியில் செல்வாக்கைத் தேடுவதற்கு முயற்சிக்கும் எதிர்க்கட்சித் தலைவரான அன்வர் இப்ராகிம், இலங்கையில் தமிழ் அகதிகள் தொடர்பாக கொழும்பு மீது குற்றச்சாட்டு சுமத்தியதாக மலேசிய பிரதி வெளிவிவகார அமைச்சர் குற்றம் சாட்டியதையடுத்து கடுமையான தர்க்கம் இடம் பெற்றது.  இலங்கை அரசு அகதிகளின் நலன்களை புறக்கணித்ததாக தெரிவித்ததன் மூலம் இந்திய சமூகத்தவரின் செல்வாக்கைப் பெற்றுக் கொள்ள முயற்சிப்பதாக பிரதி வெளி விவகார அமைச்சர் கோகிலன்பிள்ளை குற்றம் சாட்டியதாக போர்னாமா செய்திச் சேவை தெரிவித்தது.

இலங்கையின் நெருக்கடியை உள்நாட்டு விவகாரமாகவே மலேசியா பார்ப்பதாகவும் மலேசிய அரசின் வெளிநாட்டுக் கொள்கையின் அடிப்படையில் இலங்கைப் பிரச்சினை அதன் உள்நாட்டு விவகாரம் என்றும் கோகிலன் பிள்ளை கூறியுள்ளார்.  அகதிகளின் பாதுகாப்பு, நலன்கள் தொடர்பாக மனித உரிமைக் குழுக்களுடன் நெருங்கிச் செயற்படப் போவதாக ஐ.நா.செயலாளர் நாயகம் பான்கீ மூனுக்கு இலங்கை அரசு உறுதியளித்திருப்பதாகவும் கோகிலன் பிள்ளை மலேசியப் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.

செனட்டர் பி.இராமசாமி எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்திருக்கிறார்.  இலங்கையில் மோதலின் போது பொதுமக்களுக்கு இழப்புகள் ஏற்பட்டமை மற்றும் 3 இலட்சம் அகதிகளின் அவல நிலை தொடர்பாக கொழும்பை மலேசிய அரசு ஏன் கண்டிக்கவில்லை என்று இராமசாமி கேள்வி எழுப்பியிருந்தார்.

மலேசியாவும் இலங்கையும் நட்பு நாடுகள் எனவும் இலங்கையின் முயற்சிகளுக்கு மலேசியா ஆதரவளித்ததாகவும் கூறிய கோகிலன் பிள்ளை, இலங்கை தொடர்பாக சர்வதேச சமூகம் கொண்டிருக்கும் விருப்பங்கள் நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.

இலங்கை – இந்திய அணிகள் மோதும் 2 வது போட்டி இன்று ஆரம்பம்

greenpark.jpgசங்கக்கார தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் இருதரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி முடிந்தது.

இந்திய – இலங்கை அணிகள் மோதும் 2 வது டெஸ்ட் போட்டி கான்பூரில் இன்று (24 ஆம் திகதி) தொடங்குகிறது. அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் கப்டன் டோனிக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டது. லேசான காயம்தான் பயப்படும்படி எதுவும் இல்லை.

முன் எச்சரிக்கை காரணமாக தினேஷ் கார்த்திக் அவசரமாக அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் டெஸ்ட் அணியில் இடம்பெற்று இருந்தார். 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு இல்லாததால் ரஞ்சி போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டார்.

அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர் தற்போது இந்திய வீரர்களோடு இணைந்து கொண்டார். டோனி உடல் தகுதி பெற்று விடுவார். அவர் ஆடாத பட்சத்தில் தான் தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு கிடைக்கும்.

அகமதாபாத் ஆடுகளம் முழுக்க முழுக்க துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக இருந்தது. இதனால் பந்து வீச்சாளர்கள் சிக்கி திணறி விட்டார்கள். அகமதாபாத் டெஸ்டில் 7 வீரர்கள் சதம் அடித்தனர்.இந்திய அணியில் டிராவிட், டோனி, காம்பீர், டெண்டுல்கர் ஆகியோரும் இலங்கை அணியில் டில்சான், ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகியோரும் சதம் அடித்தனர்.

அது மாதிரியான ஆடுகளம் இல்லாமல் முடிவு தெரியும் வகையில் “பிட்ச்” இருக்க வேண்டும் என்று இரு அணி கப்டன்களும் தெரிவித்துள்ளனர். மைதானம் முதல் 3 தினங்கள் துடுப் பாட்ட வீரர்களுக்கும் கடைசி இரண்டு தினங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்க ப்படுகிறது. கடைசியாக கான்பூரில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த டெஸ்டில் இந்தியா 8 விக்கெட்டில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் பிரதமரின் மனைவி மீது குற்றச்சாட்டு

பாகிஸ்தான் பிரதமர் கிலானியின் மனைவி பவுசியா வாங்கிய கடனை திரும்பச் செலுத்தாமல் இழுத்தடித்தார் என்றும் இது தொடர்பான வழக்கில் அவருக்கு சாதகமாக அதிகாரிகள் நடந்துகொண்டனர் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது.

பவுசியா, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வங்கியில் இருந்து 20 கோடி ரூபாய் கடன் வாங்கினார். ஆனால் பணத்தை ஒழுங்காக செலுத்தாததால் அந்த கடன் 57 கோடி ரூபாயாக உயர்ந்து விட்டது. அதன்பிறகு வட்டியில் சலுகை காட்டினால் பணத்தை திருப்பி செலுத்துவதாக அவர் வங்கிக்கு விண்ணப்பித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் அவர் 4 கோடியே 55 லட்சம் ரூபாய் மட்டுமே கட்டினால்போதும் என்று அதிகாரிகள் சலுகை காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இந்த குற்றச்சாட்டை பிரதமர் கிலானி மறுத்து இருக்கிறார்.

துடுப்பாட்டத்தில் மஹேல முதலிடம் பிடித்தார்

mahela-jayawardene.jpgசர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ள டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இலங்கையின் மஹேல ஜெயவர்த்தன முதலிடம் பிடித்துள்ளார்.டெஸ்ட் போட்டிகளில் துடுப்பாட்டத்தில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான இரட்டைச் சதம் மூலம், மஹேல ஜெயவர்தன, முதன் முறையாக “நம்பர் 1” இடத்தைப் பெற்றுள்ளார். இலங்கை அணிக்கப்டன் சங்ககாரா, இந்தியாவின் காம்பிர் அடுத்த இரு இடங்களில் உள்ளனர்.

இதில் இந்தியாவின் சச்சின், இலங்கைக்கு எதிரான சதத்தினால் ஒரு இடம் முன்னேறி, 15 ஆவது இடத்தை இங்கிலாந்து வீரர் பீற்றர்சனுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். ஐந்த இடங்கள் முன்னேறிய ட்ராவிட் 25 ஆவது இடத்திலும், சேவாக் 21 ஆவது இடத்திலும் உள்ளனர்.

பந்து வீச்சுத் தரவரிசையில் தென்னாபிரிக்காவின் ஸ்டைன், இலங்கையின் முரளிதரன், அவுஸ்திரேலியாவின் மைக்கேல் ஜோன்சன் முதல் 3 இடங்களை பெற்றுள்ளனர். இந்தியாவின் ஹர்பஜன்சிங், ஒரு இடம் பின்தங்கி 6 ஆவது இடத்திலும், சகிர்கான் 8 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஈரான் ஜனாதிபதி பிரேஸில் பயணம்: இருதரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

ஈரான் ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத் நேற்று திங்கட்கிழமை பிரேஸில் பயணமானார். இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் பிரேஸில் ஜனாதிபதி ஈரான் ஜனாதிபதியை வரவேற்கவுள்ளார். பிரதான வர்த்தக உடன்படிக்கையில் இருதலைவர்களும் கையெழுத்திட்ட பின்னர் நடைபெறவுள்ள முக்கிய நிகழ்ச்சிகளில் ஈரான் தலைவர் பங்கேற்கவுள்ளார்.

பிரேஸில் பல்கலைக்கழகத்தில் உரையாற்றவும் பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொள்ளவும் பிரேஸில் காங்கிரஸில் உரையாற்றவும் ஈரான் ஜனாதிபதி அழைத்துச் செல்லப்படவுள்ளார். மேற்கு நாடுகளின் அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில் பிரேஸிலுடனான உறவை வளர்ப்பதில் ஈரான் அக்கறை செலுத்தியுள்ளது.

இஸ்ரேல் ஜனாதிபதி ஷிமோன் பெரஸ் அண்மையில் பிரேஸில் சென்ற வேளை இவரது விஜயத்தை எதிர்த்துப் பாரிய ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். ஈரான் யுரேனியத்தை மின்சாரத் தேவைக்காகவும் அமைதியான முறையிலும் கையாள்வதாக கடந்த செப்டம்பர் மாதம் ஏ. எப். பி. செய்திச் சேவைக்கு பிரேஸில் ஜனாதிபதி தெரிவித்தார். இதிலிருந்து இவ்விரு நாடுகளினதும் உறவுகள் விரிவடைய ஆரம்பித்துள்ளன.

பிரேஸில் பயணம் குறித்து ஈரான் ஜனாதிபதி கடந்த வெள்ளிக்கிழமை கூறியபோது இருநாடுகளினதும் பல்வேறுபட்டதுறைகளுக்கு இரு நாடுகளினதும் ஒத்துழைப்பு அவசியம் என வலியுறுத்தினார். மேற்கத்தேய நாடுகள் ஏனைய நாடுகளின் விஞ்ஞான வளர்ச்சியைத் துண்டிக்க முயற்சிப்பதாகவும் அஹ்மெதி நெஜாத் குறிப்பிட்டார்.

பிரேஸில் மக்கள் உள்ள பக்கம் ஈரான் மக்கள் உள்ளனர். அப்பாவிப் பொது மக்களுக்கெதிரான ஷியோனிஸவாதிகளின் தாக்குதல்களைக் கண்டிக்கும் விடயத்தில் பிரேஸிலியர்களும் ஈரானியர்களும் ஒற்றுமையுடனுள்ளதாகவும் ஈரான் ஜனாதிபதி குறிப்பிட்டார். மேற்கு நாடுகளின் அழுத்தங்கள் அச்சுறுத்தல்களைப் பொருட்படுத்தாத ஈரான் ஜனாதிபதி தென்னமெரிக்க நாடுகளுடனான உறவை வளர்ப்பதில் அக்கறையுடனுள்ளார். யுரேனியத்தை செறிவூட்டும் ஈரான் ரகசியமாக அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாக இஸ்ரேலும் மேற்குலக நாடுகளும் சந்தேகிக்கின்றன.

இவ்வாறான நிலையில் பிரேஸில் ஈரானுடன் உறவு கொள்வதை அந்நாடுகள் கடுமையாக விமர்சித்துள்ளன. பொருளாதார நெருக்கடியிலிருந்து பாதுகாப்புப் பெற பிரேஸில் ஈரானுடன் தொடர்புகளைப் புதுப்பிப்பதாகவும் விமர்சிக்கப்படுகிறது. 2010 ல் ஈரானுக்கு வருமாறு பிரேஸில் ஜனாதிபதியை அஹ்மெதி நெஜாத் அழைப்புவிடுப்பார்

யாழில் கல்வி வெளியீட்டு திணைக்கள கிளை

260909srilanka.jpgயாழ். கல்விச் சமூகத்தின் நன்மை கருதி கல்வி அமைச்சின், கல்வி வெளியீட்டு திணைக்களத்தின் கிளை யொன்றினை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைப்பதற்கு நட வடிக்கை எடுத்துள்ளதாக பிரதிக் கல்வி அமைச்சர் எம். சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

மேற்படி கிளைமூலம் பாரிய சேவையை வழங்க முடிவதுடன் மாண வர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை திறம் பட மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படு மென தாம் நம்புவதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

கிறிஸ்மஸ் தீவு தாக்குதலில் சம்பந்தப்பட்டோர் திருப்பி அனுப்பப்படும் நிலை ஏற்படலாம் அவுஸ்திரேலியா எச்சரிக்கை

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான், இலங்கையைச் சேர்ந்த புகலிடம் கோருவோருக்கு இடையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று அவுஸ்திரேலிய குடிவரவுத் துறை அமைச்சர் கிறிஸ் இவான் தெரிவித்துள்ளார்.

இத் தாக்குதலில் காயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தடிகள், தும்புக்கட்டைகளால் தடுப்பு நிலையத்திலுள்ள இரு நாட்டவர்களும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தியுள்ளனர். “இந்த விடயங்கள் தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டிருப்போருடன் நாம் ஆராய்ந்து வருகிறோம். ஆனால், புகலிடம் கோரும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் அது தொடர்பாக ஆட்கள் கவலையடைவார்கள். அவர்கள் அகதிகளென அடையாளம் கண்டு கொள்ளப்பட்டால் எமது பாதுகாப்பு அவர்களுக்கு கொடுக்கப்படும்.

இல்லாவிடின் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று கிறிஸ் இவான்ஸ் கூறியுள்ளார். முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் வன்முறைக்கு பொறுப்பானவர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருக்கிறார். கிறிஸ்மஸ் தீவு தடுப்பு நிலையத்தில் 975 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தடுத்து வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக தமது விரக்தியை அங்குள்ளோர் தெரிவித்திருப்பதாக அகதி செயல்பாட்டு முன்னணியின் பேச்சாளர் அயன் ரின்ரவுல் ஏ. பி. சி. செய்திச் சேவைக்கு கூறியுள்ளார். இதேவேளை, சில அகதி விண்ணப்பங்கள் தொடர்பான பெறுபேறுகளை அடுத்து ஏற்பட்ட தப்பபிப்பிராயத்தினால் வன்முறை மூண்டதாக பிரதமர் கெவின்ரூட் கூறியுள்ளார்.

“கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர் ஒருவர் பாரதூரமான குற்றச் செயலை மேற்கொண்டிருந்தால் அவர்களுக்கு விசா வழங்குவதா? இல்லையா? என்பது தொடர்பாகக் கணிப்பீடு செய்யும் போது இந்த விடயமும் பரிசீலனைக்கு எடுக்கப்படும் என்று அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின்ரூட் பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.

‘இயக்கத்தின் பின்னடைவிற்கு சர்வதேச செயற்பாட்டாளர்களே காரணகர்த்தாக்கள்!’ தமிழீழ விடுதலைப் புலிகள் அறிக்கைகள்

LTTE_PressReleaseதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மறைவைத் தொடர்ந்து அவ்வமைப்பு தன்னை தக்க வைத்துக் கொள்வதில் பலத்த நெருக்கடிகளைச் சந்தித்து உள்ளது. இந்த நெருக்கடிகள் பெரும்பாலும் வெளி அழுத்தங்களால் ஏற்பட்டது என்பதிலும் பார்க்க உள்ளிருந்து கிளம்பிய சுயநலன் சார்ந்த முரண்பாடுகளே பிரதான காரணமாக அமைந்தது. தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தாயகத்தில் உள்ள தளபதி ராம் வெளியிட்டுள்ள அறிக்கை சர்வதேசப் பொறுப்பாளர் நெடியவன், ரிஆர்ஓ தலைவர் ரெஜி, பிரிஎப் யை பின்னிருந்து இயக்கும் ரூட் ரவி மற்றும் தனம் போன்றவர்களின் செயற்பாடுகள் விடுதலைப் புலிகளின் தோல்விக்குக் காரணமாக அமைந்துள்ளது என்று குற்றம்சாட்டுகின்றது.

இந்த யுத்தத்தால் எவ்வித பாதிப்புக்கும் முகம்கொடுக்காத தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசக் கட்டமைப்பு தங்கள் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதற்காக தங்கள் அமைப்பின் தலைவர் வே பிரபாகரன் மறைந்ததையே மூடிமறைத்தனர். இதுவே விடுதலைப் புலிகளின் சர்வதேச முகாமில் பிளவை ஏற்படுத்தியது. புலம்பெயர் நாடுகளில் பொருளாதாரக் கட்டமைப்புகளைத் தங்கள் கைவசம் வைத்துள்ள கடும்போக்கான புலிகள் தலைவர் வே பிரபாகரன் மறைந்ததை மூடிமறைத்து தங்கள் இருப்பையும் பொருளாதாரக் கட்டமைப்பையும் தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதனால் பிரபாகரன் உயிருடன் தப்பிவிட்டார் போன்ற அறிக்கைகளையும் செய்திகளையும் ஊடகங்கள் ஊடாக கசியவிட்டனர்.

ஆனால் விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் கெ பத்மநாதன் வே பிரபாகரன் உயிரிழந்த செய்தியை அறிவித்த போது அவரை துரோகி என புலம்பெயர் புலிகள் அறிவித்தனர். அச்சமயத்தில் இலங்கையில் உள்ள போராளிகளோடு தொடர்பைக் கொண்டிருந்த கெ பத்மநாதன் அங்குள்ள போராளிகளை தன்பக்கம் வென்றெடுத்திருந்தார். இதுவரை பத்மநாதனைத் துரோகி என அறிவித்த புலம்பெயர்ந்த புலி ஆதரவு முகாம் தற்போது மிஞ்சியிருந்த தளபதி ராமும் அங்குள்ள போராளிகளும் இலங்கை இராணுவத்துடன் இணைந்து விட்டதாகவும் அவர்களும் துரோகிகள் என்றும் செய்திகளைக் கசியவிட்டுள்ளனர்.

மாவீரர் நாளையடுத்து மாவீரர் உரையை வழங்கவுள்ள ராம் தங்கள் காலம்சென்ற தலைவர் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த உள்ளதை அடுத்தே இந்த துரோகி அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இவை தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி ராம் வெளியிட்டுள்ள அறிக்கை:

LTTE_PressRelease

தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி ராம் வெளியிட்டுள்ள அறிக்கை.