இலங் கையில் உள்ள மிகவும் தொன்மை வாய்ந்த சிவத்தலங்களில் ஒன்றாகிய யாழ்ப்பாணம் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்திற்குப் பொது மக்கள் இராணுவத்தின் முன்னனுமதியின்றி சென்று வரலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இந்த ஆலயம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் பணிப்புரைக்கமைய பொதுமக்கள் சென்று வழிபடுவதற்காகத் திறந்துவிடப்பட்டிருக்கின்றது என வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்திருக்கின்றார்.
- “பிரபாகரன் ஒரு முட்டாள். சாடிக்கு ஏற்ற மூடி போல, பொட்டு அம்மானும் ஒரு மொக்கன்” எனக்கு துரோகிப்பட்டம் தருபவர்களுக்கு என் பதில்: இரட்டைமுகவராக மாறிய முன்னாள் கடற்புலி புலனாய்வுச் செயற்பாட்டாளர் காகுஸ்தன் அரியரத்தினம் (கனடா)
- புலிகளின் வி. பிரபாகரனும், வெனிசுவேலாவின் அதிபர் நிக்கோலாஸ் மடூரோவும் ஒரே விதமான முடிவை எதிர்கொண்டனர்:
- கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!
- புதிய வடிவில் வரும் வர்த்தக-தொழில் நுட்பப் போர்
- அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறுமா..?
- லார்க்கூர்னே சிவன் கோயில் அர்ச்சகர்கள் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் இந்தியாவில் கைது !
Multiple Page/Post
நாட்டில் நிலவும் மோசமான கால நிலைக்கு மத்தியில் மீன்பிடிக்கச் சென்ற 113 மீனவர்களுடன் 24 வள்ளங்கள் காரைநகர் பகுதியில் கரையொதுங் கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார்.
தொடுவாவ, சிலாபம், நீர்கொழும்பு மற்றும் கல்பிட்டி ஆகிய பகுதிகளிலிருந்து ஆழ்கடலு க்கு மீன்பிடிக்கச் சென்றவர்களே வள்ளங்களுடன் கரையொதுங்கி யுள்ளனர்.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக இலங்கை யின் வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் காணப்படும் அதிக காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாகவே இந்த மீன் பிடி வள்ளங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதென தீர்மானித்து தமது கட்டுப்பணமான 75 ஆயிரம் ரூபாவை இன்று செலுத்தியுள்ளார்.
இந்த நிலையில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் இறுதிநாளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலில் ஒருவரை நிறுத்துமானால் தாம் போட்டியில் இருந்து விலகிக்கொள்ளப் போவதாக சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார். இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்னவும் இணைந்தே தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எடுத்துள்ள முடிவானது அவரது தனிப்பட்ட முடிவேயன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்புடையதல்ல என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தள்ளார்
இந்தியா வுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 3 ஓட்டங்களுக்குத் தோல்வி கண்டது.
முதலில் துடுப்பாடிய இந்தியா 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 414 ஓட்டங்கள் எடுத்தது. ஷேவாக் 146 ஓட்டங்கள் அடித்து அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.
அடுத்து துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 411 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து 3 ஓட்ட வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது
India 414/7 (50 ov)
Sri Lanka 411/8 (50.0 ov)
India won by 3 runs
Sri Lanka in India ODI Series – 1st ODI
ODI no. 2932 | 2009/10 season
Played at Madhavrao Scindia Cricket Ground, Rajkot
India innings (50 overs maximum)
V Sehwag c Dilshan b Welegedara 146
SR Tendulkar b Fernando 69
MS Dhoni*† c Mathews b Fernando 72
SK Raina c Jayasuriya b Kulasekara 16
G Gambhir c †Sangakkara b Kulasekara 11
Harbhajan Singh c Kulasekara b Mathews 11
V Kohli b Welegedara 27
RA Jadeja not out 30
P Kumar not out 5
Extras (b 5, lb 4, w 12, nb 6) 27
Total (7 wickets; 50 overs) 414 (8.28 runs per over)
Did not bat Z Khan, A Nehra
Fall of wickets1-153 (Tendulkar, 19.3 ov), 2-309 (Sehwag, 35.3 ov), 3-311 (Dhoni, 36.1 ov), 4-325 (Gambhir, 38.3 ov), 5-347 (Raina, 42.1 ov), 6-352 (Harbhajan Singh, 43.1 ov), 7-386 (Kohli, 47.2 ov)
Bowling O M R W Econ
KMDN Kulasekara 10 0 65 2
UWMBCA Welegedara 10 0 63 2
CRD Fernando 9 0 66 2
AD Mathews 7 0 60 1
ST Jayasuriya 7 0 76 0
SHT Kandamby 5 0 49 0
TM Dilshan 2 0 26 0
Sri Lanka innings (target: 415 runs from 50 overs)
WU Tharanga st †Dhoni b Raina 67
TM Dilshan b Harbhajan Singh 160
KC Sangakkara*† c Jadeja b Kumar 90
ST Jayasuriya st †Dhoni b Harbhajan Singh 5
DPMD Jayawardene run out (Kohli/†Dhoni) 3
SHT Kandamby run out (Tendulkar/Khan) 24
AD Mathews c Tendulkar b Nehra 38
TT Samaraweera run out (Raina/Kumar) 0
KMDN Kulasekara not out 2
UWMBCA Welegedara not out 1
Extras (lb 7, w 13, nb 1) 21
Total (8 wickets; 50 overs) 411 (8.22 runs per over)
Did not bat CRD Fernando
Fall of wickets1-188 (Tharanga, 23.6 ov), 2-316 (Sangakkara, 36.3 ov), 3-328 (Jayasuriya, 37.3 ov), 4-339 (Dilshan, 39.1 ov), 5-345 (Jayawardene, 40.2 ov), 6-401 (Kandamby, 48.2 ov), 7-404 (Samaraweera, 48.6 ov), 8-409 (Mathews, 49.4 ov)
Bowling
P Kumar 9 0 67 1
A Nehra 10 0 81 1
Z Khan 10 0 88 0
RA Jadeja 8 0 73 0
SK Raina 3 0 37 1
Match details
Toss Sri Lanka, who chose to field
Series India led the 5-match series 1-0
ODI debut UWMBCA Welegedara (Sri Lanka)
Player of the match V Sehwag (India)
Umpires M Erasmus (South Africa) and SK Tarapore
TV umpire SS Hazare
Match referee JJ Crowe (New Zealand)
Reserve umpire UV Gandhe
திருகோண மலைக்கு அப்பால் கடலில் ஏற்பட்டிருந்த ‘வார்ட்’ தாழமுக்க நிலை தணிந்துள்ளதாக காலநிலை அவதான நிலையம் கூறியது. இதனால் வடக்கு கிழக்கு வட மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் ஏற்பட்டிருந்த சூறாவளி அச்சுறுத்தல் தணிந்துள்ளதாகவும் ஆனால் இன்று வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் கடும் மழை பெய்யும் எனவும் வானிலை அவதான நிலையம் கூறியது.
திருகோணமலைக்கு அப்பால் 250 கிலோ மீட்டர் தூரத்தில் கடலில் ஏற்பட்ட தாழமுக்க நிலையால் இலங்கைக்கு அச்சுறுத்தல் உள்ளதாக வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு நேற்று முன்தினம் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று காலை முல்லைத்தீவு கடலில் இருந்து 60-70 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த தாழமுக்க நிலை காணப்பட்டது. இந்த தாழமுக்க நிலை பலவீனமடைந்துள்ளபோதும் தாழமுக்க நிலை கரையை நெருங்குகையில் மீண்டும் பலமடையலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதனால் இன்று நண்பகல் 12.00 மணி வரை அவதானமாக இருக்குமாறு வடக்கு கிழக்கு மக்களுக்கு அறவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடராக பெய்துவரும் மழை காரணமாக அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. இதேவேளை இடிமின்னல் தாக்கத்தால் நூற்றுக்கணக்கான வீடுகளில் மின்சார உபகரணங்கள் செயலிழந்துள்ளதாகவும் தெவிக்கப்படுகின்றது.
சகல துறைகளையும் சார்ந்த பிரதான தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் சந்தித்தனர். இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,
நாட்டின் தொழிலாளி வர்க்கம் எம் முடைனேயே உள்ளது. தொழிலாளர்களின் ஆதரவு இருக்கும் வரை எமது வெற்றி உறுதியே. மஹிந்த சிந்தனை மூலம் தொழிலாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாம் நிறைவேற்றியுள்ளோம். ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பிளவுபடுத்தி துண்டாடுவதற்கு உடன்படிக்கை மேற்கொண்டார். நாம் தாய்நாட்டை மீட்டு அதனை ஐக்கியப்படுத்தியுள்ளோம். நாம் இந்நடவடிக்கைகளை நேர்மையானதாக முன்னெடுத்தோம்.
நாட்டை மீட்ட படையினருக்கு எதிராகப் பலர் விமர்சிக்கின்றனர். படையினருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டபோது அதற்கு எதிராக நாம் குரல்கொடுத்தோம். படையினரை அகெளரவப்படுத்துவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். தாய் நாட்டையோ நாட்டை மீட்டுத்தந்த படையிரையோ காட்டிக்கொடுக்க எவராலும் முடியாது. நாட்டின் தலைவர் என்றவகையில் நாட்டையும் படையினரையும் பாதுகாக்கும் பொறுப்பு எனக்குள்ளது. அதேபோன்று சந்தர்ப்பவாதியாகி படையினரைக் காட்டிக்கொடுக்க வேண்டாம் என நான் கேட்டுக்கொள்கிறேன்.
எமது இராணுவத்தினர் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவர்கள் இரட்சணிய சேனையில் பணிபுரியக்கூட தகுதியில்லாதவர்களென்றும் ஆணையிறவு என்று பாமன் கடைக்கும், கிளிநொச்சி என்று மதவாச்சிக்கும் சென்றதாகவும் பலர் பரிகாசம் செய்ததை யாரும் மறந்து விடமுடியாது. சமாதானம் மூலம் அபிவிருத்தியையும் அபிவிருத்தியின் மூலம் சமாதானத்தையும் ஈட்ட முடியும் என்பதில் நம்பிக்கையுள்ளவன் நான். அந்த நோக்கத்தில் செயற்பட்டே சகல மக்களும் இணைந்து வாழும் தாய்நாட்டைக் கட்டியெழுப்பியுள்ளோம். இதில் நாம் பெருமையடைய முடிகிறது.
யுத்தத்திற்கு முகங்கொடுத்து நாட்டைப் பாதுகாத்ததுடன் நாட்டில் பாரிய அபிவிருத்திகளையும் எம்மால் மேற்கொள்ள முடிந்துள்ளது. ஒரே சமயத்தில் ஐந்து துறைமுகங்களின் நிர்மாணம், மின் உற்பத்தித் திட்டங்கள், விமான நிலையம், நீர்ப்பாசனத்திட்டங்கள் என பல்வேறு அபிவிருத்திகளை எம்மால் மேற்கொள்ள முடிந்துள்ளது.
கிராமிய அபிவிருத்தித் திட்டமான ‘கமநெகும’ மற்றும் ‘மகநெகும’ பாதை அபிவிருத்தித்திட்டங்களையும் எம்மால் வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்துள்ளது. அத்துடன் தொழிலாளர் வர்க்கத்தினரின் உரிமைகளை நாம் ஒருபோதும் நிராகரித்ததில்லை.
இந்த வகையில் அரச ஊழியர்களின் தொகையை 6 இலட்சத்திலிருந்து 12 இலட்சமாக எம்மால் அதிகரிக்க முடிந்துள்ளதுடன் நட்புறவு நாடுகளுடன் மேற்கொண்ட நடிவடிக்கைகளுக்கமைய எமது பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப முடிந்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் எமக்கு அச்சுறுத்தல் விடுக்கும் போதும், எரிபொருளின் விலை 145 டொலராகி நாணயத்தின் பெறுமதி அதிகரித்த போதும் நாம் அவற்றை முறையாக நிர்வகித்தோம். நாம் மத்திய கிழக்கோடு தொடர்பு கொண்டு மேற்கொண்ட நடவடிக்கைகளினால் எமது பொருளாதாரத்தைப் பாதுகாக்க முடிந்தது.
நாம் தொழிலாளர்கள் உரிமைகளைத் தொடர்ந்தும் பாதுகாத்து வருகிறோம். வங்கிகள் வீழ்ச்சியடைந்து கைத்தொழில் பேட்டைகள் மூடப்படும் நிலை வந்தபோதும் நாம் எமது தொழிலாளர்களைப் பாதுகாத்தோம். அவதூறுகள், பொய்ப்பிரசாரங்கள் சேறுபூசுதல்கள் இடம்பெறுகின்ற போதும் எமது கைகள் சுத்தமானவை. நாம் உங்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்.
மாகாண சபைத் தேர்தலில் தொழிலாளிவர்க்கம் வழங்கிய ஆதரவினைப் போல் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் பூரண ஆதரவினை வழங்குவீர்களென்ற நம்பிக்கை எனக்குண்டு எனவும் தெரிவித்தார்.
வட கொரியாவிலிருந்து பெருந்தொகையான ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு வந்தபோது தாய்லாந்தில் தடுத்து வைக்கப்பட்ட விமானமானது இலங்கையை நோக்கிப் பயணம் செய்த விமானமெனத் தெரிவிக்கப்பட்டதை இலங்கை நிராகரித்துள்ளது.அந்த விமானம் இலங்கைக்கு வரவிருந்தது அல்ல என்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் குலுகல்லவை மேற்கோள்காட்டி அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்தது.
வடகொரியாவிலிருந்து இலங்கைக்குச் செல்லும் வழியில் எரிபொருள் நிரப்புவதற்காக தாய்லாந்தில் தரையிறங்கிய விமானம் தடுத்து வைக்கப்பட்டதாகவும் சந்தேகத்தில் அந்த விமானத்தில் தேடுதல் நடத்தப்பட்டபோது பெருந்தொகையான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்ததாகவும் தாய்லாந்து அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. தடுத்து வைக்கப்பட்ட விமானத்தின் விமானிகள் தாங்கள் இலங்கையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகக் கூறியிருக்க கூடும் எனவும் தாங்கள் உண்மையில் செல்லும் இடத்தை மறைப்பதற்காக அவ்வாறு கூறியிருக்கக்கூடும் எனவும் சிலர் நம்புகின்றனர்.
இதேவேளை, இந்த விமானத்தின் பணியாளர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை தாய்லாந்து அதிகாரிகள் தாக்கல் செய்வார்கள் என்று அந்நாட்டு அரசாங்கப் பேச்சாளர் கூறியதாக ராய்ட்டர் செய்திச் சேவை தெரிவித்தது. அதேசமயம், விமானம் எங்கு நோக்கிப் பயணம் செய்தது என்பது பற்றி இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை என்று அந்தப் பேச்சாளர் கூறியுள்ளார்.
35 தொன் ஆயுதங்களுடன் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த விமானம் தொடர்பான தகவல்களை தாய்லாந்து அதிகாரிகளுக்கு அமெரிக்காவே வழங்கியதாக பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ, பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த விமானத்தின் 5 பணியாளர்களில் 4 பேர் கஸகஸ்தானையும் ஒருவர் பெலாரஸையும் சேர்ந்தவர்களாகும்.
1982களில் யாழ். நூலகத்தை எரிப்பதற்கு தெற்கில் இருந்து தீப்பந்தத்தை விமானம் மூலம் எடுத்துச் சென்றவர்கள் இன்று நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு சென்று வழிபடுகின்றனர். என இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க தெரிவித்தார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்கவை கெளரவித்து கூட்டுத்தாபன தமிழ்ச் சேவை ஊழியர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடத்திய சேவை நலன் பாராட்டு விழாவில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு ஹட்சன் சமரசிங்க தெரிவித்தார். தொடர்ந்து அங்கு உரையாற்றிய ஹட்சன் சமரசிங்க,
தெற்காசியாவிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற நூலகமாக யாழ். நூலகம் விளங்கியது. இது ரணில் விக்கிரமசிங்கவின் மாமாவான ஜே. ஆர். ஆட்சிக் காலத்திலேயே எரிக்கப்பட்டது. அப்போது ஐ. தே. கட்சியின் இளைஞர் அணிக்கு பொறுப்பாக இருந்தவரும் ரணில் விக்கிரமசிங்க, இவர்கள்தான் அன்று வடக்கினை நாசப்படுத்துவதற்கு திட்டம் தீட்டியவர்கள்.
இவர்கள் நாட்டுப் பற்றற்றவர்கள். இவர்கள் கதைப்பது, தூங்குவது சாப்பிடுவதெல்லாம் ஆங்கிலத்தில்தான். இவர்களிடம் மேலைத்தேய நாட்டுப்பற்றே உள்ளது. தமது தாய்நாட்டைப் பற்றி இவர்களுக்கு சிறிதளவேனும் அக்கறை இல்லை. 1983 ஜுலைக் கலவரம் நடைபெற்றபோது எனது தமிழ் நண்பர்களையெல்லாம் காடையர்களைக் கொண்டு கொலை செய்தார்கள்.
நான் ஜே. ஆர்., ஆர். பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகிய நான்கு ஜனாதிபதியிடமும் சேவை செய்துள்ளேன். நான்கு முறை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் சேவையாற்றியுள்ளேன். அதில் மஹிந்த ராஜபக்ஷதான் ஒரு சிறந்த தலைவர் எனவும் ஹட்சன் சமரசிங்க வேண்டிக்கொண்டார்.
தேசத்தின் பாதுகாப்பு மற்றும் அதன் அக்கறையுடன் கூடிய செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான இரகசிய தகவல்களை ஓய்வுபெற்ற அல்லது சேவையிலிருக்கும் இராணுவ வீரர் ஒருவர் வெளியிடுவது சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகுமென சிரேஷ்ட வழக்கறிஞர் காலிங்க இந்ததிஸ்ஸ கூறினார்.
தகவல் ஊடகத்துறையமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று சிரேஷ்ட வழக்கறிஞர்கள் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அந்தவகையில் சரத் பொன்சேக்கா நாட்டு மக்களுக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் களங்கம் ஏற்படும் வகையில் வார இறுதி ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியிருக்கும் செவ்வி சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகுமெனவும் சிரேஷ்ட வழக்கறிஞர் காலிங்க இந்ததிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.
உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தின்படி சரத்து 6, 1 (இ) மற்றும் சரத்து 7 ஆகியவற்றின் படி சரத்பொன்சேக்கா ஊடகத்துக்கு வழங்கியிருக்கும் தகவல் சட்டப்படி குற்றமாகுமென கணிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த வழக்கறிஞர் காலிங்க, குற்றச் செயல் சட்டத்தின்படி நிரூபிக்கப்படும் பட்சத்தில் சரத்து 6, 1 (இ) யின்படி 14 வருட சிறைத் தண்டனையும் சரத்து 7 இன்படி இரண்டு வருட சிறைத் தண்டனையும் வழங்கப்பட முடியுமெனவும் தெரிவித்தார். இருப்பினும் சரத் பொன்சேக்காவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு அரசாங்கம் மற்றும் சட்டமா அதிபர் கைக ளிலேயே தங்கியுள்ளதெனவும் அவர் கூறினார். பத்திரிகையில் பிரசுரமாகியிரு க்கும் அவரது செவ்வி நாட்டுக்கும் அதன் பாதுகாப்புக்கும் அச்சுறுத் தலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
அவ்வாறாயின் பொன்சேக்கா அதே பத்திரிகையில் தனது மறுப்பு அறிக்கையை வெளியிட முடியும் அல்லது செய்தியாளர் மாநாடொ ன்றின் மூலம் தனது செவ்வி எந்த இடத்தில் திரிவடைந்திருக்கிறது என் பதனையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
அதற்கேற்பவே சட்ட நடவடிக் கைகள் எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
வழக்கறிஞர் அலி சப்றி இதுபற்றி கருத்துத் தெரிவிக்கையில், கடந்த சில காலமாகவே குறித்த ஆங்கிலப் பத்திரிகையில் அரசாங்க த்துக்கு எதிரான கருத்துக்களே வெளிவருகின்றன. அந்த வகையில் பத்திரிகை பிரசாரத்தில் ஏதாவது தவறு நடந்தி ருக்கும் என்ற கருத்தை இலகுவில் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.
சிரேஷ்ட வழக்கறிஞர் கோமின் தயாசிறி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள் நாட்டு க்கும் முப்படையின ருக்கும் அப கீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிடாது நாட் டின் வெற்றியை மாத்திரமே கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும்.
புலிப் பயங்கரவாதிகளைத் தோற்கடித்து படையினர் அடைந்த வெற்றியை காட்டிக்கொடுக்கும் வகையில் இராணுவத்துக்கு எதிராக ஜெனரல் சரத் பொன்சேகா சுமத்தும் பொய்க் குற்றச்சாட்டுக்களை தான் வன்மையாகக் கண்டிப்பதாக இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய கூறினார்.
பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கிய படைவீரர்களை கௌரவிக்கும் வைபவம் இன்று கொழும்பில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், உறுதிமிக்க தலைமைத்துவம் கிடைக்காதிருந்தால் இந்த வெற்றியை இராணுவத்தினரால் அடைந்திருக்க முடியாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ ஆகியோரின் வழிகாட்டல் காரணமாகவே இந்த வெற்றி படையினருக்குக் கிடைத்தது என்றும் இராணுவத் தளபதி மேலும் கூறினார்.