Multiple Page/Post

பணியகத்தில் பதிவு செய்தால் ரூ. ஒரு இலட்சம் என்பது வதந்தி – எச்சரிக்கையுடன் இருக்க கோருகிறார் கிங்ஸ்லி

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்று நாடு திரும்பியவர்கள் பணியகத்தில் தங்களை பதிவு செய்துகொண்டால் ஒரு இலட்சம் ரூபா தருவதாக கூறப்படுவதில் உண்மையில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸிலி ரணவக்க தெரிவித்தார்.

இவ்வாறான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்று தற்போது நாடு திரும்பியுள்ளவர்களின் பங்களிப்பையும் நாட்டின் அபிவிருத்திக்கு பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக பணியகம் அவர்களது தரவுகளை சேகரித்து வருகிறது. குறிப்பாக வெளிநாடு சென்று திரும்பியவர்கள் அவர்கள் சென்ற நாடு தொழில், பெற்ற சம்பளம், அனுபவம் உட்பட அனைத்து தரவுகளையும் பணியகத்துக்கு வழங்குவதன் ஊடாக அவர்களது தொழில் அனுபவம் குறித்து இலங்கையில் தனியார் துறையில் பங்களிப்புகளை பெற்றுக்கொடுக்க முடியுமா? என்பது பற்றியும் பணியகம் ஆராயவுள்ளது.

நாட்டிலுள்ள பணியகத்தின் கிளை அலுவலகங்களில் தேவையான விண்ணப்பப் படிவங்களை பெற்று தரவுகளை வழங்குமாறும் பிரதேச செயலகங்களினூடாகவும் விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ளும் விதத்தில் வழங்கப்படவுள்ளதாகவும் தலைவர் கிங்ஸிலி ரணவக்க தெரிவித்தார்.

பிரதம நீதியரசர் குழு இன்று யாழ்.விஜயம்

பிரதம நீதியரசர் அசோக டீ சில்வா தலைமையிலான உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழு இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ளது.நெடுந்தீவில் புதிதாக அமைக்கப்பட்ட நீதிமன்றக் கட்டிடத்தை பிரதம நீதியரசர் வைபவ ரீதியாக இன்று திறந்துவைப்பார்.

யாழ்.சட்டத்தரணிகள் சங்கம் நல்லூர் மதுரோவில் மண்டபத்தில் நடத்தும் கருத்தரங்கில் பிரதம அதிதியாகவும் கலந்துகொள்வார்.யாழ்ப்பாணத்தில் பணியாற்றி மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.கனகரட்ணத்தின் உருவப்படத்தையும் பிரதம நீதியரசர் திறந்துவைப்பார்.

ஞாயிற்றுக்கிழமை காலை மல்லாகம் மற்றும் சாவகச்சேரி நீதிமன்றங்களுக்கான புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுவார்.மாலையில் யாழ்.மாவட்ட நீதிபதிகள் அளிக்கும் வரவேற்பு நிகழ்விலும் நீதியரசர்கள் குழு கலந்துகொள்வார்கள்.பிரதம நீதியரசருடன் நீதியரசர்களான பாலபிட்ட பென்டி,கே.ஸ்ரீபவன், எஸ்.அமரதுங்க ஆகியோரும் விஜயம் செய்கின்றனர்.

யாழ். குடாவில் 600 ஏக்கரில் தென்னை பயிர்ச் செய்கை – வருட இறுதிக்குள் 3 இலட்சம் கன்றுகள் விநியோகம்:

யாழ். குடாநாட்டில் தெங்குச் செய்கையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் 600 ஏக்கரில் தென்னை பயிரிடப்படவுள்ளது. இதன் முதற்கட்டப் பணிகள் பளையில் ஆரம்பமாகுமென அமைச்சர் தி. மு. ஜயரட்ன தெரிவித்தார்.

வடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, யாழ்ப்பாண குடாநாட்டில் மூன்று இலட்சம் தென்னங் கன்றுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார். இந்த வருட இறுதிக்குள் இந்த 3 இலட்சம் தென்னங்கன்றுகளும் விநியோகிக்கப்பட்டுவிடும். இது தொடர்பான ஆரம்ப வைபவம் எதிர்வரும் 22ம் திகதி நடைபெறவுள்ளது.

அமைச்சர் தி. மு. ஜயரட்ன இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார்.

இதேவேளை யாழ் குடாநாட்டிலுள்ள தெங்கு அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளை மீண்டும் அதிகார சபைக்குக் கையளிக்கும் நிகழ்வும் எதிர்வரும் 22ம் திகதி இடம்பெறவுள்ளது. தென்னங்கன்றுகள் விநியோகத்தின் போது இடம்பெயர்ந்த 850 குடும்பங்களுக்கு மூவாயிரம் தென்னங்கன்றுகள் வழங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தி. மு. ஜயரட்ன மேலும் கூறினார்.

யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் அமைச்சர் வெற்றிலைக்கேணிப் பகுதிக்கு விஜயம் செய்து நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். தென்னந்தோட்ட உரிமையாளர்களையும் சந்தித்துப் பேசவுள்ள அமைச்சர், தேங்காய் எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் ஆராய்வார்.

இதற்கிடையில், யாழ்ப்பாணத்திலும் அச்சுவேலியிலும் தென்னை நாற்று மேடைகள் அமைக்கப்படவிருக்கின்றன. இதற்கான ஆரம்பக் கட்டப்பணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

435 கிலோ எடை கொண்ட பரல் குண்டுகள் கண்டுபிடிப்பு – புளியங்குளத்தில் அதிரடிப் படையினரால் மீட்பு

புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 435 கிலோ எடை கொண்ட பெரல் குண்டுகளை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.  45 கலன் கொள்ளளவு கொண்ட இரண்டு பெரல்களில் தயாரிக்கப்பட்ட இவ்வெடி குண்டுகள் இரண்டும் புளியங்குளம் காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவர் வழங்கிய தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இக்குண்டுகள் இரண்டும் மீட்கப்பட்டன. முதலாவது குண்டு ரி. என். ரி. வெடிபொருட்கள், இரும்பு துண்டுகள், இரும்பு குண்டுகள் நிரப்பப்பட்டு சுமார் 261 கிலோ எடை கொண்டது என்றும் இரண்டாவது குண்டும் இதே போன்று ரி. என். ரி. வெடிமருந்து மற்றும் இரும்புத் துண்டுகள் நிரப்பப்பட்டு சுமார் 174 கிலோ எடை கொண்டவையாகவும் இருந்தன என விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.

இக்குண்டுகள் வெடிக்கும் பட்சத்தில் 360 பாகைக்கு வெடித்துச் சிதறுவதுடன் பாரிய அழிவை ஏற்படுத்தியிருக்கும் எனவும் தெரிவித்தனர். இவ்விரு குண்டுகளுடன் ஜொனி பட்டா என்றழைக்கப்படும் 10 மிதிவெடிகளும் மீட்கப்பட்டுள்ளன.

சனல்4 தொலைக்காட்சிக்கு ஜெனரல் அனுப்பிய இரகசிய கடிதத்தின் பின்னணியில் ஜே.வி.பி. – அரசாங்கம் குற்றச்சாட்டு

இராணுவத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் இராணுவ முன்னாள் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா பிரிட்டனின் “சனல்4” தொலைக்காட்சி நிறுவனத்திற்கு இரகசியமாக அனுப்பி வைத்த கடிதத்தின் பின்னணியில் ஜே.வி.பி. இருப்பதாக அரசாங்கம் பூடகமாக சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கம் குறித்து கடுமையாக விமர்சித்து ஜெனரல் பொன்சேகா சனல்4க்கு அனுப்பியிருக்கும் கடிதம் தொடர்பிலேயே அரசாங்கம் இந்த சந்தேகத்தை வெளியிட்டிருக்கிறது.அரசாங்க தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விவகாரம் பற்றி கருத்து வெளியிட்ட அமைச்சரவை இணைப் பேச்சாளர் டலஸ் அழகப்பெரும;

“முடிந்தால் தன்னை கைது செய்யுமாறு சவால் விடுத்து சரத் பொன்சேகா கடந்த பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் பி.பி.சி.செய்திச் சேவைக்குப் பேட்டியொன்றை வழங்கியிருந்தார். இந்த நிலையில் மார்ச் மாதம் முதல் வார ஆரம்பத்தில் அவர் சனல்4  (தொலைக்காட்சிச் சேவை)க்கு இரகசிய கடிதமொன்றை அனுப்பியுள்ளார். தனக்கு வெந்நீர் மற்றும் குளிரூட்டி வசதிகள் இல்லையென அவர் அக்கடித்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதத்தின் பின்னணியில் இருக்கும் அரசியல், சமூக விடயங்கள் முக்கியமானவையாகும்.

சனல்4 ஐ பார்க்கும் போது, அது கடந்த காலங்களில் புலிகளின் குரல் வானொலிச் சேவையின் ஆங்கில ஒலிபரப்பாகச் செயற்பட்டுள்ளது என்பதே எமது நம்பிக்கை. அதுமட்டுமல்லாது, இலங்கைப் படையினரை அவமதிக்கும் வகையில் வீடியோவை ஒளிபரப்பியதும் அந்த நிறுவனமே. எனினும் அது போலியானதென அரசாங்கம் உறுதி செய்திருந்தது.

தமிழீழ யுத்த வீரனாக கருதப்படும் பிரபாகரனின் ஊடகமான சனல் 4, ஜே.வி.பி. கூறுவது போல் சிங்கள யுத்த வீரனான சரத்பொன்சேகாவின் ஊடகமாக முடிந்தது எப்படி என்பதே எமது கேள்வியாக இருக்கிறது. இது தொடர்பாக சந்தேகம் இருக்கிறது. சனல்4 வீடியோவின் இயக்குநர் சரத்பொன்சேகா என்று சந்தேகத்தில் இருந்து கேட்கிறோம்.

சரத்பொன்சேகா கடிதத்தில் கையெழுத்திட்டிருந்தாலும் அந்த கடிதத்தில் சோவியத் வழக்கமொன்று இருக்கிறது. இதன் உருவாக்கத்தின் பின்னணி யார் என்பது எமக்கு தெரியும். அந்த கடிதத்தில் சோசலிசப் போக்கொன்று இருக்கிறது. அதில் சரத்பொன்சேகா தான் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் அமைப்பையும் வரைபடமாக வரைந்து அனுப்பியுள்ளார்.

ஜே.வி.பி.யினர் ஒன்றும் இல்லாத நிலையில் ஏனையவர்களை சுரண்டி பிழைப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதுபோல் இப்போது சரத்பொன்சேகாவையும் அனோமா பொன்சேகாவையும் வைத்து சுரண்டி பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஏனையோரை சுரண்டி பிழைப்பு நடத்துவதற்கு எதிரானதே மார்க்சிஸ கொள்கை. அந்த கொள்கையை பின்பற்றுவதாக கூறும் ஜே.வி.பி.யினர் அதையே மீறிச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தனக்கு வசதிகள் வழங்கப்படவில்லையென சனல்4 க்கு கூறியதன் மூலம் சரத்பொன்சேகா, அவருக்கு மனிதாபிமான ரீதியில் வழங்கப்பட்டிருக்கும் சலுகைகளை துஷ்பிரயோகம் செய்துள்ளார். இந்த கடிதத்தின் மூலம் அவரது ஒழுக்கம், சட்டம் பற்றி சந்தேகம் எழுந்துள்ளது என்று கூறினார்.

மன்னார் பாலம், தாம்போதி ஜனாதிபதியால் நேற்று திறந்து வைப்பு

mannar.jpgபுதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மன்னார் பாலத்தையும் தாம்போதியையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (18 ம் திகதி) வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார். மன்னார் தீவையும், பெரு நிலப்பரப்பையும் இணைக்கும் இப்பாலமும், தாம்போதியும் 2460 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் 1836 மில்லியன் யென் நன்கொடையையும் 640 மில்லியன் ரூபா உள்ளூர் நிதியையும் கொண்டு நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இப் பாலத்திற்கு இலங்கை ஜப்பான் நட்புறவு பாலம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இப் பாலம் 157 மீட்டர் நீளமாகவும் 10.4 மீட்டர் அகலமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இரு வழிப் பாதை கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இப் பாலம் முதல் 3.14 கிலோ மீட்டர் வரை (தள்ளாடி சந்தி), தாம்போதியும் அமைக்கப்பட்டிருக்கின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகவும், இலங்கையில் கடமையாற்றும் ஜப்பான் தூதுவர் குனியோ தகஹசி விசேட அதிதியாகவும் கலந்து கொண்டு இப் பாலத்தைத் திறந்து வைத்தனர். இவ் வைபவத்தில் மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன், வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி, முன்னாள் எம். பிக்களான சிவநாதன் கிஷோர், பி. சுமதிபால, ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகார ஆலோசகரும், ஊடக ஆலாட்சி அதிகாரியுமான ஏ. எச். எம். அஸ்வர், நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் வசந்த கரன்னாகொட உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

மதவாச்சி, மன்னார், தலைமன்னார் வரையிலான ஏ-14 வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் இப் பாலமும், தாம்போதியும் பயங்கரவாதப் பிரச்சினை காரணமாக இரு தசாப்தங்களுக்கு மேலாக அழிவுற்றிருந்தன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005 இல் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் மேற் கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக இப்பாலம் இரு வருட காலப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இப்பாலத்தையும் தாம்போதியையும் நிர்மாணிப்பதற்கும் பயங்கரவாதப் பிரச்சினை பெரும் சவாலாக இருந்தது. இதனால் நிர்மாணப் பணிகளை சுமார் நான்கு மாதங்கள் இடை நிறுத்தி வைக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட் டிருந்தது.

பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டதன் பயனாக இதன் நிர்மாணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு நேற்று வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. இதன் பயனாக மன்னார் தீவுப் பகுதியில் வாழுகின்ற மக்கள் நீண்ட காலமாக முகம் கொடுத்து வந்த போக்கு வரத்துப் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

பான் கீ மூனின் கூற்று ஐ.நா சாசனத்தின் உயிர் நாடியைச் சிதைக்கும் செயல் இலங்கைக்கு எதிராக செயற்படுவது நியாயமற்றது – ஜீ.எல்.

gl-p.jpgஉலக நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் இலங்கை தொடர்பில் நிபுணர்கள் குழுவை நியமிப்பதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூறியிருப்பது ஐ.நா. சாசனத்தின் உயிர் நாடியைச் சிதைக்கும் செயலாகுமென்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

சகல நாடுகளையும் சமமாக மதிக்க வேண்டுமென்பது ஐ.நா. சாசனத்தின் ஜீவநாடியாக உள்ளது. சிறிய நாடுகளின் பாதுகாப்புக்காகவே ஐ.நா. சபை உருவாக்கப்பட்டது. இந்நிலையில் இலங்கைக்கு எதிராக செயற்படுவது எவ்விதத்திலும் நியாயமாகாதென்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18) முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார்.

மனித உரிமை மீறல் தொடர்பாக ஆராய்வதற்கு ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்குவதற்கான நிபுணர்கள் குழு அவசியமில்லையென வலியுறுத்தித் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பொறுப்புகள்’ தொடர்பாக ஆராய்வதெனின், 118 நாடுகளின் எதிர்ப்பினைக் கருத்திற்கொள்ளாமல், நிராகரிக்க முடியாது. சில நாடுகளின் மனித உரிமைகள் மீறப்பட்டதற்கான சாட்சியங்கள் இருந்தும், அந்த நாடுகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை’ என்று தெரிவித்த பேராசிரியர் பீரிஸ், பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் இலங்கை பெற்றுள்ள வெற்றி இன்று சர்வதேச சவாலை எதிர்நோக்கியுள்ளது என்று குறிப்பிட்டார்.

இதேவேளை, புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்களின் நிலைப்பாட்டுக்கும் இலங்கையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் நிலைப்பாட்டுக்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளதாக ‘நெருக்கடிகள் தொடர்பான சர்வதேச குழு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தாகவும் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார். புலம்பெயர் தமிழர்கள் குழுவில் புலிகளுக்கு ஆதரவானவர்கள் இன்னமும் தமிழீக் கோட்பாட்டைக் கைவிடவில்லை.

ஆனால், இலங்கையில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் கொண்டிருக்கும் நிலைப்பாடு முற்றிலும் மாறுபாடானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர் இவர்கள் இங்கு அரசியல் கட்சிகள் மூலம் மாத்திரமன்றி சிறு அமைப்புகள் ஊடாகவும் முயற்சிக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

2 வது இராணுவ நீதிமன்றுக்கு புதிய நீதிபதிகளை நியமிக்க முடிவு – இராணுவத் தளபதி தகவல்

jj.jpgமுன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட இரண்டாவது இராணுவ நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் நியமிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.

இதற்கமைய புதிய நீதிபதிகளின் பெயர்கள் முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று பரிந்துரைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்படி, இரண்டாவது இராணுவ நீதிமன்றத்திற்கான புதிய நீதிபதிகள் இன்னும் ஓரிரு தினங்களில் ஜனாதிபதியால் நியமிக்கப்படவுள்ளனரென்றும் குறிப்பிட்டார். இராணுவ சட்டத்திற்கு அமைய இரு இராணுவ நீதிமன்றங்களுக்கு ஒரே நீதிபதியை நியமிக்க அனுமதி இருக்கின்ற போதிலும் இராணுவ நீதிமன்ற விசாரணைகள் அதி உயர் வெளிப்படை தன்மையையும், நியாயமும் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்பதைக் கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வெட்டிக்கொன்று கைகளையும் எடுத்துச் சென்ற பயங்கரம் நூற்றுக்கணக்கானோர் பார்த்திருக்க சம்பவம்

நூற்றுக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்க ஒருவரை மீன்வெட்டும் கத்தியால் வெட்டிக்கொலை செய்த சிலர் கொலையுண்டவரின் இரு கைகளையும் எடுத்துச் சென்ற பயங்கரச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை நண்பகல் கண்டி மத்திய சந்தையின் முன்பாக இடம்பெற்றுள்ளது.கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக பழவியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஒரு வியாபாரியே இவ்வாறு பயங்கரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

நண்பகல் 12 மணியளவில் ஆட்டோவில் திடீரென அங்கு வந்த சிலர் அந்த வியாபாரியைப் பிடித்து இழுத்து கத்தியால் வெட்டி துடிக்க துடிக்க கொலை செய்தனர்.பின்னரும் ஆத்திரம் தாங்காமல் அவரின் இரு கைகளையும் இறைச்சிக் கடையில் விலங்கை வெட்டுவது போல வெட்டி எடுத்துச் சென்றனர். இதனை அங்கு கூடியிருந்த மக்கள் பெரும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். கி.டீ.பிரேமந்திர (38 வயது) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே கொலை செய்யப்பட்டவராவார்.

கண்டி நீதிவான் சம்பவ இடத்துக்கு மாலை 3 மணியளவில் வந்து சடலத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்

மாற்றத்திற்காகத் தமிழர் வாக்களிக்கவில்லை : சுரேன் சுரேந்திரன் (Global Tamil Forum))

Suren Surendiranசிறீ லங்காவில் சிறுபான்மையினர் தன்னாட்சியையே வேண்டுகின்றனர்; ஆனால் அவர்களின் தாயகத்திலுள்ள ஒடுக்குமுறையால் அதனை நடைமுறைப்படுத்த வாக்களிக்கவில்லை தமிழர் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தேர்தல் அறிக்கை தனி நாட்டுக்குப் பதிலாகச் சமஷ்டி முறைக் கட்டமைப்பையே விரும்புகின்றது. அதில் பகிரப்பட்ட இறையாண்மை கோரப்பட்டுள்ளதோடு வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் வரலாற்று அடிப்படையிலான வாழ்விடமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்றும் அவர்கள் சுயநிருணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்றும் மேலும் கூறப்பட்டுள்ளது. அதிகாரப் பங்கீடானது இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களைக் கொண்ட ஓர் அலகில் சமஷ்டி முறைக் கட்டமைப்பின் அடிப்படையில், தமிழ்ப் பேசும் முஸ்லிம் மக்களுக்கும் ஏற்புடையதாக நிறுவப்பட வேண்டும். அதிகாரப் பங்கீடானது நிலம், சட்டமும் ஒழுங்கும்இ கல்வி, சுகாதாரம் உட்படச் சமூக, பொருளாதார அபிவிருத்தி, வளங்கள் மற்றும் நிதி அதிகாரங்களையும் கொண்டதாக இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேற்கூறியவற்றைப் பின்வரும் நிலைமைகளிற் பார்த்தல் வேண்டும்:

“எனினும், பல ஆண்டு காலம் நீடித்து ஏழு மாதங்களுக் முன்னர் முடிவடைந்த போர்க் காலத்தில் அழிந்த தங்கள் சொந்த வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் மீளக் கட்டியெழுப்பக்கூட இன்னமும் தொடங்காத இந்த நேரத்தில் ஒரு தேர்தலை எதிர்நோக்கத் தமிழர் விரும்பவில்லை. அவர்கள் இராணுவத்தினதும் ஒட்டுப்படைகளினதும் கட்டுப்பாட்டின் கீழ் மனித உரிமைமீறல்கள் என்பது அன்றாட வாழ்க்கையின் ஓரு கூறென ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் பொதுவாக அச்சத்துடன் வாழ்கின்றனர்.” (http://www.guardian.co.uk/commentisfree/2010/jan/08/tamils-election-video-war-crimes).

சனவரி 26, 2010 இல் நடைபெறவிருந்த குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றி நான் சனவரி 8, 2010இல் மேலே தரப்பட்டுள்ளதை எழுதியிருந்தேன். சிறிலங்காவில் வரும் அரச தலைவர் தேர்தலில் தமிழருக்கு அக்கறை குறைவு.: சுரேன் சுரேந்திரன்அத் தேர்தலில் வாக்களித்தோரின் தேசிய சராசரி 75%ஆக இருந்தும் யாழ் மாவட்டத்தில் தேர்தலில் பங்குபற்றியோர் தொகை (அஞ்சல் வாக்குகள் உட்பட) 25% ஆகவே இருந்தது என்பது பற்றி ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. (http://www.slelections.gov.lk/presidential2010/AIVOT.html).

இந்நிலையில் சிறீ லங்காவில் நிலைமைகள் மோசமடைகின்றன என மனிதவுரிமை அமைப்புக்கள் கூறுகின்றன. ஐக்கிய அமெரிக்க அரச திணைக்களத்தின் 2009ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் பற்றிய அறிக்கை சிறீலங்கா அரசைக் கடுமையாகக் குறைகூறியுள்ளது. சிறீலங்கா அரசோ அல்லது அதனுடன் நெருக்கமாவுள்ள ஒட்டுப்படைகளோ கேள்விமுறையற்ற கொலைகளுடனும் ஆட்காணாமற்போதலுடனும் தொடர்புடையன எனவும் சட்டத்தரணிகளும் ஊடகவியலாளரும் தொந்தரவு செய்யப்பட்டுப் பழிவாங்கப்படுகின்றனர் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. நாட்டில் போரினால் பாதிப்புற்ற பகுதிகளிலேயே ஆட்காணாமற்போதல் மிகக்கூடிய தொகையில் உள்ளதென்றும் நூற்றுக் கணக்கானோர் காணாமற்போயுள்ளனர் எனக் கணிக்கப்பட்டுள்ளதென்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஒரு சில கிழமைகளுக்கு முன்தான் சீறீலங்காவில் நடைபெற்று முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலின் பெறுபேறுகள் பற்றிய வரைபடமானது  இலங்கைத் தீவு இனவாரியாக இரு துருவங்களாகப் பிளவுபட்டிருக்கின்றது என்பதை எடுத்துக் காட்டுகின்றது (http://en.wikipedia.org/wiki/Sri_lankan_presidential_election_2010).

வட மாகாணம், கிழக்கு மாகாணம் ஆகியனவும் மத்திய மாகாணத்தில் தமிழர் பல தலைமுறையாக வாழ்ந்துவரும் நுவரேலியா மாவட்டமும் பொன்சோகாவிற்கு வாக்களித்தன. பெரும்பான்மையான மற்றைய மாகாணங்கள் இராசபக்சவிற்கு வாக்களித்தன. இரு கொடியவர்களில் பொன்சேகா சற்றுக் குறைந்த கொடியவர் எனத் தமிழர் பொதுவாகக் கருதினாலும் பதவி வகிக்கும் குடியரசுத் தலைவர் மேல் ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமும் நம்பிக்கை இழந்துவிட்டதென்பதையும் தேசியப் பிரச்சனையைத் தீர்க்கும் ஆற்றலோ நேர்மையோ அவருக்கில்லை என்பதையும் இது தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது. அதேபோன்று பெரும்பான்மைச் சிங்களச் சமூகமும் இரு கொடியவர்களில் எவர் தாம் விரும்புகின்ற அதிதீவிர தேசியவாதி என்பதையும் இனத்துவேசம் கொண்டவர் என்பதையும் இத்தேர்தல் எடுத்துக் காட்டியுள்ளது.

சிறீ லங்காவின் பொது ஆட்சிமுறையானது கருத்து வேற்றுமையை ஏற்றுக்கொள்வதில்லை என்பதையும் அப்படியானவர்களைக் கொடூரமாகத் தண்டிக்கும் என்பதையும் பல ஊடகவியலாளரும் அரசியல்வாதிகளும் கடத்தப்பட்டமையும் கொலை செய்யப்பட்டமையும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. குடியரசுத் தலைவர் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவரை இராசபக்ச சிறையிலடைக்கத் தீர்மானித்துவிட்டார் என்பது இப்பொழுது தெட்டத்தெளிவாகி விட்டது. தனி ஒருவரோ சமூகமோ கட்சியோ பிரிவினையை ஆதரிப்பதை நாட்டின் அரசியல் யாப்பே தடைசெய்கின்றது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது தமிழ்த் தேசியம் என்ற கோட்பாட்டில் அதாவது தாயகம், தமிழர் தேசம், தமிழர் இறையாண்மை மற்றும் தமிழர் தன்னாட்சி உரிமை ஆகியவற்றை ஆணித்தரமாக ஆதாரமாகக்கொண்டு அம்முன்னணி அமைக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது. 

1977 ஆம் ஆண்டில் (பிரிவினைனயை எடுத்தியம்புவதைத் தடைசெய்கின்ற அரசியல் சட்டத்தின் ஆறாவது திருத்தம் செய்யப்படுமுன்) இலங்கையிலுள்ள தமிழர் இலங்கைத் தீவில் தமெக்கென்ற ஒரு தனிநாடு வேண்டும் என்ற தம் வேட்கையை எவ்வளவு வலுவாக எடுத்துக் காட்டினரோ அதேபோன்று வலுவுடன் உலகெங்குமுள்ள புலம்பெயர்ந்த தமிழர் தாம் குடிகொண்ட நாடுகளில் பக்கசார்பற்ற மேற்பார்வையுடன்கூடிய கருத்துக் கணிப்புகளை நடத்தி அதே வேட்கையை எடுத்துக் காட்டி வருகின்றனர்.

உலகத் தமிழர் பேரவையின் தலைவரான வண. எஸ்.ஜெ. இமானுவேல் அடிகளார் அவர்கள் பரிகாரமாக அல்லாது ஒரு தந்தையின் வழிகாட்டலாகத் தமிழ் உடன்பிறப்புகளுக்கு அண்மையில் எழுதிய மடலின் ( http://globaltamilforum.org/userfiles/file/GTF_Letter_from_President_to_Tamils_10_March_2010__-_Tamil_Version_-_Final.pdf ) ஒரு பகுதியைக் இங்கே மேற்கோள் காட்டுகின்றேன்:

“பசி பட்டினியோடு அச்சமுற்றும் அச்சம் ஊட்டப்பட்டும் நாம் உள்ளோம். இன்றைய நிலையில் தமிழரது துயர துன்பங்களுக்கு முடிவு உண்டென்றால் அது எமது உண்மையான விடுதலையிலேயே தங்கியுள்ளது. எனவே இலங்கைத் தீவில் வாழுகின்ற எம் உடன்பிறப்புகளுக்கே  எமது உண்மையான விடுதலைக்கான மூல அடிப்படைப் பொறுப்பு உள்ளது. ஆகையால் தம் வாக்குகளை இட்டு நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் பொழுது தமிழரது விடுதலைக் குறிக்கோளுக்கு இரண்டகம்  இழைக்கக்கூடிய பொய்யான அரசியல் தலைவர்களுக்கோ கட்சிகளுக்கோ ஆதரவு வழங்காது சிறீலங்காவிலும் வெளியேயும் வாழும் ஒட்டுமொத்தத் தமிழரது அடிப்படை வேட்கைகளில் பற்றுறுதியுடையோருக்கு ஆதரவு வழங்குமாறு நாம் பரிந்துரைத்து வலியுறுத்துகின்றோம்.”