பிரதம நீதியரசர் அசோக டீ சில்வா தலைமையிலான உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழு இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ளது.நெடுந்தீவில் புதிதாக அமைக்கப்பட்ட நீதிமன்றக் கட்டிடத்தை பிரதம நீதியரசர் வைபவ ரீதியாக இன்று திறந்துவைப்பார்.
யாழ்.சட்டத்தரணிகள் சங்கம் நல்லூர் மதுரோவில் மண்டபத்தில் நடத்தும் கருத்தரங்கில் பிரதம அதிதியாகவும் கலந்துகொள்வார்.யாழ்ப்பாணத்தில் பணியாற்றி மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.கனகரட்ணத்தின் உருவப்படத்தையும் பிரதம நீதியரசர் திறந்துவைப்பார்.
ஞாயிற்றுக்கிழமை காலை மல்லாகம் மற்றும் சாவகச்சேரி நீதிமன்றங்களுக்கான புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுவார்.மாலையில் யாழ்.மாவட்ட நீதிபதிகள் அளிக்கும் வரவேற்பு நிகழ்விலும் நீதியரசர்கள் குழு கலந்துகொள்வார்கள்.பிரதம நீதியரசருடன் நீதியரசர்களான பாலபிட்ட பென்டி,கே.ஸ்ரீபவன், எஸ்.அமரதுங்க ஆகியோரும் விஜயம் செய்கின்றனர்.