- “பிரபாகரன் ஒரு முட்டாள். சாடிக்கு ஏற்ற மூடி போல, பொட்டு அம்மானும் ஒரு மொக்கன்” எனக்கு துரோகிப்பட்டம் தருபவர்களுக்கு என் பதில்: இரட்டைமுகவராக மாறிய முன்னாள் கடற்புலி புலனாய்வுச் செயற்பாட்டாளர் காகுஸ்தன் அரியரத்தினம் (கனடா)
- புலிகளின் வி. பிரபாகரனும், வெனிசுவேலாவின் அதிபர் நிக்கோலாஸ் மடூரோவும் ஒரே விதமான முடிவை எதிர்கொண்டனர்:
- கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!
- புதிய வடிவில் வரும் வர்த்தக-தொழில் நுட்பப் போர்
- அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறுமா..?
- லார்க்கூர்னே சிவன் கோயில் அர்ச்சகர்கள் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் இந்தியாவில் கைது !
Multiple Page/Post
முஸ்லீம் விவாக – விவாகரத்துச் சட்டத்தை சீர்திருத்தாதது முஸ்லீம் சமூகத்தின் பலவீனம் ! நுனிப்புல் மேய்வதும் வாக்கு வங்கிக்காக அரசியல் செய்வதும் பா உ அர்ச்சுனாவினதும் ஹிஸ்புல்லாவினதும் பலவீனம் !
ஓய்வுபெற்ற சட்டத்தரணி அரசியல் செயற்பாட்டாளர் மொகமட் நிஸ்தாருடன் முஸ்லீம் சட்டம் தொடர்பான உரையாடல்
இருபது இராணுவ வீரர்கள் கைது !
இராணுவ முகாம்களில் இருந்து தப்பிச் சென்ற 20 இராணுவ வீரர்கள் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இராணுவ வீரர்கள் கண்டி பிரதேசத்தில் பல்வேறு தொழில்களில் பணிபுரிந்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அண்மையில் அனுராதபுரத்தில் பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான நபரும் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை சிறுமிகளுக்கு ஆபத்தாக உருவெடுக்கும் AI !
இலங்கையில் ஒரே வயதுடைய சிறுமிகளின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதனை தகாத புகைப்படங்களாக மாற்றி பகிரப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் இந்த பொருத்தமற்ற செயலை 13 தொடக்கம் 17 வயதுடைய சிறுவர்கள் செய்கிறார்கள் எனவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட அமலாக்க இயக்குநர் வழக்கறிஞர் சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளைகளின் பெற்றோர் முறைப்பாடு செய்வதாகவும் இவை அந்த சிறுமிகளுக்கு தெரியாமல் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்யும் மோசமான செயல் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை AI தொழில்நுட்பத்தைப் பற்றிய விடயங்களும் – விளக்கங்களும் புதிய கல்வி சீர்திருத்தங்களில் கொண்டு வரப்படும் என கல்வி அமைச்சர் தெரவித்துள்ளமையும் கவனிக்கத்தக்கது.
“சுமந்திரன் பகற்கனவு காண்கிறார் – நாங்கள் வலுவாக இருக்கிறோம்” – அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற விக்கினேஸ்வரன் !
வடக்கு இலங்கையில் கூட்டணி அறிவிப்புக்கள்இ கட்சித்தாவல்கள்இ புதிய அறிவிப்புகள் என உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் களைகட்ட ஆரம்பித்துள்ளது. இதே நேரம் அனுர அலை இன்னமும் ஓய்ந்தபாடில்லை; இது பெரிய சவாலாக தமிழ்தேசிய கட்சிகளுக்கு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இருக்கும் எனவும் ஆனாலும் தமிழரசு வெற்றி பெறும் எனவும் அண்மையில் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் சுமந்திரன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சுமந்திரன் பகற்கனவு காண்கிறார் என கடந்த தேர்தலில் மண் கவ்விய தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) தங்களுடைய தனித்துவத்தை முன்வைத்து செல்ல வேண்டும் என்ற நோக்கில் தங்களுடைய சங்கு சின்னத்தையும் முக்கியத்துவப்படுத்தி முன்வைத்தமையால் எங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாத படியால் நாங்கள் வெளியேறினோம். ஆகவே நாங்கள் தனித்து போட்டியிடுவதாக இப்பொழுது அறிவித்துள்ளோம். தேர்தலின் பின்னர் யார் யாருடன் சேரந்து அந்த நிர்வாகத்தை அமைக்க வேண்டும் என்பது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது யாழ் மாவட்டத்திலுள்ள 17 சபைகளையும் கைப்பற்றுவோம் என தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ சுமந்திரன் பகற்கனவு காண்பதாக தெரிவித்துள்ள விக்கினேஸ்வரன்இ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் சிங்கள ஆதிகத்திலிருந்து விடுபட்டுத் தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வினை வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
“மௌனத்தைக் கலைப்போம்” – யாழில் நடைபவணி பேரணி !
வல்லமை சமூக மாற்றத்திற்கான போராட்ட இயக்கத்தின் பௌர்ணமி நாள் செயற்பாட்டுத் தொடர்ச்சியில், பெண்களுக்கு எதிரான அனைத்துச் சுரண்டல்களையும் முடிவுக்கு கொண்டுவர “மௌனத்தைக் கலைப்போம்” எனும் தொனிப்பொருளில் நேற்றையதினம் வியாழக்கிழமை (13) கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்ட பேரணியானது தந்தை செல்வா கலையரங்கு வரை சென்று நிறைவடைந்தது.
“எமது நிலம் எமக்கு வேண்டும்“ – மீண்டும் தையிட்டி !
யாழ் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிராக போராட்டம் பௌர்ணமி நாளான நேற்றையதினம் இடம்பெற்றது. காணி உரிமையாளர்கள், பொது மக்கள், அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இப்போராட்டத்தில்இ கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு ”வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்”, “எமது நிலம் எமக்கு வேண்டும்“, ”சட்டவிரோத விகாரையை உடனே அகற்று”, “சட்டவிரோத விகாரைக்கு காவல்துறை பாதுகாப்பு”, “காவல்துறை அராஜகம் ஒழிக“ போன்ற கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள விகாரை தொடர்பில் நேரில் சென்று ஆராயவுள்ளதாகவும் இதுவிடயத்தில் நியாயமான முறையில் தலையிட முடியும் என தான் நம்புவதாகவும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளமையும் கவனிக்கத்தக்கது.
யாழ் 17 உள்ளூராட்சி சபைகளிலும் நாம் தான் – நாடு மட்டுமல்ல கிராமங்களும் அனுரவோடு தான் ! அமைச்சர் சந்திரசேகர்
யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை நியமிக்கும் நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்திற்கு அவர் வருகை தந்தபோது இந்தக் கருத்தை தெரிவித்தார். அத்துடன் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தையும் இன்றைய தினம் என்.பி.பி செலுத்தியுள்ளது.
5 வருடங்களில் போதைப்பொருள் பாவனை 250 சதவீதம் அதிகரிப்பு !
இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்தள்ளது. இவர்களில் குறிப்பாக 15 முதல் 17 வயதுடையவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அதிகம் அடிமையாகின்றனர். இத்தகவல்களை இலங்கை தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை கவலை வெளியிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 162,000 நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளதுடன் 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மதிப்பீட்டில் நாட்டில் 92,000 முதல் 100,000 பேர் வரை போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகவும் சுமார் 350,000 பேர் ஹெரோயினுக்கும் 350,000 பேர் கஞ்சாவுக்கும் அடிமையாகி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை இலங்கையின் பல பகுதிகளிலும் பரவலாக பொலிஸ் அதிகாரிகளும் போதைப்பொருள் பாவனை தொடர்பிலும் விற்பனை தொடர்பிலும் கைதாகி வருகின்றனர். அரசாங்கம் இது தொடர்பில் இறுக்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் நேற்றையதினமும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பமாகிய நாள் முதல் தற்போதுவரை ஹெரோயின், ஐஸ், குஷ் மற்றும் சட்டவிரோத சிகரெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்களை எடுத்துச் சென்ற 393 பேர் கைதாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பட்டலந்த விவகாரம் ரணிலின் ஏழரைச் சனி ஆரம்பம்: மேற்கின் செல்லப் பிள்ளை ரணிலின் நாட்கள் எண்ணப்படுகின்றதா ?
மேற்கின் செல்லப் பிள்ளையான ரணில் விக்கிரமசிங்க முதலாளித்துவத்தின் ஒரு சிந்தனைவாதி என்பது இலங்கையர் பலரும் அறியாத விடயம். ரணில் விக்கிரமசிங்க உலகின் செல்வந்த மேற்கு நாடுகளின் தலைவர்களால் நண்பராக அணுகப்படும் ஒருவர். 2018இல் நல்லாட்சி அரசை உருவாக்கி ரணிலைப் பிரதமராக்குவதற்காக முன்னாள் பிரித்தானிய பிரதமர் ரொனிபிளேயர் இரண்டு வாரங்கள் யாருக்கும் தெரியாமல் இலங்கையில் தங்கியிருந்து காய் நகர்த்தியிருந்தார். அதற்கடுத்து அரகலயா போராட்டத்தைத் தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானதும் அமெரிக்காவின் மேற்குலகின் ஆதரவினாலேயே.
ஆனால் தற்போது அல்ஜசீரா ரணில் விக்கிரமசிங்கவை லண்டனுக்கு அழைத்து கிடுக்கு பிடியுள் சிக்க வைத்துள்ளது. தமிழ் மக்கள் ரணிலை நம்பிய அளவுக்கு சிங்கள மக்கள் ரணிலை நம்பியிருக்கவில்லை. சிங்கள மக்கள் மத்தியில் ரணிலக்கு பெரும் விம்பம் கட்டமைக்கப்பட வில்லை. அதனை கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் காணக் கூடியதாக இருந்தது. அல்ஜசீரா நேர்காணலில் ஊடகவியலாளரால் ரணிலிடமிருந்து புதிய தகவல்கள் எதனையும் வெளிக்கொணர முடியவில்லை. ஆனால் ரணில் தனக்குத் தானே மண்ணளிப் போட்டுக்கொண்டார். பட்டலந்த வதைமுகாம் விவகாரம் பற்றிய கேள்வி எழுப்பப்பட்ட போது அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று தட்டிக்கழித்துவிட்டார்.
அதிலிருந்த ரணிலின் ஏழரைச் சனி ஆரம்பமாகியுள்ளது. 1990க்களுக்கு முன்பாக ஜேவிபி உறுப்பினர்கள் இந்த பட்டலந்த வதைமுகாமில் சித்திரவை செய்யப்பட்டதும் அதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருந்த தொடர்பு பற்றியதே இந்த பட்டலந்த அறிக்கை. இந்த அறிக்கையை அன்றைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பாராளுமன்றத்துக்கு கொண்டுவர இருந்த சமயம் அப்போதிருந்த அரசியல் சூழ்நிலையில் ரணிலைப் பிரதமராக்கி இந்தப் பட்டலந்த அறிக்கையை காணாமலாக்கினார். இந்த அறிக்கையின் ஒரு பிரதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் நெருங்கிய நண்பரான இக்னிசியஸ் செல்லையா மனோரஞ்சனிடம் இருந்துள்ளது. அதிலிருந்தே இந்தப் பட்டலந்த பூகம்பம் மீண்டும் அதிர்வை ஏற்படுத்துவதாக நம்பகமாகத் தெரியவருகின்றது.
தற்போது ஆட்சியைக் கைப்பற்றியுள்ள ஜேவிபி அரசும் தங்களுடைய போராளிகள் அன்று சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு நியாயம் கேட்க முனைகின்றனர். இந்த அறிக்கை அடுத்தவாரம் பாராளுமனறத்தில் சமர்ப்பிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி அரசு அறிவித்துள்ளது.
பட்டலந்த விவகாரத்தை அன்று புலனாய்வு செய்த ஊடகவியலாளரே யாழ் நூலக எரிப்பில் ஐக்கிய தேசியக் கட்சியினதும் ரணிலினதும் பங்களிப்பை ஆதாரத்துடன் நூலாக வெளிக்கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்புலனாய்வுச் செய்தியாளர் நந்தன வீரரத்ன பட்டலகந்த விவகாரத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் பாத்திரம் பற்றி சூம் விழயாக மார்ச் 16இல் கலந்துரையாடலை மேற்கொள்ள உள்ளார். செல்லையா மனோரஞ்சன் இந்நிகழ்வை தொகுத்து வழங்க உள்ளார்.
ஆனால் பட்டலந்த விவகாரம் போன்று எத்தனை ஆயிரமாயிரம் சம்பவங்கள் எமது மண்ணிலே நடந்திருக்கிறது. இந்த சம்பவங்கள் உங்களுக்கு தெரியவில்லையா இதற்கு என்ன நடவடிக்கையை நீங்கள் எடுக்கப் போகிறீர்கள். இவ்வாறு தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் கேள்வியெழுப்பியுள்ளார்.
மற்றவர்கள் எக்கேடு கெட்டாலும் எங்களுக்கென்ன என்ற தொனியில் கருத்து வெளியிட்டுள்ள சிவஞானம்இ இந்த பட்டலந்த விவகாரம் சம்பந்தமாக ஆட்சியாளர்களிடம் நாங்கள் ஏதும் கோரிக்கை வைக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. அது அவர்களே சண்டையிட்டுக் கொள்வார்கள். அப்படி தான் இப்போது நடக்கிறது. இதனைப்பற்றி சிங்கள அரசியல்வாதிகள் பேசிக் கொள்ளட்டும் என்ற ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தாங்கள் ஒன்றும் செய்யவில்லை என்று தெளிவுபடுத்தி இருக்கின்றார்.
நாட்டில் உள்ள பேரினவாத ஆட்சியாளர்களோடு கூட்டுச் சேர்ந்து நாட்டைச் சீரழித்ததில் பங்கெடுத்துக்கொண்ட தமிழரசுக் கட்சி இவ்வாறான பேரினவாதசக்திகள், மனிதவிரோத சக்திகள் தண்டிக்கப்பட வேண்டும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பேச்சளவிலும் தெரிவிக்கவில்லை. மாறாக யாழ் நூலகத்தை எரித்தவர்களோடு கூட்டுச் சேர்ந்து அரசியல் செய்வதையே இவர்கள் நல்லாட்சி அரசாங்கம் என்று அழைத்தது குறிப்பிடத்தக்கது.
பட்டலந்த விவகாரம் சூடு பிடித்தால் ரணிலுக்கு மாமா வேலை செய்த அந்த அர்த்தத்தில் எண்ணக் கூடாது, தமிழ் கட்சிகளுக்கு அது பிரச்சினையாகவே இருக்கும்.









