2020

2020

உலகில் சுமார் 4.42 கோடி பேருக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி !

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் பரவ ஆரம்பித்த  கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 4.42 கோடி பேருக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3.24 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 11 லட்சத்து 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 10.62 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 79 ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிருடன் இருக்கும் தன் மக்களையே பரலோகம் அனுப்புகிறது அமெரிக்க அரசு! அப்படியிருக்க, உயிருடன் இல்லாதவர்களை பொம்பயோ எப்பிடி கண்டுபிடிப்பார்?

சீனாவின் சர்வதேச ஆதிக்கத்தை தாங்க முடியாத அமெரிக்கா!
அமெரிக்க ராஜாங்க அமைச்சர் மைக்கல் பொம்பயோ இலங்கை வருகை!!!

உலக பொருளாதார ஆதிக்கத்தை தன் பக்கம் சுவீகரித்துக்கொள்ளும் சீனாவின் வளர்ச்சியயைத் தடுக்க அமெரிக்க இராஜாங்க அமைச்சர் மைக்கல் பொம்பயோ ஆசிய சுற்றுப் பயணம் மேற்கொண்டு அதில் ஒரு கட்டமாக இலங்கைக்கும் வருகின்றார் இன்று. மைக்கல் பொம்பயோ காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடித்துக் கொடுக்க இலங்கைக்கு வரவில்லை. அது பற்றி கரிசணையுடையவரோ அல்ல. அடுத்த இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதே கேள்விக்குறியாக இருக்கின்ற போது அமெரிக்க இராஜாங்க அமைச்சரின் ஆசிய விஜயம் ஒரு பொருட்டாகவே அமையப் போவதில்லை. தனது சொந்த நாட்டில் 225,000 பேர் கொல்லப்பட்டதையே பொருட்படுத்தாத ஒரு இராஜாங்க அமைச்சரிடம் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டு பிடிக்கும் அதிகாரம் அந்த நாட்டிடம் உள்ளது என்று உளறும் முட்டாள்தனத்தை என்ன செய்வது.

இறுதி யுத்தத்தில் பெரும்பாலும் உயிரோடு இல்லை என்பது சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கும், தமிழ் அரசியல் வாதிகளுக்கும், இலங்கை அரசுக்கும், சர்வதேசத்திற்கும் மிகத் தெளிவாகத் தெரியும். உயிருடன் இருப்பவர்களையே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் பரலோகம் அனுப்பிக்கொண்டுள்ளார். அவருடைய ராஜாங்க அமைச்சர் இல்லாதவர்களை எப்படி கண்டுபிடிக்க முடியும்?

ஈராக், அப்கானிஸ்தான், லிபியா இன்று சிரியா இப்படியே இந்த மேற்குலகம் கொலைக்களமாக்கிய நாடுகளில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஏராளம்! ஏராளம்!! யார், யாரிடம் எல்லாம் போய் நீதி கேட்பது என்ற விவஸ்தையே இல்லாமல் இன்னும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை வைத்துத் தான் அரசியல் நடத்த வேண்டும் என்ற அளவுக்கு தமிழ் அரசியல் ஈனமாகிப் போய்க் கிடக்கின்றது.

இறுதி யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அமெரிக்க படைகள் வன்னியில் உள்ள மக்களை மீட்கப் போவதாக ஒரு செய்தி அந்நேரத்தில் கசிந்தது. அவர்கள் எவ்வளவு தூரம் சாத்தியப்பட்டு இருக்கும் என்பது உறுதியாகத் தெரியாது. ஆனால் இச்செய்தி வெளியானதும் அமெரிக்காவில் உள்ள பேர்ள் என்ற தமிழர் அமைப்பு வன்னி எங்களின் சொந்த மண் அந்த மண்ணில் இருந்து மக்களை மீட்க வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டது. அதற்குக் காரணம் வன்னி யுத்தகளத்தில் இருந்து மக்கள் மீட்கப்பட்டால் – போராட்டத்தின் மண் மூட்டைகள் – பாதுகாப்பு அரண் – அடுத்த சில மணிநேரங்களிலேயே யுத்தம் முடிவுக்கு வந்துவிடும். போராட்டத்தை வைத்து சர்வதேச நாடுகளில் தாங்கள் வியாபாரம் செய்ய முடியாது. அதற்காகவே இந்த வெளிநாட்டு சரகு புலிகள் குரல்கொடுத்து வந்தனர். அன்று வன்னிமக்களை கொல்லக்கொடுத்து சூறையாடிய பணத்தில் இன்று பகட்டு வாழ்க்கை வாழ்கின்றனர். அதில் கொஞ்சத்தை வீசியெறிந்து இன்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிக்கின்றோம் என்று உலாவிக்கொண்டு திரிகின்றனர்.

லங்கன் பிரிமியர் லீக் யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணி வீரர்கள் அறிமுகமும் ஊடகவியலாளர் சந்திப்பும் !

லங்கன் பிரிமியர் லீகில் விளையாடவுள்ள அணிகளில் ஒன்றான யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணியின் (Jaffna Stallions) அறிமுகம் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றையதினம்(26.10.2020) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணியின் இணைப்பாளர் G.வாகிசேன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது யாழ் மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மூன்று வீரர்களின் அறிமுகமும் இடம்பெற்றிருந்தது. யாழ்.பரியோவான் கல்லூரி மற்றும் யாழ்.மத்திய கல்லூரியின் வீரர்களான வி.வியஸ்காந்த், தி.டினோஷன் மற்றும் க.கபில்ராஜ் ஆகியோரே அணியில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LPL will boost interest and offer opportunities for youngsters,Jaffna team  owners

இன்று இடம்பெற்ற குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ் மாநகர சபை முதல்வர் இ.ஆனல்ட் , யாழ் கிரிக்கெட் சம்மேளன தலைவர் நிசாந்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெங்களூரை 08 இலக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் !

ஐ.பி.எல் தொடரில் இன்றைய மாலை நேர ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. நாணயச்சுழற்சியில் வென்ற பெங்களூர் துடுப்பாட்டத்தை  தேர்வு செய்தது.
சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்திருந்தாலும் கூட எதிர்பார்த்த அளவிலான ஓட்டத்தை பெற முடியவில்லை. மிக மந்தகதியிலேயே அணியின் ஓட்டம் நகர்ந்தது. சென்னை பந்துவீச்சாளர்கள் பெங்களுர் வீரர்களை நன்கு கட்டுப்படுத்தினர். இறுதியில்  20 பந்துப்பரிமாற்ற முடிவில் பெங்களூர் 6 இலக்குகள் இழப்பிற்கு  இழப்பிற்கு 145 ஓட்டங்களையே பெற்றது. அணிசார்பாக நிதான ஆட்டத்தை பெளிப்படுத்திய தலைவர் விராட் கோலி 43 பந்தில் 50 ஓட்டங்களை பெற்றமையே அணியின் அதிகபட்ச ஓட்டமாக அமைந்தது.
விராட் கோலி அரைசதம் அடித்தும் ஆர்சிபி-யால் 145 ரன்களே எடுக்க முடிந்தது: சிஎஸ்கே சேஸிங் செய்யுமா?
சென்னை அணி சார்பில் சாம் கர்ரன் 3 இலக்குகளையும், தீபக் சாஹர் 2 இலக்குகளையும் வீழ்த்தினர்.
பின்னர் 146 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருத்துராஜ் கெய்க்வாட், டு பிளிசிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடகத்தில் இருந்தே அதிரடியாக விளையாடத் தொடங்கினர். சென்னை அணி 5.1 ஓவரில் 46 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது டு பிளிஸ்சிஸ் 13 பந்தில் தலா இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரிகளுடன் 25 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
அடுத்து ருத்துராஜ் கெய்க்வாட் உடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அதிரடியாக விளையாடியது. அம்பதி ராயுடு 27 பந்தில் 39 ஓட்டங்கள் எடுத்து ஆட்மிழந்தார். தொடர்ந்து கெய்க்வாட்டுடன் தலைவர் டோனி ஜோடிசேர்ந்தார். சிறப்பாக ஆடிய ருத்துராஜ் கெய்க்வாட் 42 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி அணியை 18.4 பந்துப்பரிமாற்றத்தில்  வெற்றிக்கு அழைத்துச் சென்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் 18.4 பந்துப்பரிமாற்றத்தில் 2 இலக்கு இழப்பிற்கு 150 ஒட்டங்கள் எடுத்து 8 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த தோல்வியால் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரின் பிளேஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்யும் வாய்ப்பு தள்ளிப் போகியுள்ளது.

வருண் சக்ரவர்த்தி அசத்தலான பந்துவீச்சு – டெல்லியை 59 ஓட்டங்களால் வெற்றிகொண்டது கொல்கத்தா!

ஐ.பி.எல் கிரிக்கெட்டின் 42 ஆவது லீக் ஆட்டம் அபுதாபியில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.
இதில் நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைவர் ஷ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுக்மன் கில் மற்றும் நிதிஷ் ராணா களமிறங்கினர். 8 பந்துகளை சந்தித்த கில் 9 ஓட்டங்களில் நார்ட்ஜி பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்துவந்த ராகுல் திரிபாதியும் 13 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 3 ஓட்டங்களில் வெளியேற கொல்கத்தா அணி 7.2 பந்துப்பரிமாற்றத்தில்  42 ஓட்டங்களுக்கு 3 இலக்குகளை இழந்து தடுமாறியது. அடுத்துவந்த சுனில் நரைன், ராணாவுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 32 பந்துகளை சந்தித்த நரைன் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் உள்பட 64 ஓட்டங்கள் குவித்து ரபாடா பந்து வீச்சில் வெளியேறினார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் ராணா 53 பந்துகளில் 13 பவுண்டரிகள் 1 சிக்சர் உள்பட 81 ஓட்டங்கள் குவித்து ஸ்டாய்னிஸ் பந்து வீச்சில் வெளியேறினார்.
நிதிஷ் ராணா அதிரடியால் டெல்லிக்கு 195 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 194 ஓட்டங்களை குவித்தது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் அந்த அணியின் நார்ட்ஜி, ரபாடா, ஸ்டாய்னஸ் தலா 2 இலக்குகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 195 ஓட்டங்கள்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ரஹானே மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். கம்மின்ஸ் வீசிய முதல் பந்திலேயே ஓட்டம் எதுவும் எடுக்காமல் ரஹானே(0) வெளியேறினார். அடுத்து டெல்லி அணியின் தலைவர் ஷ்ரேயாஸ் அய்யர் களமிறங்கினார். மறுமுனையில் நின்றுகொண்டிருந்த தொடக்க வீரரான தவான் 6 பந்துகளில் 6 ஓட்டங்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்து வீச்சில் வெளியேறினார்.
அடுத்து வந்த ரிஷப் பண்ட் ஷ்ரேயாஸ் அய்யருடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 33 பந்துகளை சந்தித்த பண்ட் 27 ரன்னில் வெளியேறினார்.  பின்னர் களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரரான ஷிம்ரான் ஹேட்மயர் 5 பந்தில் 10 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனால், டெல்லி அணி 13.2 பந்துப்பரிமாற்றங்களில் 95 ஓட்டங்களுக்கு 4 இலக்குகளை  இழந்து திணறியது.
சற்று நிலைத்து நின்று ஆடிய தலைவர் ஷ்ரேயாஸ் 38 பந்துகளில் 47 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சக்ரவர்த்தி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த டெல்லி வீரர்கள் அனைவரும் கொல்கத்தா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால், 20 பந்துப்பரிமாற்றங்களில் முடிவில் டெல்லி அணி 9 இலக்குகளை இழந்து 135 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
வருண் சக்ரவர்த்தியின் சுழலில் சுருண்ட டெல்லி - 59 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அபார வெற்றி
இதனால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 4 பந்துப்பரிமாற்றங்கள் வீசி 20 ஓட்டங்கள் கொடுத்து 5 இலக்குகளை வீழ்த்தினார். கம்மின்ஸ் 3 இலக்குகளை வீழ்த்தினார்

ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்றவர் மரணம் !

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்து ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியின் 1 மற்றும் 2ஆம் கட்ட மனித பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

மேலும், இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் இறுதிகட்ட மருத்துவ பரிசோதனை இங்கிலாந்து, இந்தியா, பிரேஸில், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த பரிசோதனையில் ஆயிரக்கணக்கான தன்னாவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பிரேஸில் நாட்டில் ஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீரென உயிரிழந்துள்ளார். ரியோ டி ஜெனிரோ நகரில் வசித்துவந்த 28 வயதுடைய தன்னார்வளர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால், அந்த தன்னார்வலர் உயிரிழந்ததற்கான காரணங்கள் குறித்து பிரேஸில் அரசோ, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமோ, அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமோ எந்த பதிலும் அளிக்கவில்லை.

மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரனை நடத்த பிரேஸில் சுகாதாரத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தடுப்பூசி பரிசோதனையின் பாதுகாப்பு குறித்து கவலைப்பட தேவையில்லை என ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஆனால், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து தயாரிப்பு நிறுவனம் இந்த விவகாரம் குறித்து பதிலளிக்கவில்லை.

எவ்வாறிருப்பினும் பிரேஸிலில் ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியின் பரிசோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறதென்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல் 2020 போட்டிகளில் இருந்து விலகுகிறார் சென்னையின் நட்சத்திர வீரர் !

மேற்கிந்தியதீவுகள் கிரிக்கெட் அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரரான வெயின் பிராவோ ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுபவர்.  இந்த அணியின் வெற்றிக்கு இவரது பங்களிப்பும் முக்கியமானது.
ஐ.பி.எல் 2020 சீசன் தொடங்கும்போது காயத்தால் சில போட்டிகளில் அவர் விளையாடவில்லை. அதன்பின் அணியில் இடம்பிடித்து விளையாடினார். தன்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராகி வந்த நேரத்தில் டெல்லி அணிக்கெதிராக விளையாடும்போது காயம் ஏற்பட்டது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக விளையாடவில்லை.
வெயின் பிராவோ சிஎஸ்கே-யின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகல்
இந்நிலையில் எஞ்சிய போட்டிகளில் இருந்தும் பிராவோ விலகியுள்ளார். மேலும், இன்னும் ஒன்றிரண்டு நாட்களுக்குள் சொந்த நாடு திரும்புவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் இன்னும் நான்கு போட்டிகளிலும் விளையாட உள்ளது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடி மூன்றில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

2020 நோபல் பரிசு முழுயைான விபரங்கள் – பரிசு பெற்றவர்களும் பரிசுக்கான காரணங்களும் – ஒரே பார்வையில் !

நோபல் பரிசு 2020
ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, 1901ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு துறைகளில், சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு, நோபல் பரிசு வழங்கப்படுகிறது. மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம், வேதியியல் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் இந்த வருட நோபல் பரிசுகளை பெற்றவர்களுடைய விபரங்கள் இதோ !
மருத்துவத்துக்கான நோபல்பரிசு 2020
அதன்படி இந்த ஆண்டிற்கான மருத்துவ துறையின் நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் ஹார்வி ஜே ஆல்டர், மைக்கேல் ஹாஃப்டன், சார்லஸ் ரைஸ் ஆகியோருக்கு இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பரிசு பெற்றவர்களில் விஞ்ஞானிகள் ஹார்வி ஜே. ஆல்டர், சார்லஸ் எம். ரைஸ் ஆகியோர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் மற்றும் விஞ்ஞானி மைக்கேல் ஹாட்டன் பிரிட்டனை சேர்ந்தவர். நோபல் பரிசு பெறும் இந்த மூன்று மருத்துவர்களுக்கும் பரிசு தொகை ரூ.8 கோடி ஆகும்.
காரணம்:
ஹெப்பாடைடிஸ் சி என்ற வைரஸின் கண்டுபிடித்ததற்காக இந்த மூன்று மருத்துவர்களும் கூட்டாக நோபல் பரிசு பெறுகின்றனர்.
மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு மூவருக்கு வழங்கப்பட்டது! – Thinakkural
இயற்பியலுக்கான நோபல் பரிசு 2020
விஞ்ஞானிகள் ரோஜர் பென்ரோஸ், ரெயின்ஹார்டு கென்செல் மற்றும் ஆண்ட்ரியா கெஸ்  ஆகியோருக்கு இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நோபல் பரிசு 2020
காரணம்:
‘கருந்துளை’ பற்றிய ஆய்வுக்காக இந்த மூன்று விஞ்ஞானிகளும் இயற்பியலுக்கான நோபல் பரிசினை கூட்டாக பெறுகின்றனர்.
2020 இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு- Dinamani
இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2020
அமெரிக்காவை சேர்ந்த பெண் கவிஞர் லூயி க்ளூக்கிற்கு இந்த ஆண்டிற்கான இலக்கியத்திற்கு நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.
நோபல் பரிசு 2020
காரணம்:
Unmistakable Poetic Voice என்ற திறனிற்காக அவருக்கு இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
அமெரிக்காவின் லூயி க்ளூக்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு| Dinamalar
அமைதிக்கான நோபல் பரிசு 2020
 இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு ”உலக உணவுத் திட்டம்’ அமைப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நோபல் பரிசு 2020
காரணம்:
கொரோனா வைரஸ் பரவலின் காரணத்தினால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்ட நேரத்திலும் இந்த அமைப்பு உலகம் முழுவதும் இருந்த ஏழைகளுக்கு உணவு வழங்கியது. மேலும் அதன் மூலம் நாடுகளுக்கிடையே சமாதானத்தினையும் ஏற்படுத்த பாடுபட்டதன் காரணத்தினால் இந்த நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் என்ற அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு |  pavoor.in
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2020
பால்.ஆர்.மில்க் ரோம் மற்றும் ராபர்ட்.பி. வில்லசன் ஆகிய இருவர் இந்த ஆண்டிற்கான பொருளாதாரத்தின் நோபல் பரிசினை கூட்டாக பெறுகின்றனர்.
நோபல் பரிசு 2020
காரணம்:
ஏல கோட்பாட்டின் மேம்பாடு மற்றும் ஏல கோட்பாட்டின் புதிய வடிவமைப்புகளை உருவாக்கியதற்காக இந்த ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசினை பெறுகின்றனர்.
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.! | Paul R Milgrom and Robert B  Wilson win 2020 Nobel Prize in Economics | Puthiyathalaimurai - Tamil News  | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
வேதியியல் நோபல் பரிசு 2020 
 2020ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு இம்மானுவேல் சார்பென்டியர், ஜெனிஃபர் ஏ டவுட்னா ஆகிய 2 பெண் அறிவியலாளர்களுக்கு மரபணு மாற்ற ஆய்வுகளுக்காக நோபல் பரிசு கூட்டாக அறிவிக்கப்பட்டது.
காரணம் –
ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் புதன்கிழமை 2020ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை இம்மானுவேல் சர்பென்டியர் மற்றும் ஜெனிபர் ஏ. டவுட்னா ஆகிய 2 பெண் அறிவியாலாளர்களுக்கு மரபணு மாற்றத்திற்கான முறையை உருவாக்கியதற்காக வழங்கியுள்ளது.
“இம்மானுவேல் சார்பென்டியர் மற்றும் ஜெனிபர் ஏ. டவுட்னா ஆகியோர் மரபணு தொழில்நுட்பத்தின் கூர்மையான கருவிகளில் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்: அது CRISPR/Cas9 மரபணு கத்தரிக்கோல் என்று அகாடமி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2020ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 2 பெண்களுக்கு கூட்டாக அறிவிப்பு

அச்சுறுத்தும் கொவிட் 19 – கொரோனா பாதிப்பால் பார்வையை இழந்த 11வயது சிறுமி!

டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) தனது கொரோனா வைரஸ் நோயாளியான 11 வயது சிறுமி ஒருவருக்கு மூளை நரம்பு பாதிப்பைத் ஏற்பட்டு உள்ளது என்றும் இது அவரது பார்வை மங்கலாகிவிட்டது எனவும் கூறி உள்ளது.
குழந்தை நரம்பியல் பிரிவு மருத்துவர்கள் சிறுமியின் உடல்நிலை குறித்து ஒரு அறிக்கையைத் தயாரித்து வருகிறார்கள். அது விரைவில் வெளியிடப்படும்.
இதுகுறித்த வரைவு அறிக்கை கூறியதாவது:-
11 வயது சிறுமி ஒருவர் கொரோனா நோய்த்தொற்றால்தூண்டப்பட்ட அக்யூட் டெமிலினேட்டிங் நோய்க்குறி (ஏடிஎஸ்) இருப்பதைக் கண்டுபிடித்தோம். குழந்தை வயதினரிடையே பதிவான முதல் பக்கவிளைவு இதுவாகும் என்று கூறியுள்ளது.
குழந்தை நரம்பியல் பிரிவின் தலைவர் டாக்டர் ஷெபாலி குலாட்டி கூறியதாவது:-
இந்த சிறுமி பார்வை இழப்புடன் எங்களிடம் வந்தார் எம்.ஆர்.ஐ  சோதனை ஏ.டி.எஸ் பாதிப்பை காட்டியது, இது ஒரு புதிய பக்கவிளைவாகும். இருப்பினும், வைரஸ் மூளை மற்றும் நுரையீரலை பெரும்பாலும் பாதிக்கிறது என்பதை இப்போது நாம் அறிவோம்.
ஏடிஎஸ் என்பது  நரம்புகள் மெய்லின் எனப்படும் பாதுகாப்பு அடுக்குடன் மூடப்பட்டிருக்கும், இது மூளையில் இருந்து வரும் செய்திகளை உடலின் வழியாக விரைவாகவும் சுமுகமாகவும் நகர்த்த உதவுகிறது.
மெய்லின் பாதிப்பால் மூளை சமிக்ஞைகளை சேதப்படுத்தும் மற்றும் பார்வை, தசை இயக்கம், புலன்கள், சிறுநீர்ப்பை மற்றும் குடல் இயக்கம் போன்ற நரம்பியல் செயல்பாடுகளின் வரம்பை பாதிக்கும் என கூறப்படுகிறது.

நான்கு கோடியை கடந்தது உலக கொரோனா பாதிப்பு !

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது.  இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.06 கோடியைத் தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 3.03 கோடியைக் கடந்தது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 72 ஆயிரத்து 500-க்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11.22 லட்சத்தைக் கடந்துள்ளது.